சிறையில் மசாஜ் சிகிச்சை | டெல்லி அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு பாஜக கண்டனம்

புதுடெல்லி: திகார் சிறையில் இருந்துவரும் டெல்லி அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு சிறையில் மசாஜ் சிகிச்சை அளிக்கப்படும் சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சத்தியேந்திர ஜெயினுக்கு மசாஜ் செய்யும் வீடியோவை பாஜகவைச் சேர்ந்தவர்கள் பலர் சமூக வலைதலங்களில் பகிர்ந்து தங்களது கண்டனங்களை பதிவுசெய்து வருகின்றனர். அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசில் சுகாதார அமைச்சராக இருப்பவர் சத்யேந்திர ஜெயின். இவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிஐ கடந்த 2017-ல் வழக்கு பதிவு செய்தது. … Read more

Video : சிறையில் மசாஜ்… சொகுசாக வாழ்கிறாரா அமைச்சர்?; ஆம் ஆத்மி – பாஜக கடும் மோதல்

பண மோசடி வழக்கில், கடந்த மே மாதம் ஆம் ஆத்மியின் முக்கிய நிர்வாகியும், டெல்லி அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில், சிறையில் உள்ள அவருக்கு அங்கு ஒருவர் மசாஜ் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு கட்சியினரால் பகிரப்பட்டு வந்தது. தற்போது பலரும் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.  இதையடுத்து, ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர்  சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளனது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் … Read more

திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்திரஜெயினுக்கு பிசியோதெரபிதான் தரப்பட்டது, மாசாஜ் அல்ல: துணை முதல்வர் சிசோடியா விளக்கம்

டெல்லி: திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்திரஜெயினுக்கு பிசியோதெரபிதான் தரப்பட்டது என்றும் மாசாஜ் அல்ல என்றும் சிசோடியா கூறியுள்ளார். சிறையில் சத்யேந்திரஜெயினுக்கு மசாஜ் செய்வது போல் வீடியோ வெளியான நிலையில் துணை முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். முதுகு தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 முறை அறுவை சிகிச்சை செய்துள்ளதால் பிசியோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். 

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி சுகாதாரத் துறை அமைச்சருக்கு திகார் சிறையில் மசாஜ் செய்யப்படும் விடியோ வைரல்

டெல்லி: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு திகார் சிறையில் மசாஜ் செய்யப்படும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த மே மாதம் கைது செய்யப்பட்ட சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் விஐபி வசதிகள் செய்துகொடுத்தது தெரியவந்ததை அடுத்து திகார் காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2017-ம் ஆண்டில் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அதன் அடிப்படையில், பணமோசடி வழக்கில் … Read more

இந்தியாவில் அமலில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள் என்னென்ன?

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி கிடைப்பதை தடுப்பது தொடர்பான இரண்டு நாள் மாநாடு டெல்லி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் இந்தியாவில் தற்போது அமலில் உள்ள பயங்கரவாத தடுப்பு சட்டம் மற்றும் திரும்ப பெறப்பட்ட சட்டங்கள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்.. தேதி அறிவித்தது மத்திய அரசு..!

நடப்பு ஆண்டின் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற டிசம்பர் மாதம் 7-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, இந்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், நடப்பு ஆண்டில் வருகிற டிசம்பர் மாதம் 7-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறும். இந்த குளிர்கால கூட்டத்தொடரில் மொத்தம் 17 பணி நாட்கள் இருக்கும். அமுத … Read more

வாரணாசியில் பாரதியாரின் மருமகனுடன் அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்திப்பு

புதுடெல்லி: வாரணாசியில் மகாகவி பாரதியார் வசித்த வீட்டுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று நேரில் சென்று, பாரதியாரின் மருமகனை சந்தித்துப் பேசினார். தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே உள்ள பண்டைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய உறவுகள் குறித்து இன்றைய இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி வாரணாசியில் நடைபெறுகிறது. இதையொட்டி வாரணாசி சென்றுள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், அங்கு கங்கை நதியின் அனுமன் படித்துறையையொட்டி அமைந்துள்ள மகாகவி பாரதியாரின் … Read more

 வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நவ.19, 20-ல் வட தமிழக கடலோர மாவட்டங்கள், காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் மீண்டும் தீவிரம் அடைய இருக்கிறது. சிறிய இடைவேளைக்கு பிறகு … Read more

பிரதமர் மோடியால் குஜராத்தில் கலவரம் இல்லாதநிலை உருவாகியுள்ளது – மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்

சூரத்: “பிரதமர் மோடியால் குஜராத்தில் இன்று கலவரம் இல்லாத நிலை உருவாகியுள்ளது” என்று மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அனுராக தாக்கூர் பாஜகவிற்காக பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு அவர் பல்வேறு பேரணி, கூட்டங்களில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: குஜராதில் இன்று கலவரம் இல்லாத சூழ்நிலை … Read more

கேரளா மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 18 பேர் காயம்

கேரளா: கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சபரிமலைக்கு சென்றுவிட்டு ஆந்திரா திரும்பும் போது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.