ராணுவத்துறையில் புதிய உச்சம் தொடும் பெண்: வெளிநாடு சென்று போர்ப்பயிற்சியில் ஈடுபடும் முதல் இந்திய பெண் வீராங்கனை அவனி சதுர்வேதி

டெல்லி: இந்திய ராணுவத்தில் வீராங்கனைகள் புதிய உச்சத்தை எட்டி வருகின்றனர். வெளிநாட்டில் நடைபெறும் விமானப் படை போர் பயிற்சியில் இந்திய வீராங்கனை ஒருவர் முதல் முறையாக கலந்து கொள்ள இருப்பதுதான் தற்போது பலரது பாராட்டுகளை குவித்து வருகிறது. இதுவரை பிற நாட்டு படைகளுடன் இணைந்து நடத்தப்பட்ட விமானப் படை பயிற்சிகளில் இந்திய விமானப் படை வீராங்கனைகள் பங்கேற்றதே இல்லை. இந்நிலையில், ஜப்பான் விமானப் படையுடன் இந்திய விமானப் படை மேற்கொள்ள இருக்கும் வீர் கார்டியன் பயிற்சியில் முதல் … Read more

இந்திய ஒற்றுமை யாத்திரையை சீக்கியர்கள் புறக்கணிக்க வேண்டும்: பாஜக

சண்டிகர்: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நாளை பஞ்சாபில் தொடங்க உள்ள நிலையில், அந்த யாத்திரையை சீக்கியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் விடுத்துள்ள அறிக்கையில், ”1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்ந்த கலவரத்திற்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பு. சீக்கிய எதிர்ப்புதான் காங்கிரஸ் கட்சியின் உண்மையான முகம். ஆபரேஷன் ப்ளூஸ்டார் எனும் ராணுவ நடவடிக்கை மூலம் சீக்கியர்களின் தங்க கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பி காங்கிரஸ் … Read more

பெங்களூரில் இடிந்து விழுந்த மெட்ரோ ரயில் பில்லர் – தாய், குழந்தை உயிரிழப்பு!

கர்நாடக மாநிலம் பெங்களூரில், மெட்ரோ ரயில் கட்டுமானத்தின் போது இரும்பு தூண் சரிந்து விழுந்த விபத்தில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாய், அவரது குழந்தை உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் நாகவரா பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடந்து வருகிறது. கல்யாண் நகரில் இருந்து எச்.ஆர்.பி.ஆர். பகுதி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலத்துக்காக தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாகவரா பகுதியில் இன்று காலை 11 மணி அளவில் மெட்ரோ ரயில் பாதைக்கான … Read more

54 பயணிகளை ‘அம்போ’ என விட்டுவிட்டு பறந்த விமானம்! பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி!

சமீப காலமாக விமான பயணங்கள் தொடர்பாக பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் வெளியாகி வருகின்றன.  அந்த வகையில் கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுக்கு மற்றொரு அதிர்ச்சியை தந்துள்ளது. இந்த விமான நிறுவனம், 54 பயணிகளை ஏற்றிச் செல்ல “மறந்து” புறப்பட்டது. இது தொடர்பாக பயணிகள் சமூக ஊடகங்களில் மிகவும் கடுமையான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். கர்நாடகாவின் பெங்களூருவில் இருந்து புறப்பட்டுக் கொண்டிருந்த டெல்லி செல்லும் கோ ஃபர்ஸ்ட்  (Go First) விமானம், ஒரு பேருந்தில் வந்தச் 50க்கும் … Read more

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவருமான சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ஹைதராபாத்: நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது ஹைதராபாத்தில் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவருமான சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். சந்திரபாபு நாயுடுவுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ள ரஜினிகாந்த், ‘நீண்ட நாட்களுக்குப் பிறகு.. எனது அருமை நண்பரைச் சந்தித்து, சந்திரபாபு நாயுடுவை மதிப்பிட்டு, மறக்க முடியாத நேரத்தைச் செலவிட்டேன் அவருக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் அரசியல் வாழ்வில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன் என்று … Read more

