மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் – ஜனவரி 31-ல் தொடக்கம்

புதுடெல்லி: மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று கூறியதாவது: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும். 66 நாட்களில் 27 அமர்வுகள் இடம்பெறும். வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார். சீதாராமன் தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட் இதுவாகும். 2024-ம் ஆண்டு நடைபெற வுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, பிரதமர் மோடி … Read more

சாப்பாடு போட்டே கணவனை கொன்ற அதர்ம பத்தினி..! அதிர்ந்து போன போலீஸ்

சாப்பாடு போடாமல் பட்டினிபோட்டு கொலை செய்தவர்கள் பற்றி கேள்வி பட்டிருப்போம், ஆனால் பெண் ஒருவர் விதவிதமாக சமைத்து போட்டு, கணவனை கொலை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பைடி ராஜு. இவரது மனைவி ஜோதி ராஜு. திருமணமாகி 6 வருடங்கள் கடந்த நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்த கணவர் பைடி ராஜூ மாயமானதாக காவல்துறையில் அவரது … Read more

ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சம் லாலு மீது வழக்கு தொடர சிபிஐ.க்கு அனுமதி

புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது, 2004 முதல் 2009-ம் ஆண்டு ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது, ரயில்வேயில் வேலை வழங்குவதற்காக லாலுவும் அவரது குடும்பத்தினரும் நிலங்களை லஞ்சமாக பெற்றதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் லூலு பிரசாத் யாதவ் மீது வழக்கு தொடர சிபிஐ.க்கு ஒன்றிய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. இநத வழக்கில் கடந்தாண்டு  சிறப்பு நீதிமன்றத்தில்  லாலு, … Read more

கேரளா: மகரஜோதி தரிசனத்திற்கான "வியூ பாயிண்ட்"களில் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

சபரிமலை மகரஜோதி தரிசனத்திற்காக பக்தர்கள் கூடும் “வியூ பாயின்ட்”களில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வுக்குப் பின் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் டாக்டர் திவ்யா எஸ் ஐயர் தெரிவித்துள்ளார். சபரிமலையில் இன்று மகர சங்கரம பூஜையும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கிறது. இந்நிலையில் மகரஜோதியை பக்தர்கள் தரிசிக்கும் வியூ பாயின்ட்களில், பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள இறுதிகட்ட பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா எஸ்.ஜயர், மாவட்ட எஸ்.பி. ஸ்வப்னில் மதுக்கூர் மகாஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் … Read more

பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் ஆலோசனை!….

நிதி ஆயோக்கில் பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். வரும் நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட், பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இந்தநிலையில், நிதி ஆயோக்கில், பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். ‘உலகளாவிய சிக்கலுக்கிடையே இந்தியாவின் வளர்ச்சி மற்றும் மீண்டெழும் திறன்’ என்ற தலைப்பில் இந்த ஆலோசனை நடந்தது. அதில், பிரபல பொருளாதார நிபுணர்கள் சங்கர் ஆச்சார்யா, அசோக் குலாதி, ஷாமிகா ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி … Read more

பல மாநிலங்களின் அரசியலில் தடம் பதித்த சரத் யாதவ் – பிஹாரின் ‘கிங்மேக்கர்’ ஆக இருந்த பொதுவுடைமைவாதி

புதுடெல்லி: ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவர் சரத் யாதவ், சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப் பட்டிருந்தார். மூச்சுத்திணறல் காரணமாக டெல்லிக்கு அருகே குருகிராமில் உள்ள போர்டீஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (வியாழன்) இரவு காலமானார். அவருக்கு வயது 75. மத்திய பிரதேசத்தின் ஹோசிங்காபாத் மாவட்டம், பபாய் கிராமத்தில் 1947-ல் பிறந்தவர் சரத் யாதவ். 1971-ல் பொறியியல் கல்லூரி மாணவர் பேரவை தலைவரானார். அப்போது அரசியலில் நுழைந்த அவர், காங்கிரஸுக்கு … Read more

திருப்பதி தரிசனத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

திருப்பதி வெங்கடாஜலபதியை விரைவில் தரிசிக்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கான முக்கியமான செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது.  திருப்பதி ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்கும் அறக்கட்டளையான திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி), தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட்-புக்கிங் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த டிடிடி இணையதளத்தின்படி, ஜனவரி 12 முதல் பிப்ரவரி 28 வரை பக்தர்கள் ரூ.300 விலையில் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம் மற்றும் இந்த தளத்தில் டிக்கெட் முன்பதிவு செயல்முறை கடந்த ஜனவரி 9-ம் தேதி முதலே தொடங்விட்டது.  சமீபத்தில் … Read more

உணவு டெலிவரிக்கு சென்றபோது நாயிடம் தப்பிக்க 3வது மாடியில் இருந்து குதித்த வாலிபர் சீரியஸ்: ஐதராபாத்தில் பெண் மீது வழக்கு

திருமலை: ஐதராபாத்தில் உணவு டெலிவரிக்கு சென்றபோது வாலிபரை வளர்ப்பு நாய் கடிக்க முயன்றதால் 3வது மாடியில் இருந்து கீழே குதித்தார். ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் சாலை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஷோபனாநாகனி என்ற பெண் கடந்த 11ம் தேதி ஆன்லைன் ஆப்பில் உணவு ஆர்டர் செய்தார்.   டெலிவரி பாயான முகமது ரிஸ்வான்(23) என்பவர் உணவு பார்சலை   தர கதவை தட்டியுள்ளார். அப்போது கதவு திறந்திருந்ததால் வீட்டில் இருந்த வளர்ப்பு நாய் வெளியே வந்து முகமதுரிஸ்வானை கடித்தது.   தப்பிக்க … Read more

கடந்த 12 நாட்களில் 5.4 செ.மீ. மண்ணில் புதைந்த ஜோஷிமத் நகரம் – அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலத்தின் ஜோஷி மத் நகரம் வெறும் 12 நாட்களில் 5.4 செ.மீ. புதைந்திருப்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இமயமலையின் அடிவாரத்தில் உள்ளது ஜோஷிமத்நகரம். பத்ரிநாத் போன்ற பிரபலபுனிதத் தலங்களின் நுழைவாயிலாக இந்நகரம் உள்ளது. இந்தநகரம் மெல்ல மெல்ல மண்ணில்புதைந்து வருவதால் அங்குள்ளவீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள்மற்றும் சாலைகளில் விரிசல்ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கிருந்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளன. … Read more

பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு இமாச்சல அமைச்சரவை ஒப்புதல்

சிம்லா: இமாச்சலப்பிரதேச புதிய அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே பழைய ஓய்வுதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சுக்விந்தர் சிங் சுக்கு முதல்வராக பொறுப்பேற்றார். முன்னதாக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது மாநிலத்தில் பழைய ஓய்வூதிய முறையே மீண்டும் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில் இமாச்சல் அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு தலைமையில் நடந்த … Read more