மோடி படத்தை கிழித்த வழக்கு காங். எம்எல்ஏவுக்கு ரூ.99 அபராதம்: குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு
நவ்சாரி: குஜராத்தில் பிரதமர் மோடியின் படத்தை கிழித்த வழக்கில் தொடர்புடைய காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு ரூ. 99 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலம் நவ்சாரி பகுதியில் வேளாண் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. அந்த பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2017ம் ஆண்டு மாணவர்களின் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ அனந்த் படேல் கலந்து கொண்டார். போராட்டத்திற்கு இடையே வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் அறைக்குள் நுழைந்த எம்எல்ஏ அனந்த் படேல், அங்கிருந்த பிரதமர் மோடியின் படத்தை கிழித்தார். … Read more