பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக் கோரி டெல்லியில் தெலங்கானா முதல்வர் மகள் கவிதா உண்ணாவிரதம்

புதுடெல்லி: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும் பிஆர்எஸ் கட்சியின் மேல்சபை உறுப்பினருமான கவிதா, பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலே நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். டெல்லி ஐந்தர் மந்தரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சிபிஎம், ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி, அகாலி தள் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். கவிதா … Read more

இருவரை காதலித்து குழந்தைகளை பெற்றார் ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்

திருமலை: தெலங்கானா மாநிலத்தில் இருவரை காதலித்து குழந்தைகளை பெற்ற இளைஞர், ஒரே மணமேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம் சர்லா கிராமத்தை சேர்ந்தவர் முத்தாத்தையா- ராமலட்சுமி தம்பதியின் மகன் சத்திபாபு(36). இவருக்கு தோஸ்லாபள்ளி கிராமத்தை சேர்ந்த ஸ்வப்னாகுமாரியுடன் காதல் ஏற்பட்டுள்ளது. ஸ்வப்னாவிடம், சத்திபாபு தனது காதலை கூற அவரும் ஏற்றுக் கொண்டார். இருவரும் நெருங்கி பழகியதில், ஸ்வப்னா கர்ப்பமானார். இதைத்தொடர்ந்து அவருக்கு பெண் … Read more

நேர்மையான தேர்தல் நடைமுறை: 3-வது சர்வதேச மாநாடு

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ), ‘‘நேர்மையான தேர்தல் நடைமுறை’’ என்ற தலைப்பில் தனது 3-வது சர்வதேச மாநாட்டை நடத்தியது. உலகின் பிற ஜனநாயக நாடுகளுடன் அதன் அறிவு, தொழில்நுட்ப நிபுணத்துவம், அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் நேர்மையான தேர்தல் மாநாடு நேற்றுமுன்தினம் நடத்தப்பட்டது. அங்கோலா, ஆர்மீனியா, ஆஸ்திரேலியா, கனடா, சிலி, கோஸ்டரிகா, குரேஷியா, டென்மார்க், டொமினிகா, ஜார்ஜியா, கயானா, கென்யா, கொரியா, மொரீஷியஸ், மால்டோவா, நார்வே, பிலிப்பைன்ஸ், போர்ச்சுகல் உள்ளிட்ட 31 நாடுகள்/தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் … Read more

பேரிடர் காலங்களின் ஆபத்தை நவீனத் தொழில்நுட்பத்தால் குறைக்க வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்!

பேரிடர் காலங்களில் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க நவீனத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். பேரழிவு ஆபத்துகளை குறைப்பது தொடர்பான தேசிய இரண்டு நாள் மாநாட்டை டெல்லியில் தொடங்கி வைத்து பேசிய அவர், அண்மையில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களைக் கண்டபிறகு, இந்தியாவின் பேரிடர் கால நிர்வாக மேலாண்மையை உலகம் புரிந்துக் கொண்டு பாராட்டிக் கொண்டிருக்கிறது என்று கூறினார். புதிய கட்டடங்களைக் கட்டும்போது பேரிடர் காலத்தை கவனத்தில் கொண்டு வழிகாட்டல்களைப் பின்பற்ற … Read more

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற கோரி தெலங்கானா முதல்வர் மகள் டெல்லியில் உண்ணாவிரதம்

புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற கோரி தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா டெல்லியில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார். நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்யக்கோரி பிஆர்எஸ் தலைவரும் தெலங்கானா முதல்வருமான சந்திரசேகரராவின் மகள் கவிதா டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று உண்ணாவிரதம் இருந்தார். அவரது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட்,திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்பட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். முன்னதாக,டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக இன்று … Read more

கேரள தங்க கடத்தல் | பினராயி விஜயனுக்கு எதிரான ஆதாரங்களை அளிக்க ரூ.30 கோடி பேரம் – ஸ்வப்னா சுரேஷ் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: கேரள முதல்வருக்கு எதிரான ஆதாரங்களை தரக்கோரி ரூ.30 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது: மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் எம்.வி.கோவிந்தன் பெயரை கூறி அவரது தூதர் ஒருவர் என்னை அணுகினார். பெங்களூரு ஒயிட்ஃபீல்டில் உள்ள ஹோட்டலில் அந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்புக்கான ஆதாரங்கள், புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளேன். கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது … Read more

மும்பையில் இந்தி தொலைக்காட்சித் தொடர் படப்பிடிப்பின் போது பயங்கரத் தீ விபத்து

மும்பையில் இந்தி தொலைக்காட்சித் தொடர் படப்பிடிப்பின் போது பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அத்தொடரில் நடித்த நட்சத்திரங்கள், படக்குழுவினர் உள்பட அனைவரும் உயிர் தப்பினர். கோரேகான் பகுதியில் உள்ள தாதாசாகேப் பால்கே பிலிம்சிட்டியில் Ghum Hai Kisikey Pyar Meiin, தொடருக்கான படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்தது. படக்குழுவினர் அனைவரும் ஒரு வீட்டில் தீப்பிடிக்கும் காட்சியை படமாக்க பணியாற்றிக் கொண்டிருந்த போது தீ வேகமாகப் பரவி நிஜமாகவே பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரம் … Read more

காலிஸ்தானுக்கு ஆதரவான 6 யூடியூப் சேனலுக்கு ஒன்றிய அரசு தடை

புதுடெல்லி: தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பிற்கு ஆதரவான 6 யூடியூப் சேனல்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் அபூர்வ சந்திரா இதை தெரிவித்து உள்ளார்.இந்த சேனல்கள் வெளிநாட்டிலிருந்து இயக்கப்பட்டவை. அவைகளில் பஞ்சாபி மொழியில் காலிஸ்தான் ஆதரவு செய்திகள் பரப்பி வன்முறையை தூண்ட முயற்சிகள் நடத்தப்பட்டதாக அபூர்வ சந்திரா தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நாடாளுமன்ற குழு பஹ்ரைன் பயணம்

புதுடெல்லி: நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் 146-வது கூட்டம் மற்றும் அது தொடர்பான கூட்டங்கள் பஹ்ரைனில் உள்ள மனாமாவில் இன்று தொடங்கி வரும் புதன்கிழமை வரை நடைபெற உள்ளன. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 110 நாடாளுமன்றங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் இக்கூட்டத்தில் பங்கேற்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகள் நேற்று மனாமா சென்றடைந்தனர். இக்குழுவில் மக்களவை எம்.பி.க்கள் பத்ருஹரி மஹ்தாப், பூனம்பென் மாடம், விஷ்ணு தயாள் ராம், ஹீனா விஜய்குமார் … Read more

நடிகை பவித்ராவை 4வது திருமணம் செய்த நடிகர்

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் நரேஷ் பாபு நான்காவது முறையாக திருமணம் செய்து கொண்டார். தனது நீண்ட நாள் தோழியான நடிகை பவித்ரா லோகேஷை அவர் மணந்தார்.நரேஷ் ஏற்கனவே மூன்று முறை திருமணம் ஆனவர். அவரது முதல் திருமணம் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீனுவின் மகளுடன் நடந்தது. இந்த தம்பதிக்கு நவீன் விஜய்கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். நரேஷ் பின்னர் பிரபல கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான தேவுலபள்ளி கிருஷ்ண சாஸ்திரியின் பேத்தி ரேகா சுப்ரியாவை மணந்தார். பிறகு அவரை பிரிந்தார். … Read more