ஆஸ்கருக்கு சென்ற இந்திய படத்தில் நடித்த சிறுவன் புற்றுநோய்க்கு பலி

புதுடெல்லி: ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பிலிருந்து சென்றுள்ள லாஸ்ட் பிலிம் ஷோ படத்தில் நடித்த ராகுல் கோலி புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்தான். அவனுக்கு வயது 10. தியேட்டரில் ஆபரேட்டர் அறையில் அமர்ந்து படம் பார்த்து பொழுதை கழிக்கும் சிறுவனின் வாழ்க்கையை பற்றிய படம் லாஸ்ட் பிலிம் ஷோ. இந்த குஜராத்தி படம், ஆஸ்கர் விருதுக்கு சென்றுள்ளது. சிறந்த வெளிநாட்டு பட பட்டியலில் இந்த படம் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் சில சிறுவர்கள் நடித்துள்ளனர். … Read more

3டியில் கிரித்தி ஷெட்டி

திருவனந்தபுரம்: மலையாள நடிகர் டொவினோ தாமஸ் பான் இந்தியா படத்தில் நடிக்கிறார். படத்துக்கு அஜயந்தே ரண்டம் மோஷனம் என தலைப்பு வைத்துள்ளனர். மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதை என்பதால், இதில் மூன்று வேடங்களில் டொவினோ தாமஸ் நடிக்கிறார். ஹீரோயினாக கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். கதை, திரைக்கதையை சுஜித் நம்பியார் எழுதியுள்ளார். அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்குகிறார். இந்த படத்தை 3 டியில் உருவாகும் இந்த படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். யுஜிஎம் புரொடக்‌ஷன்சுடன் இணைந்து … Read more

மறைந்த முலாயம்சிங்கின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு..!

உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான மறைந்த முலாயம்சிங் யாதவின் உடல் இன்று முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. 82 வயதான முலாயம் சிங் யாதவ், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலமானார். அவரது உடல், சொந்த ஊரான சைஃபயிக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிற்பகலில் நுமாய்ஷ் மைதானத்தில் இருந்து முலாயம் சிங்கின் உடல் ஊர்வலமாக கொண்டுச்செல்லப்பட்டது. இதன்பின்னர், முலாயம் சிங்கின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் … Read more

தேனி மக்களவை தேர்தலில் பணம் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மேல்முறையீடு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தேனி மக்களவை தேர்தல் வெற்றி விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பாக தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி தேனி தொகுதியின் வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில்,“தேனி தொகுதியில் வாக்காளர்களுக்கு … Read more

Dangerous Snake: உலகின் மிக ஆபத்தான ஐந்து பாம்புகள் இவைதான்..

Five Dangerous Snakes List: பாம்பு மிகவும் பலவீனமானது. ஆனால் அது கடித்தால் மரணம் கூட ஏற்படலாம். அதனால் தான் பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். பாம்பின் பெயரைக் கேட்டவுடன் மக்கள் பயப்படுவார்கள். பலர் பாம்புகளின் படங்களை பார்த்துவிட்டு தூக்கும் போது கனவில் கூட பயப்படுவார்கள். பாம்புகள் பூமியில் உள்ள மிகவும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாகும். உலகில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் சில பாம்புகள் மிகவும் விஷத்தன்மை கொண்டவை. ஆனால் பாம்பு அதுவாக … Read more

அடிபம்பில் தண்ணீருக்கு பதிலாக கள்ளச் சாராயம்.. ரெய்டிற்கு சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள சன்சோடா கிராமத்தில் கள்ளச்சாராய ரெய்டிற்கு சென்ற போலீசார், அடிபம்பில் தண்ணீருக்கு பதிலாக கள்ளச்சாராயம் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அடிபம்பில் அசுத்தமான நீர் வருவதாக முதலில் நினைத்த போலீசாருக்கு பின்னர் அது கள்ளச்சாரயம் என்பது தெரியவந்துள்ளது. நிலத்தை தோண்டி பார்த்தபோது, 7 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த டேங்கில் சாரயத்தை பதுக்கி வைத்து, தேவைப்படும்போது பம்பில் அடித்து, பாலித்தீன் கவரில் பிடித்து விற்பனை செய்தது தெரியவந்தது Source link

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் 52% பேர் முன்பே அறிமுகம் ஆனவர்கள்: போலீசார் அறிக்கை

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் 52% பேர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கு தெரிந்தவர்களே என இமாசல பிரேதச போலீசார் தெரிவித்து உள்ளனர். பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் பற்றி 2020, 2021 மற்றும் 2022-ம் ஆண்டில் இதுவரை என கடந்த 3 ஆண்டுகளில் பதிவான பாலியல் வன்கொடுமை வழக்குகளை வைத்து இமாசல பிரேதச போலீசார் பகுப்பாய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் 52% பேர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கு தெரிந்தவர்களே என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையின்படி: கடந்த … Read more

கடனை திருப்பித்தர முடியவில்லை – கர்ப்பிணி உட்பட 16 பேர் ஒரே அறையில் அடைத்து துன்புறுத்தல்!

கர்நாடகாவில் வாங்கிய கடனை திருப்பித் தர இயலாத பட்டியலின குடும்பங்களை அடைத்து வைத்து அடித்து கொடுமைப்படுத்திய காபி தோட்ட உரிமையாளரை போலீசார் கைதுசெய்துள்ளனர். இதில் தனது கருவை இழந்த பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜகதீஷ் கவுடா. ஜேனுகத்தி கிராமத்தில் இவர் காபி தோட்டம் வைத்துள்ளார். இவருடைய தோட்டத்தில் தினக்கூலி வேலை செய்துவந்த பட்டியிலனத்தைச் சேர்ந்த 4 குடும்பம் ஜகதீஷிடம் ரூ. 9 லட்சம் கடன் வாங்கியிருக்கிறது. அதனை … Read more

பலாத்கார குற்றச்சாட்டில் கைதான கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சானேவிடம் போலீசார் விசாரணை; 7 நாள் கஸ்டடியில் விசாரிக்க கோர்ட் அனுமதி

காட்மண்ட்: பலாத்கார குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் உள்ள நேபாளம் கிரிக்கெட் அணியின் கேப்டன் சந்தீப் லமிச்சானேவை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க  அனுமதியளித்து காட்மண்ட் மாவட்ட கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இன்று காலை அவரை காவலில் எடுத்த காட்மண்ட் போலீசார், அவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக தங்களது விசாரணையை துவக்கினர். நேபாளம் கிரிக்கெட் அணியின் கேப்டன் சந்தீப் லமிச்சானே(22). நேபாளத்தில் இருந்து ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கு தேர்வான முதல் கிரிக்கெட் வீரர். கடந்த 2018ம் … Read more

எது சமோசாவுக்கு பேரா? – இணையத்தில் வைரலாகும் பெங்களூரு ஸ்நாக்ஸ்!

நாம் வாங்கும் ஆடைகள், செருப்பு, வீட்டு உபயோகப் பொருட்கள் என பலவற்றில் அதன்மீது பிராண்ட் பெயர் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். ஏன் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவு டப்பா மீது கூட பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால் சாப்பிடும் உணவின் மீதே பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? அதிலும் குறிப்பாக சமோசா மீது? அப்படி ஒரு விநோத முயற்சியில் இறங்கியிருக்கிறது பெங்களூருவைச் சேர்ந்த ஒரு உணவு நிறுவனம். ஷோபித் பக்லிவால் என்ற ட்விட்டர் பயனர் ஒருவர் தனது பக்கத்தில் ஒரு … Read more