Same Sex Marriage: மத்திய அரசையும் மீறி சட்டப்பூர்வமாகுமா தன்பாலின திருமணம்?

Same Sex Marriage In India: இந்தியாவில் தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், தன்பாலின திருமணம் என்பது இந்திய குடும்ப அமைப்பின் அடிப்படைக்கு எதிரானது என்றும், தாய், தந்தை என இயற்கையான முறையில் இருந்து முற்றிலும் விலகியிருப்பதாகவும் கூறி, அதை ஏற்க கூடாது என பரிந்துரைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஒன்றுசேர்த்து, உச்ச நீதிமன்றம் நாளை (மார்ச் 13) விசாரணை மேற்கொள்ள உள்ளது.  … Read more

குஜராத்தில் பாடகர் மீது ரூபாய் நோட்டுகளை மழைபோல் பொழிந்த பார்வையாளர்கள்

குஜராத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது பாடகர் ஒருவர் மீது ஆண் மற்றும் பெண் பார்வையாளர்கள் ரூபாய் நோட்டுகளை மழைபோல் பொழிந்தனர். வல்சாத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடகர் கிர்திதன் காத்வியின் பாடலை ஏராளமானோர் ரசித்து கேட்டுக்கொண்டிருந்த நிலையில், சில பார்வையாளர்கள் மேடை முன்பு வந்து கிர்திதன் காத்வி மீது ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்தபடியே இருந்தனர். இதனால் அந்த மேடை முழுவதும் ரூபாய் நோட்டுகளால் நிறைந்திருந்தது. கடந்த டிசம்பர் மாதம் குஜராத்தின் நவ்சாரி கிராமத்தில் நடைபெற்ற … Read more

கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஹப்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் வசிக்கும் போலீஸ் கான்ஸ்டபிள் அங்கித் குமார் (25) என்பவர், கடந்த பிப்ரவரியில் மொராதாபாத்தில் இருந்து ஹாப்பூர் போலீஸ் லைனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஹாப்பூர் போலீஸ் லைனில் பணியில் இருக்கும் போது, தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஹாபூர் போலீஸ் எஸ்பி அபிஷேக் வர்மா கூறுகையில், ‘கான்ஸ்டபிள் அங்கித் குமார், தனது பாதுகாப்பு துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு … Read more

மாமியாரின் மூக்கை அறுத்த மருமகன்! ஏன் தெரியுமா?

மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் மாமியாரின் மூக்கை மருமகன் அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் மோர்னியா மாவட்டம் சந்தப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஹ்மத் பகேல் – ராம் விலாசி தம்பதிக்கு ஷியாம் சுந்தரி என்ற மகள் உள்ளார். அவரை பக்கத்து ஊரில் வசிக்கும் ராஜூ பகேல் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். பின்னர் ஷியாம் சுந்தரிக்கும் மருமகன் ராஜூவுக்கும் சமீப காலமாக பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. ஷியாம் சுந்தரியை ராஜூ தொடர்ந்து … Read more

கோவாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய விமானப்படை

கோவாவில் நேரிட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. Mi-17 ரக ஹெலிகாப்டர்கள் மூலமாக இதுவரை சுமார் 47 ஆயிரம் லிட்டர் அளவுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு தீயணைப்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 5ம் தேதி முதல் நேற்று வரை கோவாவில் 48 இடங்களில் காட்டுத் தீ பற்றிய நிலையில், 41 இடங்களில் தீ அணைக்கப்பட்டன. மற்ற 7 இடங்களில் பற்றிய காட்டுத் தீயை அணைக்கும் பணிகளை, இந்திய விமானப்படை, கடற்படை மற்றும் … Read more

டிஜிட்டல் மயமாக்கல் மூலம் காகிதமில்லா நீதிமன்றங்களே நீதித்துறையின் இலக்கு: சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி கருத்து