வெறுக்கத்தக்க, வன்முறையை ஊக்குவிக்கும் டிவி சேனல்கள் ஒளிபரப்பில் விதி மீறல் – மத்திய அரசு கடும் எச்சரிக்கை

புதுடெல்லி: டிவி சேனல்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: அண்மைக்கால டிவி சேனல் ஒளிபரப்பு உள்ளடக்கங்களில் தனியுரிமை மீறல் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தீங்கிழைக்கும் வகையிலும், அவதூறுகளை பரப்பும் வகையிலும் உள்ளடக்கங்கள் காணப் படுகின்றன. முதியோர், நடுத்தர வயது, சிறு குழந்தைகள் உள்ளிட்ட பிரிவினர் மற்றும் அனைத்து விதமான சமூக பொருளாதாரப் பின்னணிகளைக் கொண்ட குடும்பங்களில் பொழுதுபோக்கிற்கான பொதுத் தளமாக தொலைக்காட்சி மாறியுள்ளது. இந்த சூழ்நிலையில், பொறுப்புணர்வையும், ஒழுக்கத்தையும் அதிகம் கடைப்பிடிக்க வேண்டிய … Read more

கடுங்குளிரிலும் டி-ஷர்ட் அணிவது ஏன்? ராகுல் காந்தி விளக்கம்!

கடுமையான குளிரிலும் டி-ஷர்ட் அணிவது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக அரசை வீழ்த்தும் நோக்கிலும், காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கிலும், செல்வாக்கை இழந்த காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஆதரவை கூட்டவும், அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், சோனியா காந்தியின் மகனுமான ராகுல் காந்தி, பாரத் ஜோடோ என்ற பெயரில் இந்திய ஒற்றுமைப் பயணத்தை நடத்தி … Read more

ஐதராபாத்தில் உள்ள பீரங்கி படை மையத்தில் அக்னி வீரர்களுக்கான 31 வார பயிற்சி..!

ஐதராபாத்தில் உள்ள பீரங்கி படை மையத்தில் அக்னி வீரர்களுக்கான 31 வார பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் தேர்வு செய்யப்பட்ட 2,264 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஜனவரி 1-ம் தேதி தொடங்கிய இப்பயிற்சி இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 10 வாரங்கள் அடிப்படை ராணுவப் பயிற்சியும், 21 வாரங்கள் மேம்பட்ட ராணுவப் பயிற்சி, உடல் தகுதி, துப்பாக்கிச் சூடு, பல்வேறு பீரங்கி மற்றும் துப்பாக்கிகளை கையாளுதல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட … Read more

பொதுக்குழுவில் 94.5% ஆதரவு: இ.பி.எஸ். தரப்பு வாதம்

டெல்லி: ஜூலை 11 பொதுக்குழுவில்  2460 உறுப்பினர்கள் கலந்தகொண்டு இபிஎஸ்ஸை இடைக்கால பொதுச்செயலாளராக ஒருமனதாக அங்கீகரித்தனர், இது 94.5% ஆதரவு என உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வாதிட்டது. பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட உள்ளது என்பது ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியும்; இதை அவர் 43 மறுக்க முடியுமா?. ஜூன் 23-ம் தேதி கூட்டத்தில் கையெழுத்தாகிய பொதுக்குழு அறிவிப்பில் 3-7 வரையிலான தீர்மானங்கள் ஒற்றைத் தலைமை பற்றிய விவாதம் குறித்தவையாகும் எனவும் வாதிட்டார்.

சந்தா கோச்சார், தீபக் கோச்சார் ஜாமீனில் விடுவிப்பு

மும்பை: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோர் இன்று(செவ்வாய் கிழமை) ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தபோது அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வீடியோகான் குழுமத்துக்கு விதிகளை மீறி ரூ.3,250 கோடி கடன் வழங்கியதாக சந்தா கோச்சார் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து கடந்த மாதம் 23ம் தேதி சந்தா கோச்சாரும், தீபக் … Read more