கழிவறையில் சமைக்கப்பட்ட உணவு கபடி வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்ட அவலம்! அதிகாரி சஸ்பெண்ட்!

உத்தர பிரதேசம் மாநிலம் சஹாரன்பூர் விளையாட்டு வளாகத்தில் கபடி வீராங்கனைகளுக்கு கழிவறை தரையில் வைக்கப்பட்டு உணவு வழங்கப்படும் வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் சஹாரன்பூரில் உள்ள டாக்டர் பீம்ராவ் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியத்தில் கழிவறை தரையில் வைக்கப்பட்டு உணவு வழங்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கடும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. இணையத்தில் பரவும் அந்த சர்ச்சைக்குரிய வீடியோவில் கழிப்பறை வளாகத்தின் தரையில் சமைத்த அரிசி சாதம் நிரப்பப்பட்ட ஒரு பெரிய தட்டு வைக்கப்பட்டிருப்பது காட்டப்படுகிறது. … Read more

தேசிய கல்விக் கொள்கை | யாரிடமும் நியாயமான எதிர்ப்பை நான் காணவில்லை: தர்மேந்திர பிரதான்

சென்னை: தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் யாரிடமும் நியாயமான எதிர்ப்பை தான் காணவில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தாய் மொழி மூலம் கல்வி கற்பிக்கப்படுவதை தேசிய கல்விக் கொள்கை உறுதிப்படுத்துகிறது. இதன் காரணமாக மாணவர்கள் கல்வி கற்பதை எளிதாக உணருவார்கள். அவர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். தேசிய மொழிகளில் ஒன்றான தமிழும் தேசிய கல்விக் கொள்கையால் முக்கியத்துவம் பெறும். தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் … Read more

இன்று ஆழ்வார் திருமஞ்சனம் திருப்பதியில் 5 மணி நேரம் சுவாமி தரிசனம் நிறுத்தம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் இன்று நடந்தது. இதனால் பக்தர்கள் சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் யுகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய உற்சவங்களுக்கு முன்பு வரும் செவ்வாய்கிழமைகளில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மை பணி) நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 27ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையடுத்து தினமும் காலை … Read more

ஒற்றுமை யாத்திரையில் ராகுலுடன் பிரியங்காவும் பங்கேற்பார்: ஜெய்ராம் ரமேஷ்

ஆலப்புழா: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத ஒற்றுமை யாத்திரையில் அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியும் கலந்து கொள்வார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் பாரத ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட இந்த யாத்திரை, தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரை குறித்து ஆலப்புழாவில் செய்தியாளர்களிடம் … Read more

மத்திய அமைச்சர் நாராயண் ரானே பங்களாவை இடிக்க உத்தரவு – ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு!

ஜூஹூ கடற்கரை அருகே மத்திய அமைச்சர் நாராயண் ரானே, விதிகளுக்கு மாறாக கட்டிய பங்களாவை இடிக்க உத்தரவிட்ட மும்பை உயர் நீதிமன்றம், அவருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மத்திய சிறு குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சராக உள்ள நாராயண் ரானேவுக்கு, ஜூஹூ கடற்கரையில் பங்களா உள்ளது. அதில், மும்பை கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி இன்றி கட்டடங்கள் கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. அந்த பங்களாவை ஒழுங்குபடுத்தக் கோரி, மத்திய … Read more

கண்ணாடியை அணிந்து கொண்டு அசால்டாக கால்பந்தை உதைத்து விளையாடிய எம்பி: சமூக வலைதளங்களில் பாராட்டு

கொல்கத்தா: கண்ணாடி அணிந்தும், சேலை கட்டிய நிலையில் கால்பந்தை அசால்டாக உதைத்து விளையாடிய எம்பி மஹுவா மொய்த்ராவை பலரும் பாராட்டி உள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதும், ஆளும் பாஜகவுக்கு எதிராக கருத்துகளை வெளியிடுவதற்கும் புகழ் பெற்றவர் ஆவார். அவர் கொல்கத்தாவில் நடந்த கால்பந்து நிகழ்ச்சி தொடக்க விழாவில் பங்கேற்றார். விழாவை தொடக்கி வைக்கும் போது, சேலை அணிந்த நிலையில் இருந்த மஹுவா மொய்த்ரா, கண்ணாடி அணிந்து கொண்டு தனது … Read more

“ஆந்திரா, தெலங்கானாவில் பொய் வழக்குகளில் அப்பாவிகள் கைது” – என்ஐஏ மீது பாப்புலர் ஃப்ரண்ட் விமர்சனம்

புதுடெல்லி: “பிஹாரில் செய்ததைப் போலவே ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் விசாரணை ஏஜென்சிகளை பயன்படுத்தி நிரபராதிகளை பொய் வழக்குகளில் கைது செய்து பயங்கரவாதக் கதையை உருவாக்குவதன் மூலம் தங்களது அரசியல் எஜமானர்களை திருப்திபடுத்த என்ஐஏ முயற்சிக்கிறது” என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலாளர் வி.பி.நஸ்ருத்தீன் இளமரம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தற்காப்புக் கலை ஆசிரியர் அநியாயமாக கைது செய்யப்பட்டதற்கும், இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில் … Read more

ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகளை இந்தியாவுக்கு கொண்டு வந்தது தவறு: வல்லுநர்கள் கவலை!

இந்தியாவில் வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிவிங்கி புலிகள் இனம் அழிந்து விட்டது. சிவிங்கி புலிகள் இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952ஆம் ஆண்டு அரசு அறிவித்தது. 1948ஆம் ஆண்டில் இந்தியாவின் கடைசி சிவிங்கி புலி இறந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சிவிங்கி புலிகள் இனத்தை பெருக்கும் நோக்கில், தென் ஆப்ரிக்க நாடான நமீபியாவுடன் கடந்த ஜூலை 20ஆம் தேதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, நமீபியா அரசு ஐந்து பெண் மற்றும் மூன்று … Read more

பி.ஐ.எஸ். முத்திரை இல்லாத குக்கர்களை விற்றதால் அமேசான் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் உத்தரவு

டெல்லி: பி.ஐ.எஸ். முத்திரை இல்லாத குக்கர்களை விற்றதால் அமேசான் நிறுவனத்துக்கு டெல்லி ஐகோர்ட் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. அபராத தொகையான ரூ.1 லட்சத்தை ஒரு வாரத்திற்குள் செலுத்த அமேசான் நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

“இது இந்தியா… ரஷ்யாவோ, சீனாவோ இல்லை” – கலாச்சாரம் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு

புதுடெல்லி: “இந்தியா தனது வரலாற்று அடையாளத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். பிற நாடுகளின் கலாசாரத்தை தழுவி உலக அரங்கில் கேலிக்குள்ளாகும் நிலையை எதிர்கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார். மகாபாரதத்துடன் தொடர்புபடுத்திக் கொள்ளுதல் – ‘Connecting with the Mahabharata’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். அந்த விழாவில் பேசிய மோகன் பாகவத் பேசும்போது, “இந்திய வரலாற்றைப் பற்றி நாம் பெருமை … Read more