ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை மீட்பு

லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலம் ஹப்பூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கோட்லா சத்தியில் குடியிருப்பு பகுதிகளில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார். ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை தேசிய போரிடர் மீட்புப் படையினர் உயிருடன் மீட்டனர்.

ஜோஷிமத் நகரில் இடிக்கப்படும் வீடுகள் – கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை எண்ணி கண்ணீர் வடிக்கும் மக்கள்

ஜோஷிமத்: ஜோஷிமத் நகரில் ஏற்பட்ட நிலவெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட கட்டிடங்களை இடிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், கஷ்டப்பட்டு கட்டிய தங்கள் வீட்டை எண்ணி மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். மூழ்கும் ஜோஷிமத்: உத்தராகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் இமயமலையின் அடிவாரத்தில் உள்ளது ஜோஷிமத் நகரம். பத்ரிநாத் கோயிலுக்கு செல்வதற்கான நுழைவு வாயிலாகத் திகழும் இந்த நகரில் வீடுகள், விடுதிகள், ஓட்டல்கள் உட்பட சுமார் 4,500 கட்டிடங்கள் உள்ளன. இங்கு சுமார் 30,000 பேர் வசிக்கின்றனர். கடந்த டிசம்பர் … Read more

பிரதமரின் மருத்துவ செலவு; அதிசயம்.. ஆனால் உண்மை!

உலக தலைவர்கள் மத்தியில், அதிகமாக கேட்கப்படுகின்ற தலைவர் பிரதமர் நரேந்திர மோடி தான். எந்த ஒரு உலகளாவிய முடிவிலும், உலகின் தலைசிறந்த தலைவர்கள் பெரும்பாலும் பிரதமர் மோடியின் கருத்தை எடுத்துக்கொள்கிறார்கள் என்று இந்தியாவின் ஜி 20 தலைவர்களின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா கூறி இருப்பது அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. மேலும் பருவநிலை மாற்றம் முதல் அரசியல், பொருளாதார பிரச்சினைகள் வரை பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் கண்டிப்பாக பேசப்படுகிறார் என்றும், இந்தியாவானது குவாட், ஷாங்காய் … Read more

Budget 2023-ல் வரப்போகும் மாஸ் செய்தி: இவர்களுக்கு நிவாரணம், HRA-வில் அரசின் பெரிய முடிவு

பட்ஜெட் 2023-எச்ஆர்ஏ வரி விலக்கு: இந்த ஆண்டு பிப்ரவரி 1, 2023 அன்று தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டுக்கான ஏற்பாடுகளை அரசாங்கம் தீவிரமாக செய்துகொண்டிருக்கின்றது. இம்முறை அரசு தரப்பில் இருந்து மாத சம்பளம் பெறும் பணிபுரியும் மக்களுக்கு (சேலரீட் கிளாஸ்) பெரும் நிவாரணம் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை சாமானியர்களை மகிழ்விக்கும் வகையில் பல அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கபடுகின்றது. அந்த வகையில், மெட்ரோ அல்லாத நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு … Read more

ராணுவத்துறையில் புதிய உச்சம் தொடும் பெண்: வெளிநாடு சென்று போர்ப்பயிற்சியில் ஈடுபடும் முதல் இந்திய பெண் வீராங்கனை அவனி சதுர்வேதி

டெல்லி: இந்திய ராணுவத்தில் வீராங்கனைகள் புதிய உச்சத்தை எட்டி வருகின்றனர். வெளிநாட்டில் நடைபெறும் விமானப் படை போர் பயிற்சியில் இந்திய வீராங்கனை ஒருவர் முதல் முறையாக கலந்து கொள்ள இருப்பதுதான் தற்போது பலரது பாராட்டுகளை குவித்து வருகிறது. இதுவரை பிற நாட்டு படைகளுடன் இணைந்து நடத்தப்பட்ட விமானப் படை பயிற்சிகளில் இந்திய விமானப் படை வீராங்கனைகள் பங்கேற்றதே இல்லை. இந்நிலையில், ஜப்பான் விமானப் படையுடன் இந்திய விமானப் படை மேற்கொள்ள இருக்கும் வீர் கார்டியன் பயிற்சியில் முதல் … Read more

