நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல்

மும்பை: மகாராஷ்டிராவின் நாக்பூரில் காம்லா சதுக்கம் பகுதியில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில் நிதின் கட்கரி அலுவலகத்துக்கு நேற்று காலை தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இதில் அமைச்சர் நிதின் கட்கரியை கொலை செய்ய போவதாக மர்மநபர் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் இரண்டு முறையும் இதேபோன்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காலை 11.25,11.32 மற்றும் 12.30 மணிக்கு மிரட்டல் அழைப்புக்கள் வந்துள்ளது.

நாய் கடிக்கு பயந்து 3-வது மாடியில் இருந்து குதித்த ஸ்விக்கி ஊழியர்

ஹைதராபாத்: ஹைதராபாத் யூசப்கூடா ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் ரிஜ்வான் (23). ஸ்விக்கி நிறுவனத்தில் உணவு விநியோகித்துவந்தார். இவர் கடந்த புதன்கிழமை இரவு, ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு உணவு விநியோகிக்க சென்றார். அப்போது அந்த வீட்டில் இருந்த நாய், ரிஜ்வானை கடிக்க ஓடி வந்தது. இதனால் பயத்தில் ஓடிய ரிஜ்வான் 3-வது மாடியிலிருந்து கீழே குதித்தார். தலையில் பலத்த காயத்துடன் நிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனிடையே உணவு … Read more

ஜம்மு காஷ்மீரில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பனிச்சரிவுகள் ஏற்படும் என பேரிடர் மீட்புத்துறை எச்சரிக்கை!

ஜம்மு காஷ்மீரில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பனிச்சரிவு ஏற்படலாம் என்று பேரிடர் மீட்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்ட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து சார்பல் மற்றும் கந்தர்பால் ஆகிய இரண்டு மலைப்பிரதேசங்களில் பனிச்சரிவு ஏற்பட்டது. கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டுகட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் பல இடங்களில் பனிச்சரிவு ஏற்படலாம் என்பதால் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் நிறுத்தி … Read more

 2024 மக்களவை தேர்தலில் திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் முக்கியமான சக்திகளாக இருக்கும்: அமர்தியா சென் கணிப்பு

கொல்கத்தா: ‘வரும் 2024 மக்களவை தேர்தலில் திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் முக்கியமான சக்திகளாக இருக்கும்’ என பிரபல பொருளாதார நிபுணர் அமர்தியா சென் கூறி உள்ளார். நோபல் பரிசு வென்ற பிரபல பொருளாதார நிபுணரான அமர்தியா சென் (90) அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 2024 மக்களவை தேர்தலானது, பாஜ எனும் ஒற்றை குதிரைக்கான போட்டிக் களமாக இருக்கும் என எண்ணினால் அது மிகப்பெரிய தவறு. ஏனென்றால் பல மாநில கட்சிகள் மக்களவை தேர்தலில் முக்கிய பங்கு … Read more

ரஜினி பாடத்தில் வாய்ப்பு எனக்கூறி மாடல் அழிகியிடம் மோசடி!…..

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மும்பை மாடல் அழகியிடம் ரூ.8½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மும்பை வெர்சோவா பகுதியில் வசித்து வரும் சன்னா சுரி (வயது 29) என்பவர் தான் மோசடிக்கு ஆளான அந்த மாடல் அழகி ஆவார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் பியூஷ் ஜெயின் என்பவர் ‘பிளாக்கிளாத் ஈவன்ட்ஸ்’ என்ற சமூக வலைத்தள கணக்கில் இருந்து மாடல் அழகியை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு … Read more

மும்பை கண்காட்சியில் 156 கிராமில் உருவாக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் மார்பளவு தங்க சிலை

மும்பை: மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கடந்த 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தங்க, வைரநகை கண்காட்சி நடைபெற்றது. இதில் 1,300-க்கும் மேற்பட்டநிறுவனங்கள் பங்கேற்றன. 2,500 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தியாவின் 800 நகரங்கள், 80 வெளிநாடுகளை சேர்ந்த 32,000-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கண்காட்சியை பார்வையிட்டனர். இந்த கண்காட்சியில் பிரதமர் மோடியின் மார்பளவு தங்க சிலை இடம்பெற்றிருந்தது. 156 கிராம் தங்கத்தில் செய்யப்பட்ட இந்த சிலை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. இதுதொடர்பான வீடியோ, புகைப்படம் சமூக வலைதளங்களில் … Read more

இந்திய உணவுக் கழகத்தில் மாற்றம்: மத்திய அமைச்சர் தகவல்!

இந்திய உணவுக் கழகத்தில் (எஃப்சிஐ) மாற்றங்கள் விரைவான முறையில் மேற்கொள்ளப்பட உள்ளன எனவும், இதன் மூலம் இந்த அமைப்பு நாட்டு மக்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு தொடர்ந்து அதிக அளவில் உதவ முடியும் என்றும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம், ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். இந்திய உணவுக் கழகத்தின் 59-வது நிறுவக தின விழாவில் தொடக்க உரை ஆற்றிய அவர், இந்திய உணவுக் கழகம், மத்திய கிடங்குக் … Read more

கடும் குளிர், அடர் பனி காரணமாக சண்டிகருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.. பொதுமக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல்!

கடுமையான குளிர் மற்றும் அடர்ந்த மூடுபனி காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் சண்டிகர் நகருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிகையைத் தொடர்ந்து. பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும்,  வெளியில் செல்லும் போது கட்டாயம் முகத்தை மறைத்துச் செல்லவேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள சில நகரங்களுக்கு பனி தொடர்பாக சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.  Source link

ஜம்மு, காஷ்மீரில் பனிச்சரிவு 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அதிக பனிப்பொழிவால் 12 மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் அதிக பனிப்பொழிவு உள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை விமான போக்குவரத்து, சாலைப்போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. நேற்று காலை மீண்டும் விமானப்போக்குவரத்து தொடங்கப்பட்டது. இருப்பினும் விமானங்கள் தாமதமாக தரையிறங்கின. ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. இதற்கிடையே பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் செக்டாரில் உள்ள கிராமத்தில் நேற்று பனிச்சரிவு ஏற்பட்டது. ஆனால் உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று … Read more

8 ஆவது வந்தே பாரத் – பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்!….

செகந்திராபாத்-விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான அதிவேக வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சியின் வழியாக காலை 10:30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய சுற்றுலா அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்தபடி பங்கேற்கின்றனா். இந்த … Read more