55 பயணிகளை ‘விட்டு’ சென்ற Go First விமானம்! ரூ.10 லட்சம் அபராதம் விதித்த DGCA

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் விமானத்திற்கு வெளியே ஏறுவதற்காக பஸ்ஸில் காத்திருந்த 55 பயணிகளை அம்போ என விட்டு விட்டுச் சென்ற சம்பவத்திற்காக கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்திற்கு இந்திய விமானப் போக்குவரத்து கண்காணிப்பு குழுவான டிஜிசிஏ ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி காலை 6:30 மணிக்கு டெல்லி செல்லும் விமானத்தில் ஏர்லைன்ஸ் பயணிகள் காத்திருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. முன்னதாக DGCA விமான நிறுவனத்திற்கு ஒரு ஷோ-காஸ் நோட்டீஸ் … Read more

பாலிவுட் நடிகருக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அட்மிட்

டெல்லி: டெல்லியில் வசிக்கும் பிரபல பாலிவுட் நடிகர் அன்னு கபூருக்கு (67) நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதையடுத்து அவர் உடனடியாக சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக கூறப்படுகிறது. சர் கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அஜய் ஸ்வரூப் கூறுகையில், ‘அன்னு கபூருக்கு சுவாச பிரச்னை உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருதயவியல் மருத்துவர்களின் கண்காணிப்பில். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது’ என்றார். மத்திய பிரதேச … Read more

மீண்டும் சீனா – இந்தியா எல்லை பிரச்சனை? ரகசிய ஆவணம் தாக்கல் செய்ததா லடாக் காவல்துறை?

இந்தியா – சீனா இடையே எல்லை சண்டை ஏற்படலாம் என காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டில் ரகசிய ஆவணம் தாக்கல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட காலமாக நமக்கும் அண்டை நடான சீனாவிற்கும் எல்லை பிரச்சனை இருந்து வரும் நிலையில், இது தற்பொழுது விஸ்வரூபம் எடுக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 2020 ம் ஆண்டு இந்தியாவின் வடக்கில் உள்ள லடாக் பிரதேசத்தில், இந்தியா – சீனா எல்லைகளைப் பிரிக்கும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அருகே அமைந்த இந்தியாவின் … Read more

ஜம்மு காஷ்மீரில் பாதியில் நிறுத்தப்பட்ட ஒற்றுமை யாத்திரை: பாதுகாப்பில் குறைபாடு என காங். குற்றச்சாட்டு

ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை காஷ்மீர் வரை சென்றுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதற்கு பாதுகாப்பு ஏற்பாட்டில் இருந்த குறைபாடுதான் காரணம் என காங்கிரஸ் கட்சி தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை அதன் இறுதி கட்டமான ஜம்முவை கடந்து வருகிறது. சிறிய இடைவெளிக்கு பிறகு யாத்திரை வெள்ளிக்கிழமை காலையில் பானிஹால் என்ற … Read more

மக்களவை தேர்தல்: இன்னிக்கு தேர்தல் வந்தா பாஜக கதி? கருத்துக்கணிப்பு முடிவுகள்!

மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்குமா? எத்தனை தொகுதிகளில் வெல்லப் போகிறது? ஏற்கனவே செல்வாக்கு இல்லாத இடங்களில் முடிவுகள் எப்படி இருக்கும்? போன்ற கேள்விகள் எழுகின்றன. இந்நிலையில் பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று Mood of the Nation என்ற பெயரில் மொத்தம் 1,40,917 பேரிடம் கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. மீண்டும் பாஜக ஆட்சிஇதில் பல்வேறு தலைப்புகளில் மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதன் முடிவுகள் தற்போது … Read more

துபாயில் இருந்து வந்தபோது டெல்லியில் தரையிறங்கிய ‘விமானம் கடத்தல்’- டுவிட் செய்த குறும்புகார பயணி கைது

டெல்லி: துபாயில் இருந்து நேற்று முன்தினம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நோக்கி விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது மோசமான வானிலை காரணமாக அன்றிரவு 9.45 மணியில் டெல்லி விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கியது. விமானத்தில் அமர்ந்திருந்த ராஜஸ்தான் மாநிலம் நாகவுரைச் சேர்ந்த பயணி மோதி சிங் என்பவர், ‘விமானம் கடத்தப்பட்டது’ என்று டுவிட் செய்தார். இவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே சில மணி நேரம் தாமதமாக அந்த விமானம் டெல்லியில் இருந்து … Read more

ராகுல் காந்தியின் நடை பயணம் திடீர் நிறுத்தம்!!

பாதுகாப்பு காரணங்களுக்காக ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தியின் நடைப்பயணம் இன்று பனிஹால் பகுதியில் தொடங்கியது. குண்டுகள் துளைக்காத வாகனத்தில் வந்த ராகுல் காந்தி காசிகுந்த் பகுதியிலிருந்து தனது நடைப்பயணத்தைத் தொடங்கினார். அவரை வரவேற்க அதிக அளவிலான … Read more

பாதுகாப்பு குறைபாடு ஏதும் இல்லை; ராகுல் காந்திக்கு காவல்துறை மறுப்பு.!

கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி ராகுல் காந்தி துவங்கினார். இதையடுத்து, கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா, தற்போது ஜம்மு – காஷ்மீரில் நுழைந்துள்ளது. இந்தநிலையில் ராகுல் காந்தி டெல்லியில் பாதயாத்திரை மேற்கொண்ட போது, அவரது பாதுகாப்பில் சமரம் இருந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. இது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில், … Read more

காஷ்மீரில் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது: மல்லிகார்ஜுன கார்கே

டெல்லி: காஷ்மீரில் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணம் காஷ்மீரில் நிறைவடைய உள்ளது. தமிழ்நாட்டில் தொடங்கிய பயணம் கேரளா, கர்நாடாகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து தற்போது காஷ்மீரில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் அனந்த் நாக்கில், … Read more

வெடிக்கும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் சர்ச்சை; காங்கிரஸ் தலைவர் மீண்டும் கேள்வி.!

கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி புல்வாமா என்ற இடத்தில் துணை ராணுவப் படையினர் வந்த பேருந்து மீது, பயங்கரவாதி ஒருவர் தனது வாகனத்தை மோதி வெடிக்கச் செய்ததில் வாகனத்தில் பயணித்த 44 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இயங்கி வந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில், அந்த பயிற்சி முகாமும் அங்கிருந்த பயங்கரவாதிகளும் அழிக்கப்பட்டதாக … Read more