பாகிஸ்தானில் இந்து பெண் கொடூர கொலை: சிறுபான்மையினரை பாதுகாக்க இந்தியா வலியுறுத்தல்

புதுடெல்லி: பாகிஸ்தானில் இந்து பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் வாழும் சிறுபான்மையினரை அரசு பாதுகாக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த தயா பீல் என்ற 40 வயது இந்து பெண், கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது தலை துண்டிக்கப்பட்டு, மார்பகங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதையடுத்து, தயா பீல் கொல்லப்பட்ட அவரது கிராமத்திற்குச் சென்ற பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செனட்டர் கிருஷ்ண குமாரி, இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் … Read more

ரிலையன்ஸ் குழுமம் தலைவரான முகேஷ் அம்பானி பதவியேற்று 20 ஆண்டுகள் முடிவு

மும்பை: ரிலையன்ஸ் குழுமம் தலைவரான முகேஷ் அம்பானி பதவியேற்றி 20 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் அவரின் தலைமையில் ரிலையன்ஸ் பெரும் வளரச்சி அடைந்துள்ளது. 2002 ரிலையன்ஸ் குழுமம்தின்  நிறுவனர் திருபாய் அம்பானி மரணம் அடைந்த பின்,  முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிருவாக இயக்குனர் மற்றும் சேர்மனாக, பதவியேற்றார். கடந்த 20 ஆண்டுகளில் ரிலையன்ஸின் வருவாய் ஆண்டுகளுக்கு 15% அதிகரித்துள்ளது. தற்போது 7.92 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நிகர லாபம் ஆண்டுக்கு 16% அதிகரித்து, தற்போது ரூ 67,845 … Read more

எந்தெந்த நாட்டில் இருந்து வந்தால் பரிசோதனை கட்டாயம்?…

6 நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு ஜனவரி 1-ந்தேதி முதல் ஆர்.டி.பி.சிஆர்.பரிசோதனை கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரஸ் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.   இந்த நிலையில், ஜனவரி 1-ந்தேதி முதல் சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து … Read more

சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு புறப்படும் முன்பே RT-PCR பரிசோதனை கட்டாயம்: மத்திய அரசு

புதுடெல்லி: சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் ஆர்டி-பிசிஆர் (RT-PCR) பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்தப் பரிசோதனை, இந்தியாவுக்கு புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்றும் இந்தப் புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. RT-PCR பரிசோதனை கட்டாயம்: சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் RT-PCR … Read more

மீண்டும் லாக்டவுன்?; பகீர் கிளப்பிய மத்திய சுகாதார துறை!

சீனாவில் பரவி வரும் பிஎஃப்.7 கொரோனா வைரஸ் உலக நாடுகள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் கலந்து கொண்டு, தங்களது ஆலோசனையை வழங்கின. இந்த நிலையில், பிஎஃப்.7 கொரோனா வைரஸ் தொடர்பாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்துரையாடியபோது, ‘மாநிலங்கள் விழிப்புடன் இருப்பதோடு, கொரோனாவை கட்டுப்படுத்த தயார் நிலையில் … Read more

Income Tax: 5 லட்சம் வரை வருமானம் இருந்தால் வரி விலக்கு! அரசு செய்யவிருக்கும் பெரிய மாற்றம்

வருமான வரி ஸ்லாப்: வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. நீங்கள் அதிக வருமான வரி செலுத்துவதால் சிரமப்படுகிறீர்கள் என்றால், இப்போது உங்களுக்கு மிக விரைவில் தீர்வு கிடைக்கவுள்ளது. இந்த முறை வரி முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றத்திற்குப் பிறகு, ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு ஒரு … Read more

நாட்டிலேயே 2021-ம் ஆண்டு தமிழகத்தில் தான் அதிக சாலை விபத்து: உயிரிழப்பில் 2-வது இடம்

டெல்லி: நாட்டிலேயே 2021-ம் ஆண்டு தமிழகத்தில் தான் அதிகமான விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிக்கை அளித்துள்ளது. நாடுமுழுவதும் 2021-ம் ஆண்டு 4,12,432 சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 1,53,972 பேர் உயிரிழந்துள்ளனர் என ஒன்றிய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிக்கை அளித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 55,682 விபத்துகள் பதிவாகியுள்ளன எனவும், உயிரிழப்பில் உத்திரப்பிரதேசத்துக்கு அடுத்த இடத்தில் உள்ள தமிழகத்தில் 15,384 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது. நாடு முழுவதும் கார் விபத்தில் உயிரிழந்த 19,811பேரில் … Read more

மருத்துவமனையில் இருந்து நிர்மலா சீதாராமன் டிஸ்சார்ஜ்!….

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த டிச.26-ம் தேதி மதியம் திடீரென டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயிற்றுப்பிரச்சினையுடன் காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததாக கூறப்பட்டது. நெஞ்சு எரிச்சலும் இருந்துள்ளது. மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள்ள் வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாக கூறினர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது குணமடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். … Read more

ஜனவரி 1 முதல் ஆர்டி-பிசிஆர் சான்றிதழ் கட்டாயம்..!

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரஸ் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு நெகட்டிவ் ஆர்.டி.பி.சிஆர். சான்றிதழ் கட்டாயம். பயணத்திற்கு முன் பயணிகள் தங்கள் பரிசோதனை … Read more

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். 63 வயதாகும் நிர்மலா சீதாராமனுக்கு கடந்த திங்கள்கிழமை திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அவருக்கு காய்ச்சலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 4 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நிர்மலா சீதாராமன் குணமடைந்ததை … Read more