இந்திய ஒற்றுமை யாத்திரையை சீக்கியர்கள் புறக்கணிக்க வேண்டும்: பாஜக

சண்டிகர்: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நாளை பஞ்சாபில் தொடங்க உள்ள நிலையில், அந்த யாத்திரையை சீக்கியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் விடுத்துள்ள அறிக்கையில், ”1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்ந்த கலவரத்திற்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பு. சீக்கிய எதிர்ப்புதான் காங்கிரஸ் கட்சியின் உண்மையான முகம். ஆபரேஷன் ப்ளூஸ்டார் எனும் ராணுவ நடவடிக்கை மூலம் சீக்கியர்களின் தங்க கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பி காங்கிரஸ் … Read more

பெங்களூரில் இடிந்து விழுந்த மெட்ரோ ரயில் பில்லர் – தாய், குழந்தை உயிரிழப்பு!

கர்நாடக மாநிலம் பெங்களூரில், மெட்ரோ ரயில் கட்டுமானத்தின் போது இரும்பு தூண் சரிந்து விழுந்த விபத்தில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாய், அவரது குழந்தை உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் நாகவரா பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடந்து வருகிறது. கல்யாண் நகரில் இருந்து எச்.ஆர்.பி.ஆர். பகுதி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலத்துக்காக தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாகவரா பகுதியில் இன்று காலை 11 மணி அளவில் மெட்ரோ ரயில் பாதைக்கான … Read more

54 பயணிகளை ‘அம்போ’ என விட்டுவிட்டு பறந்த விமானம்! பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி!

சமீப காலமாக விமான பயணங்கள் தொடர்பாக பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் வெளியாகி வருகின்றன.  அந்த வகையில் கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுக்கு மற்றொரு அதிர்ச்சியை தந்துள்ளது. இந்த விமான நிறுவனம், 54 பயணிகளை ஏற்றிச் செல்ல “மறந்து” புறப்பட்டது. இது தொடர்பாக பயணிகள் சமூக ஊடகங்களில் மிகவும் கடுமையான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். கர்நாடகாவின் பெங்களூருவில் இருந்து புறப்பட்டுக் கொண்டிருந்த டெல்லி செல்லும் கோ ஃபர்ஸ்ட்  (Go First) விமானம், ஒரு பேருந்தில் வந்தச் 50க்கும் … Read more

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவருமான சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ஹைதராபாத்: நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது ஹைதராபாத்தில் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவருமான சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். சந்திரபாபு நாயுடுவுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ள ரஜினிகாந்த், ‘நீண்ட நாட்களுக்குப் பிறகு.. எனது அருமை நண்பரைச் சந்தித்து, சந்திரபாபு நாயுடுவை மதிப்பிட்டு, மறக்க முடியாத நேரத்தைச் செலவிட்டேன் அவருக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் அரசியல் வாழ்வில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன் என்று … Read more

வெறுக்கத்தக்க, வன்முறையை ஊக்குவிக்கும் டிவி சேனல்கள் ஒளிபரப்பில் விதி மீறல் – மத்திய அரசு கடும் எச்சரிக்கை

புதுடெல்லி: டிவி சேனல்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: அண்மைக்கால டிவி சேனல் ஒளிபரப்பு உள்ளடக்கங்களில் தனியுரிமை மீறல் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தீங்கிழைக்கும் வகையிலும், அவதூறுகளை பரப்பும் வகையிலும் உள்ளடக்கங்கள் காணப் படுகின்றன. முதியோர், நடுத்தர வயது, சிறு குழந்தைகள் உள்ளிட்ட பிரிவினர் மற்றும் அனைத்து விதமான சமூக பொருளாதாரப் பின்னணிகளைக் கொண்ட குடும்பங்களில் பொழுதுபோக்கிற்கான பொதுத் தளமாக தொலைக்காட்சி மாறியுள்ளது. இந்த சூழ்நிலையில், பொறுப்புணர்வையும், ஒழுக்கத்தையும் அதிகம் கடைப்பிடிக்க வேண்டிய … Read more