சிறுநீர் கழிப்பு விவகாரம்: 2-வது சம்பவத்தை மறைத்த ஏர் இந்தியாவுக்கு அபராதம்

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் கடந்த டிசம்பர் 6-ம் தேதி பயணம் செய்த பெண் ஒருவரின் இருக்கையில் இருந்த போர்வை மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார். இது, ஏர் இந்தியா விமானத்தில் நடைபெற்ற 2-வது சம்பவமாகும். முன்னதாக, நவம்பர் 26-ம் தேதி நியூயார்க்-டெல்லி விமானத்தில் பெண் பயணியின் மீது சக ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் பொது வெளியில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது.இதையடுத்து, ஏர் இந்தியாவுக்குஅபராதம் விதிக்கப்பட்டதுடன், விமானியின் உரிமமும் தற்காலிகமாக … Read more

சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சேலைகள், செருப்புகளை ஏலம் விட சிறப்பு வக்கீல் நியமனம்: பெங்களூரு கோர்ட் உத்தரவு

பெங்களூரு: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடக கருவூலத்தில் வைத்துள்ள சேலைகள், செருப்புகள் உள்ளிட்ட பொருட்களை ஏலம் விட சிறப்பு அரசு வக்கீல் நியமனம் செய்ய அரசுக்கு பெங்களூரு முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் குறிப்பாக கடந்த 17 வருடங்களாக கர்நாடக கருவூலத்தில் உள்ள சேலைகள் … Read more

அரசு வேலை போய்விடும் என்ற பயத்தால் 5 மாத குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற தம்பதி…!!

ராஜ்ஸ்தான் மாநிலம் பிகானேரின் கோலயத் தாலுகாவின் தியாத்ரா கிராமத்தில் வசித்து வருபவர் ஜவர்லால் மேக்வால் (35). இவர் அரசு துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீதா தேவி (33). இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் அவரது மனைவி கர்ப்படைந்தார். சமீபத்தில் அவர்களுக்கு 3-வது குழந்தை பிறந்தது. மாநில அரசின் இரண்டு குழந்தைகள் திட்டத்தால் நிரந்தர வேலை குறித்த அச்சம் அவருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், அவரும் அவரது மனைவியும் மூன்றாவது … Read more

தலைநகரில் ஏர் பலூன், டிரோன்கள் பறக்க தடை..!!

குடியரசு தினத்தையொட்டி, வழக்கம்போல் வரும் 26-ந் தேதி டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்புடன் கோலாகல கொண்டாட்டம் நடைபெற உள்ளது. அதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா பிறப்பித்துள்ள உத்தரவில்:- குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க சமூக விரோத சக்திகளும், பயங்கரவாதிகளும், இந்தியாவுக்கு எதிரானவர்களும் டிரோன்கள், பாராகிளைடர்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள் ஆகியவற்றை பறக்கவிட்டு பொதுமக்களுக்கும், தலைவர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடும். … Read more

துல்லிய தாக்குதலுக்கு ஆதாரம் தேவையில்லை – திக்விஜய் சிங் புகாருக்கு ராகுல் விளக்கம்

ஜம்மு: பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீதான துல்லிய தாக்குதலுக்கு ராணுவம் ஆதாரம் தரத் தேவையில்லை என திக்விஜய் சிங் புகாருக்கு ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். ஜம்முவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் பேசும்போது, “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியதாகவும் இதில் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாகவும் கூறியது. ஆனால் அதற்கு ஆதாரம் எதுவும் தரவில்லை. மத்திய அரசு பொய்களை கூறி வருகிறது” என்று குற்றம் … Read more

தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் 12 கடல் மைல் தாண்டி சுருக்குமடி வலையை மீனவர்கள் பயன்படுத்த அனுமதி: உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

புதுடெல்லி: ‘சுருக்கு மடி வலையை 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் மீனவர்கள் பயன்படுத்தலாம்’ என்று இடைக்கால அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், ‘இந்த விவகாரத்தில் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும்’ என உத்தரவிட்டுள்ளது. கடலின் மீன் உற்பத்தி வளத்தை அதன் குஞ்சு பருவத்திலேயே முழுமையாக அழிக்கும் சுருக்கு வலை, மடிப்பு வலை, இரட்டை மடிப்பு வலைகளை மீனவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தடை … Read more

திடீரென மளமளவென சரிந்த அடுக்குமாடி கட்டடம்; தொடரும் உயிரிழப்புகள்! என்ன நடந்தது லக்னோவில்?

லக்னோவில் நேற்று நிலநடுக்கம் பதிவான நிலையில், அது ஏற்பட்டு அடுத்த சில மணி நேரத்தில் அங்குள்ள ஒரு அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இதில் சுமார் 11 பேர் தற்போதுவரை மீட்கப்பட்டுள்ளட்டுள்ளனர். மூவர் உயிரிழந்துள்ளனர் என லக்னோ காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று (ஜன. 24) நேபாளில் 5.8 ரிக்டர் அளவில் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், டெல்லியிலும் அதை சுற்றியுள்ள இடங்களிலும் அது உணரப்பட்டது. இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம், “மதியம் 2.28 மணி அளவில் நேபாளில் 5.8 … Read more

பிரதமர் மோடியின் ‘தேர்வும் தெளிவும்’ நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆர்வம்

சென்னை: தேர்வு குறித்து மாணவர்களுக்கு பிரதமர் மோடி ஆலோசனை வழங்கும் `தேர்வும் தெளிவும்’ நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதுதொடர்பாக ‘தேர்வும் தெளிவும்’ நிகழ்ச்சியின் மாநில பொறுப்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில் அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும், உலகின்மிகப்பெரிய தேர்வு திருவிழாவான ‘தேர்வும் தெளிவும் – பரீட்சையை பற்றி விவாதிப்போம்’ நிகழ்ச்சி வரும் 27-ம் தேதி நடக்க உள்ளது. அன்று காலை … Read more

வாலிபால் அணியை வாங்கிய விஜய் தேவரகொண்டா

ஐதராபாத்: வாலிபால் அணியை வாங்கியிருக்கிறார் விஜய் தேவரகொண்டா. அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், பெல்லி சூப்புலு, டாக்ஸிவாலா, டியர் காம்ரேட், லைகர், நோட்டா உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு இளம் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்நிலையில் தற்போதைக்கு தனது பார்வையை விளையாட்டு பக்கம் அவர் திருப்பியுள்ளார். பிரைம் வாலிபால் லீக் என்ற அமைப்பு வாலிபால் ஆட்டங்களை மேற்கொள்ள உள்ளது. இதில் ஐதராபாத் அணியை அபிஷேக் ரெட்டி கன்கலா என்பவருடன் சேர்ந்து விஜய் தேவரகொண்டா … Read more

மக்களே உஷார்..!! கேரளாவில் பரவும் கொடிய வைரஸ்… 19 மாணவர்களுக்கு பாதிப்பு..!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காக்கநாட்டில் படித்து வரும் மாணவர்கள் சிலருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. மாணவர்களின் பெற்றோர்கள் சிலருக்கும் நோரோ வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. பள்ளியில் நோரோ வைரஸ் பாதிப்பு அறிகுறி காணப்பட்ட 62 மாணவர்களின் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறையினர் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர். இதில் 1 மற்றும் 2-ம் வகுப்பு பயிலும் 2 மாணவர்களுக்கு நோய் தொற்று … Read more