சந்திராபூர் ரயில்நிலையத்தில் நடைபாலத்தின் தரைப்பகுதி உடைந்து விழுந்து 8 பேர் காயம்

மராட்டியம்: சந்திராபூர் ரயில்நிலையத்தில் நடைபாலத்தின் தரைப்பகுதி உடைந்து விழுந்து 8 பேர் படுகாயமடைந்தனர். சந்திராபூர் ரயில்வே சந்திப்பில் பயணிகள் நடந்து செல்லும் பாலத்தின் அடிப்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. நடைபாலத்தின் தரைப்பகுதி உடைந்து விழுந்ததில் 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

”இவங்களுக்லாம்தான் வாடகைக்கு வீடு.. மத்தவங்கலா ஓடு” – பெங்களூரு ஹவுஸ் ஓனர்ஸ் அட்டூழியம்!

சொந்த வீடு வாங்குவதை காட்டிலும் வாடகைக்கு வீடு தேடுவதே குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. அதுவும் மெட்ரோ நகரங்களில் வாடகை வீட்டில் குடியேற வேண்டுமென்றால் எக்கச்சக்கமான கெடுபிடிகளையெல்லாம் சகித்துக் கொள்ளக் கூடிய நிலையே இருக்கும். கரன்ட் பில், மெயின்ட்டனென்ஸ், ஆணி அடிக்கக் கூடாது, தண்ணீர் பயன்பாடு, உணவு பழக்கம் என நீளும் பட்டியலை தாண்டி ஏறி இறங்கும் ஒவ்வொரு வீட்டிலும் தான் இந்த சமூகத்தைச் சார்ந்தவர்தான் என போர்டு போடாத குறையாக கூறி வருவது கூடவே தொடரும் சங்கடமே … Read more

அரசு வேலை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் பெற, கல்வி நிறுவனங்களில் சேர பிறப்பு சான்றிதழ் கட்டாயம்: பிறப்பு-இறப்பு பதிவு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கலாகிறது

புதுடெல்லி: அரசு வேலை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் பெறவும், கல்வி நிறுவனங்களில் சேரவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயம். இதற்காக, பிறப்பு-இறப்பு பதிவு சட்டத் திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கலாகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிச. 7ம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஒன்றிய அரசு சில முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்யவுள்ளது. குறிப்பாக பிறப்பு-இறப்பு பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. … Read more

தோல்வியை மறைக்க மதத்தை தவறாகப் பயன்படுத்துகிறது பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: தங்கள் தோல்வியை மறைக்க பாஜக மதத்தை தவறாகப் பயன்படுத்துவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய ஒற்றுமை யாத்திரையில் பாகிஸ்தான் வாழ்க என்ற முழுக்கம் எழுப்பட்டதாக பாஜக குற்றம் சுமத்தியது. இந்த நிலையில் இதற்கு காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் வேணுகோபால் பதிலளித்துள்ளார். “வேலையின்மை, வறுமை, வெறுப்பு என இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தி எழுப்பிய பிரச்சனைகள் அனைத்து தரப்பாலும் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. ராகுல் காந்தி செய்யும் தியாகத்தின் அளவை முதல் நாளிலிருந்தே … Read more

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்தால் வாக்குரிமை பறிக்கப்படும்; ஒன்றிய அமைச்சர் கறார்.!

உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் ‘உலக மக்கள்தொகை வாய்ப்புகள் 2022’ அறிக்கையின்படி, உலக மக்கள்தொகை எட்டு பில்லியனை கடந்துள்ளது. மக்கள் தொகையில் 2023 ஆம் ஆண்டில் இந்தியா சீனாவை முந்தி அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருக்கும் எனவும் ஐ.நா., சபை கணித்துள்ளது. மேலும், 2030 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை சுமார் 8.5 பில்லியனாக அதிகரிக்கக் கூடும் எனவும், 2050ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை சுமார் 9.7 … Read more

கடப்பா வனப்பகுதியில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற 16 பேர் கைது

கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் வனப்பகுதியில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற 16 பேர் கைது செய்யப்பட்டனர். 12 தமிழ்நாடு கூலித் தொழிலாளர்கள் உள்பட 16 பேரை ஆந்திர போலீஸ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செம்மரம் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்கள், ஒரு லாரி மற்றும் ஒரு டன் எடையுள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெங்களூரு டூ ஹவுரா: உணவகப் பெட்டியில் இருந்து திடீரென புகை வந்ததால் நிறுத்தப்பட்ட ரயில்

பெங்களூரில் இருந்து ஹவுரா வரை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென புகை வந்ததால் பயணிகள் வேகமாக இறங்கினர். இதனால் குப்பம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஆந்திரா மாநிலம் குப்பம் வழியாக மேற்கு வங்காளம் ஹவுரா வரை செல்லும் வாராந்திர ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது உணவாகப் பெட்டியில் திடீரென அதிக அளவில் புகை வந்துள்ளது. மேலும், அருகிலுள்ள மற்றொரு பெட்டிக்கும் புகை பரவியதால் உடனடியாக லோகோ பைலட் ரயிலை … Read more

சபரிமலையில் இன்று கட்டுக்கடங்காத பக்தர்கள்: பல மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் இன்றும் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நடை திறந்த 16ம் தேதி மாலை முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சனிக்கிழமையான நேற்று 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்றும் சபரிமலையில் பக்தர்கள் மிக அதிக அளவில் குவிந்துள்ளனர். இன்று … Read more

குடியரசு தினம் விழா: சிறப்பு விருந்தினர் எகிப்து அதிபர் – இதுவே முதல்முறை!

நாடு முழுவதும் 74ஆவது குடியரசு தின விழா வருகிற ஜனவரி மாதம் 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது வழக்கம். அந்த வகையில், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, 2023ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டாஹ் அல் சிசி பங்கேற்கவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குடியரசு தின விழாவில் சிறப்பு … Read more

இந்த 50 ரூபாய் நோட்து உங்களிடம் இருந்தால், நீங்களும் கோடீஸ்வரராக ஆகலாம்

நீங்கள் வீட்டில் உட்கார்ந்து கோடிக்கணக்கில் சம்பாதிக்க விரும்பினால், இது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. இன்று மக்கள் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நீங்களும் கோடிகளை சம்பாதிக்கலாம்.  இன்றைய காலகட்டத்தில் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்கள் சர்வதேச சந்தையில் மிகவும் விலையுயர்ந்த விலையில் வாங்கப்பட்டு விற்கப்படுகின்றன. சர்வதேச சந்தையில் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களின் தேவை எவ்வளவு அதிகமாக உள்ளது, எந்த விலையில் வாங்கப்படுகிறது மற்றும் … Read more