‘நானோ’ டிஏபி உரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: நானோ டிஏபி உரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது விவசாயிகளின் வாழ்க்கையை எளிதாக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வேளாண் துறையில் நவீன தொழில்நுட்பங்கள், சாகுபடி நடைமுறைகளை அமல்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன்படி, இந்திய உழவர் உரக் கூட்டுறவு நிறுவனமான ‘இப்கோ’ சார்பில் குஜராத்தின் காந்திநகர் மாவட்டம் கலோலில், நானோ யூரியா ஆலை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு 45 கிலோ பாக்கெட் யூரியாவுக்கு பதிலாக 500 … Read more

நிதி பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்க ஒன்றிய அரசின் வரவு, செலவு தினசரி கண்காணிப்பு: நிதி அமைச்சகம் நடவடிக்கை

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்திருக்க, கடந்த 1ம் தேதி முதல் வரி வசூல் உள்ளிட்ட வரவு, செலவு கணக்குகளை ஒன்றிய நிதி அமைச்சகம் தினமும் கண்காணிக்க தொடங்கி உள்ளது. வரும் 31ம் தேதியுடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 6.4 சதவீதமாக வைத்திருக்க ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த ஜனவரி முடிவில், நிதி பற்றாக்குறை ரூ.11.91 லட்சம் கோடியாக இருந்துள்ளது. இது பட்ஜெட் மதிப்பில் 68 சதவீதமாகும். மேலும், பங்கு … Read more

பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் உதவித்தொகை: மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் வாக்குறுதி

போபால்: மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும் என மத்தியபிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார். மத்தியபிரசேத மாநிலத்தில் கடந்த 2003ம் ஆண்டில் இருந்து சிவ்ராஜ் சிங் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. இடையில் 13 மாதங்கள் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இருந்தது. காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி பூசலை பயன்படுத்தி கமல்நாத் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து விட்டு பாஜ ஆட்சியை பிடித்து சிவ்ராஜ் … Read more

பாஜ உட்கட்சி பூசலால் குழப்பம் திரிபுரா முதல்வரை தேர்ந்தெடுப்பதில் சிக்கல்: பிப்லப் குமாருக்கு மீண்டும் வாய்ப்பு?

அகர்தலா: திரிபுரா பாஜ.வில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசலால் முதல்வரை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் திரிபுராவிற்கு கடந்த 16ம் தேதி மற்றவைக்கு கடந்த 27ம் தேதியும் தேர்தல் நடத்தப்பட்டது. வாக்குகள் கடந்த 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 32ல் வெற்றி பெற்று பாஜ தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி … Read more

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் நாளை பொங்கல் விழா: பக்தர்கள் குவிகின்றனர்

திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் வழிபாடு நாளை நடைபெறுகிறது. இதையொட்டி திருவனந்தபுரத்தில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் வருடம்தோறும் மாசி மாதத்தில் நடைபெறும் பொங்கல் விழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 9வது நாள் பொங்கல் வழிபாடு நடைபெறும். இந்த வருட பொங்கல் திருவிழா கடந்த 27ம் தேதி தொடங்கியது. அன்று முதல் பகவதி அம்மனுக்கு தினமும் … Read more

நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய மாணவர்: போலீசார் விசாரணை

புதுடெல்லி: நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த இந்திய மாணவர் தூக்கத்தில் சிறுநீர் கழித்த போது, அது சக பயணி மீது கசிந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு டெல்லிக்கு வந்தடைந்தது. அதில் பயணித்த இந்திய மாணவர் ஒருவர் சக பயணி மீது சிறுநீர் கழித்ததாக ஏர்லைன்ஸ் நிறுவனம் தரப்பில் சிவில் விமான போக்குவரத்து … Read more

முன்னாள் அமைச்சர் வீட்டில் உறவினர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

லாத்தூர்: மகாராஷ்டிராவின் லத்தூரில் முன்னாள் ஒன்றிய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டீலின் வீடு உள்ளது.அமைச்சரின் உறவினரான  ஹனுமந்த்ராவ் பாட்டீல்(81) நேற்று காலை  ஷிவ்ராஜ் பாட்டீலின் வீட்டிற்கு வந்தார். அங்கு திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அமைச்சரின் மகன் வீட்டில் இருந்துள்ளார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறிய போது, “ ஹனுமந்த்ராவ் பாட்டீல்  கடந்த சில ஆண்டுகளாக கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், அவர் துப்பாகியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது … Read more

எங்கள் வீரர்களை கொன்ற சீனாவுடன் போரிட தயார்; ராகுல் காந்தி ஆவேசம்.!

லண்டன் சென்றுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அங்கு புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் ஒருவார காலம் உரையாற்றுகிறார். இந்தநிலையில், லண்டனில் உள்ள இந்திய பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுடன் இன்று ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் கூறும்போது, ‘‘ இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு சீனாவின் அச்சுறுத்தல் புரியவில்லை. இந்திய எல்லைக்குள் யாரும் நுழையவில்லை என்று பிரதமர் மோடி கூறியிருப்பதன் மூல, சீனர்கள் மேலும் நமது நிலத்தை ஆக்கிரமிக்க பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். சீனர்கள் ஆக்கிரமிப்பை மீண்டும் … Read more

போலி என்கவுன்டரில் 3 பேர் கொலை ராணுவ கேப்டனுக்கு ஆயுள் தண்டனை

புதுடெல்லி:  தெற்கு காஷ்மீரின் அம்ஷிபுராவில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த போலி என்கவுன்டர் வழக்கில் ராணுவ கேப்டன் பூபேந்திர சிங்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஜோரி மாவட்டத்தை சேர்ந்த இம்தியாஸ் அகமது, அப்ரார் அகமது, முகமது இப்ரார் ஆகிய மூன்று பேரும் கடந்த 2020ம் ஆண்டு ஜுலை மாதம், ஷோபியான் மலைப்பகுதிக்கு சென்றிருந்தனர். அவர்களை தீவிரவாதிகள் எனக் கூறி ராணுவத்தினர் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர். இந்த போலி என்கவுன்டர் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவிய … Read more

டெல்லி அரசு பள்ளி வாயிலில் ‘I Love Manish Sisodia’ என பேனர்.. போலீசார் வழக்குப் பதிவு

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவை ஆதரித்து ஐ லவ் மனிஷ் சிசோடியா என டெல்லி சாஸ்திரி பார்க்கில் உள்ள அரசு பள்ளி வாயிலில் பேனர் வைக்கப்பட்டதற்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உள்ளூர் வாசியான திவாகர் பாண்டே அளித்த புகாரின் பேரில், சாஸ்திரி பார்க் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சிலர் அரசு பள்ளி வாயிலில் பேனரை … Read more