தேர்தல் ஸ்கெட்ச்: 4 மாநிலங்களில் பாஜக அதிரடி… புதிய தலைவர்கள் நியமனம்!

டெல்லியில் இருந்து பாஜக தேசிய தலைமை இன்று (மார்ச் 23) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் மூன்று மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள இந்த மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பாஜக அதிரடி இதுதொடர்பான பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிடப்பட்ட அறிவிப்பில், டெல்லி பாஜகவின் செயல் தலைவராக இருந்த விரேந்திர சச்தேவா அம்மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் ராஜஸ்தான் மாநில பாஜக தலைவராக … Read more

ஐயோ!! மறுபடியும் முதல இருந்தா..5 மாநிலத்தை அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா

கோவிட்-19 ஓமிக்ரான்: நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓமிக்ரான் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. பரவலாகப் பார்த்தால், இவை இந்தியாவில் பரவியிருக்கின்றன. இதனிடையே BA.1, BA.2, BA.5, BQ.1, BA.4, BA 2.12.1 XBB, BA 2.75, இவை அனைத்தும் ஓமிக்ரானின் மாறுபாடுகள் ஆகும். மேலும் ஓமிக்ரானின் 1000 வகைகளில், 100 மறுசீரமைப்பு பதிப்புகள் இந்த நேரத்தில் பரவுகின்றன. இந்த நேரத்தில் XBB1.5 மற்றும் XBB 1.16 ஆகியவை Variant Of Interest ஆகும், மேலும் இதில் தற்போது விஞ்ஞானிகள் கவனம் … Read more

சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை எப்போது?.. ஒன்றிய அரசு பதில்

2026-ம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்படலாம் என்று ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது. நாட்டில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்படுவது வழக்கம். அந்த அடிப்படையில், 2008-ம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத்தில் உள்ள தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டன. 2008-ம் ஆண்டு தொகுதிகள் மறுவரையறை செய்யும் போது பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்தும், தொகுதிகளை மறுவரையறை செய்யும் போது மாநிலங்களுக்கான பங்கு என்ன என்றும், அடுத்த தொகுதி மறுவரையறை … Read more

மும்பையில் போலி சோதனை நடத்தி வர்த்தகரிடம் ரூ.11 லட்சம் பறித்த 3 ஜிஎஸ்டி அதிகாரி பணிநீக்கம்

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள கல்பதேவி பகுதியில் லால்சந்த் வனிகோடா என்ற வர்த்தகர் அலுவலகத்தில் போலியாக சோதனை நடத்தி, மாநில ஜிஎஸ்டி ஆய்வாளர்கள் ஹிதேஷ் வசைகர், மச்சிந்திர கங்கனே, பிரகாஷ் ஷேகர் ஆகிய மூவரும் 2021 ஜூன் 14-ம் தேதி ரூ.11 லட்சத்தை எடுத்துச் சென்றனர். பின்னர் இந்த சோதனை போலி என்று அறிந்த லால்சந்த் எல்.டி.மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட3 ஆய்வாளர்கள், அவர்களுடன் வந்த ஒருவரை … Read more

”சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா நதிகளின் நீரோட்டம் குறையும்..” – ஐ.நா. எச்சரிக்கை..!

உலக வெப்பமயமாதல் காரணமாக வரும் பத்தாண்டுகளில் சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா போன்ற முக்கிய இமாலய நதிகளின் நீரோட்டம் குறையும் என்று ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் எச்சரித்துள்ளார். ஐநாவில் நடைபெற்ற சர்வதேச பனிப்பாறைகள் பாதுகாப்பு கருத்தரங்கில் பேசிய குட்ரெஸ், 1900ம் ஆண்டு முதல் உலக சராசரி கடல் மட்டம் முந்தைய 3 ஆயிரம் ஆண்டுகளில் உயர்ந்ததை விட வேகமாக உயர்ந்து வருவதாக உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது என்று தெரிவித்தார். காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களைத் … Read more

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.6,500: ஆளுநர் ஒப்புதல்

புதுச்சேரி: புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை 6,500 ரூபாயாக உயர்த்திய கோப்பிற்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். ரூ.5,500ஆக இருந்த மீன்பிடி தடைக்கால நிவாரணம் கூடுதலாக ரூ.1,000 உயர்த்தப்பட்டு ரூ.6,500ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பேரிடர் கால நிதியுதவி ரூ.2,500ல் இருந்து ரூ.3,000ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என்ற அமைச்சரவை கோப்பிற்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மோடி குறித்து அவதூறு பேச்சு | ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை: சூரத் நீதிமன்றம் தீர்ப்பு

சூரத்: கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 பிணையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. அதற்குள் அவர் உயர் நீதிமன்றத்தில் மேல் … Read more

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட், இனி இவை கூடுதலாக கிடைக்கும்

இமாச்சலப் பிரதேசத்தில் ரேஷன் கார்டு: இமாச்சல பிரதேசத்தில் உள்ள 19.5 லட்சம் ரேஷன் கார்டுதாரர் குடும்பங்களுக்கு அரசு ஜாக்பாட் பரிசுகளை தற்போது வழங்கியுள்ளது. அதன்படி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கான ரேஷன் ஒதுக்கீட்டை இப்பொது அரசாங்கம் உயர்த்தியுள்ளது. அந்தவகியில் இந்த மாதம் முதல் ரேஷன் டிப்போக்களில் நுகர்வோருக்கு 15 கிலோ தரமான கோதுமை மாவு மற்றும் 8 கிலோ அரிசி வழங்க இமாச்சலப் பிரதேச அசரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இந்த அளவு அதிகரிப்பு பல ஆண்டுகளுக்குப் பிறகு, நுகர்வோருக்கு … Read more

காப்பீடு திட்டத்தில் வராதோர், சிவப்பு ரேசன் அட்டை இல்லாத நோயாளிகளுக்கு உயர் சிகிச்சைக்கு ஏப்.1 முதல் கட்டணம்: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்கு கட்டணம் அறிவித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவக்கல்லூரியை ஒட்டியுள்ள மருத்துவமனையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வெளி நோயாளிகளாகவும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், காப்பீடு திட்டத்தில் வராதோர், … Read more

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா – எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய அரசு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 1,134 ஆக இருந்த நிலையில் இன்று 1300 ஆக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் நாடுமுழுவதும் 1,134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டது. இந்நிலையில் மேலும் அதிகரித்து இன்றைய தினம் 1300 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், நேற்று நாடு முழுவதும் 89, 078 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தபட்டதில் 1,300 … Read more