பேரரசர் சத்ரபதி சிவாஜி பழைய லட்சியவாதி ஆகிவிட்டாரா? – அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்.!

மகாராஷ்டிர மாநிலத்தில், உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்த போது, அவரது சிவசேனா கட்சியில் இருந்து, ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன் விலகினார். இந்துத்துவா கொள்கையில் இருந்து திசைமாறியதாகவும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததாலும் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறினார். இதையடுத்து அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவின் முதலமைச்சர் ஆனார். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் தற்போது முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா கட்சிக்கு, முதலமைச்சர் … Read more

IMD: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை: 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை கொட்டும்

சென்னை: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்களுக்கு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்த  வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்களுக்கு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன், செவ்வாய்க்கிழமை (நவம்பர் 22) காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார். இதன் காரணமாக தமிழகத்தின் சென்னை, புதுச்சேரி, காரைக்கால் … Read more

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு?

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக இருந்த பேரறிவாளன், 142வது சட்டப்பிரிவின் கீழ் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இதைத் தொடர்ந்து, முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரும், இதே சட்டப்பிரிவை பயன்படுத்தி தங்களையும் சிறையில் இருந்து … Read more

நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலைக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் திட்டம்

புதுடெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினி உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. நன்னடத்தைக் காரணமாக பேரறிவாளன் கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். சட்டப்பிரிவு … Read more

'ஆளுநரை எங்கயாவது அனுப்புங்க..!' – ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ பரபரப்பு கருத்து!

சத்ரபதி சிவாஜி மகாராஜ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்த மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை, டிரான்ஸ்பர் செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் வலியுறுத்தி உள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா கட்சிக்கு, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பும், உத்தவ் தாக்கரே தரப்பும் உரிமைக் கோரி வருவதால், அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை … Read more

Indian Railways: யாருக்கெல்லாம் சலுகை விலையில் ‘டிக்கெட்’! ரயில்வே வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

ரயிலில் பயணிப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. ரயில் டிக்கெட்டுகளில் எந்த எந்த பயணிகளுக்கு டிக்கெட்டில் சலுகை கிடைக்கும் என்பது குறித்த தகவலை ரயில்வே தெரிவித்துள்ளது. முன்னதாக ரயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்கள் பிரிவில் பெண்களுக்கு 50 சதவீத தள்ளுபடியும், ஆண்களுக்கு 40 சதவீத தள்ளுபடியும் கிடைத்தது. ஆனால் அது கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்து நிறுத்தப்பட்டது. இப்போது புதிய விதிகளின்படி, ரயில் டிக்கெட்டுகளில் ரயில்வே யாருக்கு தள்ளுபடி அளிக்கிறது என்பதை உங்களுக்குச் சொல்வோம். டிக்கெட்டில் யாருக்கு சலுகை … Read more

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு

புதுடெல்லி: தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து கடந்த மாதம் அது நடைமுறைக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின்கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்க தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இதையடுத்து மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தனிநீதிபதி அமர்வு, ‘தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறையை சேர்ந்தவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவரை நியமிக்கும் வரை மின் … Read more

முதல்வர் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் ரோஜா நடனம்..!

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதியில் உள்ள மகதி கலையரங்கில் 3 நாட்கள் கலாச்சார நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆந்திர மாநில துணை முதல்வர் நாராயணசாமி பங்கேற்று குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி பிறந்தநாளையொட்டி பல்வேறு கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். … Read more

ரூ.22,842 கோடி வங்கி மோசடி: ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை

புதுடெல்லி: பல்வேறு வங்கிகளில் ரூ.22,842 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனர் ரிஷி அகர்வாலை சிபிஐ கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தது. இந்நிலையில் தற்போது அவர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேர் மீதும், 19 நிறுவனங்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ உட்பட 28 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் ரூ.22,842 கோடி … Read more

சூட்கேஸில் இளம்பெண் சடலம்; தந்தையே சுட்டு கொன்றது அம்பலம்.!

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 120 முதல் 150 ஆணவக் கொலைகள் நடக்கின்றன. உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கு, திருவாரூர் அபிராமி வழக்கு, நெல்லை கல்பனா வழக்கு, நாகப்பட்டினம் அமிர்தவள்ளி வழக்கு, கண்ணகி – முருகேசன் வழக்கு என ஆணவப் படுகொலை தொடர்பான வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் இந்திய அளவில் சாதிய ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆணவக் கொலைகளை தடுப்பது தொடர்பாக, கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச … Read more