உலகின் 3-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும்: அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை

புதுடெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆசிய பொருளாதார கலந்துரை யாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது: அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக (தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது) உருவெடுக்கும். 2047-ம் ஆண்டில் அமெரிக்கா இன்று இருக்கும் நிலையை நாம் … Read more

நண்பர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உற்சாக நடனம்: 19 வயது இளைஞர் நெஞ்சுவலியால் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!

தெலுங்கானா: நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உற்சாகமாக நடனமாடி கொண்டிருந்த 19 வயது இளைஞர் திடீர் மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் அமைந்துள்ள  கமோல் கிராமத்தில் கிருஷ்ணையா என்பவரது மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிருஷ்ணையா  உறவினரான மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மணமகனின் நெருங்கிய உறவினரும் நண்பருமான 19 வயது இளைஞர் முத்தியம் என்பவர் கலந்துகொண்டு  சினிமா … Read more

மேகாலயாவில் 12.06%, நாகலாந்தில் 15.5% | காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்

ஷில்லாங்/ கோஹிமா: வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகலாந்தில் இன்று (பிப்.27) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 9 மணி நிலவரப்படி மேகாலயாவில் 12.06% வாக்குப்பதிவும், நாகலாந்தில் 15.5% வாக்குப்பதிவும் நடைபெற்றுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களில் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். நினைவுப் பரிசு: மேகாலயாவில் வாக்குச்சாவடிக்கு முதலில் வந்த ஐந்து வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. வாக்காளர்கள் பெருமளவில் வந்து … Read more

NEET PG: நீட் முதுகலை மருத்துவ நுழைவுத்தேர்வு குறிப்பிட்ட தேதியில் நடக்குமா? நடக்காதா?

NEET PG 2023: நீட் தேர்வு ஒத்திவைப்பு தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று, பிப்ரவரி 27, 2023 அன்று தொடரும். முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பது தொடர்பான மனுக்களை விசாரித்துவந்த உச்ச நீதிமன்றம், விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தது. மார்ச் 5 என ஐந்து மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. தேர்வெழுத வேண்டிய மாணவர்கள் அதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். பலரின் கோரிக்கைகளை ஏற்று, நீட் முதுகலை தேர்வு ஒத்திவைக்கப்படுமா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்க உச்ச … Read more

டெல்லியில் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதற்கான குற்றச்சாட்டுகள் என்ன?

டெல்லியில் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதற்கான குற்றச்சாட்டுகளில் வருவாய் இழப்பு, மது விற்பனையாளர்களுக்கு தேவையற்ற சலுகை மற்றும் ஆதாயம் அளித்தது போன்ற புகார்களை சிபிஐ பதிவு செய்துள்ளது. சுமார் 143 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனையாளர்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டதாகவும் மது விற்பனை உரிமத்துக்கான கட்டணங்கள் திருப்பித் தரப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு செல்போன்களைப் பயன்படுத்தி ஆதாரங்களாக அவை பயன்படுவதைத் தடுக்க சிசோடியா அழித்ததாகவும் அவ்வகையில் ஒருகோடியே 38 லட்சம் ரூபாய் … Read more

தவறாமல் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள் : பிரதமர் மோடி வாக்காளர்களுக்கு அழைப்பு!!

டெல்லி : நாகாலாந்து , மேகாலயா தேர்தலையொட்டி மக்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. கடந்த சில தினங்களுக்கு முன் திரிபுராவில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேகாலயாவில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் இறந்ததால் மேகாலாயாவின் … Read more

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல்: நேரடி தொடர்புள்ள நடிகை தலைமறைவு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2016 ஆண்டு ஆசிரியர் உட்பட பல்வேறு பணியிடங்களில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அப்போது சுமார் 21,000-க்கும் மேற்பட்டோர் லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக அப்போதைய கல்வித் துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவருக்கு நெருக்கமான நடிகை அர்பிதா கைது செய்யப்பட்டனர். அர்பிதா வீடுகளில் ரூ.50 கோடி பறிமுதல் … Read more

ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இளைஞர்கள் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் 4 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொட்டலகுரு மண்டலம் சாந்தி நகர் ஏரியை வேடிக்கை பார்க்க மீன் பிடிக்கும் படகில் 10 பேர் சென்றுள்ளனர்.

ஸ்கூட்டர் மீது மோதி 2 கி.மீ. இழுத்து சென்ற லாரி: உத்தர பிரதேசத்தில் தாத்தா, பேரன் உயிரிழப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் கான்பூர்-சாகர் நெடுஞ்சாலையில் மஹோபா என்ற இடத்தில் உதித் நாராயண் சன்சோரியா (67) மற்றும் அவரது பேரன் சாத்விக் (6) ஆகியோர் ஸ்கூட்டரில் சென்றுள்ளனர். அப்போது பின்னால் இருந்து வேகமாக வந்த ஒரு லாரி மோதி உள்ளது. இதில் உதித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சாத்விக் மற்றும் ஸ்கூட்டரை 2 கிலோ மீட்டர் தூரம் லாரி இழுத்துச் சென்றுள்ளது. இதில் சாத்விக்கும் உயிரிழந்தான். விபத்துக்கு காரணமான லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை போலீஸார் … Read more

மார்ச் 1, 2023 முதல் பல விதிகளில் மாற்றம்: சாமானியர்களுக்கு நேரடி தாக்கம்

மார்ச் 1 முதல் புதிய விதிகள்: பிப்ரவரி மாதம் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. மார்ச் 1 முதல், பல புதிய விதிகள் அமலுக்கு வரும். அவை உங்கள் மாதாந்திர நிதிநிலையை பாதிக்கலாம்.  மார்ச் மாதம் சமூக ஊடகங்கள், வங்கிக் கடன்கள், எல்பிஜி சிலிண்டர்கள், வங்கி விடுமுறைகள் போன்ற பல முக்கிய விஷயங்களில் மாற்றம் இருக்கும். அதே நேரத்தில், சில ரயில்களின் கால அட்டவணையிலும் மாற்றங்களைக் காணலாம். மார்ச் மாதத்தில் எந்தெந்த புதிய விதிகள் செயல்படுத்தப்பட … Read more