வரலாற்றில் முதன்முறை! நீதிபதி நியமன பரிந்துரைகளை கொலிஜியத்திற்கு அனுப்பினார் தலைமை நீதிபதி

உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந்துரைகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு யு லலித் கொலிஜியம் அமைப்பின் மற்ற நீதிபதிகளுக்கு அனுப்பியுள்ளார். தலைமை நீதிபதி பரிந்துரைகளை கொலிஜியம் அமைப்பின் மற்ற நீதிபதிகளுக்கு அனுப்புவது இதுவே முதல் முறையாகும். உச்ச நீதிமன்றத்தின் மற்றும் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளை நியமிப்பது உச்சநீதிமன்ற கொலிஜியம் அமைப்பின் பரிந்துரை அடிப்படையாகும். இந்த அமைப்பில் தலைமை நீதிபதியும் அதற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளும் இடம் பிடிப்பார்கள். தற்பொழுது … Read more

இந்தியாவின் திறனை உலகிற்கு பறைசாற்றியுள்ளோம் – போர் ஹெலிகாப்டரில் பயணம் செய்த ராஜ்நாத் சிங் பெருமிதம்

ஜோத்பூர்: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘பிரசாந்த்’ போர் ஹெலிகாப்டர், விமானப் படையில் சேர்க்கப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார். நாட்டின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்) ‘பிரசாந்த்’ எனப்படும் இலகுரக போர் ஹெலிகாப்டர்களை தயாரித்துள்ளது. இது 5.8 டன் எடையுள்ள இரட்டை இன்ஜின் ஹெலிகாப்டர் ஆகும். ஏவுகணைகள் மற்றும் இதர ஆயுதங்களை இதில் பொருத்தி துல்லியத் தாக்குதலை நடத்தமுடியும். உயரமான மலைப் பகுதிகளில் பயன்படுத்தக்கூடிய வகையிலான … Read more

புதிய தேசிய கட்சியை நாளை அறிவிக்கிறார் தெலங்கானா முதல்வர்!

தெலங்கானா மாநில முதல்வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ், தனது தேசிய கட்சியின் பெயரை நாளை அறிவிக்கவுள்ளதாகவும், வருகிற 9ஆம் தேதி டெல்லியில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் இருந்து கடந்த 2014, ஜூன் 2ஆம் தேதி புதிய மாநிலமாக தெலங்கானா உதயமானது. புதிய மாநிலமான தெலங்கானாவின் முதல் முதல்வராக சந்திரசேகர் ராவ் பொறுப்பேற்றார். தெலங்கானா மாநிலம் உருவாக்கதுக்கு கடுமையான போராட்டங்களை முன்னெடுத்த அவரே தற்போதும் முதல்வராக பதவியில் … Read more

உத்தரகாசியில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் 21 பேரைக் காணவில்லை!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. மலையேறுபவர்களுக்கு வழக்கமாக பயிற்சி அளிக்கப்படும் திரௌபதி கா தண்டா (DKD) என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. நேரு இன்ஸ்டிடியூட் ஆஃப் மவுண்டேனிரிங் நிறுவனத்தில் பயிற்சி பெறும் 29 பேர் பயிற்சிக்கு சென்றனர். இதில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 21 பேரைக் காணவில்லை. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசி மீட்புப் பணியை துரிதப்படுத்த ராணுவத்தின் உதவியை நாடியுள்ளதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார். … Read more

உத்தராகண்டில் மலை சிகரத்தில் ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கிய 29 பேரில் 8 பேர் மீட்பு

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் திரௌபதியின் தண்டா 2 என்ற மலை சிகரத்தில் ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கிய 29 பேரில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளார் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்க விமானப்படையின் 2 சீட்டா ராக ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

கனடா, ஆஸி, என உலகின் பல நாடுகளில் அறிமுகமானது ட்விட்டரின் எடிட் வசதி! இந்தியாவில் எப்போது?

