குஜராத்தில் ‘வந்தே பாரத்’ ரயில் சேதம்: இறந்த எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு

மணிநகர்: குஜராத்தில் எருமை மாடுகள் மீது மோதியதில் வந்தே பாரத் ரயிலின் முற்பகுதி சேதமடைந்த நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த எருமை மாடுகளின் அடையாளம் தெரியாத உரிமையாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் வியாழக்கிழமை வத்வா மற்றும் மணிநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பயணம் செய்துகொண்டிருந்தபோது, தண்டவாளத்தில் வழிதவறி வந்த நான்கு எருமை மாடுகள் மீது ரயில் மோதியதால், இன்ஜினின் முற்பகுதி சேதமடைந்தது. அதேநேரம், விபத்தில் சிக்கிய எருமைகள் உயிரிழந்தன. இந்த நிலையில், … Read more

120 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் பிடிபட்ட விவகாரத்தில் முன்னாள் ஏர் இந்தியா விமானி உள்பட 6 பேர் கைது!

மும்பையில், 120 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் பிடிபட்ட விவகாரத்தில் முன்னாள் ஏர் இந்தியா விமானி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பை துறைமுகத்திலுள்ள ஒரு கிடங்கில் 60 கிலோ மெஃபடிரோன் (mephedrone) என்றழைக்கப்படும் பார்ட்டிகளில் பயன்படுத்தப்படும் போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அது தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேரில் ஒருவரான சோஹைல் கஃபர் அமெரிக்காவில் விமானம் ஓட்டும் பயிற்சி பெற்றவர் என்பதும், ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி பின் மருத்துவ காரணங்களுக்கு … Read more

66 குழந்தைகள் பலியான சம்பவம்; அரியானா இருமல் மருந்துக்கு ‘சீல்’: மாதிரிகள் கொல்கத்தா அனுப்பி வைப்பு

சண்டிகர்: காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலியான சம்பவத்தின் தொடர்ச்சியாக அரியானாவில் உள்ள இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் பிரச்னைக்குரிய மருந்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலியான நிலையில், இந்திய மருந்து நிறுவனத் தயாரிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் என்ற இந்திய நிறுவனத்தின் தயாரிப்புகள், இச்சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுவதால் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் … Read more

உ.பி.யில் ராணுவ பயிற்சியின்போது விபத்து – 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஜான்சி: உத்தரப் பிரதேசத்தில் ராணுவ டேங்கரைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பயிற்சியின்போது பேரல் வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி அருகே உள்ளது பாபினோ ராணுவ பயிற்சி தளம். இந்த பயிற்சி தளத்தின் வருடாந்திர பயிற்சி நேற்று நடைபெற்றது. அப்போது, T-90 டேங்க் ஒன்றின் பேரல் திடீரென வெடித்துள்ளது. இதில், டேங்கின் மீது இருந்த ராணுவ வீரர்கள் மூவரில் ராணுவ கமாண்டர் மற்றும் சுடுபவர் என இருவர் பலத்த தீ காயமடைந்து … Read more

தீ வைத்தும் எரியாத ராவணன்; அரசு பகீர் முடிவு.. மக்கள் ஷாக்!

நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிலும் நவராத்திரி விழாவின்போது, வட இந்தியாவில் அரக்கர்களின் அரசனாக கூறப்படும் 10 தலைகள் கொண்ட ராவணன் உருவ பொம்மையை எரிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. பொதுவாகவே இந்து மத இதிகாச புராணங்களில் ஒன்றான ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளதன் அடிப்படையில் கடவுள் ராமரின் எதிரியாக சித்தரிக்கப்படுபவர் 10 தலைகள் கொண்ட ராவணன். அதே சமயம் சிவ பெருமானின் தீவிர பக்தனாக அறியப்படுபவர் இந்த 10 தலைகளை கொண்ட ராவணன். இந்த 10 … Read more

நேற்று எருமை மாடு; இன்று பசு மாடு – 'வந்தே பாரத்… விடாது விபத்து..'

குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்து மகாராஷ்டிரா தலைநகர் மும்பை நோக்கி சென்றுகொண்டிருந்த வந்தே பாரத் ரயில் நேற்றைப்போல, இன்றும் விபத்திற்குள்ளாகியுள்ளது. நேற்று, ரயில் தண்டவாளத்தின் குறுக்கே எருமை மாடுகள் புகுந்த நிலையில், இன்று பசுமாடு ஒன்று விபத்துக்கு காரணமாகியுள்ளது. நேற்றைய விபத்தில் 6 எருமை மாடுகள் உயிரிழந்த நிலையில், இன்று மோதிய பசு மாடு குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.  ஃபைபர் மற்றும் பிளாஸ்டிக்கால் ஆன ரயில் பகுதி நேற்று சேதாரமான நிலையில், அது சரிசெய்யப்பட்டது. தொடர்ந்து, … Read more

நாளை புரட்டாசி 3ம் சனிக்கிழமை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 36 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் சுமார் 36 மணி நேரத்திற்கு பிறகே சுவாமியை தரிசிக்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த மாதம் 27ம்தேதி தொடங்கி நேற்றுமுன்தினமும் தீர்த்தவாரியுடன் நிறைவுபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசனம் செய்தனர். ஆனால் பிரம்மோற்சவம் நிறைவுபெற்று 3 நாட்களாகியும் பக்தர்களின் எண்ணிக்கை குறையவில்லை. தற்போது பள்ளிகளில் காலாண்டு விடுமுறை இருப்பதால் நாள்தோறும் பக்தர்களின் வருகை அதிகரிகரித்துக்கொண்டே உள்ளது. புரட்டாசி மாதம் என்பதால் ஏழுமலையானை தரிசிக்க … Read more

‘இந்து கடவுள்களை வழிபட மாட்டேன்’ என சூளுரைத்த ஆம் ஆத்மி அமைச்சர் – பாஜக கடும் விமர்சனம்

ஆம் ஆத்மி கட்சியின் சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம், டெல்லியில் நடைபெற்ற பௌத்த மத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இந்துக் கடவுள்களை வழிபட மாட்டேன் என உறுதிமொழி எடுத்த வீடியோ வைரலான நிலையில், இந்து விரோத ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று பாஜக கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள அம்பேத்கர் பவனில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற பௌத்த மத நிகழ்ச்சியில், சுமார் 10 ஆயிரம் பேர் … Read more

குஜராத்தில் முஸ்லிம் இளைஞர்களை கட்டி வைத்து அடித்த போலீஸ் – மனித உரிமை ஆணையத்தில் திரிணமூல் காங். புகார்

குஜராத் மாநிலத்தில் இஸ்லாமியர்களை பொதுவெளியில் கட்டி வைத்து, பிரம்படி கொடுத்த போலீசாருக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. இந்தப் புகார் தொடர்பான தகவலை, அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் உள்ள உந்தேலா கிராமத்தில் அண்மையில் நடந்திருந்தது. அந்தப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கற்களை வீசியதாக சொல்லி சில இஸ்லாமிய … Read more

தனியார் செல்போன் நிறுவனத்தில் பிரபல மலையாள நடிகை சிறைவைப்பு: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் டூப்ளிகேட் சிம் கார்டு வாங்கச் சென்ற பிரபல மலையாள நடிகை அன்னா ரேஷ்மா ராஜனை ஊழியர்கள் சிறை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அன்னா ரேஷ்மா ராஜன். கடந்த 2017ல் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய அங்கமாலி டைரீஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு வெளிபாடின்டெ புஸ்தகம், மதுர ராஜா, ஐயப்பனும் கோஷியும் உள்பட பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். … Read more