கோடைக்கால சிறப்பு ரயில்கள்… இந்திய ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு!

கோடைக்காலம் வந்துவிட்டாலே பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என மக்கள் குதுகலமாகி விடுவர். ஆனால் கோடை வெயில் வாட்டி வதைக்கும். இதிலிருந்து தப்பிக்கவும், விடுமுறையை கொண்டாடவும் வெளியூர் பயணங்களுக்கு திட்டமிடுவர். நீண்ட தூரப் பயணங்களுக்கு மக்கள் அதிகம் விரும்பக்கூடிய பொதுப் போக்குவரத்து ரயில்கள் தான். இந்திய ரயில்வே ஏற்பாடு நடப்பாண்டில் இந்திய ரயில்வே எத்தகையை சேவையை வழங்கி வருகிறது என்பது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில், நடப்பாண்டு கோடையில் கூடுதல் பயணிகளை சமாளிக்கும் வகையில் நாட்டின் அனைத்து … Read more

'மாநில அரசுக்கே அதிகாரம்' – அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு மனு

புதுடெல்லி: டெல்லி யூனியன் பிரதேசத்தில் நிர்வாக சேவைகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிகாரம் உண்டு என்று மே 11- ம் தேதி 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பினை மறு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. நாட்டின் தலைநகராகவும் யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் டெல்லியில் காவல் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. டெல்லியின் பாதுகாப்பு, அங்கு பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பது … Read more

Aravind Kejriwal: 2000 ரூபாய் நோட்டு.. இதுக்குதான் பிரதமர் படிச்சவரா இருக்கணும்.. அரவிந்த் கெஜ்ரிவால் கடும் விமர்சனம்!

2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக மத்திய ரிசர்வ் வங்கி நேற்று இரவு அறிவித்தது. மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு இதுபோன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி. அப்போது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். வங்கிகளில் நீண்ட நேரம் வரிசையில் … Read more

பதவியேற்பு விழா முடிவடைந்தது! தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நேரம் இது

Karnataka Govt Election Manifesto: ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் மீண்டும் முடி சூட்டிக் கொண்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு இந்தியா முழுவதும் இருந்து வந்திருந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்

பாம் வச்சிருந்தா.. பாலைய்யா ஆயிர முடியுமா..? கும்மிய போலீஸ்…!

உடலில் வெடிகுண்டு கட்டிக் கொண்டு வங்கிக்குள் புகுந்து இரண்டு லட்ச ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்த டம்மி கொள்ளளையனை மடக்கிப்பிடித்த மக்கள், போலீசில் ஒப்படைத்தனர். தெலுங்கு சினிமா ஒன்றில் துப்பாக்கி தோட்டாவை வாயல் துப்பி டைம் பாம்மை நிறுத்தும் ‘காட் ஆப் மாஸ்’ பாலையாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இளைஞர் ஒருவர் வங்கிக்குள் வெடிகுண்டுடன் புகுந்து அதகளம் செய்துள்ளார் தெலுங்கானா மாநிலம் மேட்ச்சல் மாவட்டத்தில் ஜி டி மெட்லா நகரில் ஆதர்ஷ் வங்கி என்ற கூட்டுறவு வங்கி … Read more

இனி விண்வெளி டூருக்கு மட்டும் இல்ல… திருமணமும் செய்யலாம்..!!

திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு பெரிய நிகழ்வாகும். திருமணம் இரு நபர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைகிறது. திருமண தினத்தன்று நடக்கும் சில சுவாரசியமான நிகழ்வுகள் நம் வாழ்வில் எப்போதும் நம் நினைவை விட்டு நீங்காமல் இருக்கும். இளைய தலைமுறையிடம் தங்கள் திருமணத்தில் ஏதாவது ஒரு புதுமையை புகுத்த வேண்டும் என்ற ஆர்வம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மெரிட் தீவை தலைமைடமாக கொண்டு செயல்படும் ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் … Read more

நாளை சென்னை வரவிருந்த ராகுல்காந்தியின் பயணம் திடீர் ரத்து..!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா திரு. ராஜிவ்காந்தி அவர்களின் 32-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் நாளை (21.5.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்ச்சியில் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. தவிர்க்க முடியாத காரணங்களால் அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி, நாளை ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் காந்தி அவர்களின் நினைவிடத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி … Read more

கர்நாடக முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவகுமார் பதவியேற்பு

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக சித்தராமையா இன்று சனிக்கிழமை பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். துணை முதல்வராக டிகே சிவகுமார் பதவி ஏற்றார். கர்நாடகாவின் முதல்வர், துணை முதல்வர், 8 அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த பதவி ஏற்பு விழாவில் 12.30 மணிக்கு கர்நாடகாவின் முதல்வராக இரண்டாவது முறையாக சித்தராமையா … Read more

Tirupati: பாதியாக குறைந்த காத்திருப்பு நேரம்.. திருப்பதி ஏழுமலையானை 3 மணி நேரத்தில் தரிசிக்கும் பக்தர்கள்!

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வருகை புரிகின்றனர். உலகின் பணக்கார கடவுள்களில் ஒருவரான ஏழுமலையானுக்கு காணிக்கையும் அதற்கு ஏற்றார் போலவே குவிந்து வருகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனர். இதனால் நாள்தோறும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸில் … Read more

Video: பிரதமர் மோடி நோக்கி வந்த ஜோ பைடன்… கட்டித் தழுவி வரவேற்ற பிரதமர்!

ஜப்பானில் நடைபெற்று வரும் ஜி-7 உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பிடனும் சந்திக்கும் போது பிரதமர் மோடி அவரை கட்டியணைத்து வரவேற்றார்.