பாலியல் தொல்லைக்கு ஆளான ஜப்பானிய பெண் உருக்கமான பதிவு!!

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பாலியல் அத்துமீறலுக்கு உள்ளான ஜப்பானிய இளம்பெண் இந்தியா குறித்து உருக்கமாக ட்வீட் செய்துள்ளார். டெல்லி பகர்கஞ்ச் பகுதியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பான் நாட்டை சேர்ந்த 24 வயது இளம்பெண் மீது வண்ணம் பூசிய இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்குக் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வீடியோவை ஆதாரமாக வைத்து ஜப்பான் பெண்ணிடம் அத்துமீறிய 3 இளைஞர்களை போலீஸார் … Read more

ஆந்திர மாஜி முதல்வர் பாஜகவில் சேர முடிவு?

திருமலை: ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கடைசி முதல்வராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நல்லாரி கிரண்குமார். இவர் ஆந்திரா, தெலங்கானா என மாநிலம் 2ஆக பிரிக்கப்பட்ட பிறகு சமக்கிய ஆந்திரா (ஒருங்கிணைந்த ஆந்திரா) என்ற கட்சியை தொடங்கினார். தொடர்ந்து நடந்த தேர்தலில் ஆந்திர மாநிலம் முழுவதும் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அதன் பின்னர் மீண்டும் காங்கிரசில் இணைந்தார். ஆனால் கட்சி செயல்பாடுகளில் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்தார். ஆந்திரா, தெலங்கானாவில் ராகுல்காந்தி பாரத் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டபோது கூட கிரண்குமார் … Read more

தன்பாலின திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்

புதுடெல்லி: தன்பாலின உறவாளர்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமாக அங்கீகரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளது. தன்பாலின உறவாளர்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமாக அங்கீகரிக்கக் கோரி இரண்டு தன்பாலின தம்பதிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்களில், “திருமணத்துக்கான இணையரை தேர்வு செய்யும் உரிமை LGBTQ சமூகத்தினருக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்காமல் இருப்பது சமத்துவ உரிமைக்கும், வாழ்வுரிமைக்கும் எதிரானது. … Read more

லண்டனிலிருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில், புகைபிடித்ததாக அமெரிக்கர் மீது வழக்குப்பதிவு

ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளிடம் தவறாக நடந்துகொண்டது மற்றும் குளியலறையில் புகை பிடித்ததற்காக அமெரிக்காவை சேர்ந்த பயணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து மும்பை வந்த விமானத்தில் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த ரமாகாண்ட் என்ற பயணி வந்துள்ளார். குளியலறையில் அவர் புகை பிடித்தபோது அலாரம் அடித்ததையடுத்து விமான பணியாளர்கள் அவரிடம் இருந்து சிகரெட்டை பிடிங்கி வீசி, இருக்கைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் விமானத்தின் கதவை திறக்க … Read more

பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு; நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் வியூகம்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்கவுள்ள நிலையில், ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் வியூகங்களை வகுத்து வருகின்றன. கடந்த ஜனவரி 31ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ெதாடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி 2023-24ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து இரு அவைகளிலும் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும், பிரதமர் … Read more

தெலங்கானா முதல்வர் மருத்துவமனையில் அனுமதி!!

உடல்நலக்குறைவு காரணமாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக ஹைதராபாத் ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து முதல்வரின் உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சந்திரசேகர் ராவுக்கு இன்று காலை வயிற்றில் அசௌகரியம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு, சி.டி. மற்றும் எண்டோஸ்கோபி செய்யப்பட்டது. … Read more

மோடி நிகழ்ச்சியில் சிறுவனை அனுமதிக்காத காவலர்கள்!!

கர்நாடகா மாநிலம் வந்திருந்த பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சிறுவன் கருப்பு டி-சர்ட் அணிந்திருந்ததால் அவரை போலீஸார் அனுமதிக்கவில்லை. கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு பிரதமர் பயணிப்பது, நலத்திட்டங்களை தொடங்கி வைப்பது அதிகரித்து வருகிறது. இன்று 6ஆவது முறையாக கர்நாடகா வந்த பிரதமர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மண்டியா, தார்வாடில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் ரூ.16 ஆயிரம் கோடிக்கு திட்டங்களை தொடங்கி வைத்தார். ரூ.8,480 … Read more

gay மற்றும் lesbian திருமணங்களை ஏற்க முடியாது; ஒன்றிய அரசு பிடிவாதம்.!

ஒரே பாலினத்தவ்ர் திருமணத்தை சட்டப்பூர்வமாக ஏற்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது சமீபத்திய மாதங்களில் குறைந்தது நான்கு ஓரினச்சேர்க்கை தம்பதிகள் ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிக்குமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டனர். இது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கத்துடன் சட்டப்பூர்வ மோதலுக்கான களத்தை அமைத்தது. இந்தநிலையில் ஒன்றிய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஒரே பாலின திருமணம் என்பது “இந்திய குடும்ப அலகு” என்ற கருத்துடன் ஒத்துப்போகாது, இது “கணவன், … Read more

குடிசை வீட்டில் ஏற்பட்ட தீயால் 3 குழந்தைகள், தம்பதி தீயில் கருகி பலி: உத்தரபிரதேசத்தில் சோகம்

கான்பூர்: உத்தரபிரதேசத்தில் நேற்றிரவு குடிசை வீட்டில் ஏற்பட்ட தீயால், 3 குழந்தைகள் மற்றும் தம்பதி இருவரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அடுத்த ஹமாவ் கிராமத்தில் சதீஷ் (30), அவரது மனைவி காஜல் (26), அவர்களது மூன்று குழந்தைகள் சன்னி (6), சந்தீப் (5), குடியா (3) ஆகியோர் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு குடிசை வீட்டில் திடீரென தீப்பற்றியதால், வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த 5 பேரும் தீயில் கருகி … Read more

“இந்தி பேச முடியாது…” – வைரலாகும் ஆட்டோ ஓட்டுநரின் பதில்!! VIDEO

ஹிந்தியில் பேச வேண்டும் என்று கூறியவருக்கு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பதிலடி கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூரில் நடைபெற்ற சம்பவம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ஹிந்தி பேசும் சில இளம்பெண்கள் பெங்களூருவுக்கு வந்துள்ளனர். அப்போது அவர்கள் ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் மாநில மொழியான கன்னடத்தில் பேசியுள்ளார். ஆனால் அப்பெண்கள் ஹிந்தியில் பேசுமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர், நான் ஏன் ஹிந்தியில் பேசவேண்டும் என்று கேள்வி எழுப்பினார். … Read more