சார்தாம் யாத்திரையில் முன்பதிவு வசதி: பக்தர்களின் வசதிக்காக உத்தராகண்ட் அரசு அறிமுகம்

புதுடெல்லி: பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட நான்கு தலங்களின் புனித யாத்திரையில் இனி நீண்டநேரக் காத்திருப்புக்கு அவசியமில்லை. பக்தர்களின் வசதிக்காக முன்பதிவு உள்ளிட்ட புதிய வசதிகளை உத்தராகண்ட் அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. பாஜக ஆளும் மாநிலமான உத்தராகண்டில் முக்கியப் புனித யாத்திரையாக ‘சார்தாம்’ உள்ளது. இதில், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி. யமுனோத்ரி ஆகிய 4 சிவத் தலங்கள் இடம் பெற்றுள்ளன. இவை, இமயமலையில் அமைந்திருப்பதால், உத்தராகண்டை தேவபூமி எனவும் அழைப்பது உண்டு. இந்த நான்கு தலங்களுக்கு தமிழகம் உட்பட … Read more

ஹவாய் செருப்பு அணியும் சாமானியரும் விமானத்தில் செல்ல வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

பெங்களூரு: ஹவாய் செருப்பு அணியும் சாமான்ய மக்களும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளை ஒன்றிய, மாநில டபுள் இன்ஜின் பாஜ அரசு எடுத்து எடுத்து வருகிறது என பிரதமர் நரேந்திரமோடி கூறினார். கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவில் புதிதாக தாமரை வடிவிலான விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. ரூ.450 கோடி மதிப்பிலான இவ்விமான நிலையத்தில் 300 பயணிகள் வரை பயணிக்கலாம். பெங்களூருவை தொடர்ந்து கர்நாடகாவின் மிகப்பெரிய 2வது விமான நிலையமாக இது அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தை நேற்று … Read more

35 ஹைட்ரஜன் ரயில்களுக்கு டெண்டர் விட ரயில்வே திட்டம்

புதுடெல்லி: ரயில்வே அமைச்சகம் ரூ.2,800 கோடி மதிப்பில் 35 ஹைட்ரஜன் ரயில்களை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. மலைப்பிரதேசங்கள் மற்றும் பாரம்பரிய ரயில்கள் ஓடும் இடத்தில் ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்காக சீமன்ஸ், கும்மின்ஸ், ஹிடாச்சி, பெல் மற்றும் மேதா சர்வோ ஆகிய நிறுவனங்களுடன் ரயில்வே அமைச்சகம் கடந்தவாரம் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த கூட்டம் பயன ளித்ததாகவும், இத்திட்டத்தை விரைவு படுத்த தங்கள் கருத்தை தெரிவித்துள்ளதாகவும், ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனங்களிடம் இருந்து … Read more

ஈபிஎஸ்-க்கு வந்திருக்கும் அடுத்த அதிர்ச்சி!: அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை அங்கீகரிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் மனு..!!

டெல்லி: அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை அங்கீகரிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேநேரத்தில் அதிமுக விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர் ஒரு மனுதாக்கல் செய்தனர். அதில், அதிமுக … Read more

ஆயுத பயிற்சிக்காக பாகிஸ்தான் செல்ல முயற்சி: தமிழகத்தை சேர்ந்தவர் உட்பட 2 பேர் கைது

புதுடெல்லி: பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சி பெறுவதற்காக சட்டவிரோதமாக எல்லை தாண்ட திட்டமிட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட 2 பேரை டெல்லி போலீஸார் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து டெல்லி போலீஸ் துணை ஆணையர் (சிறப்பு பிரிவு) ராஜீவ் ரஞ்சன் சிங் கூறியதாவது: பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதி கள் சமூக வலைதளங்கள் மூலம்இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இதில் தூண்டப்பட்ட சிலர் மும்பை வழியாக டெல்லிவந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட போவதாகவும், ஆயுத பயிற்சி பெற அவர்கள் சட்டவிரோதமாக … Read more

Exit Poll Results: மூன்று மாநில தேர்தல்களிலும் யார் யார் முன்னணி… Zee News – Matrize கருத்துக்கணிப்பு

வடக்கிழக்கு மாநிலமான திரிபுராவில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப். 16ஆம் தேதி நடைபெற்றது. பிற வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்து ஆகியவற்றில் உள்ள தலா 60 தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப். 27) நடைபெற்றது.  இந்த மூன்று மாநிலங்களுக்குமான தேர்தல் முடிவுகள் வரும் மார்ச் 2ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த வகையில், தற்போது, இந்த மூன்று மாநில தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய, Zee News-Matrize கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இதில், … Read more

மோசடி வழக்கில் ஹரி நாடாரை மீண்டும் கைது செய்தது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்..!

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்து வரும் ஹரி நாடாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். கடந்த 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் நாடார் சமுதாயம் சார்பாக,  சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு 37,726 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தவரும், தமிழகத்தில் சுயேட்சை வேட்பாளர்களில் அதிக அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்த வேட்பாளருமான ஹரி நாடாரை பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் … Read more

காஷ்மீர் புல்வாமாவில் பண்டிட் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் காஷ்மீர் பண்டிட் ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இறந்தவர் சஞ்சய் சர்மா (40) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் தெற்கு காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள அச்சன் பகுதியில் வசித்து வந்தவர். சஞ்சய் சர்மா காலை 11 மணியளவில் சந்தைக்கு சென்று கொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டுமருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சம்பவம் நடந்த இடம் … Read more

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் உயிரிழப்பு

தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில், உறவினர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த 19 வயது இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து இறந்த காணொளி வெளியாகி உள்ளது. நிர்மல் மாவட்டம் பார்டி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த முத்யம் என்ற இளைஞர் பங்கேற்று உற்சாகமாக நடனமாடி கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து முத்யத்தின் உறவினர்கள் அவரை பைன்சா பகுதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு … Read more

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு வினாத்தாள் லீக் ஆனதாக தவறான தகவல் பரப்பப்படுவதாக சிபிஎஸ்இ விளக்கம்

டெல்லி: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு வினாத்தாள் லீக் ஆனதாக தவறான தகவல் பரப்பப்படுவதாக  சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. பணம் பறிக்கும் நோக்கத்துடன் சில கும்பல் தவறான தகவலை பரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பெற்றோர்கள், மாணவர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளுக்கு துணை போனால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த 15ம் தேதி முதல் நடந்து வருகிறது. வருகிற ஏப்ரல் … Read more