மோடி படத்தை கிழித்த வழக்கு காங். எம்எல்ஏவுக்கு ரூ.99 அபராதம்: குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு

நவ்சாரி: குஜராத்தில் பிரதமர் மோடியின் படத்தை கிழித்த வழக்கில் தொடர்புடைய காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு ரூ. 99 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  குஜராத் மாநிலம் நவ்சாரி பகுதியில் வேளாண் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. அந்த பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2017ம் ஆண்டு மாணவர்களின் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ அனந்த் படேல் கலந்து கொண்டார். போராட்டத்திற்கு இடையே வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் அறைக்குள் நுழைந்த எம்எல்ஏ அனந்த் படேல், அங்கிருந்த பிரதமர் மோடியின் படத்தை கிழித்தார். … Read more

கர்நாடகாவில் தேர்தல் பேரணியில் பணத்தை அள்ளி வீசிய காங். தலைவர் – வைரலாகும் வீடியோ

கர்நாடகாவில் தேர்தல் பேரணியின்போது காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், மக்களிடம் பணத்தை அள்ளி வீசியதாக வீடியா காட்சி வெளியாகி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரமும் சூடுபிடித்துள்ளது. ஆளும் பா.ஜ.க. ஆட்சியை தக் வைக்க வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. காங்கிரஸோ, ஆட்சி அமைப்பதற்கான அஸ்திவாரங்களை எடுத்து வருகிறது. இதனால் கர்நாடக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் தீவிரமாய்ச் … Read more

பழைய ஓய்வூதியத்தை தேர்ந்தெடுக்க இறுதி நாள் இதுதான்! காலக்கெடு நிர்ணயம் உண்மையா?

நியூடெல்லி: பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துவது குறித்து, நாட்டில் விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையில் பழைய ஓய்வூதிய முறை குறித்து பெரும் செய்திகள் வெளியாகி வருகின்றன. நாட்டின் பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், மத்திய அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையைத் திரும்ப கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்குள் பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யவும் அரசு ஊழியராக … Read more

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருந்தாலும் கூட, அவற்றை சீனா பின்பற்றுவதில்லை: இந்திய ராணுவ தளபதி பேட்டி

புதுடெல்லி: இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்னைகள் தொடரும் நிலையில், இரு நாட்டின் அதிகாரிகள் மத்தியில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எல்லையில் இரு நாட்டு படைகளும் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது. ஆனால் சீனா தரப்பில், எல்லையில் தனது ராணுவத்தையும், ஆபத்தான ஆயுதங்களையும் குவித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராணுவ தளபதி மனோஜ் பாண்டே அளித்த பேட்டியில், ‘சீனாவிடமிருந்து பல வகைகளில் ஆபத்துகள் வருகின்றன.  சைபர் கிரைம் … Read more

பாஜகவின் மகாராஷ்டிரா, கோவா வியூகம் தமிழ்நாட்டில் இதுவரை எடுபடாதது ஏன்?

தமிழ்நாட்டிலே பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை நிலைப்பாடுகள் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதன் காரணமாகவே அந்த கட்சி மகாராஷ்டிரா, கோவா, மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பிற கட்சிகளை விழுங்கி வளர்ந்ததைப் போல கூட்டணி கட்சியான அதிமுகவை தன்னுள் இழுத்து  அதிவேக வளர்ச்சி அடைய இயலவில்லை. தமிழகத்தில் திமுகவுக்கு சவால் விடும் அளவில் வாக்கு வங்கி அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது என்பதும், பல தேர்தல்களில் தொடர்ச்சியாக முயற்சித்தும் பாஜக பெரிய வெற்றிகளை அடைய முடியவில்லை என்பதும், அந்தக் கட்சி தமிழகத்தில் … Read more

கொரோனா ரிட்டர்ன்ஸ்! மீண்டும் 2020இல் இருந்தது போல வேகமெடுக்கிறது கோவிட் நோய்

Coronavirus Deteriorated: இந்தியாவில் கோவிட் நோய்த்தொற்றின் அளவு கணிசமாக அதிகரித்து வருவது கவலைகளை அதிகரித்துள்ளது. தினசரி சராசரி 1.30 சதவீதம் மற்றும் வாராந்திர விகிதம் 1.47 சதவீதமாக இருந்தது. ஆனால், இந்தியாவில் தற்போது 32 மாவட்டங்களில் கொரோனா பாசிடிவ் வழக்குகள் 10% க்கும் அதிகமாக உள்ளது.  6 மாநிலங்களில் கொரோனா நிலைமையை மோசமாக்கியுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை 10,981 ஆக உள்ளது. … Read more

இந்தியாவில் 18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய மருந்து கட்டுப்பட்டு ஆணையம் உத்தரவு

டெல்லி: இந்தியாவில் 18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்து இந்திய மருந்து கட்டுப்பட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 20 மாநிலங்களில் 76 மருந்து தயாரிப்பு நிறுவங்களின் ஆய்வு செய்ததை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. போலி மருந்து உற்பத்தி செய்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்ட்டுள்ளதாக மருந்து கட்டுப்பட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. 20 மாநிலங்களில் 76 மருந்து தயாரிப்பு நிறுவங்களின் ஆய்வு செய்ததை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. போலி மருந்துகளை தயாரிப்பது தொடர்பாக நாடு … Read more

எடியூரப்பா வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் – ஷிகாரிபுராவில் 144 தடை உத்தரவு அமல்

பெங்களூரு: கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், லிங்காயத், ஒக்கலிகா உள்ளிட்ட சாதியினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டு சதவீதத்தை பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு உயர்த்தியுள்ளது. மேலும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் பழங்குடியினர் வகுப்பில் உள் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதற்கு எதிராக பஞ்சாரா வகுப்பினர் நேற்று கர்நாடகா முழுவதும் போராட்டம் நடத்தினர். ஷிமோகா மாவட்டம் ஷிகாரிபுராவில் உள்ள … Read more

PAN Aadhaar Link Status: ஆன்லைனில் உங்கள் பான் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுவிட்டதா எப்படி பார்ப்பது?

PAN Aadhaar Link Updates: பான்-ஆதார் இணைக்கும் கடைசித் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது தங்களது பான் கார்டை ஜூன் 30, 2023க்குள் ஆதார் அட்டையுடன் இணைக்கலாம். வருமான வரித் துறை 28 மார்ச் 2023 செவ்வாய்கிழமை ட்விட்டரில் ஒரு சமீபத்திய அறிவிப்பை வெளியிட்டது. வரி செலுத்துவோருக்கு இன்னும் சில கால அவகாசம் வழங்கப்படுகிறது. பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கான தேதி ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. “ஜூலை 1, 2023 முதல், இணைக்கப்படாத பான் எண்ணானது … Read more

“எனது மகிழ்ச்சியான தருணங்களை இந்த பங்களாவில் செலவிட்டுள்ளேன்” – ராகுல்காந்தி..!

அரசு பங்களாவை காலி செய்யக் கூறி தாங்கள் அனுப்பிய கடிதத்துக்கு நன்றி என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி நடப்பேன் என்றும் மக்களவை வீட்டு வசதிக் குழுவுக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். எம்.பி. பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட ராகுல்காந்தி, அவரது அரசு பங்களாவை ஒரு மாதத்துக்குள் காலி செய்ய வேண்டும் என மக்களவை செயலகம் கடிதம் அனுப்பி இருந்தது. அதற்கு பதிலளித்து கடிதம் எழுதியுள்ள ராகுல்காந்தி, பொதுமக்களின் விருப்பத்தின்பேரில் கடந்த 4 முறை மக்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நான், எனது … Read more