பீகார் மாநிலத்தில் சாலை விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு

பீகார்: பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். கோயில் திருவிழா ஊர்வலத்தின் போது சாலையோரம் நின்று கொண்டிருந்த பக்தர்கள் மீது லாரி மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் முர்மு, முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். விசாரணையில், கிராம மக்கள் அப்பகுதி கோவிலில் திரண்டிருந்தபோது ​அதிவேகமாக வந்த லாரி அவர்கள் மீது மோதி விபத்து நிகழ்ந்தது தெரிய … Read more

பட்டியலின பெண் தண்ணீர் குடித்ததால் பசுவின் கோமியத்தை கொண்டு டேங்கை சுத்தப்படுத்திய மக்கள்

கர்நாடக மாநிலத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் குழாயில் தண்ணீர் குடித்ததால் கிராம மக்கள் அந்த  தண்ணீர் தொட்டியை காலி செய்து பசுவின் கோமியத்தை கொண்டு சுத்தம் செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் சாமராஜ் நகர் தாலுக்காவில் உள்ள ஹெக்கோதாரா கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக உறவினர்கள், ஊர் மக்கள் வந்து சென்றனர். அப்போது ஒரு பட்டியலின பெண், லிங்காயத்கள் தெருவில் உள்ள … Read more

நடிகைகளை வைத்து ஆபாச படங்களை எடுத்ததாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா மீது போலீசாரின் குற்றப்பத்திரிகையில் குற்றச்சாட்டு!

மும்பை புறநகர்ப் பகுதியில் உள்ள இரண்டு 5 நட்சத்திர ஓட்டல்களில் அறை எடுத்து தங்கி நடிகைகளை வைத்து நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாச படங்களை எடுத்ததாக மகாராஷ்டிர போலீசாரின் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 450 பக்க குற்றப்பத்திரிகையில் இந்தி நடிகைகள் ஷெர்லின் சோப்ரா, பூனம் பாண்டே, தயாரிப்பாளர் Meeta Jhunjhunwala மற்றும் கேமராமென் ராஜூ துபே உள்ளிட்டோரின் பெயர்களும் உள்ளன. நடிகைகளை வைத்து ஆபாசப் படங்கள் எடுத்து, அதை ஓடிடி தளத்துக்கு … Read more

பட்ஜெட் தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை

டெல்லி: பட்ஜெட் தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முதல் ஆலோசனை மேற்கொள்கிறார். வேளாண்மைதுறை பிரதிநிதிகள், தொழிலாளர்கள் சங்க தலைவர்கள் உள்ளிட்டோருடன் இன்று நிர்மலா சீதாராமன் ஆலோசிக்க உள்ளார்.உள்கட்டமைப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது.

சபரிமலையில் மீண்டும் துவங்கிய இன்னிசை கச்சேரி: பக்தி பரவசத்துடன் கேட்டு மகிழ்ந்த பக்தர்கள

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தி இன்னிசை கச்சேரிகள் மீண்டும் துவங்கியுள்ளன. பக்தர்கள் கச்சேரியை ஆர்வத்துடன் கண்டும் கேட்டும் ரசித்து மகிழ்ந்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கட்டட்டுள்ளது. முழு தளர்வுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களை மகிழ்விக்கவும் அவர்களை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தவும் தினசரி பக்தி இன்னிசை கச்சேரிகள் நடப்பது வழக்கம். இந்நிலையில், கொரோனா முடக்கத்திற்குப் பின் சபரிமலை சன்னிதான அரங்கில் … Read more

மங்களூருவில் ஆட்டோ குண்டு வெடிப்பு: என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை

மங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோ வெடித்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள என்ஐஏ அதிகாரிகள் மற்றும் போலீஸார், ஆட்டோவில் பயணம் செய்தவரிடமிருந்து போலி ஆதார் கார்டு ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், இது விபத்து அல்ல, தீவிரவாத சதிச் செயல் என்று கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் தெரிவித்துள்ளார். மங்களூருவில் நேற்று முன்தினம் சாலையில் சென்று கொண்டிருந்த ஓர் ஆட்டோ திடீரென வெடித்து, தீப்பற்றி எரிந்தது. இதில் ஆட்டோ ஓட்டுநரும், அதில் பயணம் செய்தவரும் பலத்த காயமடைந்து, … Read more

பீகாரில் லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 15 பேர் உடல்நசுங்கி உயிரிழந்த பரிதாபம்.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி இரங்கல்!

பீகார் மாநிலம் வைஷாலியில்  லாரி கட்டுப்பாட்டை இழந்து ஓடி சாலையோரம் இருந்தவர்கள் மீது மோதியதில்  குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலியாகினர். ஆன்மீக ஊர்வலத்தில் கலந்துக் கொண்ட பலர் சாலையோரம் மரத்தடியில்  இளைப்பாறிக் கொண்டிருந்த போது அவர்கள் மீது  லாரி மோதியது. விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். லாரி ஓட்டுனர் தப்பியோடி விட்டார். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  … Read more

அசாமில் நெகிழ்ச்சி இறந்த காதலிக்கு திலகமிட்டு தாலி கட்டி மணந்த காதலன்: வாழ்நாள் முழுவதும் தனியாக வாழ்வதாக சபதம்

திஸ்பூர்: நோய் வாய்ப்பட்டு இறந்த காதலியின் சடலத்திற்கு நெற்றியில் குங்குமமிட்டு, மாலை மாற்றிக் கொண்டு காதலன் திருமணம் செய்து கொண்ட உருக்கமான சம்பவம் அசாமில் நடந்துள்ளது. அசாம் கவுகாத்தியில் வசிப்பவர் பிதுபன் தமுலி (27). இவரது காதலி பிரதனா போரா. சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருந்த இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இந்நிலையில், திடீர் உடல் நலக்குறைவால் கவுகாத்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதனா கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி இறந்தார். … Read more

ரூ.22,842 கோடி வங்கி மோசடி: ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை

புதுடெல்லி: பல்வேறு வங்கிகளில் ரூ.22,842 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனர் ரிஷி அகர்வாலை சிபிஐ கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தது. இந்நிலையில் தற்போது அவர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேர் மீதும், 19 நிறுவனங்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ உட்பட 28 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் ரூ.22,842 கோடி … Read more

நெடுஞ்சாலையில் கோர விபத்து : 30 பேர் படுகாயம்; 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்

மகாராஷ்டிராவின் புனே நகரின் புறநகர் பகுதியல் நேற்று மாலை பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. புனே – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கி, கடும் சேதாரமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  இதுகுறித்து, புனே தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,”புனே நகரில் உள்ள புனே – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நவாலே மேம்பாலம் அருகே நடந்த பெரிய விபத்தில் சிக்கி, 48 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. புனே தீயணைப்பு துறை, புனே … Read more