அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியர்களின் மந்திரம் ‘கடமை’ என்பதே: பிரதமர் மோடி

புதுடெல்லி: “உலகில் ஜனநாயகத்தின் தாய் இந்தியா” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்திய அரசியலமைப்பு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், இ-நீதிமன்றம் திட்டத்தின் கீழ் பல்வேறு முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது: “ஏழைகள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அரசு மக்கள் நல … Read more

ராகுல் பாதயாத்திரையில் கீழே விழுந்த மூத்த தலைவர்; மத்திய பிரதேசத்தில் பரபரப்பு.!

வருகிற 2024ம் ஆண்டு இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலை எதிர்கொள்ளவுள்ள காங்கிரஸ் கட்சி இப்போதே அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக, கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (பாரதமே ஒன்றிணைவோம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்கிறார் அக்கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி. தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் … Read more

குழந்தை வேண்டி சிறுவனை கொன்று ரத்தம் குடித்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

பரேலி: உத்தரபிரதேச மாநிலம் பரேலியை அடுத்த ஜமுக்கா கிராமத்தை சேர்ந்த 33 வயதுடைய பெண்ணுக்கு திருமணமாகி குழந்தை இல்லை. அதனால், அவர் அப்பகுதியில் உள்ள மந்திரவாதி ஒருவரை சந்தித்து தனது குறையை கூறினார். அந்த மந்திரவாதி, ‘குழந்தை பாக்கியம் வேண்டும் என்றால் சிறுவன் ஒருவனின் ரத்தத்தை முகத்தில் பூசி கொள்வதோடு, அதனை குடிக்கவும் வேண்டும்’ என்று கூறினார். அவரது பேச்சை நம்பிய அந்தப் பெண், பக்கத்து வீட்டில் வசித்தவரின் 10 வயது சிறுவனை கொன்று அவனது ரத்தத்தை … Read more

பெண்களின் ஆடை குறித்து இப்படியொரு கமெண்ட்டா! – பாபா ராம்தேவ் பேச்சால் வெடித்த சர்ச்சை!

பெண்கள் புடவையிலும், சல்வார் உடையிலும், எதுவும் அணியாத போதும் அழகாக இருப்பார்கள் என யோகா குரு பாபா ராம்தேவ் கூறியது சர்ச்சையாகி உள்ளது. இந்த கருத்துக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் கண்டனம் தெரிவித்து, ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றுள்ளார். பல சர்ச்சைகளில் தொடர்ச்சியாக சிக்கி வந்த யோகா குரு பாபா ராம்தேவ், தற்போது மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். மகாராஷ்டிர தானேவில் பாபா ராம்தேவ் நடத்திய யோகா நிகழ்ச்சியில், துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் … Read more

மும்பை 26/11 தாக்குதல் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவர்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

புதுடெல்லி: மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொண்டு வருவதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் மும்பையில் நிகழ்த்திய பயங்கரவாத தாக்குதலின் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. மும்பையில் 12 இடங்களில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 166 பேர் உயிரிழந்தனர். 300 பேர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதல் பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்குக் காரணமான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத … Read more

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக லாலு மீண்டும் சிங்கப்பூர் பயணம்

பாட்னா: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக லாலு பிரசாத் யாதவ், நேற்று மாலை சிங்கப்பூர் சென்றடைந்தார். ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், சிறுநீரகம் உள்ளிட்ட பல நோய்களால் அவதிபட்டு வருகிறார். கடந்த அக்டோபர்  மாதம் சிங்கப்பூர் சென்ற லாலு யாதவை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை  செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர். முதற்கட்ட சிகிச்சை முடித்துக் கொண்டு மீண்டும் லாலு பீகார் திரும்பினார். … Read more

மனைவி பாஜக வேட்பாளர், சகோதரி காங். பிரச்சார பீரங்கி.. குஜராத் தேர்தலும் ஜடேஜா குடும்பமும்!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் குடும்பத்தில் குஜராத் சட்டமன்றத் தேர்தல் அரசியல் பிளவை உண்டாக்கியுள்ளது. ஜடேஜாவின் மனைவி ரிவாபா பாரதிய ஜனதா கட்சி சார்பாக வேட்பாளராக களம் இறங்கியுள்ள நிலையில், ஜடேஜாவின் சகோதரி நைனாபா காங்கிரஸ் கட்சிக்காக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஒருபுறம் பாஜக ஆதரவு எனவும், இன்னொரு புறம் காங்கிரசுக்கு பிரச்சாரம் எனவும், ரவீந்திர ஜடேஜாவின் குடும்பம் இரு துருவங்களாக நேர் எதிர் திசைகளில் பயணிக்கிறது. இந்திய அணியில் மட்டுமல்லாது, சென்னை … Read more

மும்பை தாக்குதல் நினைவு தினம் | ‘மறக்கவும் மாட்டோம்… மன்னிக்கவும் மாட்டோம்…’ – இந்தியாவுக்கு இஸ்ரேல் ஆறுதல்

புதுடெல்லி: மும்பை தாக்குதல் 14-வது நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவுடன் இஸ்ரேல் தோளோடு தோள் நிற்கும் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நாவோர் கிலான் தெரிவித்துள்ளார். மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு 10 பேர் அடங்கிய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் குழு தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 166 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் மட்டும் உயிரோடு சிக்க, விசாரணைகளுக்குப் பின்னர் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. … Read more

குஜராத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தும் ரூ13.5 கோடி மதுபானம் பறிமுதல்; 24,170 பேர் கைது: தேர்தல் அதிகாரிகள் தகவல்

காந்திநகர்: குஜராத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் ரூ.13.51 கோடி மதிப்புள்ள மதுபானங்களுடன் 24,170 பேர் கைது செய்யப்பட்டனர் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். குஜராத்தில் சட்டப் பேரவை முதற்கட்ட ேதர்தல் வரும் டிச. 1ம் தேதி நடைபெறவுள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன. அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த சில வாரங்களாக குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து மாநில தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ‘குஜராத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக … Read more

“நீங்கள் 2002-ல் கற்றுக் கொடுத்த பாடத்தை அறிவோம்…” – அமித் ஷாவுக்கு ஒவைசி பதிலடி

“2002-ல் குஜராத் கலவரத்திற்குக் காரணமானவர்கள் சரியான பாடம் கற்றுக் கொடுக்கப்பட்டது. அதனால்தான் குஜராத் 22 ஆண்டுகளாக அமைதியாக இருக்கிறது” என்று குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி. இது குறித்து ஒவைசி கூறும்போது, “மத்திய உள்துறை அமைச்சருக்கு நான் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் 2002-ல் கற்றுக்கொடுத்த பாடம் என்ன தெரியுமா? பில்கிஸ் பானோவை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் விடுவிக்கப்படுவார்கள். பில்கிஸ் பானுவின் 3 … Read more