எங்களுடைய கனவை நிறைவேற்ற முடியாமல் ஆஸ்திரேலியாவை விட்டு செல்கிறோம்: விராட் கோலி உருக்கம்

புதுடெல்லி: எங்களுடைய கனவை நிறைவேற்ற முடியாமல் ஆஸ்திரேலிய கடற்கரைகளை விட்டுச் செல்கிறோம் என விராட் கோலி உருக்கமாக கூறியுள்ளார். 8-வது 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அடிலெய்டு ஓவலில் நேற்று நடந்த 2-வது அரை இறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடியால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக … Read more

பெங்களூரு – சென்னை வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

பெங்களூரு: பெங்களூரு – சென்னை வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நாட்டின் 5வது வழித்தடமாக சென்னை – மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. வாரத்தில் 6 நாட்களுக்கு சென்னை – மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. 6 மணி 30 நிமிடங்களில் சென்னையில் இருந்து மைசூரு செல்ல முடியும். புதிய ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் அதிரடி நீக்கம் – கேரள அரசு நடவடிக்கை

கேரளாவில் கலா மண்டலம் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் பதவியில் இருந்து அம்மாநில ஆளுநர் ஆரிப்கானை அதிரடியாக நீக்கி உள்ளது கேரள அரசு. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மாநில முதல்வர்களுக்கும் ஆளுநர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அந்தவகையில்  கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசுக்கும், அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே நீண்டநாட்களாக கருத்து மோதல் இருந்து வருகிறது. இதற்கு மத்தியில், கேரளாவில் உள்ள 11 பல்கலைக்கழகங்களுக்கு மாநில அரசால் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்ட … Read more

குஜராத் தேர்தல் | களைகட்டும் ஆன்லைன் சூதாட்டம் – ரூ.50,000 கோடி பணப் புழக்கத்தை எதிர்பார்க்கும் புக்கீஸ்

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8ல் எண்ணப்படு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தேர்தலை வைத்து ஆன்லைன் சூதாட்டம் களைகட்டியுள்ளதாகவும், இதன் மூலம் கள்ளச்சந்தையில் ரூ.50 ஆயிரம் கோடி வரை பணப்புழகத்தை ஏற்படுத்த தரகர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. படேல் மந்திரம்.. கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 127 … Read more

தென்னிந்தியாவில் முதல் வந்தே பாரத் ரயில் சேவை: மைசூர் – சென்னை இடையே தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

பெங்களூரு: மைசூர் – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாட்டின் முக்கிய நகரங்களை அதிவேகத்தில் இணைக்கும் வகையில் ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய அதிவேக ரயில்களை ரயில்வே அமைச்சகம் கடந்த 2019ல் அறிமுகப்படுத்தியது. டெல்லி – வாரணாசி வழித்தடத்தில் முதல் சேவை தொடங்கப்பட்ட நிலையில், தற்போது நான்கு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மைசூர் – … Read more

அதிர்ச்சி வீடியோ: ஆர்டர் செய்த பிரியாணி வர தாமதம் – ஹோட்டல் ஊழியரை சரமாரியாக தாக்கிய நபர்

பிரியாணி கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதால் உணவக ஊழியரை கடுமையாக தாக்கியுள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள அன்சல் பிளாசா மாலில் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உணவகத்திற்கு நேற்று முன்தினம் (நவ.9) இரவு 10:30 மணியளவில் வந்த 3 நபர்கள் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர். அப்போது பிரியாணி கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மூவரில் ஒருவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து உணவக ஊழியரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் … Read more

இடுக்கியில் பன்றிகளுக்கு ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதி; 276 பன்றிகளை எரித்துக் கொல்ல முடிவு..!!

கேரளா: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பன்றிகளுக்கு ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடுபுழா, கரிமண்ணூர், சாலச்சேரியில் உள்ள பண்ணையை சுற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு ஏற்பட்ட இரு பண்ணைகளில் வளர்க்கப்பட்ட 276 பன்றிகளை எரித்துக் கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

தீவிரவாத தாக்குதல் நினைவு தினத்தையொட்டி ட்ரோன்கள், கிளைடர் பறக்க மும்பையில் ஒரு மாதம் தடை

மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு, அங்கு ட்ரோன்கள், கிளைடர்கள், தனியார் ஹெலிகாப்டர்கள் பறப்பதற்கு மும்பை போலீஸ் ஒரு மாதம் தடை விதித்துள்ளது. மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. மும்பை போலீஸ் உத்தரவு: இதை தடுப்பதற்காக நவம்பர் 13-ம் தேதி முதல் டிசம்பர் 12-ம் தேதி … Read more

காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்தது; தமிழக – புதுச்சேரி கடற்கரை பகுதியில் நாளை கரையை கடக்கும்: வானிலை மையம் தகவல்

டெல்லி: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளதை அடுத்து, வங்கக் கடலில் நேற்று முன்தினம் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. அது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டது. அதன் காரணமாக, தென்தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், வடதமிழகத்தில் சில இடங்களிலும் … Read more

முலாயம் சிங் தொகுதி இடைத்தேர்தல்: அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் போட்டி

லக்னோ: உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக் குறைவால் கடந்த மாதம் 10-ம் தேதி காலமானார். இதனால் காலியான அவரது மெயின்புரி மக்களவைத் தொகுதிக்கு டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதி வேட்பாளராக முலாயம் மருமகளும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் (44) பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009-ல் பெரோஸாபாத் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிம்பிள் யாதவ், நடிகர் ராஜ் பப்பரிடம் … Read more