ஆபாச வீடியோ விவகாரம் ராக்கி சாவந்த் மீது நடவடிக்கை எடுக்க தடை

மும்பை: ஆபாச வீடியோ விவகாரத்தில் நடிகை ராக்கி சாவந்த் மீது நடவடிக்கை எடுக்க மும்பை உயர்நீதிமன்றம் இன்று வரை தடை விதித்துள்ளது. பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்துக்கும்,சக நடிகை ஒருவருக்கும் இடையே மோதல் இருந்துவருகிறது. ஒருவர்மீது ஒருவர் போலீஸில் புகார் செய்திருக்கின்றனர். இருவரும் ஒருவர்மீது மற்றொருவர் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. தனது ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை ராக்கி சாவந்த் சோசியல் மீடியாவில் பகிர்ந்ததாக சக நடிகை மும்பை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதனடிப்படையில் … Read more

ஜம்முவில் திக்விஜய் சிங் பேச்சால் சர்ச்சை சர்ஜிக்கல் தாக்குதலுக்கு ஆதாரமில்லை: பாஜ கடும் கண்டனம்

ஜம்மு: ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியதற்கு ஒன்றிய பாஜ அரசு எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. வெறும் பொய் மூட்டையைக் கொண்டு ஆட்சி செய்கிறார்கள்’ என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் பேசியது சர்ச்சையாகி உள்ளது. ஜம்முவில் ராகுலின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ‘‘கடந்த 2019ம் ஆண்டு,ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு வீரர்களை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லும் சிஆர்பிஎப்பின் கோரிக்கையை … Read more

32 வார கருவை கலைக்க மறுத்த மருத்துவமனை.. நீதிமன்றத்தை நாடிய பெண்.. நீதிபதி சொன்ன கருத்து!

’ஊனமுற்ற கருவைக் கலைப்பதற்கான உரிமை, கர்ப்பிணிப் பெண்ணுக்கே உண்டு’ என மும்பை உயர்நீதிமறம் தெரிவித்துள்ளது. ’உடல் மற்றும் மனநல குறைபாடுகளுடன் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதால், தன்னுடைய கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும்’ என 32 வார கர்ப்பிணிப் பெண் ஒருவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதாவது, கருவில் கடுமையான பிரச்சினைகள் இருப்பதாகவும், உடல் மற்றும் மனநல குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கும் என்றும் சோனோகிராஃபி மூலம் அந்த பெண்ணிற்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்தப் பெண் தன்னுடைய … Read more

திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் தீ விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். தீ விபத்தில் இதுவரை பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு பேல்கள், இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மிக நீளமான டெல்லி-மும்பை விரைவு சாலை தயார்: விரைவில் திறந்து வைக்கிறார் பிரதமர்

புதுடெல்லி: இந்தியாவின் மிக நீளமான டெல்லி – மும்பை விரைவு சாலை பணிகள் நிறைவு பெற்று தயார் நிலையில் இருக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்து உலகில் 2-வது மிகப்பெரிய சாலை போக்குவரத்தை கொண்ட இந்தியாவில் சாலை உட்கட்டமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் நாள்தோறும் 37 கி.மீ. தொலைவுக்கு புதியசாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனை 60 கி.மீ. ஆக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. தற்போது நாடு முழுவதும் 24 விரைவு சாலைகள் … Read more

குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்; நீதி கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்: பலாத்காரத்திற்கு ஆளான பெண் கண்ணீர்

மொஹாலி: நீதி கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண் புகார் அளித்துள்ள நிலையில், குற்றவாளிகள் இருவரும் சுதந்திரமாக சுற்றித் திரிவாக தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் மொஹாலியை சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர் கும்ப்ரா பகுதியில் வாடகைக்கு வீடு தேடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த இருவர், வாடகை வீட்டைப் பார்த்து தருவதாக கூறி அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக மொஹாலி போலீசில் … Read more

அநாகரீகமாக நடந்து கொண்டதாக புகார்.. விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பயணிகள்!

டெல்லியில் புறப்படத் தயாராக இருந்த விமானம் ஒன்றில் பயணி ஒருவர் தகாத முறையில் நடந்துகொண்டதற்காக விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார். சமீபகாலமாக விமானப் பயணத்தின் போது ஏற்படும் பிரச்சினைகள் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. அந்த வகையில் விமானத்தில் வயதான் பெண் பயணி மீது மற்றொரு பயணி சிறுநீர் கழித்த விவகாரமும், பெங்களூரு பாஜக எம்.பி., தேஜஸ்வி சூர்யா எமர்ஜென்சி கதவைத் திறந்த விவகாரமும் சமீபத்தில் பேசுபொருளாகியது. அந்த வரிசையில் மற்றொரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது. டெல்லியில் இருந்து ஐதராபாத்துக்கு … Read more

வின்ஸ்டன் சர்ச்சில் குறித்த உண்மையைச் சொல்ல பிபிசி-க்கு தைரியம் உள்ளதா? – திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் கேள்வி

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக ஆவணப்படம் வெளியிட்ட பிபிசி-க்கு எதிராக பிரபல திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் ட்விட்டரில் நேற்று கூறியதாவது. கடந்த 1947-ம் ஆண்டு இந்திய சுதந்திரத்தின் போது, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பேசும்போது, இந்திய தலைவர்கள் அனைவரும் திறன் குறைந்தவர்கள், பலவீனமானவர்கள் என்று பேசினார். அவர் மீதும் பலதரப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. பிரிட்டனின் நேசத்துக்குரிய தலைவர்களில் ஒருவரான வின்ஸ்டன் சர்ச்சிலைப் பற்றிய உண்மைகளை சொல்ல பிபிசிக்கு எப்போதாவது தைரியம் இருந்ததா என்று … Read more

உச்சநீதிமன்றத்தை மீண்டும் வம்புக்கு இழுத்த ஒன்றிய சட்ட அமைச்சர்.!

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது. கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் அளிக்கும் பரிந்துரையின் பேரில், ஒன்றிய அரசு புதிய நீதிபதிகளை நியமிக்கிறது. அந்தவகையில் நாட்டில் உள்ள பல்வேறு நீதுமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைத்து, கொலிஜியம் கேட்டுக் கொண்டது. ஆனால் ஒன்றிய அரசு அதற்கு எந்த முடிவையும் சொல்லவில்லை. இதனால் பல நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படாமல் உள்ளது. இதையடுத்து நீதி அமைப்பிற்கும், ஒன்றிய அரசிற்கும் இடையேயான மோதல் போக்கு வெளிச்சத்திற்கு வந்தது. … Read more

எந்திரமாக இருந்தாலும் தந்திரம் இல்லைன்னா தலை கீழத்தான் தொங்கனும்.. 70 அடி தென்னை மரத்தில் சிக்கிய சேட்டன்..!

மரம் ஏறும் எந்திரத்தின் உதவியுடன் 70 அடி உயரமுள்ள தென்னை மரத்தின் உச்சிக்கு சென்றவர், நிலை தடுமாறி விழுந்து தலைகீழாக தொங்கிய நிலையில் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டார்…. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி அடுத்த வெள்ளத்துவல் பகுதியில் உள்ள சுமார் 70 அடி உயர தென்னை மரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயன் என்பவர் மரம் ஏறும் எந்திரத்தை பயன்படுத்தி தேங்காய் பறிப்பதற்காக மரத்தில் ஏறினார் அவர் … Read more