ஷாருக்கான் யார் என கேட்ட அசாம் முதல்வர் – தொலைபேசியில் அழைத்துப் பேசிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்

குவஹாத்தி: ஷாருக்கான் யார் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கேட்ட நிலையில், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஷாருக்கான் பேசியுள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் ஷாருக்கானின் பதான் படம் வரும் 25 ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் இடம்பெற்ற பேஷாராம் பாடலில் காவி பிகினி உடை அணிந்து தீபிகா படுகோனே ஆடி இருப்பதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. குவஹாட்டியில் இந்த படம் திரையிட உள்ள … Read more

வடகிழக்கில் கிறிஸ்துவ வாக்குகள்; மாறிய இமேஜ்… தேர்தலில் பாஜகவின் ராஜதந்திரம்!

நடப்பாண்டில் முதல் சட்டமன்ற தேர்தல் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறுகிறது. திரிபுராவில் பிப்ரவரி 16, நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பிப்ரவரி 27 ஆகிய தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வடகிழக்கு மாநிலங்களை பொறுத்தவரை கிறிஸ்துவ வாக்குகள் தான் அதிக அளவில் காணப்படுகிறது. இதனை இந்துத்துவா இமேஜ் கொண்ட பாஜக எப்படி அறுவடை செய்யும் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது. வடகிழக்கு அரசியல் இந்தி பேசும் மாநிலங்களில் … Read more

பணம் கேட்டு பலரும் தொல்லை அடிச்சும் கேட்பாக… பெயரை மட்டும் சொல்லாதீக…: கேரளா லாட்டரியில் ரூ.16 கோடி, ரூ.10 கோடி பரிசு பெற்றவர்கள் கெஞ்சல்

திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு லாட்டரி  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசுக்கு பல கோடி வருமானம்  கிடைத்து வருகிறது. கடந்த வருடம் ஓணத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பம்பர்  லாட்டரியில் ரூ.25 கோடி முதல் பரிசாக அறிவிக்கப்பட்டது. இந்த லாட்டரியில் முதல் பரிசான ரூ.25 கோடி திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ  டிரைவரான அனூப்  என்பவருக்கு  கிடைத்தது. 25 கோடி கிடைத்த அவரது பேட்டி  மற்றும் புகைப்படங்கள் அனைத்து டிவிக்களிலும், பத்திரிகைகளிலும் வெளியானது.  உறவினர்கள் உள்பட ஏராளமானோர் அவரிடம் … Read more

ஜம்முவின் ஹிராநகரில் இருந்து மீண்டும் தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை

கத்துவா(ஜம்மு காஷ்மீர்): ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள ஹிராநகர் பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கியது. காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை அதன் இறுதி கட்டமான காஷ்மீர் பகுதியில் நடந்து வருகிறது. முன்னதாக யாத்திரை கத்துவாவின் லக்னாபூர் பகுதியில் வியாழக்கிழமை மாலை நுழைந்தது. இதற்கிடையில் ஜம்மு அருகிலுள்ள நர்வால் பகுதியில் அடுத்தடுத்து 2 இடங்களில் சனிக்கிழமை … Read more

பெங்களூருவில் ஜி20 முதல் சுற்றுச்சூழல், காலநிலை கூட்டம்!

ஜி20-ன் முதலாவது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழு கூட்டம் வருகிற பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை பெங்களூருவில் நடைபெறவுள்ளது. ஜி20 தலைமைத்துவப் பொறுப்பை வருகிற நவம்பர் 30ஆம் தேதி வரை ஓராண்டிற்கு இந்தியா ஏற்றிருக்கும். இந்த மன்றம் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகள் மற்றும் இந்தியாவால் அழைக்கப்பட்ட சர்வதேச அமைப்புகளை ஒன்றிணைக்கும். ஷெர்பா (பிரதிநிதி) கூட்டம் மூலம், 13 பணிக்குழுக்கள் மற்றும் 2 முன்முயற்சிகள் கட்டமைப்பு, இந்தியாவின் தலைமையின் … Read more

வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் மல்யுத்த கூட்டமைப்பின் துணை செயலர் சஸ்பெண்ட்: ஒன்றிய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை மறுத்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பு கடிதம் எழுதிய நிலையில்,  கூட்டமைப்பின் துணை செயலாளரை சஸ்பெண்ட் செய்து ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், கூட்டமைப்பினர் சர்வாதிகாரத்துடன் நடந்து கொள்வதாகவும், நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை … Read more

மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து ஜன.26 இல் அறிமுகம்

மூக்குவழியாக செலுத்தும் இந்தியாவின் முதலாவது கொரோனா தடுப்பு மருந்து ‘இன்கோவாக்’, ஜனவரி 26-இல் அதிகாரபூா்வமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் இந்தியாவில் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடுத்த கட்டமாக நாசி வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது. இதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பும் ஒப்புதல் வழங்கியது. இந்த நாசி வழி கொரோனா … Read more

பொருளை விளம்பரப்படுத்தினால் காரணம் சொல்ல வேண்டும் – சமூக ஊடக பிரபலங்களுக்கு கட்டுப்பாடு

புதுடெல்லி: சமூக ஊடகங்கள் வழியாக பொருட்களை புரமோட் செய்வது அதிகரித்து வரும் நிலையில், மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, பிரபலங்கள், சமூக ஊடகங்களில் செல்வாக்குடன் இருப்பவர்கள் ஒரு நிறுவனத்தின் தயாரிப்பை புரமோட் செய்தால், அதற்கு கைமாறாக, பரிசு பொருட்கள், நிறுவனத்தில் பங்கு, இலவச பயணங்கள் என தாங்கள் பெறும் சலுகைகளை விளம்பர வீடியோவில் குறிப்பிட வேண்டும். தவறும்பட்சத்தில் ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று … Read more

Dhirendra Shastri: சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாகேஷ்வர் தாமின் திரேந்திர சாஸ்திரி யார்?

சமீபத்தில், ஹிந்து மதக் கதைகளின் வசனகர்த்தாவான ஆச்சார்யா திரேந்திர சாஸ்திரி வைரலாகி வருகிறார். இந்த நேரத்தில் அவரைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சமீப காலமாக சமூக ஊடகங்கத்தில் நாக்பூரில் சாஸ்திரி சம்பந்தப்பட்ட செய்திகள் பரபரப்பாக பகரப்பட்டும், பேசப்பட்டும் வருகின்றன. மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கர்ஹா கிராமத்தில் உள்ள பாகேஷ்வர் தாமின் தலைமைப் பூசாரி சாஸ்திரி, ஜனவரி 5 முதல் ஜனவரி 13 வரை பகவத் கதை கூற நாக்பூரில் இருந்து வந்தார், ஆனால் இரண்டு … Read more

சமூக வலைத்தளங்களில் வைரல் திருப்பதி கோயிலை டிரோனில் படம் பிடித்தவர்கள் மீது வழக்கு

திருமலை: திருப்பதி கோயிலை டிரோன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு உள்ளது. கோயில் மீது விமானங்கள் கூட பறக்க தடை உள்ளது. இந்த நிலையில் ஏழுமலையான் கோயில் டிரோன் கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐகான் என்ற பெயரில்  … Read more