எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க..!! ரகசிய சுரங்க அறை அமைத்து விபச்சாரம்!

பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் பெங்களூரு மார்கெட், காட்டென் பேட் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகளில் விபச்சாரம் நடப்பதாக வந்த புகாரை அடுத்து பல்வேறு விடுதிகளில் சோதனை செய்தனர். அப்போது துர்கா விடுதியில் காவல்துறையினர் சோதனை செய்த போது அந்த விடுதியில் உள்ள அறையில் இரகசியமாக சுரங்க அறை அமைத்து அதற்குள் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது‌. காவல்துறை சோதனையின் போது இரசிய அறையில் இருந்து விபச்சாரத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் … Read more

தேசிய மாநாடு தலைவர் பதவியில் இிருந்து விலகினார் பரூக் அப்துல்லா

ஸ்ரீநகர்: கடந்த 1932-ம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியை ஷேக் அப்துல்லா தொடங்கினார். கடந்த 1981-ம் ஆண்டு வரை அவர் கட்சியின் தலைவராக நீடித்தார். அதன் பிறகு அவரது மகன் பரூக் அப்துல்லா கட்சியின் தலைவராகப் பதவியேற்றார். கடந்த 2002-ம் ஆண்டில் பரூக்கின் மகன் ஒமர் அப்துல்லா கட்சித் தலைவராகப் பதவியேற்றார். கடந்த 2009-ம் ஆண்டில் பரூக் அப்துல்லா மீண்டும் கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார். தற்போது 85 வயதாகும் அவர், ஜம்மு-காஷ்மீர் தேசிய … Read more

வேலைநிறுத்தம் வாபஸ்… வங்கிகள் இயல்பாக செயல்படும்!

வங்கி பணியாளர்கள் சங்கங்களில் செயலாற்றுவதை தொடர்ந்து, அவர்கள் மீது வங்கி நிர்வாகங்கள் பாரபட்சமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறி, அதனை கண்டித்து இன்று ஒருநாள் போராட்டம் நடத்த அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA) முன்னரே அறிவித்திருந்தது.  இந்நிலையில், இன்று நடைபெற இருந்த வேலைநிறுத்த போராட்டம் தள்ளிவைக்கப்படுவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தினஅ பொதுச்செயலாளர் சிஹெச் வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து, வங்கிகளுக்கும் சங்கங்களுக்குமான பிரச்சனை சுமுகமாக பேசித்தீர்க்கப்பட்டுள்ளது என்றும். இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு வங்கிகள் ஒத்துழைப்பு தருவதாக … Read more

 பள்ளி மாணவர்களுக்கு கழிவறை செல்பி போட்டி: கடும் எதிர்ப்பால் வாபஸ்

நாசிக்: மாணவர்கள் கழிவறையுடன் செல்பி எடுக்க வேண்டும் என்ற சுற்றறிக்கைக்கு எதிராக ஆசியர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து திரும்ப பெறப்பட்டுள்ளது. இன்று உலக கழிவறை தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் ஜில்லா பரிசத் கல்வி துறை சார்பாக  பள்ளிகளுக்கு கடந்த 14ம் தேதி சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இதில், உலக கழிவறை தினத்தையொட்டி 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றது. மாணவர்கள் சுத்தமான கழிவறையுடன் … Read more

காஷ்மீர் செய்தியாளர்களுக்கு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு கண்டனம்

புதுடெல்லி: காஷ்மீர் செய்தியாளர்களுக்கு தீவிரவாத அமைப்புகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளன. இதற்கு எடிட்டர்ஸ் கில்டு அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றும் பல்வேறு செய்தியாளர்களுக்கு தீவிரவாத அமைப்புகள் சார்பில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து முன்னணி நாளிதழின் ஆசிரியர் உட்பட 5 மூத்த செய்தியாளர்கள் பணியில் இருந்து விலகி உள்ளனர். இதுகுறித்து காஷ்மீர் போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: காஷ்மீரின் ஸ்ரீநகரை சேர்ந்தமுக்தர் பாபா என்பவர் செய்தியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. … Read more

நடுரோட்டில் பெண்ணை சுட்டுக் கொன்ற கொடூரம்.. பைக்கில் தப்பியோடிய இரண்டு கொலையாளிகளைத் தேடும் போலீசார்!

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் ((BATHINDA)) பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பெண் மீது பைக்கில் வந்த இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டதில் அந்தப் பெண் ரத்தவெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இரண்டு ஆண் நண்பர்களுடன் 30 வயதான இளம் பெண் நீதிமன்ற வளாகம் அருகே இரண்டு மணி நேரமாகப் பேசிக் கொண்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்ற கொலையாளிகளை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.இறந்த பெண் யார் அவர் எதற்காக கொல்லப்பட்டார் … Read more

தகவல் பாதுகாப்பு வரைவு மசோதா வெளியீடு சட்டத்தை மீறினால் ரூ.500 கோடி அபராதம்: மக்கள் கருத்து தெரிவிக்கலாம்

புதுடெல்லி: தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டத்தை மீறினால், சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ரூ.500 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என வரைவு மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தளங்களில் தனிநபர் தகவலை பாதுகாக்கும் வகையில், தனிநபர் பாதுகாப்பு மசோதாவை கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இந்த மசோதாவில் உள்ள அம்சங்கள் தனிநபர் தகவல்களை பாதுகாப்பதை உறுதி செய்வதற்கு பதிலாக, கருத்து சுதந்திரத்துக்கு எதிராக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால், நாடாளுமன்ற கூட்டுக்குழு மசோதாவில் 81 … Read more

தெலங்கானாவில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 25 மாணவிகள்… ரசாயன வாயு கசிவு தான் காரணமா ?

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் கஸ்தூரிபா அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் இருந்து திடீரென ரசாயன வாயு கசிந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மூச்சு திணறலில் 25 மாணவிகள் மயக்கம் அடைந்துள்ளனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மாணவர்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரசாயன வாயு கசிந்தது தொடர்பாக ஆய்வு நடத்தி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட … Read more

தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு தண்டனை – டெல்லி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: உலகம் முழுவதும் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியுடன் தெரிவித்தார். தீவிரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்க வகை செய்யும் 3-வது அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. தீவிரவாதத்துக்கு நிதி இல்லை என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறது. 2 நாள் நடைபெறும் இம்மாநாட்டின் தொடக்க நாளான நேற்றைய நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். மாநாட்டில் அவர் பேசியதாவது: தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட … Read more

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 3 வீரர்கள் பலி

ஸ்ரீநகர்: காஷ்மீரின் மசில் செக்டார் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி 3 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகினர். ஜம்மு காஷ்மீரின் குப்வாரா செக்டாரின் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதி அருகே உள்ள மசில் செக்டார் பகுதியில் நேற்று மாலை திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த 3 வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி புதைந்தனர். தகவல் அறிந்த மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 3 வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். … Read more