இமயமலைப் பகுதியில் நிலவெடிப்பு, நிலச்சரிவு காரணமாக உத்தராகண்ட்டின் ஜோஷிமத் நகரம் புதைகிறது

ஜோஷிமத்: இமயமலைப் பகுதியில் நிலவெடிப்பு, நிலச்சரிவு காரணமாக உத்தராகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரில் உள்ள கட்டிடங்கள், வீடுகளில் மிகப்பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் நகரம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அங்கு 2 நாட்களுக்கு முன்பு ஆங்காங்கே நிலவெடிப்புகள் ஏற்பட்டன. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் 600 கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டன. இந்நிலையில், ஜோஷிமத் நகரில் உள்ள ஒரு கோயில் நேற்று முன்தினம் … Read more

நாடு தான் முக்கியம்: என்சிசி மாணவர்களிடம் துணை ஜனாதிபதி பேச்சு

புதுடெல்லி:  அனைவருக்கும் முதலில் நாடு என்ற எண்ணம் உருவாக வேண்டும் என்று  துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் வலியுறுத்தினார். 2023-ம் ஆண்டுக்கான தேசிய மாணவர் படையின்(என்சிசி) குடியரசு தின முகாம், டெல்லியில் கண்டோன்மென்ட்,  கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில்  தொடங்கியது. பிரதமரின் பேரணியோடு ஜனவரி 28-ஆம் தேதி நிறைவடையும். இந்த ஒரு மாத கால முகாமில் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 710 பெண்கள் உட்பட மொத்தம் 2155 பேர் பங்கேற்கின்றனர். ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த … Read more

கேரளாவில் தொடரும் சோகம் பிரியாணி சாப்பிட்ட கல்லூரி மாணவி சாவு: ஒரே வாரத்தில் 2வது பலி

திருவனந்தபுரம்: ஆன்லைன் மூலம் பிரியாணி வாங்கி  சாப்பிட்ட கேரளா கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.  கடந்த  ஒரு வாரத்தில் பிரியாணி சாப்பிட்டு பலியானவர்கள் எண்ணிக்கை 2ஆக  உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள உதுமா  பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சுஸ்ரீபார்வதி (21). இவர் கர்நாடக மாநிலம்  மங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கிறிஸ்துமஸ்  மற்றும் புத்தாண்டு விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார்.  கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில்  ஆன்லைன்  … Read more

ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபர் கைது..!

நியூயார்க்கிலிருந்து, டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த மூதாட்டி மீது, மதுபோதையில் சிறுநீர் கழித்த நபரை, பெங்களூருவில் வைத்து டெல்லி போலீசார் கைது செய்தனர். கடந்த ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி, நிகழ்ந்த விவகாரம் குறித்து, ஏர் இந்தியா நிறுவனம் இந்த வாரம் புகார் அளித்தது. அதன்படி, விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட சங்கர் மிஷ்ரா மீது, 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. சங்கர் மிஷ்ராவை போலீசார் தேடி வந்த நிலையில், தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் … Read more

ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி பஞ்சாப் அமைச்சர் ராஜினாமா: புதிய அமைச்சரானார் பல்பீர் சிங்

சண்டிகர்: பஞ்சாபில் முறைகேடு தொடர்பான ஆடியோ வெளியான நிலையில், குற்றச்சாட்டில் சிக்கிய  அமைச்சர் பவுஜா சராரி நேற்று திடீரென ராஜினாமா செய்துள்ளார்.  பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பவுஜா சராரி, தனது நெருங்கிய நண்பருடன், சில ஒப்பந்ததாரர்களிடம் பணம் பெறுவது தொடர்பான வழிமுறைகள் குறித்து விவாதித்த ஆடியோ ஒன்று வெளியானது. இதனை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜ மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட … Read more

உத்தரகாண்டில் புதையும் நகரம் 600 குடும்பங்கள் வெளியேற்றம்: முதல்வர் புஷ்கர்சிங் தாமி நேரில் ஆய்வு

