நாட்டில் அமைதியை பேண மாநில காவல்துறையும், மத்திய அமைப்புகளும் ஒத்துழைப்பை அதிகரிக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

நாட்டில் அமைதியை பேண மாநில காவல்துறை மற்றும் மத்திய விசாரணை அமைப்புகள் இடையே கூடுதல் ஒத்துழைப்பு தேவை என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற  டிஜிபிக்கள் மாநாட்டில் உரையாற்றிய அவர், மாநில காவல்துறையும், மத்திய அமைப்புகளும் தங்களது அனுபவங்களையும், தொழில்நுட்ப திறன்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார். நடந்து ரோந்து செல்வது போன்ற பாரம்பரிய கண்காணிப்பை காவல்துறையினர் வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர், மாறி வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு … Read more

நீதிபதிகள் நியமனம்: உச்ச நீதிமன்றம் மீது ஓய்வு பெற்ற நீதிபதி விமர்சனம்: ஆடியோவை வெளியிட்டார் ஒன்றிய அமைச்சர்

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தால் சட்டங்களை உருவாக்க முடியாது என்று ஓய்வு பெற்ற  நீதிபதி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இது சம்மந்தமான ஆடியோவை ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ளார். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமிக்கும் விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் இடையே கடும் இழுபறி நீடித்து வருகிறது. நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியத்தின் நடைமுறைகள் வெளிப்படையாக இல்லை. எனவே, கொலீஜியத்தில் ஒன்றிய அரசு பிரதிநிதி இடம் பெற வேண்டும் என உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதி உள்ளதாக … Read more

கேரளாவை அச்சுறுத்திய பிடி-7 யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது

பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் தோணி பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த பிடி-7  என்கிற காட்டுயானையை வனத்துறையினர் நேற்று மயக்கஊசி செலுத்திப்பிடித்து  கூண்டிற்குள் அடைத்தனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில்  தோணி, அகத்தேத்தரை, முண்டூர், மலம்புழா மற்றும் கஞ்சிக்கோடு ஆகிய  இடங்களிலுள்ள மலையடிவார பகுதியில்  பிடி-7 என்ற ஒற்றை யானை, ஊருக்குள்  புகுந்து தோட்ட பயிர்களை துவம்சம் செய்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற  முடியாத நிலையில் கடந்த சில மாதங்களாகவே அந்த யானை அச்சுறுத்தி வந்தது.  யானையை … Read more

இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மிக பயணம் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து; 60 பேர் படுகாயம்!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோர் நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். நேபாளத்தின் திரிவேனி பகுதியில் உள்ள மத வழிபாட்டு தலத்திற்கு சென்றுவிட்டு நேற்று மாலை எல்லை வழியாக இந்தியா திரும்பினர். இந்திய-நேபாள எல்லையில் நேபாளத்தின் துஹிபெரி என்ற பகுதியில் பேருந்து வந்தபோது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 10 குழந்தைகள் உள்பட 60 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நேபாள … Read more

பத்து ரூபாய் பணக் கட்டால் நின்று போன திருமணம்..!!

உத்தர பிரதேச மாநிலம் பரூக்காபாத் மாவட்டத்தில் முகமதாபாத் கொத்வாலி பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற முடிவானது. இதில் துர்காப்பூர் கிராமத்தில் வசிக்கும் மணமகளுக்கும், பபீனா சாரா கிராமத்தில் வசிக்கும் மணமகனுக்கும் இடையே 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் பேசி, நிச்சயிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் மதிய உணவு முடிந்து, இரு வீட்டாரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். இதன்பின்பு, மாலையில் திருமண ஊர்வலம் நடந்தது. அதனையடுத்து, நள்ளிரவில் திருமண சடங்குகளும் நடந்தன. அப்போது, மணமகளின் சகோதரருக்கு திடீரென்று ஒரு … Read more

பொதுத் தேர்தலுக்கு முந்தைய கடைசி பட்ஜெட்: பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம்

புதுடெல்லி: பொதுத் தேர்தலுக்கு முந்தைய கடைசி பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் 29-ம் தேதி நடைபெறுகிறது. வரும் 2024-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பிப். 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக சமர்ப்பிக்கும் கடைசி முழு நீள பட்ஜெட் இதுவாகும். இதையடுத்து பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய … Read more

கேரளாவில் ரூ.25 கோடி பம்பர் பரிசு பெற்றவர் லாட்டரி கடையை தொடங்கினார்

திருவனந்தபுரம்,: கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.25 கோடி முதல் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி திருவனந்தபுரத்தில் லாட்டரி விற்பனைக் கடையை தொடங்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலில் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான அனூப் என்பவருக்கு முதல் பரிசான ரூ.25 கோடி கிடைத்தது. பரிசு விழுந்த சிறிது நேரத்திலேயே இவரது புகைப்படமும், பேட்டியும் பத்திரிகைகளிலும் டிவிக்களிலும் வெளியானது. இதன் பிறகு தான் … Read more

74-வது குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் படாக் அல்-சிசி சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

புதுடெல்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை. இந்தியாவின் 74-வது குடியரசு தின விழாவில் சிறப்பு தலைமை விருந்தினராக பங்கேற்க எகிப்து அதிபர் படாக் அல்-சிசிக்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட அல்-சிசி குடியரசு தின விழாவில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார். எகிப்து அரபுக் குடியரசின் தலைவர் ஒருவர் இந்திய குடியரசுதின விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். எகிப்து அதிபர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவிருப்பதையடுத்து அந்நாட்டு ராணுவத்தை … Read more

தெலங்கானா முதல்வர் அலுவலக செயலாளராக உள்ள பெண் ஐஏஎஸ் படுக்கை அறைக்குள் நள்ளிரவில் புகுந்த தாசில்தார்: பாதுகாப்பு போலீசாரிடம் சிக்கினார்

திருமலை: தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் அலுவலக செயலாளராக உள்ள பெண் ஐஏஎஸ் அதிகாரி படுக்கை அறைக்கு நள்ளிரவில் புகுந்த  துணை தாசில்தார் மற்றும் அவரது நண்பரை பாதுகாப்பு போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள கேட்டம் கம்யூனிட்டில் மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குடும்பத்தினருடன்  வசிக்கின்றனர். இதில், வில்லா எண் 11ல் மூத்த பெண் ஐஏஎஸ் அதிகாரியும், முதல்வர் சந்திரசேகரராவின் அலுவலக செயலராகவும் உள்ள  … Read more

ஜம்முவில் பனிச்சரிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் நேற்று பனிச்சரிவு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் பலியாகவில்லை. பந்திபோரா மாவட்டத்தின் துலைல் என்ற பகுதியில் உள்ள ஹுசங்கம் கிராமத்தில் நேற்று மாலை திடீரென்று பனிச்சரிவு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் பலியாகவில்லை. பனிச்சரிவு ஏற்பட்ட இடத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, அடுத்த 24 மணி நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் உள்ள 8 மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படும், இந்த பகுதிகளில் … Read more