இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,043 பேருக்கு கொரோனா பாதிப்பு.! 4,676 பேர் டிஸ்சார்ஜ்.! ஒன்றிய சுகாதாரத்துறை அறிவிப்பு

டெல்லி: உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,043 ஆக பதிவாகியுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 47,379 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,676 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,370 பேர் … Read more

கார் மோதி 100 மீட்டர் தூரத்துக்கு சென்ற நபர் ! – அதிர்ச்சியளிக்கும் வீடியோ

டெல்லியின் கரோல் பாக் என்ற இடத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் வாகனம் ஒன்று வரிசையாக நின்று கொண்டிருந்த வாகனங்களை மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்து நேரும் போது,அங்கிருந்த ஒரு நபர் ஒருவரை அந்த வாகனம் இடித்து, சுமார் நூறு மீட்டர் தூரத்துக்கு  இழுத்துச் சென்றுள்ளது. விபத்துக்குள்ளாகும் காட்சிகளைக் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கார் வேகமாக வந்து வாகனங்களை மோதி, அந்த நபரை இழுத்து செல்லும் காட்சியை அருகிலிருந்த மக்கள் அதிர்ச்சியில் … Read more

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மீது புதிய வழக்கு

பெங்களூரு: கடந்த 2017ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத‌ ரூ.8.59 கோடி ரொக்கப்பணம், ஏராளமான சொத்து ஆவணங்கள், தங்க வைர நகைகள் சிக்கின‌. இதுதொடர்பாக, 2018ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, கடந்த ஜூலையில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இடைக்கால குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்நிலையில், செப்டம்பர் 19ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு டி.கே.சிவகுமாருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. … Read more

தேர்தல் நன்கொடை வரம்பை ரூ20 ஆயிரத்திலிருந்து ரூ2,000 ஆக்க வேண்டும்: தேர்தல் ஆணையம் கோரிக்கை

புதுடெல்லி: அரசியல் கட்சிகளுக்கு அனாமதேய நன்கொடை தொகையை ரூ20 ஆயிரத்தில் இருந்து ரூ2 ஆயிரமாக குறைக்க வேண்டும் என்று ஒன்றிய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையர் கடிதம் எழுதி உள்ளார். அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்கு தனிநபர்கள், நிறுவனங்கள் நன்கொடை அளிக்கின்றன. கட்சிகள்  ரூ20 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை நன்கொடையாக பெற்றால் அதுகுறித்த முழு விவரங்களை  தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதி தற்போது அமலில் உள்ளது. சில அரசியல் கட்சிகள் தங்களுக்கு … Read more

சண்டிகர் பல்கலை., மாணவிகள் விடுதி வீடியோ கசிவு விவகாரம்: என்ன நடந்தது?

சண்டிகர்: சண்டிகர் பல்கலைக்கழக மாணவிகள் வீடியோ வெளியான விவகாரத்தில் ஒரு மாணவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. பஞ்சாபின் மொகாலியில் சண்டிகர் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இந்த தனியார் பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கிப் படிக்கும் 60 மாணவிகள் குளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விடுதியில் மாணவிகள் குளிப்பதை எம்பிஏ மாணவி ஒருவர் வீடியோ எடுத்து தனது ஆண் நண்பருக்கு … Read more

சிபிஐ, அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதில் மோடிக்கு பங்கு இல்லை: மம்தா அரசு திடீர் தீர்மானம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றது. இவற்றில் பெரும்பாலானவற்றில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் பலர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிபிஐ, அமலாக்கத்துறையின் மிகுதியான செயல்பாடுகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் தொடர்பாக பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘ஒன்றிய அரசின் ஏஜென்சிகளின் செயல்களுக்கு பின்னால் பிரதமர் மோடி இருப்பதாக நான் நம்பவில்லை. ஆனால் பாஜ தலைவர்களின் ஒரு பகுதியினர் தங்களது நலன்களுக்காக அவற்றை … Read more

மதரஸாக்களில் ஆய்வு | உ.பி. முதல்வருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – முஸ்லிம்களுக்கு தாரூல் உலூம் வேண்டுகோள்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் உள்ள மதரஸாக்களில் ஆய்வு நடத்த கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டார். மதரஸாக்களின் வசதி, நிதி நிலை, மாணவர்களின் கல்வி நிலை, ஆசிரியர்களின் தகுதி, பாடப் பிரிவுகள் உள்ளிட்ட 11 முக்கிய விஷயங்கள் குறித்து ஆய்வு நடத்தி அக்டோபர் 15-ம் தேதிக்குள் ஆய்வுகளை முடித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் மாநில அரசு கூறியது. இதற்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, ஏஐஎம்ஐஎம் … Read more

ராஜஸ்தானில் கொடூரம்; காரில் நாயை கட்டி இழுத்து சென்ற மருத்துவர்

ஜோத்பூர்: ராஜஸ்தானில் அரசு மருத்துவர் ஒருவர் தனது காரில் நாயை கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தானில் அரசு மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவராக இருப்பவர் ராஜ்னீஸ் கால்வா. இவர் தனது காரில் நாய் ஒன்றை கயிறால் கட்டி காரை வேகமாக ஓட்டி செல்கிறார். இதனை பொதுமக்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வீடியோவில் காரின் வேகத்துக்கு நாயால் ஈடுகொடுக்க முடியவில்லை. மேலும் … Read more

குருவாயூர் கோயில் ரூ.5 கோடி நிவாரண நிதி வழங்கிய வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: கேரளாவில் 2018-ம் ஆண்டு வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, குருவாயூர் கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.5 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டது. ஆனால், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கியது சட்டவிரோதம் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், கோயில் நிதியை வழங்கியது சட்ட விரோதமானது என கடந்த 2020-ல் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து கோயில் நிர்வாகம் தாக்கல் செய்த வழக்கில், … Read more

உ.பி.யில் மோசமான சட்டம் ஒழுங்கு: சட்டமன்றம் நோக்கி அகிலேஷ் பேரணி

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவை போலீசார் பாதி வழியில் தடுத்து நிறுத்தினார்கள். உத்தரப்பிரதேச சட்டமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளன்றே சமாஜ்வாதி கட்சி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, மோசமான சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாதி கட்சி சார்பில் கண்டன பேரணி நடத்தப்பட்டது. சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ்யாதவ் தலைமையிலானோர் சட்டமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர். … Read more