அரியவகை நோய் சிகிச்சைக்கு ரூ.50 லட்சம் அறிவிப்பால் யாருக்கும் பயன் இல்லை: ஒன்றிய அமைச்சருக்கு வருண் காந்தி கடிதம்

புதுடெல்லி: அரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ரூ.50 லட்சம் உதவித்தொகை திட்டத்தில் யாரும் பயனடையவில்லை என்று பாஜ எம்பி வருண் காந்தி கூறியுள்ளார். ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு வருண் காந்தி எம்பி கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘ ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை  அனைத்து வகையான அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சைக்கு ரூ.50 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை எந்த ஒரு நோயாளியும் … Read more

காகேசியன் ஷெப்பர்டு இன நாயை ரூ.20 கோடிக்கு வாங்கிய தொழிலதிபர்

பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவராக உள்ளார். கட்டுமானம், சுரங்கம் உள்ளிட்ட தொழில்களுடன் பெங்களூருவில் ‘கடபோம்ஸ் கென்னல்ஸ்’ என்ற நாய் விற்பனை கடையையும் நடத்தி வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ‘திபெத்தியன் மஸ்டிப்’ இன நாயை ரூ.10 கோடி, ‘அலஸ்கன் மலமுடே’ இன நாயை ரூ.8 கோடி, கொரியாவை சேர்ந்த ‘தோசா மஸ்டிப்ஸ்’ இன நாயை ரூ.1 கோடி கொடுத்து வாங்கினார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு … Read more

உத்தரபிரதேசத்தில், பள்ளி மாணவன் ஒருவன் காரில் சிக்கி, சாலையில் இழுத்துச் செல்லப்படும் சிசிடிவி காட்சி..!

டெல்லியில், இளம்பெண் ஒருவர் காரின் அடியில் சிக்கி பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச்செல்லப்பட்டது போல், உத்தரபிரதேசத்தில், பள்ளி மாணவன் ஒருவன் காரில் சிக்கி, சாலையில் இழுத்துச் செல்லப்படும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஹர்டோய் பகுதியில் பயிற்சி வகுப்புக்கு சைக்கிளில் சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் கேதன் குமார் மீது, அவ்வழியே வந்த கார் மோதியதில், காரின் பின்புறம் சிறுவனின் கால் மாட்டிக்கொண்டது. விபத்து நடந்த இடத்திலிருந்து தப்ப முயன்ற ஓட்டுநர், காரை வேகமாக இயக்கிய நிலையில், … Read more

இந்தியா முழுவதும் ஒரே நாளில் 214 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: இந்தியா முழுவதும் நேற்று காலை 8 மணி வரை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 214 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் பாதிப்பு 228 ஆக இருந்த நிலையில்  சற்று குறைந்துள்ளது. இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 79 ஆயிரத்து 761 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் நேற்று முன்தினம் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசத்தில் தலா ஒருவர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 2 கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. … Read more

இமயமலைப் பகுதியில் நிலவெடிப்பு, நிலச்சரிவு காரணமாக உத்தராகண்ட்டின் ஜோஷிமத் நகரம் புதைகிறது

ஜோஷிமத்: இமயமலைப் பகுதியில் நிலவெடிப்பு, நிலச்சரிவு காரணமாக உத்தராகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரில் உள்ள கட்டிடங்கள், வீடுகளில் மிகப்பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் நகரம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அங்கு 2 நாட்களுக்கு முன்பு ஆங்காங்கே நிலவெடிப்புகள் ஏற்பட்டன. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் 600 கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டன. இந்நிலையில், ஜோஷிமத் நகரில் உள்ள ஒரு கோயில் நேற்று முன்தினம் … Read more

நாடு தான் முக்கியம்: என்சிசி மாணவர்களிடம் துணை ஜனாதிபதி பேச்சு

புதுடெல்லி:  அனைவருக்கும் முதலில் நாடு என்ற எண்ணம் உருவாக வேண்டும் என்று  துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் வலியுறுத்தினார். 2023-ம் ஆண்டுக்கான தேசிய மாணவர் படையின்(என்சிசி) குடியரசு தின முகாம், டெல்லியில் கண்டோன்மென்ட்,  கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில்  தொடங்கியது. பிரதமரின் பேரணியோடு ஜனவரி 28-ஆம் தேதி நிறைவடையும். இந்த ஒரு மாத கால முகாமில் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 710 பெண்கள் உட்பட மொத்தம் 2155 பேர் பங்கேற்கின்றனர். ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த … Read more

கேரளாவில் தொடரும் சோகம் பிரியாணி சாப்பிட்ட கல்லூரி மாணவி சாவு: ஒரே வாரத்தில் 2வது பலி

திருவனந்தபுரம்: ஆன்லைன் மூலம் பிரியாணி வாங்கி  சாப்பிட்ட கேரளா கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.  கடந்த  ஒரு வாரத்தில் பிரியாணி சாப்பிட்டு பலியானவர்கள் எண்ணிக்கை 2ஆக  உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள உதுமா  பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சுஸ்ரீபார்வதி (21). இவர் கர்நாடக மாநிலம்  மங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கிறிஸ்துமஸ்  மற்றும் புத்தாண்டு விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார்.  கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில்  ஆன்லைன்  … Read more

ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபர் கைது..!

நியூயார்க்கிலிருந்து, டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த மூதாட்டி மீது, மதுபோதையில் சிறுநீர் கழித்த நபரை, பெங்களூருவில் வைத்து டெல்லி போலீசார் கைது செய்தனர். கடந்த ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி, நிகழ்ந்த விவகாரம் குறித்து, ஏர் இந்தியா நிறுவனம் இந்த வாரம் புகார் அளித்தது. அதன்படி, விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட சங்கர் மிஷ்ரா மீது, 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. சங்கர் மிஷ்ராவை போலீசார் தேடி வந்த நிலையில், தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் … Read more

ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி பஞ்சாப் அமைச்சர் ராஜினாமா: புதிய அமைச்சரானார் பல்பீர் சிங்

சண்டிகர்: பஞ்சாபில் முறைகேடு தொடர்பான ஆடியோ வெளியான நிலையில், குற்றச்சாட்டில் சிக்கிய  அமைச்சர் பவுஜா சராரி நேற்று திடீரென ராஜினாமா செய்துள்ளார்.  பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பவுஜா சராரி, தனது நெருங்கிய நண்பருடன், சில ஒப்பந்ததாரர்களிடம் பணம் பெறுவது தொடர்பான வழிமுறைகள் குறித்து விவாதித்த ஆடியோ ஒன்று வெளியானது. இதனை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜ மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட … Read more

உத்தரகாண்டில் புதையும் நகரம் 600 குடும்பங்கள் வெளியேற்றம்: முதல்வர் புஷ்கர்சிங் தாமி நேரில் ஆய்வு

டேராடூன்: உத்தரகாண்டில் மண்ணில் புதையும் ஜோஷிமத் நகரில் இருந்து 600 குடும்பங்களை உடனே வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு முதல்வர் புஷ்கர்சிங் தாமி ஆய்வு மேற்கொண்டார். இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாநிலம் உத்தரகாண்ட். இங்கு ரிஷிகேஷ்-பத்திரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஜோஷிமத் என்ற கிராமம். இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். ரிஷிகேஷ் மற்றும் பத்திரிநாத்துக்கு புனித யாத்திரை செல்லும் பக்தர்களும் இந்த கிராமத்தை தாண்டிதான் செல்லவேண்டும். மேலும் பனிமூடிய சிகரங்களில் பாதுகாப்பு பணிக்கு செல்லும் … Read more