ஹோலிப் பண்டிகையின் போது மானபங்கம் செய்யப்பட்ட ஜப்பானியப் பெண்.. டிவிட்டர் புகாரை அடிப்படையாகக் கொண்டு 3 பேரை கைது செய்த போலீசார்.!

ஹோலிப்பண்டிகையின் போது மானபங்கப்படுத்தப்பட்ட ஜப்பானிய இளம் பெண் இந்தியாவை விட்டு வெளியேறினார். வங்காள தேசம் புறப்பட்டுச் சென்ற அவர் இந்தியா மிகச்சிறந்த நாடு என்றும் ஹோலி அருமையான பண்டிகை என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். டெல்லியில் ஹோலிக் கொண்டாட்டத்தின் போது சில இளைஞர்கள் அவரை மானபங்கப்படுத்த முயன்றதாகவும் தாம் மிகவும் அதிர்ச்சியடைந்து இருப்பதாகவும் அந்தப் பெண் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அந்தப் பெண் புகார் ஏதும் அளிக்காத போதும் காவல்துறையினர் தாமாக விசாரணை மேற்கொண்டு வீடியோ காட்சியின் அடிப்படையில் சிறுவன் … Read more

சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது குறித்து கர்நாடகாவில் தேர்தல் ஆணையம் ஆலோசனை

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது குறித்து 3 நாள் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி உள்ளது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக கடந்த மூன்று நாட்களாக அரசியல் கட்சிகள், அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் ஆலோசனை நடந்தது. இதைத்தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று கூறியதாவது: கர்நாடக சட்ட பேரவையின் பதவிக்காலம் மே 24ல் முடிவு பெறுகிறது. 2023 சட்டப்பேரவை தேர்தலில் 18 வயது … Read more

'ஜே.இ.இ.' நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்..!!

ஐ.ஐ.டி., என்.ஐ.டி. உள்பட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்ந்து படிக்க ஜே.இ.இ. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் 2 கட்டங்களாக நடத்தப்படும் இந்த தேர்வின், முதல்கட்ட தேர்வு கடந்த ஜனவரி மாதம் 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்வை 8 லட்சத்து 24 ஆயிரம் மாணவ-மாணவிகள் நாடு முழுவதும் எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2-ம் … Read more

மும்பையில் பகீர் சம்பவம்!! பெண்ணின் மாதவிடாய் ரத்தம் ரூ. 50 ஆயிரத்திற்கு விற்பனை..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு ஒரு நபரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணின் கணவர் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். திருமணமான சில நாட்கள் கழித்து அவரது கணவர், மாமியார் மற்றும் மாமனார் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. பொறுத்து பொறுத்து பார்த்திருந்த அந்த பெண் ஒரு கட்டத்தில் அவரது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்தார். பின்னர், அவரது பெற்றோருடன் காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். வரதட்சணை கேட்டு … Read more

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த 4 சீனர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

டேராடூன்: கடந்த 2019-ல் டெல்லியில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டுக்கு பேருந்தில் தப்பிச் செல்ல முயன்ற 4 சீனர்கள், இந்திய – நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் நால்வருக்கும் உத்தராகண்ட் மாநில சம்பாவத் மாவட்ட நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.45,000 அபராதமும் விதித்துள்ளது. நால்வரையும் அழைத்துச் சென்ற நேபாளி ஒருவரும் கைது செய்யப்பட்டார். அவர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். சீனர்கள் … Read more

மருந்து தேவை… ராகுலை மீண்டும் விமர்சனம் செய்த துணை ஜனாதிபதி

மீரட்: நாடாளுமன்றத்தில் மைக் அணைக்கப்படுகிறது என்று விமர்சனம் செய்த ராகுல்காந்தியை மீண்டும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி லண்டன் சுற்றுப்பயணம் சென்று இருந்த போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலாளர் கட்சியின் எம்.பி வீரேந்திர ஷர்மாவால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சில்,’ நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசும் போது மைக்குகள் அணைக்கப்படுகின்றன’ என்று பேசினார். இதற்கு பா.ஜ கண்டனம் தெரிவித்து இருந்தது. ஆனால் மரபை மீறி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரும் … Read more

அடக்கொடுமையே..!! 4 வயது குழந்தையை கொம்பால் தூக்கி வீசிய காளை!!

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் நகரில் உள்ள தானா காந்தி பார்க் பகுதியில் உள்ள தானிபூர் மண்டியில், தெரு ஒன்றில் 4 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வேகமாக வந்த காளை ஒன்று, திடீரென குழந்தையை முட்டி தள்ளியது. மேலும், குழந்தையை தலையால் தள்ளிக்கொண்டு அங்கேயே படுத்தது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அந்த குழந்தை … Read more

தெலங்கானாவில் விநோதம்! 2 கர்ப்பிணி காதலிகளுடன் திருமணம் செய்த இளைஞர்..

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி கிராமங்களில் பல்வேறு வகையான சம்பிரதாயங்கள் நடைமுறையில் உள்ளன. ஒரு சில கிராமங்களில் திருமணத்திற்கு முன் ஆண், பெண் ஆகியோர் இணைந்து வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம் செய்து கொள்ளும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. ஆனால் ஒரு வாலிபர் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து, அவர்களுடன் இணைந்து வாழ்ந்து, இரண்டு பேருக்கும் ஒரு குழந்தை பிறந்த பின் இரண்டு பேரையும் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்ட … Read more

இன்ஃப்ளூயன்சா வகை வைரஸ் பரவல் | கரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றுங்கள் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை

புதுடெல்லி: இன்ஃப்ளூயன்சா வகை வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கரோனா தடுப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளையும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் அனைத்து மாநில அரசுகளுக்கும் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாட்டின் சில மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இன்ஃப்ளூயன்சா வகை வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இன்ஃப்ளூயன்சா வைரஸ் பருவ காலத்தில் பரவும் காய்ச்சல் ஆகும். தற்போதைய பருவநிலை மற்றும் … Read more

மத்திய ரயில்வேயின் அகலப்பாதை முழுவதும் மின்மயமாக்கம்.. நூறு சதவீத இலக்கை எட்டிய ரயில்வேக்கு பிரதமர் மோடி பாராட்டு!

மத்திய ரயில்வேயின் அகலப்பாதை வழித்தடத்தில் நூறு சதவீதம் மின்மயமாக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது மகத்தான சாதனை என ரயில்வேத் துறையினருக்கு அவர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். மத்திய ரயில்வே வழித்தடத்தில் 3 ஆயிரத்து 825 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதை முழுவதும் மின்மயமாக்கப்பட்டு விட்டதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் டன் கரியமில வாயுவால் ஏற்படக்கூடிய மாசு தடுக்கப்பட்டுள்ளது. ரயில்களின் வேகத்தைக் கூட்டுவதற்கும் இந்த மின்மயமாக்கும் நடவடிக்கை உதவியிருப்பதாக மத்திய … Read more