பாஜக ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம்

குவாஹாட்டி: அசாம் மாநிலம் குவாஹாட்டியில் பாஜக சார்பில் புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: 70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, வடகிழக்கு பகுதிகளை வன்முறை மற்றும் அராஜகத்தை நோக்கி தள்ளியுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின்போது அந்த மாநிலங்களில் வளர்ச்சி சுத்தமாக இல்லை. இந்நிலையில் பாஜக … Read more

முஸ்லிம்கள் தான் அதிக அளவில் காண்டம் பயன்படுத்துகிறார்கள்! அசாதுதின் ஓவைசி

புதுடெல்லி: முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை என்று அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார். தேவையில்லாத டென்ஷன் ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்று கூறிய அவர், எங்கள் மக்கள் தொகை குறைகிறது என்று கூறுகிறார். முஸ்லிம்கள் இரண்டு குழந்தைகளுக்கு இடையில் அதிக இடைவெளி விடும் விஷயத்தில் இஸ்லாமியர்கள் முன்னணியில் இருக்கிறார்கள். ‘ஆணுறைகளை அதிகம் பயன்படுத்துபவர் யார்? முஸ்லிம்கள் அதிகம் பயன்படுத்துகிறோம். ஆனால், இது குறித்து மோகன் பகவத் பேச மாட்டார் … Read more

குழந்தைகள் திருமணம் ஜார்கண்ட் முதலிடம்: ஒன்றிய அரசின் ஆய்வில் தகவல்

ராஞ்சி: நாட்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தில்தான் அதிகளவில் குழந்தைகள் திருமணங்கள் நடப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குழந்தை திருமணங்கள் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் ஆய்வு நடத்தியது. இதில், நாட்டில் அதிக குழந்தை திருமணம் நடக்கும் மாநிலமாக ஜார்கண்ட் உள்ளது. இம்மாநிலத்தில் குழந்தை திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் சதவீதம் 5.8 ஆக உயர்ந்துள்ளது. தேசியளவில் குழந்தை திருமணங்கள் செய்து கொள்ளும் பெண்களின் சதவீதம் 1.9 சதவீதமாகும்.   … Read more

காஷ்மீரில் ‘அக்னி பாதை’க்கு ஆள் சேர்ப்பு – ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர்கள்

சம்பா: பாதுகாப்புப் படையில் ராணுவம், விமானப் படை, கப்பல் படைக்கு 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை தேர்வு செய்யும் ‘அக்னி பாதை’ திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூன் 14-ம் தேதி அறிவித்தது. இத்திட்டத்தில் சேர்பவர்கள், அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படும். அதில் சிறிய தொகை மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும். நான்கு ஆண்டு பணி முடித்த பிறகு, அவர்களுக்கு ரூ.12 லட்சம் வரை … Read more

மூத்த பாஜக தொண்டர்களுக்கு பாத பூஜை செய்த அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா!

அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா, மூத்த பாஜக தொண்டர்களுக்கு பாத பூஜை செய்தார். கவுகாத்தியில் பாஜக மாநில அலுவலகத்தின் புதிய கட்டடத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா, பாஜக மூத்த தொண்டர்களின் பாதத்தை சுத்தம் செய்து, மரியாதை செய்தார். 1990ம் ஆண்டுக்கு முன்பு, பாஜகவில் சேர்ந்த மூத்த தொண்டர்கள் 75 பேருக்கு, அவர் பாத … Read more

நடுவழியில் சக்கரத்தில் கோளாறு; வந்தே பாரத் ரயிலுக்கு 3வது நாளாக வேதனை: மின்சாரத்தை துண்டித்து நிறுத்தம்

புதுடெல்லி: எருமைகள், பசு மாடு மோதியதால் தொடர்ந்து 2 நாட்களாக சேதமடைந்த நிலையில், நேற்று சக்கரங்களில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் வந்தே பாரத் ரயில் பயணிகள் வேறு ரயிலுக்கு மாற்றப்பட்டனர். குஜராத்தில் கடந்த வியாழன்று காலை வந்தே பாரத் ரயில் பாட்வா-மணிநகர் இடையே வந்து கொண்டிருந்தபோது திடீரென எருமைகள் தண்டவாளத்தில் கூட்டமாக புகுந்தன. இதனால், அவற்றின் மீது ரயில் மோதியதில் முன்பகுதி சேதம் அடைந்தது. இந்த முகப்பு பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்டது என்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் … Read more

திருமலையில் சனிக்கிழமை 6 கி.மீ. வரை காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருமலை: புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு உகந்த மாதமாகும் என்பதால் நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள், அதிலும் குறிப்பாக தமிழக பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் திருமலைக்கு படை எடுத்தனர். இதில், 2-வது சனிக்கிழமையன்று பிரம்மோற்சவ விழாவின் கருட சேவை நடை பெற்றது. இதில் சுமார் 3.5 லட்சம் பக்தர்கள் திருமலையில் குவிந்து கருட சேவையை கண்டுகளித்தனர். இதில் 87 ஆயிரம் பக்தர்கள் மூலவரை தரிசித்தனர். இந்நிலையில், பிரம்மோற்சவம் கடந்த 5-ம் தேதி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது 3-வது சனிக்கிழமையில் மீண்டும் … Read more

உத்தரகாண்ட் சாமோலி மாவட்டத்தில் பனியால் மூடப்பட்ட சீக்கியர்களின் ஹேம்குண் சாஹிப் கோயில்..!

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் பெய்த கடும் பனிப்பொழிவால் சீக்கியர்களின் முக்கிய வழிபாட்டுத் தலமான ஹேம்குண் சாஹிப் கோயில் பனியால் மூடப்பட்டுள்ளது. பனிப்பொழிவால் கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதி வெண்போர்வையால் போர்த்தப்பட்டுள்ளது போல் காட்சியளிக்கிறது. Source link

குஜராத்தில் ரூ350 கோடி ஹெராயின் பறிமுதல்

அகமதாபாத்: குஜராத் கடற்பகுதியில் கடலோர காவல்படையினரும், தீவிரவாத தடுப்பு படையினரும் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும், படகை வேகமாக ஓட்டினர். போலீசார் விரட்டி சென்று படகை மடக்கி பிடித்து, சோதனையிட்டதில் 5 மூட்டைகளில் 50 கிலோ ஹெராயின் இருந்தது. விசாரணையில், இந்த படகு பாகிஸ்தானை சேர்ந்தது என தெரிய வந்தது. கைப்பற்றப்பட்ட ஹெராயினின் சர்வதேச மதிப்பு ரூ.350 கோடி. படகில் இருந்த 6 பேரும் கைது செய்யப்பட்டு ஜகாவ் துறைமுகத்துக்கு … Read more

பிரபல கட்சியின் சின்னம் முடக்கம்… தேர்தல் ஆணையம் அதிரடி!!

சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட கிளர்ச்சியின் காரணமாக இரண்டு அணிகளாக பிரிந்தது. பொதுவெளியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி சிவசேனா என அறியப்பட்டாலும், சட்டமன்றத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் தலைமையிலான அணியே சிவசேனா என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கடந்த மாதம் கவிழ்ந்தது. சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் … Read more