கர்நாடகா: 135 சீட்லாம் போதாது.. காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு டார்கெட் கொடுத்த டிகே சிவக்குமார்.!

கர்நாடகாவில் நேற்று புதிதாக காங்கிரஸ் அரசு ஆட்சியமைத்துள்ளது. கடந்த மே 10ம் தேதி மாநிலத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களைக்காட்டிலும் அதிகமாக 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் வெற்றி வாகை சூடியது. மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக 36 சதவிகித வாக்குகளுடன் 65 தொகுதிகளைக் கைப்பற்றி எதிர்கட்சியாக மாறியுள்ளது. இந்தசூழலில் … Read more

வங்கியில் வாடிக்கையாளர் நகையை திருடி மோசடி செய்த இருவர் கைது..!

புதுச்சேரி கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 90 சவரன் நகைகளை திருடிய வழக்கில் வங்கியின் பொறுப்பு அதிகாரிக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரையும்  கைது செய்து, 40 லட்சம் ரூபாய்  நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். முதலியார்பேட்டை கொம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள விவசாய கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்க வந்த போது, வங்கியின் பொறுப்பு அதிகாரி கதிரவன் நகைகளை தராமல் அலகழித்து வருவதாக புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணையில் கதிரவன் நகைகளை … Read more

பெங்களூரு | சுரங்கப்பாலத்தின் கீழ் தேங்கிய வெள்ள நீரில் சிக்கி இளம்பெண் பலி: சுற்றுலா வந்த இடத்தில் சோகம்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த ஆந்திராவைச் சேர்ந்த ஐடி ஊழியரான 23 வயது இளம் பெண் கே.ஆர்.சர்கிள் சுரங்கப்பாலத்தின் கீழ் தேங்கிய மழை நீரில் சிக்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தை அடுத்து உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் சித்தராமையா, ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் பானுரேகா. 23 வயதான பானுரேகா விஜயவாடாவில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். இந்நிலையில் தன் … Read more

IIFA திரைப்பட விழாவில் கமல்ஹாசனுக்கு திரைப்பட வாழ்நாள் சாதனையாளர் விருது..!

சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு திரைப்பட வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது. ஆறு வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் கமல். நாயகன், மூன்றாம் பிறை, மகாநதி, இந்தியன், அவ்வை சண்முகி, விக்ரம் போன்ற ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனுக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட உயர்ந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த முறை அவருக்கு சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் விருது வழங்கப்படுகிறது. இதே போல் இவ்விழாவில் நடிகை ஜெனிலியா மற்றும் அவர் கணவருக்கும் பிராந்தியப் … Read more

அதிர்ச்சி! கழிவறையில் சிறுமி பாலியல் வன்கொடுமை!!

மருத்துவமனை கழிவறையில் வைத்து இளைஞர் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மணியம் என்ற பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியின் சகோதரருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரை பார்த்துக் கொள்ள அரசு மருத்துவமனையில் இருந்துள்ளார். அதே மருத்துவமனையில் பாலகொண்டா என்ற பகுதியை சேர்ந்த ஒருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை கவனித்து கொள்ள 23 வயது இளைஞர் வினோத் என்பவர் இருந்துள்ளார். இந்த சூழலில் சிறுமியிடம் வினோத் … Read more

எதிர்ப்புகள் எதிரொலி: முஸ்லிம் இளைஞருடனான மகளின் திருமணத்தை நிறுத்திய உத்தராகண்ட் பாஜக பிரமுகர்

டேராடூன்: உத்தராகண்ட் மாநில பாஜக பிரமுகர் யஷ்பால் பேனம் தன் மகளுக்கு அவர் காதலித்த முஸ்லிம் இளைஞரை திருமணம் செய்துவைக்கவிருந்த நிலையில், கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினரின் கடும் எதிர்ப்பு காரணமாக அத்திருமணத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளார். உத்தராகண்டின் பவுரி நகர முனிசிபல் தலைவர் யஷ்பால், அத்தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும் ஆவார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். லக்னோ பல்கலைகழகத்தில் பயின்று வந்த அவரின் மகள், அங்குமுகமது மோனிஸ் என்ற முஸ்லிம் இளைஞரை காதலித்து வந்தார். அந்த இளைஞர் … Read more

காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்..!

1984ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பழிக்குப் பழியாக நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கொலை, கலவரத்தைத்தூண்டியது, கூட்டம் சேர்த்தது, மதரீதியாக விரோதத்தை வளர்த்தது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் அந்த குற்றப்பத்திரிகையில் உள்ளன. டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையில், டெல்லி குருதுவாராவில் தாக்குதல் நடத்தியதாகவும் 3 சீக்கியர்கள் உயிருடன் எரித்துக் … Read more

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு – காங்கிரஸ் மூத்த தலைவர் டைட்லர் மீது குற்றப்பத்திரிகை

புதுடெல்லி: கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை, அவரது பாதுகாவலர்களே சுட்டுக் கொன்றனர். அதன்பின் டெல்லி உட்பட பல நகரங்களில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் நடந்தது. அப்போது 1984 நவம்பர் 1-ம் தேதி தல் சிங், தாக்குர் சிங், குர்சரண் சிங் என்ற 3 சீக்கியர்கள் டெல்லியில் உள்ள புல் பங்காஷ் பகுதியில் கொல்லப்பட்டனர். இதன் பின்னணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜகதீஷ் டைட்லர் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. … Read more

16 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்… பிறந்தநாள் அன்று நடந்த துயரம்!

பிறந்தநாள் அன்று மாரடைப்பால் உயிரிழந்த 16 வயது சிறுவனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பெற்றோர்கள் கேக் வேட்டி, பாடல் பாடிய சம்பவம் நடந்தேறியுள்ளது. 

”ரூ.2,000 நோட்டுகளை மாற்ற ஆவணங்கள் தேவையில்லை..” – எஸ்.பி.ஐ. வங்கி..!

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற எவ்வித அடையாள ஆவணங்களும் தேவையில்லை என, எஸ்.பி.ஐ. வங்கி விளக்கமளித்துள்ளது. புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்த ரிசர்வ் வங்கி, வரும் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் அதனை மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற எவ்வித படிவமும், அடையாள ஆவணமும் தேவையில்லை என எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது. பொதுமக்களுக்கு எந்தவித … Read more