புதிய ஓய்வூதிய திட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை: நிர்மலா சீதாராமன் தகவல்

புதுடெல்லி: புதிய ஓய்வூதிய திட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் ஏற்கும் படியாக மேம்படுத்த நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.   புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு  நாடு முழுவதும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பாஜ ஆட்சி செய்யாத ராஜஸ்தான்,  சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய  மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர சட்டப்பேரவையில் தீர்மானம்  நிறைவேற்றி ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளன. … Read more

சுங்க சாவடிகளுக்கு மாற்றாக 6 மாதத்தில் ஜிபிஎஸ் கட்டண முறை அறிமுகம்: ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: நாட்டில் சுங்கசாவடிகளுக்கு மாறாக ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் முறைகள் அடுத்த 6 மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.  டெல்லியில் தொழில்கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசியதாவது:  அரசுக்கு சொந்தமான தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் தற்போது ரூ.40,000 கோடி வருவாய் கிடைக்கிறது. அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் இது ரூ.1.40லட்சம் கோடியாக உயரும். நாட்டில் உள்ள சுங்கசாவடிகளுக்கு … Read more

பணம் செலுத்தாத கணக்குகளின் ப்ளூ டிக்கை நீக்க ட்விட்டர் முடிவு?

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை அவர் மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்று தான் வணிக நோக்கில் ப்ளூ டிக் பெற்ற பயனர் கணக்குகளிடம் இருந்து சந்தா வசூலிப்பது. அதன்படி ட்விட்டர் தளத்தில் யார் வேண்டுமானாலும் சந்தா செலுத்தி அங்கீகரிக்கப்பட்ட கணக்கு என்ற அடையாளத்திற்கான ப்ளூ டிக்கை பெறலாம் என அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னர், ஊடக நிறுவனங்கள், சமூக வலைதள இன்ப்ளுயன்ஸர்கள், பிரபலங்கள் மற்றும் … Read more

அதானி விவகாரத்தில் விசாரணை கேட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி 40 எம்பிக்கள் அதிரடி கைது

புதுடெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு வலியுறுத்தி போராட்ட பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை சேர்ந்த 40  எம்பிக்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.  அதானி முறைகேடு குறித்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற விசாரணை கோரி எதிர்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி நடத்தினார்கள். தடையை மீறி … Read more

கொரோனா காலத்தில் பரோல் பெற்ற கைதிகள் 15 நாளில் சரணடைய உத்தரவு: உச்சநீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: கொரோனா காலத்தில் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த கைதிகள் 15 நாட்களுக்குள் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.   இந்த உத்தரவின் படி, 15 நாட்களுக்குள் கொரோனா காலத்தில் பரோல் / ஜாமீனில் வெளியே சென்றோர் சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் எனவும், இதனை மாநில நீதிமன்றங்கள், சிறை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அவர்கள் சரணடைந்த … Read more

2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் எம்.பி. பதவியிலிருந்து ராகுல் தகுதி நீக்கம் | முழு விவரம்

புதுடெல்லி: குற்றவியல் வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டெல்லியில் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?’’ என்று விமர்சித்தார். இது தொடர்பாக குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ … Read more

புதிதாக 1249 பேருக்கு கொரோனா

புதுடெல்லி:  நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 1249 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நாடு முழுவதும் புதிதாக 1249 கொரோனா பாதிப்புக்கள் பதிவாகி உள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கையானது 7927ஆக உயர்ந்துள்ளது.கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலத்தில் தலா ஒரு உயிரிழப்பு பதிவாகி உள்ளது. 24 மணி நேரத்தில் 1,05,316பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சுகாதார துறையின் இணைய தகவலின்படி நாடு முழுவதும் 220.65கோடி கொரோனா தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசுக்கு எதிரான 14 எதிர்க்கட்சிகள் மனு ஏப்.5ல் விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: புலனாய்வு அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவது தொடர்பான எதிர்க்கட்சிகளின் மனுவை ஏப்ரல் 5ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளை அடக்க, தன்னாட்சி மிக்க புலனாய்வு அமைப்புக்களைத் தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.   இது குறித்து, ஆம் ஆத்மி தலைவர் மணிஷ் சிசோடியா கைது விவகாரத்தில்,  9 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தன. இந்நிலையில், புலனாய்வு அமைப்புகளை … Read more

வாரணாசியில் மோடி அறிவிப்பு 2025க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு

வாரணாசி: ‘வரும் 2025ம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என வாரணாசியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.1,780 கோடியில் 28 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முன்னதாக உலக காசநோய் தினத்தையொட்டி, ‘ஒரே உலகம் காசநோய்’ மாநாட்டில் பங்கேற்று பேசியதாவது: உலகில் ‘ஒரே பூமி, … Read more

எனது குடும்பத்தை அவமதித்த பாஜக தலைவர்களுக்கு எந்த நீதிபதியும் தண்டனை விதிக்கவில்லை: பிரியங்கா காந்தி

புதுடெல்லி: எனது குடும்பத்தை அவமதித்த பாஜக தலைவர்களுக்கு சிறை தண்டனை விதிக்க எந்த நீதிபதியும் உத்தரவிடவில்லை என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக பேசியுள்ள ப்ரியங்கா காந்தி, “ராகுல் காந்தி, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அதானி குழுமம் குறித்து கேள்வி எழுப்பியதால் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார். நாங்கள், நாட்டிற்காக தியாகம் செய்தவர்களின் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள், போர்களை கண்டு அஞ்சி தப்பி ஓட மாட்டோம். உங்களுக்கு என்ன தோணுகிறோதோ அதை செய்யுங்கள். ஆனால், … Read more