இந்தியாவின் மிக நீளமான டெல்லி-மும்பை விரைவு சாலை தயார்: விரைவில் திறந்து வைக்கிறார் பிரதமர்

புதுடெல்லி: இந்தியாவின் மிக நீளமான டெல்லி – மும்பை விரைவு சாலை பணிகள் நிறைவு பெற்று தயார் நிலையில் இருக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்து உலகில் 2-வது மிகப்பெரிய சாலை போக்குவரத்தை கொண்ட இந்தியாவில் சாலை உட்கட்டமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் நாள்தோறும் 37 கி.மீ. தொலைவுக்கு புதியசாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனை 60 கி.மீ. ஆக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. தற்போது நாடு முழுவதும் 24 விரைவு சாலைகள் … Read more

குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்; நீதி கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்: பலாத்காரத்திற்கு ஆளான பெண் கண்ணீர்

மொஹாலி: நீதி கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண் புகார் அளித்துள்ள நிலையில், குற்றவாளிகள் இருவரும் சுதந்திரமாக சுற்றித் திரிவாக தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் மொஹாலியை சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர் கும்ப்ரா பகுதியில் வாடகைக்கு வீடு தேடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த இருவர், வாடகை வீட்டைப் பார்த்து தருவதாக கூறி அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக மொஹாலி போலீசில் … Read more

அநாகரீகமாக நடந்து கொண்டதாக புகார்.. விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பயணிகள்!

டெல்லியில் புறப்படத் தயாராக இருந்த விமானம் ஒன்றில் பயணி ஒருவர் தகாத முறையில் நடந்துகொண்டதற்காக விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார். சமீபகாலமாக விமானப் பயணத்தின் போது ஏற்படும் பிரச்சினைகள் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. அந்த வகையில் விமானத்தில் வயதான் பெண் பயணி மீது மற்றொரு பயணி சிறுநீர் கழித்த விவகாரமும், பெங்களூரு பாஜக எம்.பி., தேஜஸ்வி சூர்யா எமர்ஜென்சி கதவைத் திறந்த விவகாரமும் சமீபத்தில் பேசுபொருளாகியது. அந்த வரிசையில் மற்றொரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது. டெல்லியில் இருந்து ஐதராபாத்துக்கு … Read more

வின்ஸ்டன் சர்ச்சில் குறித்த உண்மையைச் சொல்ல பிபிசி-க்கு தைரியம் உள்ளதா? – திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் கேள்வி

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக ஆவணப்படம் வெளியிட்ட பிபிசி-க்கு எதிராக பிரபல திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் ட்விட்டரில் நேற்று கூறியதாவது. கடந்த 1947-ம் ஆண்டு இந்திய சுதந்திரத்தின் போது, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பேசும்போது, இந்திய தலைவர்கள் அனைவரும் திறன் குறைந்தவர்கள், பலவீனமானவர்கள் என்று பேசினார். அவர் மீதும் பலதரப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. பிரிட்டனின் நேசத்துக்குரிய தலைவர்களில் ஒருவரான வின்ஸ்டன் சர்ச்சிலைப் பற்றிய உண்மைகளை சொல்ல பிபிசிக்கு எப்போதாவது தைரியம் இருந்ததா என்று … Read more

உச்சநீதிமன்றத்தை மீண்டும் வம்புக்கு இழுத்த ஒன்றிய சட்ட அமைச்சர்.!

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது. கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் அளிக்கும் பரிந்துரையின் பேரில், ஒன்றிய அரசு புதிய நீதிபதிகளை நியமிக்கிறது. அந்தவகையில் நாட்டில் உள்ள பல்வேறு நீதுமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைத்து, கொலிஜியம் கேட்டுக் கொண்டது. ஆனால் ஒன்றிய அரசு அதற்கு எந்த முடிவையும் சொல்லவில்லை. இதனால் பல நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படாமல் உள்ளது. இதையடுத்து நீதி அமைப்பிற்கும், ஒன்றிய அரசிற்கும் இடையேயான மோதல் போக்கு வெளிச்சத்திற்கு வந்தது. … Read more

எந்திரமாக இருந்தாலும் தந்திரம் இல்லைன்னா தலை கீழத்தான் தொங்கனும்.. 70 அடி தென்னை மரத்தில் சிக்கிய சேட்டன்..!

