மராட்டிய மாநிலம் நாசிக் அருகே நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6-ஆக பதிவு

நாசிக்: மராட்டிய மாநிலம் நாசிக் அருகே அதிகாலை 4.04 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நாசிக்கில் இருந்து 89 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6-ஆக பதிவாகியுள்ளது.  

புத்தம் புது சிம்பொனி விரைவில் வெளியாகிறது – இசைஞானி இளையராஜாவின் நேர்காணல்

புதுடெல்லி: இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜாவின் புதிய சிம்பொனி இசை விரைவில் வெளியாகவுள்ளது. ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும் ஆற்றல் இருப்பதில்லை என்ற தவறானக் கருத்து மேற்கத்திய இசை வல்லுநர்களிடம் இருந்தது. அதை மாற்றிக் காட்டியவர் இசைஞானி இளையராஜா. லண்டன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டுஇயங்கிவரும் உலகப் புகழ்பெற்ற ‘ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா’ குழுவினர் இசைக்கும் வண்ணம் தனது முதல் சிம்பொனி இசைக் கோர்வையை படைத்து, அவர்களை இசைக்கவும் வைத்து சாதனை படைத்தார். … Read more

மேகதாது அணை குறித்து விவாதிக்க காவிரி ஆணையத்துக்கு அதிகாரம் கிடையாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

புதுடெல்லி: ‘மேகதாது அணை குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை,’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகம், கர்நாடகா, புதுவை, கேரளா மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்க, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இதன் கூட்டம் டெல்லியில் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இந்நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு … Read more

2019-ம் ஆண்டில் இந்தியாவில் 5 வகை பாக்டீரியாவால் 6.8 லட்சம் பேர் உயிரிழப்பு – லான்செட் ஆய்வில் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் 2019-ம் ஆண்டில் 5 வகை பாக்டீரியாவால் 6.8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக லான்செட் ஆய்வு கூறுகிறது. தி லான்செட் என்ற மருத்துவ இதழில் ஒரு ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. அதில்கூறியிருப்பதாவது: கடந்த 2019-ம் ஆண்டில் சர்வதேச அளவில் இஸ்கெமிக் இதய நோய்க்கு அடுத்தபடியாக மனித உயிரிழப்புக்கு பாக்டீரியா தொற்று 2-வது முக்கிய காரணமாக இருந்துள்ளது. உலகம் முழுவதும் அந்த ஆண்டில் 33 வகை பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 77 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் … Read more

ஜம்மு சர்வதேச எல்லையில் 2 ஊடுருவல்கள் முறியடிப்பு: ஒருவர் சுட்டுக்கொலை; 5 தீவிரவாதிகள் கைது

ஜம்மு: ஜம்முவின் சர்வதேச எல்லையில் 2 ஊடுருவல்களை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்தனர். இதில், ஊடுருவிய ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் ஆர்எஸ்.புராவில் அர்னியா சர்வதேச எல்லை பகுதியில் நேற்று முன்தினம் இரவு  2.30 மணியளவில் மர்மநபர் நடமாட்டம் தெரிந்தது. ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் அந்த நபரை எச்சரித்துள்ளனர். அவர் சர்வதேச எல்லையை தாண்டி இந்திய பகுதிக்குள் நுழைந்துள்ளார். கட்டுப்பாடு வேலியை … Read more

 நாளுக்கு நாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் தொடர்ந்து பக்தர்கள் குவிந்து வருவதால் நேற்று முதல் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மாலையில் 4 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம் முன்னதாக 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வார நாட்களில் தினமும் சராசரியாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து  வருகின்றனர். வார இறுதி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் பக்தர்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உள்ளது. திங்கட்கிழமையான நேற்று முன்தினமும் மிக … Read more

உ.பி.யில் ஆசம் கானுக்கு நெருக்கமான ஃபசகத் அலி கான் பாஜகவில் இணைந்தார்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும் ராம்பூர் தொகுதி எம்எல்ஏவுமான ஆசம் கானுக்கு அவதூறு வழக்கில் கடந்த மாதம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து எம்எல்ஏ பதவியில் இருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் காலியான ராம்பூர் தொகுதிக்கு டிசம்பர் 5-ம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆசம் கானுக்கு நம்பிக்கைக்குரியவரும் ஊடகப் பொறுப்பாளருமான ஃபசகத் அலி கான் என்கிற ஷானு நேற்று முன்தினம் பாஜகவில் இணைந்தார். ராம்பூர் தொகுதிக்கான சமாஜ்வாதி வேட்பாளராக … Read more

பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை: பள்ளி முதல்வர் உள்பட 4 ஆசிரியர்கள் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே திருப்பூணித்துறையில் தனியார் ஆங்கில மேல்நிலைப் பள்ளி உள்ளது. சில தினங்களுக்கு முன், இந்த பள்ளியில்  படிக்கும் பிளஸ் 1 மாணவியை  கிரண் (51) என்ற ஆசிரியர் அருகில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த கலைவிழாவில் பங்கேற்பதற்காக தனது பைக்கில் அழைத்து சென்றார். கலைவிழா முடிந்து இரவில் பைக்கில் திரும்பினர்.  அப்போது மாணவியிடம் ஆசிரியர் கிரண் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி … Read more

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கு | வாட்ஸ்அப்பில் சிவன் படம் வைத்த ஷரீக் – சதி குறித்து தீவிர விசாரணை

பெங்களூரு/ கோவை: மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கியுள்ள முகமது ஷரீக், தனது வாட்ஸ்அப் முகப்பாக ஆதியோகி (சிவன்) படத்தை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. கர்நாடகாவின் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் (37) காயமடைந்தார். குக்கர் குண்டுடன் ஆட்டோவில் பயணித்த முகமது ஷரீக் (24) தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஷரீக், போலி ஆதார் அட்டை மூலம் சிம்கார்டு வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷிமோகாவில் குண்டுவெடித்து அவர் ஒத்திகையில் … Read more

உ.பி.யில் உள்ள 12 கிராமங்களில் மின்சாரமே இல்லாத வீடுகளுக்கு ரூ.60,000 பில்

சாம்லி: உத்தரப் பிரதேச மாநிலம், சாம்லி மாவட்டம் ஜின்ஜானா பகுதியில் கோஸ்கா உட்பட 12 கிராமங்களில் மின்சாரம் இணைப்பு நீண்ட நாட்களாக வழங்கப்படாமல் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் மேற்கண்ட கிராமங்களில் மின் மீட்டர்கள் பொருத்தப்பட்டது. அப்போது, விரைவில் மின்இணைப்பு வழங்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்து உள்ளனர். ஆனால், இதுவரை மின்இணைப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், இந்த கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் தலா ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்று … Read more