மணப்பாறை முறுக்கு, மானாமதுரை தேன், ஆத்தூர் வெற்றிலை உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு

டெல்லி: மணப்பாறை முறுக்கு, மானாமதுரை தேன், ஆத்தூர் வெற்றிலை உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் 11 பொருட்களுக்கு ஒன்றிய அரசின் புவிசார் குறியீடு பதிப்பகம் புவிசார் குறியீடு வழங்கியது.

மத்திய பிரதேசத்தில் கோயில் கிணறு இடிந்து விழுந்த விபத்து: பலி 35 ஆக அதிகரிப்பு

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கோயில் கிணற்றின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், படேல் நகரில் பழமையான பாலேஷ்வர் மகாதேவ் கோயில் உள்ளது. இக்கோயிலில் சுமார் 40 அடி ஆழமுள்ள பழங்கால கிணறு உள்ளது. கான்கிரீட் சிலாப் கொண்டு இந்த கிணறு மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று ராமநவமியை முன்னிட்டு இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. … Read more

வரி செலுத்துவோர் கவனத்திற்கு… ஏப்ரல் 1 முதல் அமலாகும் 10 முக்கிய மாற்றங்கள் – இதோ முழு விவரம்

10 Changes In Income Tax Rule : 2022-23 நிதியாண்டு இன்றுடன் (மார்ச் 31) நிறைவடைகிறது, 2023-2024 புதிய நிதியாண்டு நாளை (ஏப். 1) முதல் தொடங்குகிறது. 2023-24 நிதியாண்டு முதல் வருமான வரி விதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்ட வருமான வரி அடுக்குகளில் மாற்றங்கள், சில கடன் பரஸ்பர நிதிகளில் எல்டிசிஜி வரிச் சலுகை இல்லை உள்ளிட்டவை நாளை முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்களில் சில. 1) … Read more

ராமநவமி ஊர்வலத்தில் கல்வீச்சு – வன்முறையில் 22 பேர் படுகாயம்

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா உள்ளிட்ட சில பகுதிகளில் ராமநவமி ஊர்வலத்தின் போது இருதரப்பினருக்கு இடையே கடும் மோதல் வெடித்து வன்முறையாக மாறியது. இந்து அமைப்புகள் ஹவுராவில் ராம நவமி ஊர்வலம் நடத்தியபோது சிலர் கல்வீசிக் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றனர். இதனால் அங்கு கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வன்முறையாளர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தில் 22 பேர் காயம் அடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த … Read more

8 மாவட்டங்களில் ஆயுத படை சட்டம் நீட்டிப்பு

கவுகாத்தி: அசாம் மாநிலத்தின் 8 மாவட்டங்களில் சிறப்பு ஆயுதப்படை அதிகாரச்சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.  அமைதி குறைவான பகுதிகளாக கருதப்படும் தின்சுகியா, திப்ருகர், சாரைடியோ, சிவசாகர், ஜோர்ஹத், கோலகட், கார்பி ஆங்லாங் மற்றும் திமா ஹசோ ஆகிய 8 மாவட்டங்களில் மேலும் 6 மாதங்களுக்கு சிறப்பு ஆயுதப்படை அதிகார சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க இந்து பல்கலை.க்கு ரூ.8.21 கோடி நன்கொடை

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள இந்து பல்கலைக்கழகத்துக்கு, இந்திய – அமெரிக்க தொழிலதிபர் ரமேஷ் புதாடா 1 மில்லியன் டாலர் (ரூ.8.21 கோடி) நன்கொடை வழங்கியுள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமெரிக்க இந்து பல்கலைக்கழகம் கடந்த 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு அங்குள்ள ஸ்டார் பைப் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரமேஷ் புதாடா 1 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கினார். அவருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் பாராட்டு தெரிவித்தது. இது குறித்து ரமேஷ் கூறுகையில், ‘‘இளைஞர்கள் வாழ்வில் … Read more

இந்திய சந்தையில் விற்கப்படும் சாம்சங் மொபைல்கள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை தான் – சாம்சங் நிறுவன அதிகாரி

இந்திய சந்தையில் விற்கப்படும் சாம்சங் மொபைல்கள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை தான் என்று  சாம்சங் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார். இந்திய சந்தையில் சாம்சங் விற்கும் அனைத்து மொபைல் சாதனங்களும் இப்போது உத்தரபிரதேசத்தில் உள்ள அந் நிறுவனத்தின் நொய்டா தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. இது உலகின் மிகப்பெரிய மொபைல் போன் தொழிற்சாலை என்று கருதப்படுகிறது. முதன்மையான ‘கேலக்ஸி எஸ் 23’ மற்றும் ‘ஃபோல்ட்’ போன்களும் இங்கு தயாரிக்கப்படுகின்றன என்று சாம்சங் இந்தியாவின் மொபைல் பிசினஸ் பொது மேலாளர் அக் ஷய் … Read more

ஒரே நாளில் 3016 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:  காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 3,016 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புக்கள் எண்ணிக்கையானது 13509ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மட்டும் 3,375 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 6 மாதங்களுக்கு பிறகு ஒரு நாள் தொற்று பாதிப்பு மூவாயிரத்தை கடந்துள்ளது. மகாராஷ்டிராவில் 3, டெல்லியில் 2 மற்றும் இமாச்சலப்பிரதேசத்தில் ஒருவரும் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட … Read more

ராகுல் பதவி இழப்பு குறித்து ஜெர்மனி வெளியுறவு துறை கருத்து: காங்கிரஸுக்கு மத்திய சட்ட அமைச்சர் கடும் கண்டனம்

புதுடெல்லி: இந்திய நீதித் துறையில் அந்நிய சக்திகள் தலையிட முடியாது என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திஎம்பி பதவியை இழந்துள்ளார். இதுகுறித்து ஜெர்மனி வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் நேற்று முன்தினம் கூறும்போது, “ராகுல் காந்தி மீதான தீர்ப்பு,அவர் தகுதியிழப்பு செய்யப்பட்டதை கவனத்தில் கொண்டுள்ளோம். அவர் மேல்முறையீடு செய்ய இருக்கிறார். இந்திய நீதித் துறையின் நேர்மை, இந்தியாவின் ஜனநாயக கொள்கைகள் … Read more

கோயில் கிணற்றில் படிக்கட்டுகள் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு : ராம நவமி விழாவில் சோகம்; நிவாரணம் அறிவிப்பு!!

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ராமநவமி விழாவில் படிக்கட்டு கிணறு சரிந்து விழுந்த விபத்தில்  பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் படேல் நகரில் உள்ள பலேஷ்வர் மகாதேவ் ஜுலேலால் என்ற புகழ்பெற்ற பழமையான கோயிலில் ராமநவமி விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். விழாவின் ஒருபகுதியாக நடைபெற்ற தீப சடங்கை முன்னிட்டு, அங்கிருந்த படிக்கிணற்றில் குளிக்க பக்தர்கள் முண்டியடித்து கொண்டு உள்ளே இறங்கினர். அப்போது பாரம் தாங்காமல் கிணற்றின் படிக்கட்டுகள் … Read more