மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.6,500 ஆக உயர்வு
புதுச்சேரியில் ஏற்கெனவே மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,500 ஆக இருந்தது. இந்நிலையில், இந்த நிவாரணத்தை ரூ.1,000 உயர்த்தி ரூ.6,500 ஆக வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இதற்காக அமைச்சரவையில் அனுமதி பெற்று அந்த கோப்பு துணை நிலை ஆளுநர் மாளிகைக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், மீன்பிடி தடைக்கால நிவாரணம் 6,500 ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியிட ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் … Read more