புதுடெல்லி: டெல்லியில் ‘ஸ்மார்ட் நீதிமன்றங்கள் மற்றும் நீதித்துறையின் எதிர்காலம்’ என்ற கருத்தரங்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‘மின்னணு நீதிமன்றங்கள் என்பது எதிர்காலத்தின் நீதித்துறைக்கு அடிப்படையாது. டிஜிட்டல் மயமாக்கல், ஆன்லைன் மனு தாக்கல், காணொலி விசாரணை, மின்னணு ஆவணங்கள் போன்றவற்றின் மூலம் காகிதமில்லா நீதிமன்ற நடவடிக்கைகளை கொண்டு வரமுடியும். எதிர்காலத்தில் அவ்வாறு தான் இருக்கும். நீதிமன்ற விசாரணைகளை மக்கள் பார்க்கும் வகையில், ஆடியோ-வீடியோ ஸ்ட்ரீமிங் வசதியும் செய்து தரப்படும். இந்தியா … Read more

"எனக்கு கல்லறையைத் தோண்டுகிறது காங்கிரஸ்; நானோ ஏழைகளை மேம்படுத்தி வருகிறேன்" – பிரதமர் மோடி

மாண்டியா: “தாய்மார்கள், சகோதரிகள் உள்ளிட்ட நாட்டு மக்களின் ஆசிர்வாதம் எனக்கு பாதுகாப்பு கவசமாக இருப்பதை அறியாமல் காங்கிரஸ் கட்சி எனக்கு குழி பறிக்கும் கனவை காண்கிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மாண்டியாவில் இன்று பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூரு – மைசூரு இடையேயான‌ 118 கி.மீ. தூர 10 வழி நெடுஞ்சாலை, ஹுப்ளி – தார்வாட் இடையிலான சாலையை திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனால் இப்பகுதியின் சமூக பொருளாதார வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நிவாரணம், மத்திய அரசு எடுத்த மிகப் பெரிய முடிவு

ரேஷன் கார்டு புதுப்பிப்பு: நீங்களும் ரேஷன் கார்டு பயனாளியாக இருந்து, அரசின் இலவச ரேஷன் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. அரசின் இந்த ஆட்சிக்குப் பிறகு, எந்தச் சூழ்நிலையிலும் டீலர்கள் குறைந்த அளவு ரேஷன் வழங்க முடியாது. உண்மையில், ரேஷன் டீலர்களுக்கு அரசாங்கம் ஒரு புதிய விதியை அமல்படுத்தியுள்ளது. மோடி அரசாங்கத்தின் லட்சியமான ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்‘ நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது, அதன் பிறகு அனைத்து … Read more

சிக்கிம் மாநிலத்தில் கடும் பனியில் சிக்கிய 900 சுற்றுலா பயணிகள்

சிக்கிம் மாநிலத்தில் பெய்து வரும் கடும் பனிப் பொழிவால் அங்கு சுற்றுலா சென்ற 900 பேர் சிக்கிக் கொண்டனர். நாதுலா மற்றும் சோம்கோ ஏரிக்கு 89 வாகனங்களில் 900 பேர் சுற்றுலா சென்றனர். அங்கு பெய்த பனிப்பொழிவில் சுற்றுலா பயணிகள் சென்ற வாகனங்கள் சிக்கிக் கொண்டன. இதையடுத்து ராணுவத்தினர் களமிறக்கப்பட்டு 15 வாகனங்களையும் அதில் இருந்தவர்களையும் பத்திரமாக மீட்டெடுத்தனர். அடர்ந்த பனி படிப்படியாக அகற்றப்பட்டு வருவதால் மீட்கப்பட்ட வாகனங்கள் மூலம் காங்டாக் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அனுப்பப்பட்டு … Read more

மேற்குவங்கத்தில் 3வது முறையாக வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் மூன்றாவது முறையாக மீண்டும் கற்கள் வீசப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர். மேற்குவங்க மாநிலம் ஃபராக்கா அடுத்த முர்ஷிதாபாத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்த போது, அந்த ரயிலின் மீது மர்ம நபர்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் ரயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. கல்வீச்சில் யாரும் காயமடைந்ததாக தகவல் இல்லை. இதுகுறித்து கிழக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (சிபிஆர்ஓ) … Read more