74-வது குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் படாக் அல்-சிசி சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

புதுடெல்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை. இந்தியாவின் 74-வது குடியரசு தின விழாவில் சிறப்பு தலைமை விருந்தினராக பங்கேற்க எகிப்து அதிபர் படாக் அல்-சிசிக்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட அல்-சிசி குடியரசு தின விழாவில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார். எகிப்து அரபுக் குடியரசின் தலைவர் ஒருவர் இந்திய குடியரசுதின விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். எகிப்து அதிபர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவிருப்பதையடுத்து அந்நாட்டு ராணுவத்தை … Read more

தெலங்கானா முதல்வர் அலுவலக செயலாளராக உள்ள பெண் ஐஏஎஸ் படுக்கை அறைக்குள் நள்ளிரவில் புகுந்த தாசில்தார்: பாதுகாப்பு போலீசாரிடம் சிக்கினார்

திருமலை: தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் அலுவலக செயலாளராக உள்ள பெண் ஐஏஎஸ் அதிகாரி படுக்கை அறைக்கு நள்ளிரவில் புகுந்த  துணை தாசில்தார் மற்றும் அவரது நண்பரை பாதுகாப்பு போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள கேட்டம் கம்யூனிட்டில் மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குடும்பத்தினருடன்  வசிக்கின்றனர். இதில், வில்லா எண் 11ல் மூத்த பெண் ஐஏஎஸ் அதிகாரியும், முதல்வர் சந்திரசேகரராவின் அலுவலக செயலராகவும் உள்ள  … Read more

ஜம்முவில் பனிச்சரிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் நேற்று பனிச்சரிவு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் பலியாகவில்லை. பந்திபோரா மாவட்டத்தின் துலைல் என்ற பகுதியில் உள்ள ஹுசங்கம் கிராமத்தில் நேற்று மாலை திடீரென்று பனிச்சரிவு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் பலியாகவில்லை. பனிச்சரிவு ஏற்பட்ட இடத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, அடுத்த 24 மணி நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் உள்ள 8 மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படும், இந்த பகுதிகளில் … Read more

மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி ஆட்சியை பிடிக்க ராகுல் காந்தி முயற்சி: ராஜ்நாத்சிங் குற்றச்சாட்டு

போபால்: ‘மக்களிடையே  வெறுப்பை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்ற ராகுல் காந்தி முயற்சிக்கிறார்’ என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டினார். மத்திய பிரதேச மாநிலம்  சிங்ரோலியில் நேற்று நடந்த அரசு விழாவில்  பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,‘‘ இந்தியா பிரிந்து போகிறதா? ஏற்கனவே கடந்த 1947ம் ஆண்டில் நாடு பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் உருவாக்கப்பட்டு விட்டது. ஆனால், அப்போது இருந்த தலைவர்கள் யாருக்கும் அதில் விருப்பம் இல்லை. ஆனால், தற்போது இந்திய ஒற்றுமை … Read more

கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில் பெட்ரோல் விலை எப்போது குறையும்?: ஒன்றிய அமைச்சர் விளக்கம்

வாரணாசி,: ‘பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இருந்து மீண்டவுடன் பெட்ரோல் விலை குறைக்கப்படும்’ என ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறி உள்ளார்.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்தன. ஆனால், கடந்த ஆண்டு ஏப்ரலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 ஆகவும், டீசல் ரூ.94.24 ஆகவும் … Read more

நீதிமன்ற உத்தரவின்படி இஸ்ரேல் உள்துறை அமைச்சர் பதவி நீக்கம்

டெல் அவிவ்,: இஸ்ரேலில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, உள்துறை அமைச்சரை பிரதமர் நேதன்யாகு பதவி நீக்கம் செய்தார்.இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு நீதித்துறையின் அதிகாரத்தை குறைத்து அரசியல்வாதிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பது தொடர்பான சர்ச்சை உருவாகி உள்ளது. இதனால் நாட்டின் ஜனநாயக அடிப்படைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் கடந்தாண்டு குற்றம் சாட்டப்பட்டிருந்த, நேதன்யாகுவின் கூட்டணி கட்சியை சேர்ந்த … Read more

மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் நிலவுவதால் மூணாறில் நதிகள் உறைந்தன: கடும் குளிரை அனுபவிக்க குவியும் சுற்றுலாப்பயணிகள்

மூணாறு: மூணாறில் வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவும் சூழலில், இந்த வித்தியாசமான தட்பவெப்ப நிலையை ரசித்து அனுபவிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் தென்னகத்து காஷ்மீர்’ என்றழைக்கப்படும் மூணாறில் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கும். இதில், டிசம்பர் இறுதி முதல் ஜன. 15 வரை மைனஸ் டிகிரி செல்சியஸ் ஆக மாறி பனிப்பொழிவு இருக்கும். கடந்த டிசம்பர் இறுதியில் இருந்தே மூணாறில் உறைபனி மைனஸ் டிகிரி செல்சியஸ் ஆக மாறியது. ஓடைகள், ஆறுகளில் தண்ணீர் … Read more

ஹிட்லரின் கதிதான் பிரதமர் மோடிக்கும்; சித்தராமையா காட்டம்.!

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 104 (36.35%), காங்கிரஸ் 80 (38.14%), மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 (18.3%), மற்றவை 3 என வெற்றி பெற்றன. ஆட்சியை பிடிக்க 113 இடங்களை கைப்பற்ற வேண்டும். ஆனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணமாக காங்கிரஸ் – மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் 14 மாதங்களில் ஆட்சி கலைக்கப்பட்டு … Read more

ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த போது 7வது மாடியில் இருந்து விழுந்து மாணவி பலி

ஐதராபாத்: ஜதராபாத் விடுதியின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த பட்டதாரி மாணவி ஒருவர், 7வது மாடியில் இருந்து கீழே விழுந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் செயல்படும் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகத்தில், அரியானா மாநிலம் பஹம்னோலி கிராமத்தை சேர்ந்த அஞ்சலி (22) என்பவர் எம்ஏ ஆங்கிலம் படித்து வந்தார். எம்பிசி விடுதியில் தங்கி படித்த அவர், விடுதியின் நான்காவது மாடியில்  உள்ள படிக்கட்டின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தார். எதிர்பாராதவிதமாக ஜன்னலின் ஓரத்தில் இருந்து … Read more

‘ஒரு ஓட்டுக்கு 6 ஆயிரம் தர்றோம்’ – கர்நாடகா பாஜக தலைவர் உறுதி.!

கர்நாடகாவில் வருகிற மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளன. கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்தநிலையில் ஒரு ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் தருவதாக பாஜக முன்னாள் அமைச்சர் கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. மே மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாஜக ஒரு ஓட்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என அம்மாநில முன்னாள் நீர்வளத்துறை … Read more