தாய்மொழியை அதிகம் பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுங்கள்: அமித்ஷா

டெல்லி: தாய்மொழியை அதிகம் பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுங்கள் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். உலகின் மூத்த மொழிகளில் ஒன்று செம்மொழியான தமிழ் மொழி. இது போன்ற பழமைமிக்க மொழிகள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் மொழிகளுக்காக ஆண்டுதோறும் சர்வதேச தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது. தாய்மொழிகளின் சிறப்பையும், அவசியத்தையும் எடுத்துணர்த்த, ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ம் நாள் சர்வதேச தாய்மொழிகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. பன்மொழி கலாச்சாரத்தை அனுசரிக்கவும், ஆதரிக்கவும் தாய்மொழி தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், சர்வதேச … Read more

இந்தியாவின் UPI-உடன் சிங்கப்பூரின் "பே நவ்" ஒப்பந்தம் – காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி

இந்தியாவின் யூபிஐ-சிங்கப்பூரின் “பே நவ்” நிகழ்நேர பணப்பரிமாற்ற இணைப்பை அறிவிக்கும் நிகழ்ச்சியில் இன்று காணொலிக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஆகியோர் பங்கேற்றனர். இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், மற்றும் சிங்கப்பூர் நிதி ஆணைய மேலாண்மை இயக்குநர் ரவி மேனன் ஆகியோர் தங்களது மொபைல் போன்கள் மூலம் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை நடத்தி, இணைப்பை தொடங்கி வைத்தனர். எல்லை தாண்டிய யூபிஐ வசதி மூலம் ஒரு … Read more

இத்தன பேரோட காதலா…! முகநூலில் அடித்துக் கொண்ட அழகான ஆபீசர்ஸ் மாற்றம்..! குழாயடி சண்டையால் நடவடிக்கை

முகநூலில் அந்தரங்க தகவல்களை பகிர்ந்து சண்டையிட்ட பெண் ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் இருவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு உதவியதாக கணவரும் இடமாற்றம் செய்யப்பட்டார். சசிகலா பரப்பன அஹ்ரகாரா சிறையில் இருந்து வெளியே ஷாப்பிங் சென்று வந்ததாக புகார் கிளப்பி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஐ.பி.எஸ்.அதிகாரி ரூபா. தற்போது கைவினை பொருட்கள் ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வந்த ரூபா ஐபிஎஸ், அங்கு அறநிலையத்துறை ஆணையராக பணியாற்றி வந்த 39 வயதான ரோகிணி சிந்தூரி ஐ.ஏ.எஸ் … Read more

ஆன்லைன் ரம்மி தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!

டெல்லி: ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணையை 4 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் தள்ளிவைத்தது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது.  இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, ‘கடந்த 5 ஆண்டுகளில் ஆன்லைன் … Read more

தனியாக நடந்துச் சென்ற 5 வயது சிறுவனை கடித்து குதறிய வெறிநாய்கள்..!

தெலுங்கானாவில், தந்தை வேலைப்பார்க்கும் கார் சர்வீஸ் சென்டரை சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்த சிறுவனை தெரு நாய்கள் சூழ்ந்துக் கொண்டு கடித்துக் குதறியதில் சிறுவன் உயிரிழந்தான். நிஜாமாபாத்தில் உள்ள கார் சர்வீஸ் சென்டரில் காவலாளியாக வேலைப்பார்த்து வரும் கங்காதர், தனது 5 வயது மகன் பிரதீப்பை தான் வேலைப்பார்க்கும் இடத்தை காண்பிப்பதற்காக அழைத்து வந்தார். அங்கு பணியிலிருந்த மற்றொரு காவலாளியிடம் கங்காதர் பேசிக் கொண்டிருந்த போது, சிறுவன் தனியாக அப்பகுதியில் நடந்துச் சென்ற போது சில தெரு நாய்கள் சூழ்ந்துக் … Read more

மோடியின் தந்தை குறித்து சர்ச்சை கருத்து: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீது வழக்கு

புதுடெல்லி: மோடியின் தந்தை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ஒன்றிய பாஜக அரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் வலுத்து வருகிறது. இந்த ஆண்டு 9 மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தல் மற்றும் அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலால், இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தை போர் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியின் மறைந்த தந்தை குறித்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் … Read more

கூடுதல் பென்சனுக்கு ’EPFO’ வெளியிட்ட அறிவிப்பு.. மார்ச் 3ம் தேதி விண்ணப்பிக்க கடைசிநாள்!

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைவதற்கு போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளது. ஊழியர்கள் வாங்கும் மாதச்சம்பளத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு பணியாற்றும் நிறுவனம் அதற்கு சமமான தொகையையும் சேர்த்து வருங்கல வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும். இதுவே பி.ஃஎப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதி ஆகும். இதில் 8.33 சதவீதம் ஓய்வூதிய திட்டத்திற்கும், 3.7 சதவீதம் வருங்கால வைப்பு நிதியாகவும், 0.50 சதவீதம் காப்பீட்டிற்கும் செலுத்தப்படும். … Read more

ஒடிசாவில் இருந்து வான்வழி ஏவுகணை அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்தது டிஆர்டிஓ

ஒடிசா: ஒடிசாவில் இருந்து வான்வழி ஏவுகணை அமைப்பை டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதனை செய்தது. Su-30MKI போர் விமானத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணையானது 100 கிமீ எல்லைக்கு அப்பால் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் உடையது. உள்நாட்டு LCA தேஜாஸ் Mark1A போர் விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும்.

"கல்யாண தேதியை மறப்பியா?" – தன் குடும்பத்தினரை அழைத்து கணவரை சரமாரியாக தாக்கிய மனைவி!

மும்பையில் திருமண நாளை மறந்த கணவனை, தன்னுடைய குடும்பத்தாருடன் சேர்ந்து மனைவி சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இளைஞர் போலீசில் புகாரளித்துள்ளார். மும்பையின் புறநகர் பகுதியான காத்கோபரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விஷால் நாங்க்ரே(32) என்ற நபருக்கும், கல்பனா (27) என்ற பெண்ணுக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. விஷால் ஒரு கொரியர் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலைபார்த்து வருகிறார். கல்பனா ஒரு உணவு நிறுவனத்தில் வேலையில் உள்ளார். இந்நிலையில் பிப்ரவரி 18ஆம் தேதி … Read more

“இந்தியாவில் ஜனநாயக அமைப்புகளை ‘பாசிசம்’ சீர்குலைக்கிறது” – ராகுல் காந்தி

ரோம்: “இந்தியாவில் இந்து – முஸ்லிம் பிரிவினை இருப்பது உண்மைதான். ஆனால், அது ஊடகங்கள் சொல்லும் அளவிற்கு இல்லை” என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார். இத்தாலியின் பிரபல பத்திரிகையான ‘கூரியர் டெல்லா செரா’-வுக்கு ராகுல் காந்தி ஒரு விரிவான பேட்டி அளித்துள்ளார். இந்தப் பேட்டியில் அவர் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கிட்டிய அனுபவம், பிரதமர் நரேந்திர மோடியை அடுத்தத் தேர்தலில் தோற்கடிக்க முடியுமா?, தனது பாட்டி இந்திரா காந்தியுடனான இனிய நினைவுகள், 52 வயதாகியும் ஏன் திருமணம் … Read more