கோவா அரசு அதிரடி சுற்றுலா பயணிகளுடன் செல்பி எடுக்க தடை: கடற்கரை, திறந்த வெளியில் மதுஅருந்தவும் கட்டுப்பாடு

பனாஜி: கோவாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுடன் செல்பி எடுக்க வேண்டாம் எனவும், கடற்கரை, திறந்தவௌிகளில் மது அருந்த வேண்டாம் எனவும் கோவா அரசு அறிவுறுத்தி உள்ளது. கோவா மாநில அரசின் சுற்றுலாதுறை வௌியிட்ட அறிவிப்பில், “கோவாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுடன் செல்பி எடுக்க விரும்பினால், சுற்றுலா வருபவர்களின் அனுமதி பெற்று செல்பி, புகைப்படங்களை எடுக்க வேண்டும். குறிப்பாக வௌிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் சூரிய குளியல், நீச்சல் உள்ளிட்டவற்றை செய்யும்போது அவர்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்கவும், பாதுகாக்கவும் … Read more

என்ன தான் மகள் காதலிச்சான்னு பெற்ற தந்தையும் அண்ணனும் இப்படி செய்யலாமா ?

மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் மாவட்டம் பிம்ப்ரி மகிபால் கிராமத்தை சேர்ந்தவர் சுபாங்கி ஜோக்தாந்த் (22). இவர், 3-ம் ஆண்டு ஹோமியோபதி மருத்துவம் (பி.எச்.எம்.எஸ்) படித்து வந்தார். இவருக்கு சமீபத்தில் பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். மாணவி வேறு நபரை காதலித்து உள்ளார். எனவே பெற்றோர் பார்த்து இருந்த மாப்பிள்ளையிடம் வேறு நபரை காதலிப்பது குறித்து மாணவி கூறினார். இதனால் மாணவிக்கு நிச்சயிக்கப்பட்டு இருந்த திருமணம் நின்றது. திருமணம் நின்றதால் மாணவி மீது அவரது குடும்பத்தினருக்கு … Read more

அனைத்து சமூகத்துக்கும் அதிகாரம் வழங்க தீவிரம் – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

ஜெய்ப்பூர்: ‘‘நாட்டில் உள்ள அனைத்து சமூகத்தினருக்கும் அதிகாரம் வழங்க மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஸ்ரீ தேவ்நாராயண் அவதரித்த 1111-ம் ஆண்டு விழா மலசேரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நேற்று நடைபெற்றது. குர்ஜாத் சமூகத்தை சேர்ந்த இவரை, ராஜஸ்தான், ம.பி.யின் சில பகுதிகள், குஜராத் போன்ற மாநிலங்களில் கடவுளாக வழிபடுகின்றனர். அவரது ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி மலசேரி மாவட்டத்துக்கு வந்தார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் … Read more

சீனாவை உயர்வாகப் பேசும் காங்கிரசுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம்

சீனாவை உயர்வாகப் பேசும் காங்கிரசுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். புனேயில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,  சீனா போன்ற வலிமைமிக்க நாடு அண்டை நாடாக இருக்கும்போது அதனால் ஏற்படும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது என்றார். கடந்த 9 ஆண்டுகளில் அண்டை நாடுகள் விவகாரத்தில் தேசிய உணர்வுடன் பாஜக அரசு செயல்பட்டு வருவதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டார். இந்து தேசியவாத அரசு என்ற வெளிநாட்டு ஊடகங்களின் எதிர்மறை விமர்சனத்தைப் பொருட்படுத்தாமல், பேரிடர் ஏற்படும் நாடுகளுக்கு இந்தியா உதவி … Read more

போராட்டக்காரர்கள், போலீஸ் இடையே நாகாலாந்தில் திடீர் மோதல்

கவுகாத்தி: நாகாலாந்தில் அசாம் ரைபிள்ஸ் படையினருக்கும் நாகாலாந்து  தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நாகாலாந்து மாநிலத்தில் ‘நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில்“ என்ற பெயரில் செயல்பட்டு வரும் போராளி குழுவினர் நாகாலாந்தை இந்தியாவில் இருந்து பிரிக்க வேண்டும், வடகிழக்கு மாநிலங்களில் நாகாலாந்து இனமக்கள் வாழும் இடங்களை உள்ளடக்கிய ‘நாகாலிம் ‘ என்று தனிநாடாக அறிவிக்க கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். குடியரசு தினத்தையொட்டி அசாம் ரைபிள்ஸ் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பணி … Read more

