நேபாளத்தில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. வீடுகள் இடிந்து தரைமட்டமானதில் 6 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 6 பேர் உயிரிழந்தனர். ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. முன்னதாக நேற்று மாலை நேபாளத்தில் உள்ள டோத்தி மாவட்டத்தில் 4 புள்ளி 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. வீடுகள் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. டெல்லி, … Read more

உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் டி.ஒய்.சந்திரசூட்..!

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றுக் கொண்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித்தின் பதவிக்காலம் நேற்றுடன் (நவ. 8) நிறைவடைகிறது. நேற்று குருநானக் ஜெயந்தி என்பதால், உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை நாளாகும். அதனால் கடந்த 7ம் தேதி முறைப்படி ஓய்வு பெற்றார். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்  பதவியேற்றார். தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 2024ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி வரை … Read more

நேபாளத்தில் நிலநடுக்கம்; 6 பேர் பலி: டெல்லி, மணிப்பூரில் நில அதிர்வு 

காத்மாண்டு: நேபாள நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6 பேர் பலியாகினர். நிலநடுக்கத்தின் எதிரொலியாக இந்தியாவில் தலைநகர் டெல்லி, வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நில அதிர்வு உணரப்பட்டது. நேபாளத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இதன் தாக்கம் 6.3 ஆக பதிவானது. நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் நிலநடுக்கத்தால் அஞ்சி வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சேத விவரம் … Read more

தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழைக்கும், நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கும் வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்..!

டெல்லி: தமிழ்நாட்டில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காரணமாக தற்போது பல்வேறு இடங்களில் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. எனினும் வட மாவட்டங்களில் மழை குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக்க வாய்ப்பு உள்ளது. காற்றழுத்தம் … Read more

'முடிந்தால் தாக்குங்கள்' கேரளாவில் முற்றும் ஆளுநர்-அரசுக்கு இடையிலான மோதல்: முழு தகவல்!

“தைரியம் இருந்தால் ஆளுநர் மாளிகைக்குள் புகுந்து என்னை சாலையில் தாக்குங்கள் என்று கேரளாவை ஆளும்” என கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கடுமையாக பேசியுள்ளார் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான். ஒரு மாநிலத்தின் ஆளுநர் இப்படி பேசும் அளவுக்கு கேரளாவில் என்ன நடக்கிறது என்று பலரும் விழிப்பிதுங்கி நிற்கின்றனர். கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு விஷயங்களில் உரசல்கள் இருந்து வந்தன. அந்த உரசல்கள் இப்போது சற்றே … Read more

மீண்டும் பயன்படுத்தக்கூடிய உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆர்எல்வி விண்கலம்: ஓடுதளத்தில் இறக்கி பரிசோதிக்க இஸ்ரோ திட்டம்

பெங்களூரு: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலத்தை(ஆர்எல்வி) ஓடுதளத்தில் தரையிறங்க வைக்கும் சோதனையை இஸ்ரோ விரைவில் மேற்கொள்ளவுள்ளது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலத்தை(ஆர்எல்வி) விண்ணில் ஏவி, அதை கடலில் இறக்கும் சோதனையை இஸ்ரோ கடந்த 2016-ம் ஆண்டு மேற்கொண்டது. இந்நிலையில் ஆர்எல்வி விண்கலத்தை ஓடுதளத்தில் விமானம் போல் தரையிறக்கும் சோதனையை இஸ்ரோ விரைவில் மேற்கொள்ளவுள்ளது. இந்த சோதனை கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள விமான தளத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தப் பரிசோதனையின் போது ஆர்எல்வி விண்கலம் ஹெலிகாப்டர் மூலம் … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 811 பேருக்கு கொரோனா; 2 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 811 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,62,952பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக தொற்றால் 2 பேர் உயிரிழந்த நிலையில் … Read more

இந்திய விமானப்படையில் நவீன போர் விமானங்கள் அதிகம் தேவை: தளபதி வி.ஆர் சவுத்ரி கருத்து

ஜோத்பூர்: இந்திய விமானப்படையில் 4.5 தலைமுறை நவீன போர் விமானங்களை அதிகளவில் சேர்ப்பது மிக முக்கியம் என விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி கூறியுள்ளார். இந்தியா, பிரான்ஸ் விமானப் படைகள் இணைந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ‘கருடா-7’ என்ற பெயரில் கடந்த மாதம் 26-ம் தேதி இருதரப்பு கூட்டுப் பயிற்சியை தொடங்கின. இது வரும் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் இந்திய விமானப்படையின் ரஃபேல், தேஜஸ், ஜாகுவார் மற்றும் சுகோய் ரக … Read more

விண்ணில் பாயும் இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட்

டெல்லி: இந்தியாவில் தனியார் விண்வெளி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் ராக்கெட்டான விக்ரம் எஸ் – ஐ விண்ணில் ஏவ ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விக்ரம் எஸ் ராக்கெட் நவம்பர் 12ம் தேதி முதல் 16ம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டள்ளது. வானிலையைப் பொறுத்து, ராக்கெட் ஏவப்படும் சரியான தேதியை அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் என்று ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

கேரளா: பழுதாகி விமானம் சாலையில் தரையிறங்கியதாக பரவிய புரளி – நடந்தது என்ன?

விமானம் பழுதாகி சாலையில் தரையிறங்கியதாக சமூக வலைதளங்களில் பரவிய புரளியால் விமானத்தை பார்க்க பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பைபாஸ் சாலையில் குருவிப்புழா என்னும் பகுதியில் விமானம் ஒன்று பழுதாகி திடீரென சாலையில் இறங்கியதாக சமூக வலைதளங்களில் புரளி ஒன்று காட்டு தீ போல பரவியது. இதை அடுத்து கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உட்பட அதன் சுற்றுவட்டார மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், விமானத்தை பார்ப்பதற்காக குவிந்தனர். இந்நிலையில், அங்கு வந்து பார்த்த … Read more