அசாம் போலீஸார், மேகாலயா மக்கள் மோதல் – துப்பாக்கிச்சூட்டில் காவலர் உட்பட 6 பேர் உயிரிழப்பு

குவாஹாட்டி: அசாம் போலீஸார், மேகாலயா மக்கள் இடையே நேற்று மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில்அசாம் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். கலவரத்தில் அசாம் வனத்துறை காவலர் உயிரிழந்தார். கடந்த 1972-ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் இருந்து மேகாலயா மாநிலம் உதயமானது. அப்போது முதல் இரு மாநிலங்களுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. மத்திய அரசின்சமரசத்தால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இரு மாநில அரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த சூழலில் நேற்று … Read more

தெலுங்கானா மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லா ரெட்டி வீட்டில் 2-வது நாளாக வருமானவரி சோதனை

ஆந்திரா: தெலுங்கானா மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லா ரெட்டி வீட்டில் 2-வது நாளாக வருமானவரி சோதனை நடைபெறுகிறது. அமைச்சரின் மகன் மெகந்திர ரெட்டி, மருமகன் மரி ராஜசேகர் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நீடிக்கப்பட்டுள்ளது. மல்லா ரெட்டி மகனின் நண்பர் ரகுநாத ரெட்டி வீட்டில் இருந்து இதுவரை கணக்கில் வராத ரூ.2 கோடி பறிமுதல் செய்துள்ளனர். 

22 ஆண்டுகளாக நீதிமன்ற காவலில் இருந்தவருக்கு இறுதியாக கிடைத்த விடுதலை!

ஜாமீனில் வெளிவருவதற்கான பிணைப் பத்திரம் தாக்கல் செய்யாததால், 22 ஆண்டுகளாக நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டவரை விடுவிக்கும்படி ஜம்மு காஷ்மீர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டில் குற்ற வழக்கு ஒன்றில் ஜெய் பிரகாஷ் என்பவரை ஜம்மு காஷ்மீர் போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ஜெய் பிரகாஷ்க்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் பிணைப் பத்திரம் அளிக்காததால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அண்மையில் ஜெய் பிரகாஷ்க்கு உத்தரப் … Read more

சர்வதேச சுற்றுலாவை ஊக்குவிக்க ‘வியத்தகு இந்தியா’ பெயரில் மீண்டும் பிரச்சாரம் தொடக்கம்

புதுடெல்லி: சர்வதேச சுற்றுலாவை ஊக்குவிக்க ‘வியத்தகு இந்தியா’ என்ற சர்வதேச சுற்றுலா பிரச்சாரம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றுலாத் துறை செயலர் அர்விந்த் சிங் இதுகுறித்து கூறியதாவது: இந்திய சுற்றுலாத் துறையை மேம்படுத்த ‘வியத்தகு இந்தியா’ என்ற முழக்கத்துடன் கடந்த 2002-ம் ஆண்டு முதல் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டில் உருவான கரோனா பெருந்தொற்று காரணமாக இந்திய சுற்றுலாத் துறை முழுவதுமாக முடங்கிப் போனது. ஆனால், கரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, … Read more

டெல்லியை அடுத்து குஜராத்திலும் 12 பேரை சஸ்பெண்ட் செய்த பாஜக: தேர்தல் கலாட்டா

அகமதாபாத்: தேர்தலில் போட்டியிட சுயேச்சையாக மனுதாக்கல் செய்த  12 கிளர்ச்சியாளர்களை பாஜக இடைநீக்கம் செய்தது. குஜராத் சட்டமன்றத் தேர்தலில், டிசம்பர் 1ம் தேதி வாக்குக்ப்பதிவு நடைபெறவிருக்கும் முதல் கட்ட தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிடும் ஏழு பிஜேபி தலைவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இது நடந்துள்ளது. குஜராத் பாஜக இப்போது தேர்தல் நடைபெறும் சட்டமன்ற தொகுதிகளில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடும் மேலும் 12 தலைவர்களை இடைநீக்கம் செய்துள்ளது. இவர்கள் இரண்டாம் கட்டமாக டிசம்பர் … Read more

மராட்டிய மாநிலம் நாசிக் அருகே நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6-ஆக பதிவு

நாசிக்: மராட்டிய மாநிலம் நாசிக் அருகே அதிகாலை 4.04 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நாசிக்கில் இருந்து 89 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6-ஆக பதிவாகியுள்ளது.  

புத்தம் புது சிம்பொனி விரைவில் வெளியாகிறது – இசைஞானி இளையராஜாவின் நேர்காணல்

புதுடெல்லி: இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜாவின் புதிய சிம்பொனி இசை விரைவில் வெளியாகவுள்ளது. ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும் ஆற்றல் இருப்பதில்லை என்ற தவறானக் கருத்து மேற்கத்திய இசை வல்லுநர்களிடம் இருந்தது. அதை மாற்றிக் காட்டியவர் இசைஞானி இளையராஜா. லண்டன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டுஇயங்கிவரும் உலகப் புகழ்பெற்ற ‘ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா’ குழுவினர் இசைக்கும் வண்ணம் தனது முதல் சிம்பொனி இசைக் கோர்வையை படைத்து, அவர்களை இசைக்கவும் வைத்து சாதனை படைத்தார். … Read more

மேகதாது அணை குறித்து விவாதிக்க காவிரி ஆணையத்துக்கு அதிகாரம் கிடையாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

புதுடெல்லி: ‘மேகதாது அணை குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை,’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகம், கர்நாடகா, புதுவை, கேரளா மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்க, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இதன் கூட்டம் டெல்லியில் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இந்நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு … Read more

2019-ம் ஆண்டில் இந்தியாவில் 5 வகை பாக்டீரியாவால் 6.8 லட்சம் பேர் உயிரிழப்பு – லான்செட் ஆய்வில் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் 2019-ம் ஆண்டில் 5 வகை பாக்டீரியாவால் 6.8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக லான்செட் ஆய்வு கூறுகிறது. தி லான்செட் என்ற மருத்துவ இதழில் ஒரு ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. அதில்கூறியிருப்பதாவது: கடந்த 2019-ம் ஆண்டில் சர்வதேச அளவில் இஸ்கெமிக் இதய நோய்க்கு அடுத்தபடியாக மனித உயிரிழப்புக்கு பாக்டீரியா தொற்று 2-வது முக்கிய காரணமாக இருந்துள்ளது. உலகம் முழுவதும் அந்த ஆண்டில் 33 வகை பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 77 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் … Read more

ஜம்மு சர்வதேச எல்லையில் 2 ஊடுருவல்கள் முறியடிப்பு: ஒருவர் சுட்டுக்கொலை; 5 தீவிரவாதிகள் கைது

ஜம்மு: ஜம்முவின் சர்வதேச எல்லையில் 2 ஊடுருவல்களை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்தனர். இதில், ஊடுருவிய ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் ஆர்எஸ்.புராவில் அர்னியா சர்வதேச எல்லை பகுதியில் நேற்று முன்தினம் இரவு  2.30 மணியளவில் மர்மநபர் நடமாட்டம் தெரிந்தது. ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் அந்த நபரை எச்சரித்துள்ளனர். அவர் சர்வதேச எல்லையை தாண்டி இந்திய பகுதிக்குள் நுழைந்துள்ளார். கட்டுப்பாடு வேலியை … Read more