மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் ஜாமீனில் விடுவிப்பு

மும்பை: மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அனில் தேஷ்முக் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அனில் தேஷ்முக், மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஜாமீன் கோரி பாம்பே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தேஷ்முக்கின் மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம் அவருக்கு கடந்த 12-ம் தேதி நிபந்தனை ஜாமின் வழங்கியது. நீதிமன்றத்தின் அனுமதியின்றி மும்பையை விட்டு வெளியே செல்லக் … Read more

மோடியின் தாயார் விரைவில் குணமடைய வேண்டும்… ஸ்டாலின், ராகுல் விருப்பம்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் லெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தாயார் திருமதி.ஹீராபென் மோடி அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதையறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவர் விரைவில் நலம்பெற விழைகிறேன்” என்று ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அன்பு எல்லையற்றது: ராகுல் காந்தி வெளியிட்டுள்ள விருப்ப செய்தியில், ” தாய்க்கும் மகனுக்கும் இடையிலான அன்பு எல்லையற்றது மற்றும் விலைமதிப்பற்றது. மோடி அவர்களே, இந்த கடினமான நேரத்தில் எனது அன்பும் ஆதரவும் உங்களுடனே இருக்கிறது. … Read more

4வது தடுப்பூசியாக போட்டால் வம்பு; ‘பூஸ்டர்’ போட்டவர்களுக்கு‘நாசி’ டோஸ் வேண்டாம்: தடுப்பூசி பணிக்குழு தலைவர் பேட்டி

புதுடெல்லி: பூஸ்டர் தடுப்பூசி போட்டவர்கள் நாசி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டாம் என்று ஒன்றிய அரசின் தடுப்பூசி பணிக்குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு போன்ற இரண்டு தடுப்பூசிகளுடன் மேலும் பூஸ்டர் தடுப்பூசியும் மக்கள் போட்டுள்ளனர். இவற்றில் பூஸ்டர் தடுப்பூசியை 70 சதவீதம் பேர் இன்னும் போடவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தற்போது இந்தியாவில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதால், தடுப்பூசி போடுதல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, பாரத் … Read more

கோவிட் அலர்ட் | இந்தியாவுக்கு அடுத்த 40 நாட்கள் மிகவும் முக்கியமானவை: மத்திய சுகாதாரத் துறை

புதுடெல்லி: அடுத்து வரும் 40 நாட்கள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானவை என்றும், ஜனவரி மத்தியில் கரோனா தொற்று அதிகரிக்கலாம் என்றும் மத்திய சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவிலும் கரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும், கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மத்திய … Read more

நடிகை தற்கொலை வழக்கு; காதலனுக்கு காவல் நீட்டிப்பு.!

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் என்ற இடத்தில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் துனிஷா சர்மா என்ற நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ‘அலி பாபா: தஸ்தான்-இ-காபூல்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவரது சக நடிகரான ஷீசன் முகமது கான், துனிஷாவின் தாயின் புகாரின் அடிப்படையில் தற்கொலைக்குத் தூண்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இருவரும் காதலித்து வந்ததாகவும், 15 நாட்களுக்கு முன்பு பிரிந்ததாகவும், இது துனிஷாவை தற்கொலைக்குத் … Read more

Omicron BF.7: அடுத்த 40 நாட்கள் மிகுந்த கவனம் தேவை! எச்சரிக்கும் சுகாதார அமைச்சகம்!

புது தில்லி: இந்தியாவைப் பொறுத்தவரை, அடுத்த 40 நாட்கள் முக்கியமானதாக இருக்கும், ஏனெனில் இந்தியாவில் ஜனவரியில் கோவிட் -19 தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி PTI செய்தி நிறுவனம் புதன்கிழமை (டிசம்பர் 28, 2022) தெரிவித்துள்ளது. “முன்பு, கிழக்கு ஆசியாவைத் தாக்கிய 30-35 நாட்களுக்குப் பிறகு, கொரோனா வைரஸின் புதிய அலை இந்தியாவைத் தாக்கியது குறிப்பிடத்தக்கது” என்று ஒரு அதிகாரியை மேற்கோள் காட்டி பிடிஐ தெரிவித்துள்ளது. இருப்பினும் நோய்த்தொற்றின் … Read more

காவல்நிலையத்தின் மீது ராக்கெட் குண்டு வீச்சு.. வெளிநாட்டுத் தீவிரவாதிகளுடன் இணைந்து செயல்பட்ட 3 பேர் கைது..!

சண்டிகர் அருகே சரஹலி காவல்நிலையத்தின் மீது ராக்கெட் குண்டு வீசித்தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில்  3 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். பிலிப்பைன்சை சேர்ந்த யத்வீந்தர் சிங் என்பவர் கனடாவின் நிழல் உலக தாதாக்கள் மற்றும் தீவிரவாதிகளுடன் சேர்ந்து இயங்கி வந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. தாக்குதலுக்குத் தயாராக இருந்த ஒரு ராக்கெட் வெடிகுண்டையும் 3 துப்பாக்கிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.இதனால் தீவிரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. Source link

வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரம்: திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கொரோனா வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும்

திருமலை: திருப்பதிக்கு வரும் பக்தர்கள் ஒன்றிய, மாநில அரசுகளின் கொரோனா வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார். திருப்பதி-திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் வைகுண்ட ஏகாதசிக்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது, அவர் பேசியதாவது: வைகுண்ட ஏகாதசியன்று திருப்பதிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 9 இடங்களில் 92 கவுன்டர்கள் மூலம் வரும் ஜனவரி 1ம்தேதி முதல் சுமார் … Read more

மாநிலத்தில் அம்மை பாதிப்பு அதிகரிப்பு.. 20 குழந்தைகள் பலி..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ளது. அம்மாநிலம் முழுவதும் அம்மை தொற்றால் 1,162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், மும்பையில் மட்டும் அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 514 ஆக உள்ளது. இதுவரை அம்மை பாதிப்பால் 20 பேர் பலியாகியுள்ளனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக இருந்தது. அம்மை நோயால் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும், தும்மல் மற்றும் இருமல் மூலம் அம்மை பரவுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், … Read more

உம்மன் சாண்டிக்கு சிபிஐ நற்சான்று | முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்புக் கோர காங்கிரஸ் வலியுறுத்தல்

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மீதான பாலியல் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என சிபிஐ தெரிவித்துள்ளதை அடுத்து, முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்புக் கோர வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. 2012-ல் கேரள முதல்வராக இருந்த உம்மன் சாண்டி, மத்திய அமைச்சர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். … Read more