மரம் ஏறும் எந்திரத்தின் உதவியுடன் 70 அடி உயரமுள்ள தென்னை மரத்தின் உச்சிக்கு சென்றவர், நிலை தடுமாறி விழுந்து தலைகீழாக தொங்கிய நிலையில் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டார்…. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி அடுத்த வெள்ளத்துவல் பகுதியில் உள்ள சுமார் 70 அடி உயர தென்னை மரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயன் என்பவர் மரம் ஏறும் எந்திரத்தை பயன்படுத்தி தேங்காய் பறிப்பதற்காக மரத்தில் ஏறினார் அவர் … Read more

காங்கிரஸ் கட்சி தனது முழு பலத்தையும் பயன்படுத்தி, ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும்: ராகுல் காந்தி பேச்சு..!

ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சி தனது முழு பலத்தையும் பயன்படுத்தி, ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும் என ராகுல் காந்தி எம்.பி.தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணம் காஷ்மீரில் நிறைவடைய உள்ளது. தமிழ்நாட்டில் தொடங்கிய பயணம் கேரளா, கர்நாடாகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து தற்போது காஷ்மீரில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை காஷ்மீரின் … Read more

நெடுஞ்சாலையின் நடுவில் காரை நிறுத்தி இன்ஸ்டா ரீல் – இளம்பெண்ணுக்கு ரூ.17,000 அபராதம்!

இன்ஸ்டாகிராம் சமூகவலைதளப் பக்கத்தில் பிரபலமாக இருந்துவரும் இளம்பெண் ஒருவருக்கு, சாலை விதிகளை மீறியதாக ரூ. 17,000 அபராதம் விதித்துள்ளது உத்தரப்பிரதேச மாநில காவல்துறை. ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று சமூகவலைதளங்கள் பெருகியுள்ள இந்தக் காலத்தில், அதில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் பிரபலங்களாக இருந்தாலும், இல்லையென்றாலும் ரீல்ஸ் செய்து, அதாவது குறுகிய வீடியோக்களை செய்து வெளியிடுவது வழக்கமான ஒன்றாகியுள்ளது. சமூகவலைதளங்களில் அதிகமான ஃபாலோயர்ஸ்களைப் பெற (பின்தொடர்பவர்களைப் பெற), பலர் இன்ஸ்டாகிராம் ரீல்களைப் பதிவுசெய்து வீடியோ வெளியிடுவதைக் காணலாம். ஆனால் இந்தச் … Read more

கடற்படையில் நீர்மூழ்கி கப்பல் ‘வகிர்’ சேர்ப்பு – சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

மும்பை: இந்திய கடற்படைக்கு வலிமை சேர்க்கும் விதமாக, கல்வாரி வகை நீர்மூழ்கியின் ஐந்தாவது கப்பலான ஐஎன்எஸ் ‘வகிர்’ திங்கள்கிழமை கடற்படையில் சேர்க்கப்பட்டது. ஐஎன்எஸ் ‘வகிர்’ பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப பரிமாற்றங்களுடன், இந்தியாவிலுள்ள மஸகான் டோக் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் உருவாக்கப்பட்டது. இன்று நடைபெற்ற விழாவில், கடற்படை தலைவர் ஆர்.ஹரிகுமார் முன்னிலையில் கடற்படையில் வகிர் இணைக்கப்பட்டது. இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள தகவலில், ‘இந்த நீர்மூழ்கி கப்பல், இந்தியாவின் கடல்சார் நலன்களை மேம்படுத்துவது, எதிரிகளைத் தடுப்பது, புலனாய்வு செய்வது, … Read more

தமிழ்நாடு சட்டப்பேரவையின் தாக்கம் கேரளாவில் எதிரொலி: கேரள மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாக வாசித்தார்..!

திருவனந்தபுரம்: கேரளாவில் பினராய் அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த ஆளுநர் ஆரிப் முகமதுகான் சட்டப்பேரவையில் அரசு தயாரித்து கொடுத்த உரையை அப்படியே வாசித்தார். மாநில அரசின் அதிகாரங்களில் தலையீடும் ஒன்றிய அரசையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். கேரளா ஆளுநராக பதவியேற்ற நாளில் இருந்தே பினராய் விஜயன் தலைமையிலான அரசுடன் ஆரிப் முகமதுகான் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். குறிப்பாக பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமித்தல் கேரள அரசு மற்றும் ஆளுநர் இடையே வெளிப்படையான மோதல் வெடித்தது. … Read more