25 வயதிலேயே கோடீஸ்வரராகனுமா? அப்போ LIC ஓட இந்த திட்டம் போதும்

ஆயுள் காப்பீட்டுத் திட்டம்: லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) மூலம் பலருக்கு ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், மக்கள் முதிர்வுப் பலன்கள் அல்லது இறப்புப் பலன்களைப் பெறுகிறார்கள். மறுபுறம், நீண்ட காலத்திற்கு எல்ஐசியின் திட்டத்தில் முதலீடு செய்வது பிரீமியத்தின் அளவைக் குறைக்கிறது மற்றும் முதிர்வு நன்மையின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. அத்தகைய சூழ்நிலையில், நீண்ட காலத்திற்கு எல்ஐசியின் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் கோடீஸ்வரராகலாம். அதன்படி எல்ஐசியின் … Read more

அனைத்து தேர்தலுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல்.. பொதுநல மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ்

அனைத்து தேர்தலுக்கும் ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்துவது தொடர்பான பொதுநல மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரச உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரிஷிகேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அதை பரிசீலித்த நீதிபதிகள், இது தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 3-வது வாரத்துக்கு தள்ளி வைத்தனர். Source link

டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் மசாஜ் செய்தவர் கைதி ரிங்கு: திகார் சிறை நிர்வாகம் விளக்கம்

டெல்லி: டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் மசாஜ் செய்தவர் கைதி ரிங்கு என திகார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் போக்சோ கைதியாக திகார் சிறையில் ரிங்கு உள்ளார் எனவும் சிறை நிர்வாகம் தகவல் தெரிவித்திருக்கிறது. டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு மசாஜ் செய்தது பிசியோதெரபி இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ வெடிப்பு சம்பவம் – அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!!

கர்நாடகா மாநிலம் மங்களூருவில், ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது தொடர்பாக அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது. வழக்கின் குற்றவாளியாக கருதப்படும் முகமது ஷாரிக் தமிழகத்தில் கோவை, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்கள் தங்கியிருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர் தங்கியிருந்த பகுதிகளில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கோவை காந்திபுரம் பகுதியில் அவர் 3 நாட்கள் தங்கி இருந்துள்ளார். அப்போது தனது அடையாளத்தை மாற்றி கௌரி அருண்குமார் … Read more

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசன நேரத்தில் மாற்றம்!!

மண்டல பூஜையையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 6ஆவது நாளான நேற்று ஐயப்பனுக்கு விசேஷ பூஜைகளில் ஒன்றான களப பூஜை, களபம் சார்த்தல், களப அபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், 6 நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது. இதனிடையே, சன்னிதானம் அருகே பதினெட்டு படி ஏறி … Read more

இந்து மதம் சார்ந்த பிரச்சினைகளில் முதலில் குரல் கொடுப்பது பாஜக – வாரணாசிக்கு ஒன்றிணைந்து வந்த ஆதீனங்கள் பேட்டி

புதுடெல்லி: தமிழகத்தின் ஒன்பது ஆதீனங்கள் முதன்முறையாக ஒன்றிணைந்து, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதன் அனுபவம் குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு மூன்று மடங்களின் ஆதீனங்கள் சிறப்பு பேட்டி அளித்தனர். முதலில் தூத்துக்குடி பெருங்குளத்தின் செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசீக சக்திஞான பரமாச்சாரி சுவாமியின் பதில்கள் வருமாறு: கருத்து வேறுபாடுகள் காரணமாக தமிழகத்தில் பிரிந்து நிற்கும் நீங்கள், வாரணாசிக்கு ஒன்றாக இணைந்து வந்தது எப்படி? (வாய்விட்டு சிரிக்கின்றனர்) இது … Read more

இந்தியா வரும் சர்வதேச பயணிகள் ஏர் சுவிதா படிவங்கள் நிரப்புவதை நிறுத்தியது மத்திய அரசு.!

இந்தியா வரும் சர்வதேச பயணிகள் ஏர் சுவிதா படிவங்கள் நிரப்புவதை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததையடுத்து இந்தியா வரும் அனைத்து சர்வதேச பயணிகளும் அவர்களது தற்போதைய உடல்நிலை, சமீபத்திய பயண விவரங்கள் உள்ளிட்டவற்றை ஏர் சுவிதா தளத்தில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. படிவத்தில் நிரப்பும் ஆவணங்களை பயணிகள் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. கொரோனா பரவல் குறைந்திருப்பதாலும், தடுப்பூசி அதிகளவில் செலுத்தப்பட்டிருப்பதாலும், ஏர் சுவிதா படிவங்களை நிரப்புவது … Read more

வாக்காளர் பெயரை நீக்கும் விவகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவில், ‘‘எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் பல தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுகிறது. இது கடுமையான குழப்பங்களை ஏற்படுத்துகிறது. அதனால் வாக்காளர் பட்டியலில் இருந்து குறிப்பிட்ட வாக்காளர் பெயரை நீக்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நபருக்கு இதுதொடர்பான விவரங்களை தெரிவிப்பதுடன் அவரது பதிலையும் கேட்டுப்பெற ஏதுவாக தேர்தல் ஆணையத்திற்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் … Read more

காங்கிரஸ் தலைவரான பிறகு முதல்முறையாக தொண்டர்களை சந்தித்தார் கார்கே

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு மல்லிகார்ஜுன கார்கே முதல்முறையாக கட்சித் தொண்டர்களை நேற்று சந்தித்தார். காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் கடந்த அக்டோபர் 17-ம் தேதி நடைபெற்றது. மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகிய இருவரும் போட்டியிட்டனர். இதில் வெற்றி பெற்ற கார்கே, 26-ம் தேதி கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக, தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பிறகு மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறும்போது, … Read more

நாடு முழுவதும் சுமார் 71,000 பேருக்கு பணி நியமன கடிதங்களை இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி

டெல்லி: நாடு முழுவதும் சுமார் 71,000 பேருக்கு பனி நியமன கடிதங்களை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார். ஒன்றிய அரசின் வேலை வாய்ப்பு கண்காட்சி இன்று நடைபெறுவதை ஒட்டி கானொலிக்காட்சி மூலம் பிரதமர் மோடி வழங்குகிறார்.  அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்குமாறு அனைத்து ஒன்றிய அரசு துறைகளையும் பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி … Read more