டேங்கர் வெடித்து சிதறி 2 பேர் பலி: வெல்டர் உட்பட 2 பேர் சீரியஸ்

பானிபட்: அரியானா மாநிலம் பானிபட் மாவட்டம் சதர் பகுதியில் செயல்படும் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகே ரசாயன லோடு ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிக்கு சர்வீஸ் நடந்து கொண்டிருந்தது. பழுதான பகுதிகளுக்கு தொழிலாளர்கள் வெல்டிங் வைத்துக் கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக வெல்டிங் செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட தீப் பொறியில், டேங்கர் லாரி திடீரென பற்றியது. அப்போது ஏற்பட்ட பயங்கர சத்தத்துடன் ேடங்கர் வெடித்தது. இந்த சம்பவத்தின் வெல்டிங் கடையில் மேற்கூரை சிதறியது. இந்த விபத்தில் உத்தரபிரதேச மாநிலம் கடம்பூரைச் … Read more

அக்கா கணவருக்கு மறுமணம் செய்துவைக்க முயன்ற தங்கை.. கோபத்தில் தங்கைக்கு வில்லியான அக்கா!

மேற்கு வங்கத்தில் தன் உடன்பிறந்த சகோதரி மீதே பெண்ணொருவர் ஆசிட் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் மாம்ராஜ்பூர் பகுதியை அடுத்த பிர்சிங் கிராமத்தைச் சேர்ந்த அகாலிமா பீபியும் ரஹீமா பீபியும் சகோதரிகள் ஆவர். இவர்கள் இருவரும் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த அஷதுல் அலி மற்றும் டெஸ்லிம் அலி ஆகிய சகோதரர்களைத் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இதில், அக்கா அகாலிமாவுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதைக் காரணம் காட்டி அகாலிமா கணவர் டெஸ்லிம் … Read more

ஒற்றுமை யாத்திரை நடத்த இந்தியா என்ன உடைந்தா இருக்கிறது?- ராஜ்நாத் சிங் கேள்வி

இந்தூர்: ஒற்றுமை யாத்திரை நடத்த இந்தியா என்ன உடைந்தா இருக்கிறது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இம்மாதத்துடன் இந்த யாத்திரை நிறைவடைகிறது. இந்நிலையில் இது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பேசுகையில், “இந்தியாவில் வெற்றுப்புணர்வு மேலோங்கி இருக்கிறது என்று சிலர் கூறுவது நாட்டை இழிவுபடுத்தும் செயல். நாட்டில் வெறுப்பு இருக்கிறது என்று கூறி இந்திய … Read more

தலைமை நீதிபதியை பாராட்டிய பிரதமர்; அரசியல் நோக்கர்கள் அதிர்ச்சி.!

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது. கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் அளிக்கும் பரிந்துரையின் பேரில், ஒன்றிய அரசு புதிய நீதிபதிகளை நியமிக்கிறது. அந்தவகையில் நாட்டில் உள்ள பல்வேறு நீதுமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைத்து, கொலிஜியம் கேட்டுக் கொண்டது. ஆனால் ஒன்றிய அரசு அதற்கு எந்த முடிவையும் சொல்லவில்லை. இதனால் பல நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படாமல் உள்ளது. இதையடுத்து நீதி அமைப்பிற்கும், ஒன்றிய அரசிற்கும் இடையேயான மோதல் போக்கு வெளிச்சத்திற்கு வந்தது. … Read more

குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி செல்லும் அனைத்து ரயில்களிலும் ஜன.23-26-ம் தேதி வரை பார்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

டெல்லி: குடியரசு தின விழாவை முன்னிட்டு, பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், புதுடெல்லி செல்லும் அனைத்து ரயில்களிலும் ஜன.23-ம் தேதி முதல் ஜன26-ம் தேதி வரை பார்சல் சேவை தற்காலிகமாக நிறுத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து, விமான நிலையங்கள், ரயில்நிலையங்கள், கோவில்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து புதுடெல்லி செல்லும் அனைத்து ரயில்களிலும் … Read more

அரசியல் அமைப்பின் அடிப்படை கட்டமைப்பு துருவ நட்சத்திரம் போன்றது – தலைமை நீதிபதி கருத்து

புதுடெல்லி: நமது அரசியல் அமைப்பின் அடிப்படை கட்டமைப்பு என்பது துருவநட்சத்திரம் போன்றது. அது, சட்டத்திற்கு விளக்கம் அளிப்பவர்களுக்கும் (interpreters) அதனை நடைமுறைப்படுத்துபவர்களுக்கும் பாதையில் தடங்கள் ஏற்படும்போது வழிகாட்டி, சரியான திசைகளைக் காட்டுகிறது என்று தலைமை நீதிபதி டிஓய் சந்திரசூட் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் சனிக்கிழமை நானி பல்கிவாலா நினைவு சொற்பொழிவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், "நமது அரசியல் அமைப்பின் அடிப்படை கட்டமைப்பு என்பது துருவநட்சத்திரம் போன்றது. அது, … Read more

மோடிக்கும் மம்தாவிற்கு இடையே மோ-மோ ஒப்பந்தம்; காங்கிரஸ் எம்பி கிண்டல்.!

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடனும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி ராகுல் காந்தி துவங்கினார். இதையடுத்து, கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய … Read more

குடியரசு தினத்தில் தடை செய்யப்பட்ட சீக்கிய அமைப்பால் அச்சுறுத்தல்: சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

புதுடெல்லி: குடியரசு தினத்தில் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில், சீக்கியர் ஃபார் ஜஸ்டிஸ் அமைப்பின் தலைவன் குருபத்வந்த் சிங் பன்னு, சமூக ஊடகங்களின் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளான். அதில், ‘இந்திய ஆக்கிரமிப்பிலிருந்து பஞ்சாபை இந்தாண்டு விடுவிப்போம். வரும் 26ம் தேதியன்று மக்கள் வீட்டுக்குள்ளேயே … Read more

கார் மோதி 8 கிமீ தூரம் தொங்கிக் கொண்டே சென்ற முதியவர்!!

கார் மோதி முதியவர் ஒருவர் 8 கிலோ மீட்டர் தூரம் காரின் வைப்பரை பிடித்து தொங்கிக் கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டம் பாங்க்ரா என்ற கிராமத்தில் முதியவர் ஒருவர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் சாலையை கடக்க முயன்ற போது கோர விபத்து நேரிட்டது. தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும்போது, வேகமாக வந்த கார் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். பின்னர் கார் மீதே விழுந்த அவர் … Read more

''ராகுல் காந்தியின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்'': ஜெய்ராம் ரமேஷ் 

ஜம்மு: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ஜம்முவில் நடைபெற்று வரும் நிலையில், “ராகுல் காந்தியின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம். அதில் சமரசம் செய்துகொள்ள முடியாது” என்று காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும். வயநாடு எம்.பியுமான ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை அதன் இறுதி கட்டத்தை எட்ட உள்ளது. யாத்திரை தற்போது அதன் கடைசி பகுதியான ஜம்முவில் நடைபெற்று வருகிறது. ஜம்முவிலுள்ள கத்துவாவின் லக்னாபூர் பகுதியில் யாத்திரை … Read more