இதுவரையில் இல்லாத அளவில் இந்த ஆண்டு இந்தியர்களுக்கு அதிக விசா வழங்க முடிவு – அமெரிக்க தூதரகத் தலைவர் தகவல்

மும்பை: கரோனா காலகட்டத்தில் அமெரிக்க விசா பெறுவதற்கான காத்திருப்பு காலம் நீட்டிக்கப்பட்டது. இதனால், அமெரிக்காவுக்கு செல்ல விரும்பும் இந்தியர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். விசா பெறுவதற்கான காத்திருப்புக் காலகட்டத்தை குறைக்கும்படி இந்தியவெளியுறவுத் துறை அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்தது. இந்நிலையில், இவ்வாண்டு அதிக எண்ணிக்கையில் இந்தியர்களுக்கான விசாவுக்கு ஒப்புதல் அளிக்க அமெரிக்க தூதரகம் முடிவு செய்துள்ளது. வேலை, படிப்பு, சுற்றுலா,வணிகம் என பல வகைகளில்அமெரிக்க விசா வழங்கப்படுகிறது. தற்சமயம் வேலை விசாவுக்கான காத்திருப்புக் காலம் 60 – 280 … Read more

'ஏன் கிறிஸ்துவ தேசியவாதிகள் என குறிப்பிட மறுக்கிறார்கள்…' – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் ஆங்கிலப் புத்தகமான “The India Way: Strategies for an Uncertain World” என்ற புத்தகத்தை மராத்தி மொழியில் ‘பாரத் மார்க்’ என்ற பெயரில் மொழிபெயர்ப்பட்டது. மராத்தி புத்தக்கத்தின் அறிமுக விழா நேற்று (ஜன. 28) மகாராஷ்டிராவின் புனே நகரில் நடைபெற்றது.  ஜெய்சங்கரின் புத்தகத்தின் மராத்தி பதிப்பை மகாராஷ்டிராவின் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வெளியிட்டார். ஜெய்சங்கர், அதில் தான் பெருமைப்படுவதாகவும், மன்னிப்பு கேட்பதற்கு எதுவும் இருப்பதாக நினைக்கவில்லை என்றும் கூறினார். பிபிசி … Read more

முகலாய தோட்த்தை அம்ரித் உதயான் என்ற புதிய பெயருடன் இன்று திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்!

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்துள்ள முகலாய தோட்டத்தை அம்ரித் உதயான் எனப் பெயரிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ இன்று திறந்து வைக்கிறார். மூலிகைத் தோட்டம், போன்சாய் தோட்டம், மையப் புல்வெளித்தோட்டம் உள்ளிட்ட பகுதிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு பொதுமக்கள் பார்வையிட திறந்திருக்கும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.  இந்நிலையில் முகலாய தோட்டத்தின் பெயரை மாற்றுவதற்கு எதிர்க்கட்சியினர் அரசை விமர்சித்துள்ளனர். வரலாற்றின் அடிமைத்தளைகளில் இருந்து விடுபட பெயர் மாற்றம் அவசியம் என்று பாஜக தரப்பில் … Read more

பிப்ரவரி முதல் மே மாதம் வரை கேரளாவில் மின் கட்டணம் உயர்கிறது

திருவனந்தபுரம்: கேரளாவில் மின்சாரம் அதிகம் செலவாகும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மின்வாரியம் கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதையடுத்து கடந்த வருடம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மின்சாரம் அதிக அளவில்  பயன்படுத்தப்படும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கேரள மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம், கேரள அரசிடம் கோரிக்கை விடுத்தது. கடந்த வருடம் இந்த மாதங்களில் வெளியிலிருந்து மின்சாரம் வாங்கியதில் … Read more

ஊடகங்களுக்கான கட்டுப்பாடுகளை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்..!!

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 126-ன்படி அனைத்து ஊடகங்களும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளின் விவரம்: வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக, தொலைக்காட்சி அல்லது பிற ஊடகங்கள் மூலம் தேர்தல் விஷயங்களைக் காட்டுவது தடை செய்யப்படுகிறது. வாக்கெடுப்பு முடிவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடையும் 48 மணிநேரத்தில் பொதுக் கூட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. எனவே, அதுபற்றிய செய்திகளை வெளியிடக்கூடாது. தொலைக்காட்சிகள் மூலம் எந்தவொரு தேர்தல் விஷயத்தையும் பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படுகிறது. இந்த விதிகளை மீறும் … Read more