காங். நிர்வாகிகள் மீது தாக்குதல் நடந்ததால் திரிபுராவில் 3 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்: 3 சிறப்பு பார்வையாளர்கள் அனுப்பிவைப்பு

அகர்தலா: திரிபுராவில் நடந்த பைக் பேரணியின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் நடந்த தாக்குதலை தொடர்ந்து, 3 போலீஸ் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது. திரிபுராவில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால் அகர்தலா அடுத்த மஜ்லிஷ்பூரில் காங்கிரஸ் சார்பில் நடந்த பைக் பேரணியின் போது, இரு தரப்பினரிடையே மோதல் நடந்தது. இந்த சம்பவத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் குமார் உட்பட 15 நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காயமடைந்தனர். இந்த மோதல் சம்பவம் தொடர்பாக மூன்று எப்.ஐ.ஆர் … Read more

'நான் ஜாக்குலினுடன் நெருக்கமாக பழகியது நோராவுக்கு பிடிக்கல'-சுகேஷ் சந்திரசேகர் வாக்குமூலம்

ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது நடிகை நோரா ஃபதேஹி எப்போதும் பொறாமை கொண்டிருந்ததாகவும் ஜாக்குலினுக்கு எதிராக நோரா ஃபதேஹி தன்னை மூளைச் சலவை செய்ததாகவும் தெரிவித்துள்ளார் சுகேஷ் சந்திரசேகர்.   அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முறைகேடாக பெற்றுத்தர இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்து கொண்டே தனியார் நிறுவனத்தின் உரிமையாளரின் மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் … Read more

இந்தியாவின் பிரதமராகும் திறன் ராகுல் காந்திக்கு உள்ளது; சஞ்சய் ராவத் கணிப்பு.!

பாரத் ஜோடோ யாத்திரையை வழிநடத்தும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராகும் திறன் கொண்டவர் என்றும், காங்கிரஸைத் தவிர்த்து எந்த மூன்றாம் அணியும் வெற்றி பெறாது என்றும் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை நுழைந்த உடன் கடந்த 19ம் தேதி சஞ்சய் ராவத் அவருடன் இணைந்தார். மழைக்கு மத்தியில் ஹட்லி மோர் மற்றும் சந்த்வால் இடையே காந்தியுடன் கிட்டத்தட்ட 13-கிமீ தூரம் நடந்த சஞ்சய் … Read more

குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் பங்கேற்பு

புதுடெல்லி: சுதந்திர இந்தியாவின் 74வது குடியரசு தின விழா வரும் 26ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தலைநகர் ெடல்லியில் புதியதாக பதவியேற்ற குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுடன் உரையாற்றுவார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி பங்கேற்கிறார். இந்தாண்டுக்கான ஜி-20 மாநாட்டின் தலைமையை இந்தியா ஏற்றுள்ளதால், சிறப்பு விருந்தினர் நாடாக எகிப்தை இந்தியா … Read more

பட்டியலின இளைஞரின் முகத்தில் எச்சில் உமிழ்ந்த காவலர்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்

பட்டியலின இளைஞரை அடித்து துன்புறுத்திய காவல்துறை அதிகாரி மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள கலம்போலி காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தினேஷ் பாட்டீல்.  இவர் மீது, காவல் நிலைய வளாகத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த விகாஸ் உஜ்கரே (28) என்ற இளைஞரைத் தாக்கியதற்காக, எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த … Read more

ராணுவ சீருடைக்கு அறிவுசார் சொத்துரிமை: போலியாக தயாரித்தால் சட்டம் பாயும்

புதுடெல்லி: கடந்த ஆண்டு ராணுவ தினத்தின்போது, மேம்படுத்தப்பட்ட புதிய ராணுவ சீருடையை இந்திய ராணுவ தளபதி அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், வடிவமைப்பு உள்ளிட்ட அம்சங்களுக்காக அச்சீருடைக்கு இந்திய ராணுவம் அறிவுசார் சொத்துரிமை பெற்றுள்ளது. வடிவமைப்புக்கான காப்புரிமை, இன்னும் 10 ஆண்டுகளுக்கு ராணுவத்திடமே இருக்கும். அதன்பிறகு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படக்கூடும். இதன் மூலம் ராணுவத்தின் அனுமதியின்றி அந்த சீருடையை உற்பத்தி ெசய்து வெளிச்சந்தையில் விற்பதை தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது. அதற்காக ராணுவம் அறிவுசார் சொத்துரிமை பெற்றுள்ளது. அதை … Read more

"நேதாஜியின் கொள்கைகளும் ஆர்எஸ்எஸ்-ன் கொள்கைகளும் நேரெதிரானவை" – அனிதா போஸ் பாஃப் 

கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த தினத்தை நாடு முழுவதும் கொண்டாட ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ள நிலையில், ஆர்எஸ்எஸ்-ன் இந்த முயற்சி நேதாஜியின் பாரம்பரியத்தை சுரண்டும் செயல் என்று அவரது மகள் அனிதா போஸ் பாஃப் விமர்சித்துள்ளார். ஜனவரி 23 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள். இந்த நாளை நாடு முழுவதும் கொண்டாட ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக ஜெர்மனியில் வசித்துவரும் அனிதா போஸ் பாஃப் இடம் செய்தி நிறுவனம் ஒன்று தொலைப்பேசி வாயிலாக பேட்டி எடுத்துள்ளது. … Read more

குஜராத் தேர்தல் தோல்வி எதிரொலி; 38 காங்கிரஸ் நிர்வாகிகள் நீக்கம்.!

மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு டிசம்பர் மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், பதிவான வாக்குகளின் எண்ணிக்கை கடந்த 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, பாஜக 156 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. குஜராத்தில் ஆட்சியமைக்க 92 தொகுதிகளில் பெரும்பான்மை பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், 156 தொகுதிகளில் வெற்றி பெற்று … Read more

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்று தொடரையும் கைப்பற்றியது. சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, இந்திய அணியினரின் அபார பந்து வீச்சால், 35வது ஓவரில், 108 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. எளிய இலக்குடன் விளையாடிய இந்தியா, 2 விக்கெட்டுகளை இழந்து, 21ஆவது ஓவரிலேயே வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை, 2க்கு பூஜ்யம் … Read more

வரலாறு காணாத பனிப்பொழிவு: மூணாறில் குவியும் சுற்றுலாப்பயணிகள்

மூணாறு: மூணாறில் வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவும் சூழலில், சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். தென்னகத்து காஷ்மீர் என்றழைக்கப்படும் கேரள மாநிலம், மூணாறில் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கும். இதில், டிசம்பர் இறுதி முதல் ஜன. 15 வரை மைனஸ் டிகிரி செல்சியஸ் ஆக மாறி பனிப்பொழிவு இருக்கும். கடந்தாண்டின் இறுதியில் இருந்தே மூணாறில் உறைபனி மைனஸ் டிகிரி செல்சியஸ் ஆக மாறியது. இந்த வரலாறு காணாத காலநிலை மாற்றம் சுற்றுலாப்பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக நேற்று … Read more