ட்விட்டர் நிறுவனம் கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் உள்ள அதிகாரப்பூர்வ பயனர்களுக்கு தங்கள் இடுகைகளை எடிட் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. விரைவில் அமெரிக்காவிற்கும் இச்சேவை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்திகள் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக்கும், ட்விட்டரும் முன்னணியில் இருக்கின்றன. பல்வேறு செய்திகளும் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி விடுகிறது. அவ்வாறு பரவும் செய்தியில் தவறு ஏதேனும் இருந்தால், ட்விட்டரில் அதை திருத்த (எடிட் செய்ய) இயலாது. மாறாக நாம் மொத்த பதிவையே நீக்க வேண்டியுள்ளது. … Read more

பிரதமருக்கு வந்த பரிசுப் பொருட்கள் ஏலம் – ரூ.49 லட்சத்துக்கு கேட்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் சிற்பம்

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு வந்த பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டு வரும் நிலையில் காசி விஸ்வநாதர் கோயில் சிற்பம் அதிகபட்சமாக ரூ.49.61 லட்சத்துக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி விழாக்களில் பங்கேற்ற போதும், முக்கிய பிரமுகர்களைச் சந்தித்த போதும் ஏராளமான பரிசுப் பொருட்கள் அவருக்கு வழங்கப்பட்டன. அவ்வாறு நினைவுப் பரிசுகளாக வழங்கப்பட்ட பொருட்களை ஆன்லைன் வழியாக (மின்னணு ஏலம்) ஏலத்தில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி அந்த பரிசு பொருட்கள் அனைத்தும் டெல்லியில் … Read more

'இந்தியாவை ''ஹிந்து ராஷ்டிரா'' என்று மோடி அறிவிப்பார்'… 'ஆயுதம் ஏந்த தயாராகுங்கள்'…

இந்தியாவின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 மே மாதம் நடக்கவுள்ளது. இந்நிலையில், 2024 தேர்தலில் பாஜக ஆட்சி அமைந்ததும் இந்திய அரசியல் சூழல் வெகுவாக மாற வாய்ப்புள்ளதாக எதிர்கட்சிகளை சேர்ந்தவர் கலக்கமாக பேசி வருகின்றனர். மேலும் அப்போது, இதுவரை நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு சட்டம் இருக்காது என்றும் மனுதர்மமே இனி அரசமைப்பு சட்டமாக இருக்கும் என சொல்வார்கள் என்றும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி இந்தியாவின் பெயரை ஹிந்து ராஷ்ட்ரியமாக அறிவித்தவுடன் … Read more

விவசாயிகள் போராட்டம் லக்கிம்பூர் கொலை: ஓராண்டு நிறைவு

பக்வாரா: லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், ஒன்றிய அமைச்சரை பதவி நீக்கக்கோரி விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.  உத்தரப் பிரதேசம் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவின் வருகைக்கு  எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதி, உபி மாநிலம் லக்கிம்பூரில்  விவசாயிகள் போராட்டம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது, ஒரு கார் போராட்ட  கூட்டத்தில் புகுந்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதன்பின் ஏற்பட்ட  வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனர். போராட்டத்தில் நுழைந்த கார் … Read more

ஜம்மு காஷ்மீரில் உயர் போலீஸ் அதிகாரி கொலை – இணைய சேவை துண்டிப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் சிறைத்துறை இயக்குநர் ஹேமந்த் லோஹியாவை, அவரது வீட்டு வேலையாள் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் லோஹியா, 1992-ஆம் ஆண்டு பேட்ச்-ஐ சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி. 57 வயதான இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் பதவி உயர்வு பெற்று ஜம்மு காஷ்மீரின் சிறைத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த திங்கள் கிழமை ஜம்முவின் உதயவாலாவில் உள்ள அவரது வீட்டில் மர்மான முறையில் கழுத்து அறுபட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். … Read more