அவசரகால சுகாதார தேவையை எதிர்கொள்ள பயிற்சி – முதல் பயிற்சிப் பட்டறை தொடக்கம்

புதுடெல்லி: நாட்டின் அவசரகால சுகாதார தேவையை எதிர்கொள்வதற்கான முதல் பயிற்சிப் பட்டறையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று தொடங்கிவைத்தார். இயற்கைப் பேரிடரைப் போன்று சுகாதார பேரிடர் நேரிடுமானால் அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான பயிற்சிகளை வழங்கும் நோக்கில் நாட்டின் முதல் பயிற்சிப் பட்டறை டெல்லியில் இன்று தொடங்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சிப் பட்டறையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா தொடங்கிவைத்தார். மத்திய சுகாதாரத் துறையின் கூடுதல் செயலாளர், மத்திய உள்துறையின் … Read more

Breaking: டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; மக்கள் பதட்டம்..!

தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நில அதிர்வுகளை உணர்ந்து மக்கள் கட்டடங்களை விட்டு வெளியே வந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் சரியாக பிற்பகல் 2.25 மணி அளவுக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லி-என்சிஆர் பகுதி முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் இந்த நடுக்கம் 30 வினாடிகளுக்கு மேல் நீடித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு உட்பட தென்மாநிலங்களில் இந்தி மொழியை வளர்க்க ரூ5.78 கோடி மோசடி: மாஜி தலைவர் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு

பெங்களூரு: தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில், அந்தந்த மாநில மொழிகளே பிரதானமாக பேசப்படுகிறது. இந்த மாநிலங்களில் இந்தி மொழியை பயிற்றுவிக்க தக்ஷின் பாரத் இந்தி பிரசார சபா (டி.பி.எச்.பி.எஸ்) செயல்பட்டு வருகிறது. 1964ம் ஆண்டில் இயற்றப்பட்ட நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் இந்த அமைப்பை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக ஒன்றிய அரசு அங்கீகரித்து இருந்தது. மேலும் தென்மாநில மக்களிடையே இந்தி மொழியை கொண்டு செல்வதற்காக பல கோடி ரூபாய் நிதியும் அளித்து வருகிறது. … Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அரசியல் சாசனத்திற்கு எதிரானது: ஆம் ஆத்மி கட்சி

புதுடெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற மத்திய அரசின் திட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அட்டிஷி, ”இந்தத் திட்டம் பாஜகவின் சதி. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை, பொருட்களை விற்பது வாங்குவது போல் மாற்றுவதையும், அதை சட்டபூர்வமாக்குவதையும் நோக்கமாகக் கொண்டது இது. நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு மாற்றாக அதிபர் முறையை கொண்டு வர வேண்டும் எனும் … Read more

மோர்பி தொங்கு பாலம் கடந்தாண்டு அறுந்து விழுந்ததில் 134 பேர் உயிரிழந்த விவகாரம்… ஓரேவா குழும நிர்வாக இயக்குநரை கைது செய்ய உத்தரவு

குஜராத்தின் மோர்பி நகரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொங்கு பாலம் அறுந்து விழுந்தததில் 134 பேர் இறந்த நிலையில், அந்த பாலத்தை மறுசீரமைப்பு செய்து வந்த ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் பட்டேலுக்கு எதிராக மீண்டும் கைது வாரண்ட் பிறப்பித்து மோர்பி தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை கைது செய்ய கடந்த 70 நாட்களுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவர் முன்ஜாமீன் கோரி அதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், … Read more

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மலை போல் குவிந்துள்ள நாணயங்கள்: எண்ண முடியாமல் திணறும் ஊழியர்கள்.!

திருவனந்தபுரம்: சபரிமலையில் சமீபத்திய மண்டல, மகரவிளக்கு சீசனில் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்தனர். தினமும் சராசரியாக 65 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை பக்தர்களும், மகரவிளக்கு காலத்தில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் சபரிமலைக்கு வந்தனர். பக்தர்கள் வருகை அதிகரித்ததால் கோயில் வருமானமும் அதிகரித்தது. இதுவரை வருமானம் ₹330 கோடியை தாண்டி உள்ளது. சபரிமலை கோயில் வரலாற்றில் இது மிக அதிக வருமானம் ஆகும். ஆனால் இதுவரை நாணயங்கள் எண்ணி முடிக்கப்படவில்லை. சபரிமலையில் உள்ள அன்னதான மண்டபத்தில் … Read more

அந்தமான் நிகோபார் குட்டி குட்டி தீவுகளுக்கு இந்திய ராணுவ வீரர்களின் பெயர்கள்!

நேற்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அந்தமான் நிகோபாரின் 21 தீவுகளுக்கு, ‘பரம்வீர் சக்ரா’ விருது பெற்ற ராணுவ வீரர்களின் பெயர்களை சூட்டி அவர்களை கவுரவித்தார். சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 127 பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் , அந்தமான் நிக்கோபர் தீவில் பெயரிட படாதிருக்கும் தீவுகளை ராணுவத்தில் மிக உயரிய விருதாக கருதப்படும் பரம்வீர் சக்ரா விருது பெற்ற இந்திய வீரர்களின் பெயரை வைத்தார். மேலும் … Read more

மக்களே கவனம்.. மாணவர்கள் 19 பேருக்கு நோரா வைரஸ் பாதிப்பு..!

கேரள மாநிலம் கொச்சி காக்கநாட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர்கள் சிலருக்கு திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுகாதாரத்துறையினர் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். இதில் சில மாணவர்களின் பெற்றோருக்கு நோரா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இவர்கள் மூலம் மாணவர்களுக்கும் நோரா வைரஸ் பரவி இருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து, நோய் அறிகுறியுடன் காணப்பட்ட 62 மாணவர்களின் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறையினர் சேகரித்தனர். அவை பொது சுகாதார … Read more

12.5 லட்சம் மருந்தாளுநருக்கு தடுப்பூசி போடும் பயிற்சி

நாக்பூர்: இந்தியாவில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் சிகிச்சை பெற முடியாமல் பலர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, கிராமப்புறங்களில் இவர்களுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்திய மருந்து கழகம் (ஐபிஏ) மருந்தாளுநர்களுக்கு தடுப்பூசி போடும் பயிற்சி திட்டத்தை தொடங்க உள்ளது. வரும் மே மாதம் முதல் மருந்தாளுநர்களுக்கான தடுப்பூசி பயிற்சி திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் தடுப்பூசி போடுபவர்களின் பங்களிப்பை 12.5 லட்சமாக அதிகரிக்க ஐபிஏ இலக்கு நிர்ணயித்துள்ளது. … Read more

டெல்லி விமானத்தில் பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்ட காரணத்தினால் 2 பயணிகள் விமானத்தில் இருந்து வெளியேற்றம்.

டெல்லி: ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இருந்த 2 பயணிகளின் முறையற்ற நடத்தை காரணமாக இறக்கிவிடப்பட்டனர். டெல்லி விமானநிலையத்தில் இருந்து ஐதராபாத்துக்கு புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் எரிய ஒரு ஆண் பயணி விமானத்தின் பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது இதையடுத்து அந்த பயணிக்கும் உளியார்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது பெண் ஊழியர் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்ட பயணியையும் அவருடன் வந்திருந்த நபரையும் விமானத்தில் … Read more