15 வயது நிரம்பிய முஸ்லிம் பெண் திருமணம் செய்ய தகுதியுடையவரா? – மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் விருப்பத்துடன் திருமணம் செய்து கொள்ளலாமா என்பது குறித்த வழக்கில், உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது. 15 வயது நிறைவடையும் முஸ்லிம் பெண்கள் தாங்கள் விரும்பினால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சென்ற ஆண்டில் ஒரு வழக்கில் ஹரியாணா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு … Read more

கொலை வழக்கில் 10 ஆண்டு சிறை: எம்பி பதவியில் இருந்து முகமது பைசல் தகுதி நீக்கம்!

கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ள லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். லட்சத்தீவு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இருப்பவர் முகமது பைசல். இவர் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். கடந்த 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் போது, அரசியல் விவகாரம் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் பி.எம்.சயீத்தின் மருமகன் பாடாநாத் சாலிக்கை, முகமது பைசல் வேறு சிலருடன் சேர்த்து … Read more

நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல்! ஒரே நாளில் 3 முறை வந்த போன் கால்!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் அலுவலகத்திற்கு ஒரே நாளில் மூன்று முறை மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி. இவருடைய அலுவலகம், மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் அமைந்துள்ளது. அதாவது, நாக்பூரில் உள்ள கம்லா சவுக்கின் அவரது வீட்டிலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இவருடைய அலுவலகத்திற்கு மிரட்டல் விடுத்து இன்று ஒரே நாளில் மூன்று அழைப்புகள் வந்துள்ளதாக நாக்பூர் காவல் துறை தெரிவித்துள்ளது. அவருடைய … Read more

குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியில் பாதுகாப்பு விதி மீறல் – பெண் பொறியாளர் பணியிடை நீக்கம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் பாதுகாப்பு விதியை மீறிய பெண் பொறியாளர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி ஒன்று ராஜஸ்தானின் பாலி நகரில் கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. பொது சுகாதார பொறியியல் துறையின் இளநிலை பெண் பொறியாளரான அம்பா சியோல் இதில் பங்கேற்றார். பாலி நகரில் பணியாற்றும் இவர், நிகழ்ச்சியின்போது குடியரசுத் தலைவரின் பாதத்தைத் தொட முயன்றுள்ளார். … Read more

ரெய்டு..! – குற்றஞ்சாட்டும் மணீஷ் சிசோடியா; மறுக்கும் சிபிஐ

டெல்லி தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில், சிபிஐ ரெய்டு நடத்தியதாக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டி உள்ளார். டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசிலும், ஆட்சியிலும், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக அதிகாரத்தில் இருப்பவர் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா. டெல்லி புதிய மதுபானக் கொள்கை தொடர்பாக, துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா பரிந்துரையின் அடிப்படையில், கடந்த சில … Read more

சுவாமியே சரணம் ஐயப்பா கோஷம் விண்ணை பிளக்க சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தெரிந்தது

திருவனந்தபுரம்: சபரிமலையில் இன்று மாலை பொன்னம்பல மேட்டியில், மகர ஜோதி தெரிந்தது. இதனை தரிசிப்பதற்காக 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். சபரிமலை ஐயப்படன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக நடை கடந்த நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் சபரிமலையில் பக்தர்கள் அலைமோதி வருகின்றனர். மண்டல காலத்தில் தினமும் சராசரியாக 80 ஆயிரம் முதல் 85 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்தனர். ஆனால் மகரவிளக்கு காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து … Read more

சேது சமுத்திர திட்டம் முதலில் யார் சிந்தனையில் உதித்தது; 150 ஆண்டு கால சுவாரஸ்ய வரலாறு

சேது சமுத்திர திட்டம்தான் தற்போதைய பேசுபொருளாக இருக்கிறது. 150 ஆண்டுகளாகத் தொடரும் இந்த திட்டம் உருவான வரலாறு மற்றும் அத்திட்டத்தின் நன்மை, விமர்சனங்கள் குறித்து இங்கு பார்ப்போம். சேது சமுத்திர திட்டம்! பாக் ஜலசந்தியையும், மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ஆடம்ஸ் அல்லது ராமர் பாலம் எனச் சொல்லக்கூடிய பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயே, சேது சமுத்திர திட்டம் ஆகும். இந்தத் திட்டம், 300 மீட்டர் அகலமும், 167 கி.மீ நீளமும், 12 மீட்டர் ஆழமும் கொண்டது. … Read more

மக்களவைத் தேர்தல் 2024-ல் திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும்: அமர்த்தியா சென்

கொல்கத்தா: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் முக்கியமானவையாக இருக்கும் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ”வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலக் கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும் என எண்ணுகிறேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக, திமுக ஒரு முக்கியமான கட்சி. திரிணாமூல் காங்கிரஸும் முக்கியமான கட்சிதான். சமாஜ்வாதி கட்சிக்கு சில நிலைப்பாடுகள் உள்ளன. எனினும், … Read more

சபரிமலையில் ஐயப்பன் கோயிலில் இன்று மகரஜோதி தரிசனம்: 2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு

கேரளா: மகரஜோதி தரிசனத்தை காண குவிந்துள்ள பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சன்னிதானத்தை சுற்றி சுமார் 2 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர். மகரஜோதியை காண ஆன்லைனில் 90 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.தங்கம், வெள்ளி ஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 வருடமாக கோட்டம் குறைவாக இருந்தது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருப்பதால் பக்தர்கள் கூட்டம் குவிந்துள்ளது. .மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ம் தேதி நடை திறக்கப்பட்டது.

டெல்லி துணை முதல்வர் அலுவலகத்தில் சிபிஐ சோதனை

புதுடெல்லி: டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோதியாவின் அலுவலகம் உள்பட அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று (சனிக்கிழமை) சோதனை நடத்தினர். டெல்லியில் மதுபானக் கொள்கை திரும்பப் பெறப்பட்ட விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் மணிஷ் சிசோதியா உள்பட 15 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மணிஷ் சிசோதியாவின் தனிப்பட்ட உதவியாளரும் சிக்கிய நிலையில், அவரிடம் அமலாக்கத் துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு அவரது வாக்குமூலம் பதிவு … Read more