சிபிஐ உட்பட விசாரணை அமைப்புகளின் தகவல்களை அறிய அமலாக்கத் துறைக்கு புதிய மென்பொருள்

புதுடெல்லி: சிபிஐ உட்பட விசாரணை ஏஜென்சிகளின் தகவல்களை எளிதில் அணுகுவதற்கான புதிய மென்பொருளை அமலாக்கத் துறை (இடி) உருவாக்கி வருகிறது. அந்த மென்பொருளுக்கு “சீடோஸ்” (கோர் இடி ஆப்பரேடிங் சிஸ்டம்) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மென்பொருள், நிதி முறைகேடு, பண மோசடிகளில் விரைவாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும், அவற்றின் தொடர்புகளை கண்டறியவும் பெரிதும் உதவும். குறிப்பாக, மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ), தேசிய புலனாய்வு கிரிட் (நாட்கிரிட்) மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி), நிதி … Read more

வைகுண்ட ஏகாதசியையொட்டி ஏழுமலையான் கோயிலில் திரண்டனர் சொர்க்கவாசல் வழியாக திரளான பக்தர்கள் தரிசனம்: தங்க ரதத்தில் உற்சவர் பவனி

திருமலை: வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் வழியாக திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தங்க ரதத்தில் உற்சவர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியான நேற்று  ஜீயர்கள் முன்னிலையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆகம முறைப்படி சிறப்பு பூஜைகள் மேற்கொண்டனர். தொடர்ந்து, நள்ளிரவு 12.30 மணிக்கு மூலவர் கருவறையை சுற்றி உள்ள சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, கர்நாடகா மாநில கவர்னர் தவர்சந்த் … Read more

மத்திய அரசின் பணமதிப்பிழப்பை 'சட்டவிரோதம்' என்ற ஒரே நீதிபதி பி.வி. நாகரத்னா யார் தெரியுமா?

நேற்றைய தினம் பணமதிப்பிழப்பு தொடர்பான வழக்கு விசாரணையின்போது, அதிரடி தீர்ப்பை வழங்கி, இந்தியா முழுவதும் இன்று பேசுபொருளாகியிருக்கிறார் உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா. யார் இவர்? எங்கிருந்து வந்தவர்? இதற்கு முன் இவர் செய்த அதிரடி சம்பவங்கள் என்ன? இதை இக்கட்டுரையில் காண்போம்! கடந்த 2016-ம் ஆண்டில் நவம்பர் 8ஆம் தேதி, கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ளவும் பண மதிப்பிழப்பை அறிவித்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதன்படி அன்று முதல் இந்தியாவில் வழக்கத்திலிருந்த ரூ. 500 … Read more

காரில் 4 கி.மீ. இழுத்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு – குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கேஜ்ரிவால் வலியுறுத்தல்

புதுடெல்லி: டெல்லியில் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு காரில் இழுத்துச் செல்லப்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம் மிகவும் வெட்கக்கேடானது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி சுல்தான்புரி பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்காக வெளியே சென்றுள்ளார். அதிகாலை நேரத்தில் அவர் வீடு திரும்பிய போது, அந்த வழியே வந்த மாருதி பலேனோ … Read more

2023-24 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!

2023-24 ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ந் தேதி தாக்கலாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறும்  என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Source link

திருப்பதியில் நேற்று ஒரே நாளில் ரூ.7.68 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தகவல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் ரூ.7.68 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி 76.31 கோடி காணிக்கை கிடைத்ததே அதிகபட்சமாக இருந்தது. வைகுண்ட ஏகாதசியை ஒட்டி சாமி தரிசனத்துக்காக ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் நேற்று குவிந்தனர்.

திகார் சிறையில் கைதிக்கு பாலியல் வன்கொடுமை? அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

திகார் சிறையில் உள்ள கைதிகள் மீதான பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக டெல்லி அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திகார் சிறையில் சக கைதிகளால் 22 வயது கைதியொருவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக டிசம்பர் 30-ம் தேதியன்று தகவல் வெளியானது. இதையடுத்து, இவ்விவகாரத்தில் தானாக முன்வந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட கைதிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. … Read more

நாக்பூரில் இன்று இந்திய அறிவியல் மாநாட்டை தொடங்கி வைக்கிறார் பிரதமர்

நாக்பூர்: நாக்பூரில் இன்று இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி, காணொலி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றவுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இந்த ஆண்டுக்கான இந்திய அறிவியல் மாநாடு நாளை தொடங்கவுள்ளது. ஆண்டுதோறும் நாட்டில் உள்ள முன்னணி விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் பங்கேற்கும் இந்திய அறிவியல் மாநாடு நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த மாநாடு நடத்தப்படவில்லை. இந்நிலையில், நாக்பூரில் இன்று (ஜனவரி 3) 108-வது … Read more

டெல்லியில் ஸ்கூட்டி மீது மோதி பலி இளம்பெண் சடலத்தை 13 கிமீ இழுத்து சென்ற கார்: டெல்லியில் மக்கள் போராட்டம்; சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு

புதுடெல்லி: ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண் மீது கார் மோதியதில் பலியானார். அவரது சடலத்தை நிர்வாண நிலையில் காரில் 13 கிலோமீட்டர் இழுத்து சென்ற கொடூரம் நடந்து உள்ளது. டெல்லியை சேர்ந்த அஞ்சலி சிங் என்ற 20 வயது இளம்பெண், புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில் சாலை விபத்தில் உயிரிழந்தார். வடமேற்கு டெல்லியின் கஞ்சவாலா பகுதியில், அவரது ஸ்கூட்டர் மீது, குடிபோதையில் 5 பேர் வந்த கார் மோதியது. அந்த பெண்ணின் உடைகள் காரின் சக்கரம் ஒன்றில் சிக்கியதால் விபத்து … Read more

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்கிய இடத்தில் குண்டுவெடித்து குழந்தை உயிரிழப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய வீட்டின் அருகே ஐஇடி வகை குண்டு வெடித்து குழந்தை உயிரிழந்தது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரஜவுரி மாவட்டத்தில் டங்ரி கிராமத்தில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அந்த கிராமத்தை முற்றுகையிட்டு போலீஸாரும், பாதுகாப்பு படையினரும் தேடுதல் வேட்டை நடத்தினர். நேற்று காலை இந்த சோதனை நடந்த நேரத்தில் ஒரு வீட்டில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதைத் தொடர்ந்து அலறல் … Read more