டேராடூன்: உத்தரகாண்டில் மண்ணில் புதையும் ஜோஷிமத் நகரில் இருந்து 600 குடும்பங்களை உடனே வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு முதல்வர் புஷ்கர்சிங் தாமி ஆய்வு மேற்கொண்டார். இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாநிலம் உத்தரகாண்ட். இங்கு ரிஷிகேஷ்-பத்திரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஜோஷிமத் என்ற கிராமம். இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். ரிஷிகேஷ் மற்றும் பத்திரிநாத்துக்கு புனித யாத்திரை செல்லும் பக்தர்களும் இந்த கிராமத்தை தாண்டிதான் செல்லவேண்டும். மேலும் பனிமூடிய சிகரங்களில் பாதுகாப்பு பணிக்கு செல்லும் … Read more

மணிப்பூர் முதல்வர் முன்பு 43 தீவிரவாதிகள் சரண்

இம்பால்: மணிப்பூரில்  பல்வேறு ஆயுத குழுக்களை சேர்ந்த 43 தீவிரவாதிகள்  முதல்வர் முன்னிலையில் நேற்று சரண் அடைந்தனர். இந்தியாவில் தடை செய்யப்பட்ட கங்கிலேய்பாக் யவோல் கன்பா லப் (கேஒய்கேஎல்) மக்கள் விடுதலை முன்னணி, கங்கிலேய்பாக் கம்யூனிஸ்ட் கட்சி(பிடபிள்யூஜி) ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி, கேசிபி(என்) மற்றும்  பிரிபாக்(பிஆர்ஓ) போன்ற ஆயுத குழுக்களை சேர்ந்த 43 தீவிரவாதிகள்   முதல்வர் பிரேன் சிங் முன்னிலையில் நேற்று சரணடைந்தனர்.சரண் அடையும் போது தங்களிடம் இருந்த 19 துப்பாக்கிகள்,17 கையெறி குண்டுகள் உள்ளிட்ட … Read more

முதல் முறையாக இந்தியா – ஜப்பான் கூட்டு விமான பயிற்சி: வரும் 12ம் தேதி தொடக்கம்

புதுடெல்லி: இந்தியா, ஜப்பான் விமானப்படைகள் பங்கேற்கும் முதல் இருதரப்பு போர் விமான பயிற்சி வரும் 12ம் தேதி தொடங்குகிறது. இந்தியா, ஜப்பான் நாடுகளின் விமானப் படைகள் முதல் முறையாக ‘வீர் கார்டியன் 2023’ எனும் போர் விமானங்கள் கூட்டு பயிற்சியை நடத்த உள்ளன. ஜப்பானின் ஹைகுரி விமான தளத்தில் வரும் 12ம் தேதி தொடங்கும் இப்பயிற்சி வரும் 26ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் இந்திய விமானப்படையின் 4 சு-20 எம்கேஐ ஜெட் விமானங்களும், 2 … Read more

விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர்: 6 வாரங்களுக்கு பின் கைது!

ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது மது போதையில் சிறுநீர் கழித்த மும்பையைச் சேர்ந்த நபர் ஆறு வாரங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டு உள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு, ஏர் இந்தியா விமானம் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி புறப்பட்டது. அப்போது, சக பயணி ஒருவர் குடி போதையில், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது பெண்ணின் இருக்கை அருகே நின்று அவர் மீது சிறுநீர் … Read more

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே மாவோயிஸ்ட்டுகள் இல்லாத தேசமாக இந்தியா மாறும் – அமித்ஷா

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே மாவோயிஸ்ட்டுகள் இல்லாத தேசமாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் கோர்பா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நாட்டில் மாவோயிஸ்ட் வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை 2009ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 258-ஆக இருந்த நிலையில், 2021ஆம் ஆண்டில் 509ஆக குறைந்துள்ளதாக குறிப்பிட்டார். மாவோஸ்ட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆயுதம் ஏந்திய இளைஞர்களுக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ததாகவும் … Read more