7 சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தல் |  பிஹாரில் தத்தம் தொகுதியை தக்கவைத்த ஆர்ஜேடி, பாஜக; தெலங்கானாவில் இழுபறி

புதுடெல்லி: 7 சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில் பிஹாரில் மோகமா தொகுதியில் ஆர்ஜேடி வேட்பாளர் நீலம் தேவி வெற்றி பெற்றிருக்கிறார். அதேபோல் கோபால்கஞ்சில் பாஜக வேட்பாளர் குசும் தேவி வெற்றி பெற்றுள்ளார். இந்த இரு தொகுதிகளுமே இடைத்தேர்தலுக்கு முன்னர் எந்த கட்சி கைவசம் இருந்ததோ அதற்கே சென்றுள்ளது. தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்கும் அதன் கடும் போட்டியாளரான பாஜகவுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை வெளியான முடிவுகளின்படி … Read more

பிகார் இடைத்தேர்தல்… நிதிஷுக்கு ஷாக் கொடுக்கும் பாஜக!

முனுக்கோடு -தெலங்கானா, ஆதம்பூர் -ஹரியானா, கிழக்கு அந்தேரி -மகாராஷ்டிரா, தாம்நகர் -ஒடிசா, கோலா கோகர்நாத் -உத்தரப் பிரதேசம், மொகாமா, கோபால்கஞ் -பீகார் என ஆறு மாநிலங்களில் காலியாக இருந்த ஏழு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 4 ஆம் தேதி இடைதேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. மதியம் 1:30 மணி நிலவரப்படி, ஏழு தொகுதிகளிலும் எந்தெந்த கட்சிகள் வெற்றிப் பெற வாய்ப்புள்ளது என்பது ஏறத்தாழ தெரிய வந்துள்ளது. இதன்படி உத்தரப் பிரதேசம், … Read more

Viral News: கையில் சுற்றிய நாகப்பாம்பை கடித்து குதறி கொன்ற 8 வயது சிறுவன்!

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தில், எட்டு வயது சிறுவன், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நாகப்பாம்பை இரண்டு முறை கடித்து கொன்றான். பாதிக்கப்பட்ட 8 வயது தீபக் தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​அவனுக்கு பயங்கரமான சமபவம் நேர்ந்தது. ஒரு நாகப்பாம்பு தனது கைகளில் சுற்றியிருப்பதைக் கண்டு பயந்துபோன சிறுவன், அது தன்னை கொத்தியதும் மேலும் அச்சம் கொண்டான் தீபக் பாம்பு கடித்ததால்  கைகளை அசைக்க முடியாமல் வேதனையில் இருந்தான். உயிருக்கு பயந்த சிறுவன், தனது … Read more

மே 31 வரை ஒதுக்கீடு அடிப்படையில் 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு அனுமதி

டெல்லி: அடுத்தாண்டு மே 31 வரை ஒதுக்கீடு அடிப்படையில் 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. 2023 அக்டோபர் 31 வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை உள்ள நிலையில் ஒதுக்கீடு அடிப்படையில் ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. ஒன்றிய அரசு அனுமதி மூலம் நேரடியாகவோ, ஏற்றுமதியாளர்கள் மூலமாகவோ சர்க்கரையை ஏற்றுமதி செய்யலாம்.

உயர் சாதி ஏழைகள் இட ஒதுக்கீடு வழக்கு: உச்ச நீதிமன்றம் என்ன சொல்ல போகிறது?

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் அவசர சட்டத்தை மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அவசர சட்டமாக கொண்டுவந்தது. இது பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படது. அவர் ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பலரும் வழக்கு தொடர்ந்தனர். திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இந்த … Read more

இந்தியா வந்த சிறுத்தை… கலைந்தது கர்ப்பம் – நடந்தது என்ன ?

இந்தியாவில் சிறுத்தை (Cheetah) இனம் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக 1952ஆம ஆண்டு அறிவிக்கப்பட்டது. வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட ஆக்கிரமிப்பு  காரணமாக சிறுத்தை இனம் இந்தியாவில் அழிவை கண்டது. ஆசியாவிலேயே இந்தியாவில் மட்டும் காணப்பட்ட இந்த சிறுத்தை இனம் அழிந்து சுற்றுச்சுழலின் உணவு சங்கலி பாதிக்கப்பிற்கு உள்ளாகலாம் என சூழலியல் வல்லுநர்கள் கூறி வந்தனர்.  இதை தொடர்ந்து, அரை நூற்றாண்டுகள் கழித்து இந்தியாவில் மீண்டும் சிறுத்தை இனத்தை கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி ‘Project Cheetah’ என்ற திட்டத்தை, … Read more

`அந்த வீடியோ பார்த்து…’ – சிறுமி பாலியல் வன்கொடுமையில் 10 வயது சிறுவன் பகீர் வாக்குமூலம்

உத்தர பிரதேசத்தில் 10 வயது சிறுவனொருவன், குழந்தைகளின் ஆபாச வீடியோவை பார்த்து 7 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கும் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் பங்கஜ் மிஷ்ரா என்ற காவல் நிலைய அதிகாரி கான்பூர் பகுதியில் நடைபெற்ற இச்சம்பவத்தை பதிவுசெய்துள்ளார். அதன்படி, 10 வயது சிறுவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளது. சிறுவன் மீது, போக்ஸோ சட்டத்தின்கீழ் எஃப்.ஐ.ஆர். பதியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அச்சிறுவன் அம்மாவட்டத்தின் சிறார் நீதிமன்றக்குழு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, … Read more

லிஸ்ட் வந்துருச்சு… பாஜக வாக்குறுதிகள் இதோ… ஹிமாச்சலில் மீண்டும் தாமரை மலருமா?

ஹிமாச்சல் பிரதேசத்தில் 68 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்திற்கு வரும் நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 35 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும். இம்மாநிலத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இங்கு பாஜக, காங்கிரஸ் என மாறி, மாறி ஆட்சி நடைபெற்று வருவதால், இம்முறை காங்கிரஸ் ஆட்சிக் கட்டிலில் அமருமா? இல்லை வரலாறு திருத்தி … Read more

6 மாநிலங்களில் நடந்த 7 தொகுதி இடைத்தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை: தீவிர பாதுகாப்பு ஏற்பாடு

புதுடெல்லி: தெலங்கானா, பீகார் உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று நடக்கிறது. மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு, தெலங்கானா மாநிலம் முனுகோடு, பீகாரின் மொகாமா, கோபால்கன்ச், அரியானாவின் ஆதம்பூர், உத்தர பிரதேசத்தின் கோலா கோக்கராநாத், ஒடிசாவின் தாம்நகர் சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த 3ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. இவற்றில் 3 தொகுதிகள் பாஜவிடமும், 2 தொகுதிகள் காங்கிரசிடமும், சிவசேனா மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியிடம் தலா … Read more

“சுவாசப்பிரச்னைக்கு வருவோர் எண்ணிக்கை, 50% உயர்வு”- டெல்லி மருத்துவர் சொன்ன பகீர் தகவல்

டெல்லியில் காற்று மாசுபாடு மிக மோசம் என்ற பிரிவில் நீடிப்பதால், சுவாசக்கோளறு பாதிப்புக்கு ஆளாகும் நோயாளிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி காற்றின் ஒட்டுமொத்த தர குறியீடு 339 ஆக மிகமோசம் என்ற பிரிவில் நீட்டிப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. டெல்லி ஐ.டி.ஓ. பகுதியில் காற்றின் தரக்குறியீடு 339 ஆகவும், மந்திர் மார்க் பகுதியில் 361 ஆகவும், லோதி … Read more