மகாத்மா காந்தி எந்த பல்கலைக்கழகத்திலும் படித்து பட்டம் பெறவில்லை: ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் கருத்தால் சர்ச்சை

போபால்: மகாத்மா காந்தி எந்த பல்கலைக்கழகத்திலும் படித்து பட்டம் பெறவில்லை என்று ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் ஆட்சி புரியும் பாஜக அரசு நியமித்துள்ள ஆளுநர்கள் சர்ச்சையான கருத்துக்களை பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன கருத்துக்களை பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் குவாலிய நகரில் நடைபெற்ற … Read more

தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து..!!

2019 ஆம் ஆண்டு கர்நாடகாவில் ஒரு தேர்தல் பரப்புரை பேச்சுக்காக ராகுல் காந்தி அவர்களுக்கு குஜராத் நீதிமன்றம் இரண்டாண்டு தண்டணை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. தனது பேச்சில் உள்நோக்கம் ஏதுமில்லை என்று அவர் கூறிய பிறகும், நீதிமன்றம் அதை கவனத்தில் கொள்ளவில்லை. இதனிடையே இன்று மக்களவை செயலாளர், ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார். அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில், இப்படி ஒரு தீர்ப்பு வந்திருப்பதும், உடனடியாக இன்று அவர் எம்பி … Read more

ராகுல் காந்தி தகுதிநீக்கம் | இடைத்தேர்தலை அறிவிக்குமா தேர்தல் ஆணையம்; நிபுணர்கள் சொல்வதென்ன?

புதுடெல்லி: ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் எம்.பி.யாக இருந்த கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு தேர்தல் ஆணையத்தால் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி … Read more

மீண்டும் எகிறும் கொரோனா, 24 மணி நேரத்தில் இவ்வளவு பாதிப்பா?

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள்: இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. நாட்டில் ஒரு நாளில் 1,590 கோவிட் -19 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது 146 நாட்களில் அதிகபட்சமாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. அதேபோல் இதில் செயலில் உள்ள தொற்றுநோய்களின் எண்ணிக்கை 8,601 ஆக அதிகரித்துள்ளது. காலை 8 மணிக்கு அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின் படி, வைரஸ் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 6 இறப்புகளுடன் 5,30,824 ஆக உயர்ந்துள்ளது. இதில் … Read more

எம்.பி. பதவி பறிப்பு எதிரொலி.. அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு ஒரு மாதம் கெடு!

டெல்லி: அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டிருப்பதால் டெல்லியில் உள்ள அரசு பங்களாவில் அவர் தொடர்ந்து குடியிருக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தில், கர்நாடக மாநிலம் கோலாரில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரை வைத்துள்ளது எப்படி?’ என்று தெரிவித்தார்.இதை எதிர்த்து ராகுலுக்கு எதிராக குஜராத்தின் சூரத்தை சேர்ந்த பாஜ எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு … Read more

இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து!!

கர்நாடகா அரசு இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் நேற்று கர்நாடகா மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒக்கலிகர்களுக்கு 6 சதவீதமும், லிங்காயத் சமூகத்திற்கு 7 சதவீத இட ஒதுக்கீடும் வழங்குவது என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மத சிறுபான்மையினருக்கான இஸ்லாமியர் தனி இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு பதிலாக … Read more

லட்சத் தீவு எம்.பி. முகமது பைசல் போன்று மீண்டு வருவாரா ராகுல்?

புதுடெல்லி: லட்சத் தீவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் முகமது பைசல். கடந்த 2009 -ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது அப்போதைய மத்திய அமைச்சர் சையதுவின் மருமகன் முகமது சலியாவை கொலை செய்ய முயற்சித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் முகமது பைசலுக்கு 10 ஆண்டுசிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. ஆனால், முகமது பைசல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், எம்பி பதவியில் … Read more

ராகுல் காந்தி தகுதி நீக்கம்: உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்!

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 8(3) படி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு நேற்று முன் தினம் இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து நேற்று மக்களவைச் செயலகம் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் … Read more

7th Pay Commission: அடி தூள்… டிஏ ஹைக்கை தொடர்ந்து ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம், கணக்கீடு இதொ!!

மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி நேற்று வந்தது. அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பை நேற்று மத்திய அமைச்சரவை வெளியிட்டது. அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு தற்போது 42 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரண (டிஆர்) அதிகரிப்பு ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும். இதனால் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும்.  ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்? அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 4 சதவீதம் … Read more

வருமான வரி உச்சவரம்பில் திருத்தம் செய்து புதிய நிதி மசோதாவுடன் நாடாளுமன்றத்தில் தாக்கல்!

வருமான வரி உச்சவரம்பில் திருத்தம் செய்து புதிய நிதி மசோதாவுடன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 7 லட்சம் ரூபாய் வரை வருமான வரி செலுத்தத் தேவையில்லை. ஆனால் 7 லட்சத்து 100 ரூபாய் வருமானத்துக்கு 25 ஆயிரத்து 10 ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற நிலை இருந்தது. இதில் திருத்தம் வெளியிட்ட நிதியமைச்சர், உச்சவரம்பை உயர்த்தியுள்ளார். இத்திருத்தத்தில் 7 லட்சத்து 27 ஆயிரத்து 700 ரூபாய் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு … Read more