திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் பத்திரிகையாளர் – கொலைசெய்து வெட்டி துண்டுகளாக்கிய நிரூபர்

தன்னை திருமணம் செய்யவேண்டுமானால் இந்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்ற காதலிமீது ஆத்திரமடைந்த பத்திரிகையாளர் அவரை கொலைசெய்து உடலை துண்டுகளாக்கியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஔரங்காபாத் மாவட்டத்தில் ஷியுர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 24 வயதான பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. கணவரை பிரிந்துவாழும் இவர் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது அவருக்கு ஃப்ரீலான்ஸ் நிருபரான சரூப் லாகே(35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன்பிறகு அடிக்கடி … Read more

ஒடிசா மாநிலத்தில் பெரு வெள்ளம் பெரு மழை ..! – மக்கள் கடும் அவதி..!!

வெள்ளப்பேரிடர் என்றாலே அது மக்களுக்கு பெரும் அவதியாகவே அனைத்து காலகட்டங்களிலும் விளங்குகிறது, இதனால் ஏற்ப்படும் பொருளாதார மற்றும் உயிர் சேதங்களால் மக்கள் பெரிதும் பாதிக்கபடுகின்றனர். இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் சில தினங்களாக கடும் வெள்ளம் ஏற்ப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் ஒடிசாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் பத்து மாவட்டங்களில் 4.67 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைப் படை தெரிவித்துள்ளது. 1,757 கிராமங்கள் இதனால் நீரில் மூழ்கியுள்ளன. இதுவரை சுமார் 60,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் … Read more

உடலில் தீ வைத்துக் கொண்டு கல்லூரி முதல்வரை கட்டிப்பிடித்த மாணவன்..! 3 பேர் உடல் கருகினர்..!

நாராயணா கல்விக்குழுமத்தின் ஜூனியர் கல்லூரியில் கல்வி கட்டணம் செலுத்தாததை காரணம் காட்டி 12 ஆம் வகுப்பு மாணவனுக்கு மாற்றுச் சான்றிதழ் மறுக்கப்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த மாணவர் உடலில் தீவைத்துக் கொண்டு கல்லூரி முதல்வரை கட்டிப்பிடித்துக் கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. ஒரு மாற்றுச் சான்றிதழுக்காக மூவர் உடல் கருகி மருத்துவமனை சென்ற பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. ஐதராபாத் அடுத்த ராமானந்தபூரில் நாராயணா கல்வி குழுமத்திற்கு சொந்தமான ஜூனியர் கல்லூரி ஒன்று செயல்பட்டு … Read more

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதாக வாய்ப்பு

டெல்லியில் உற்பத்தி வரி முறையை மாற்றியதால் மதுபான விற்பனையில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் மணீஷ் சிசோடியாவை கைது செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அண்மையில் டெல்லி 32 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மது விற்பனை செய்ய லைசென்ஸ் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. குறிப்பாக மது விற்பனை செய்ய லைசென்ஸ் … Read more

பாலிசிதாரர்கள் கவனத்திற்கு! காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க எல்.ஐ.சி.யின் புதிய திட்டம்!

காலாவதியாகிவிட்ட பாலிசிகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான திட்டத்தை எல்.ஐ.சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து இந்திய ஆயுள் காப்பீட்டு கழகமான எல்.ஐ.சி (LIC) வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், பிரீமியம் தொகை செலுத்தாமல் காலாவதியான பாலிசிகளை வாடிக்கையாளர்கள் மீண்டும் புதுப்பித்துக்கொள்வதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 17-ஆம் தேதி தொடங்கிய இந்த திட்டம் வரும் அக்டோபர் 21- ஆம் தேதி வரை இந்த சிறப்பு பாலிசி புதுப்பிப்பு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடைசி பிரீமியம் செலுத்தி 5 … Read more

குற்றம் சாட்டப்பட்டவர்களில் முதல் நபராக டெல்லி துணை முதல்வர்..!- சிபிஐ பரபரப்பு தகவல்..!!

டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ விசாரணை செய்துள்ளது. ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கல்வி திட்டம் குறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் இடம் பெற்ற பிறகுதான் சிபிஐ மணீஷ் சிசோடியாவின் வீட்டிற்கு வந்ததாக குற்றம் சாட்டினார்.சிபிஐ கடந்த ரெய்டுகளில் எதையும் கண்டுபிடிக்கவில்லை. இன்று எதையும் கண்டுபிடிக்க முடியாது என்று ஆம் ஆத்மி கட்சியின் பிரதிநிதி ராகவ் சத்தா கூறியிருந்தார்.. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 15 பெயர் பட்டியலில் முதல் இடத்தில் மனிஷ் … Read more

நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட இரட்டை கோபுர கட்டிடங்கள் வெடிவைத்து தகர்க்கப்பட உள்ளதால் மக்களை வெளியேற்ற நடவடிக்கை

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 100 மீட்டர் உயரம் கொண்ட சூப்பர் டெக் இரட்டை கோபுர கட்டிடங்கள் வெடிவைத்து தகர்க்கப்பட உள்ளதால், பாதுகாப்பு கருதி அருகில் வசிக்கும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட உள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவிற்கு இணங்க, வருகிற 28 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு 3500 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருள்களை பயன்படுத்தி இரு கட்டிடங்களும் தகர்க்கப்பட உள்ளன. அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு வீடுகளை விட்டு வெளியேறி விட்டு … Read more

தேசிய பாதுகாப்பு உத்திகள் குறித்து ஆலோசனை; மாநில காவல் துறைக்கு 5ஜி தொழில்நுட்பம்: டிஜிபிக்கள் மாநாட்டில் அமித் ஷா தகவல்

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு உத்திகள் குறித்த மாநாட்டில் மாநில காவல்துறை 5ஜி தொழில்நுட்பத்தை மாநில காவல்துறை திறன்பட பயன்படுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமிஷ் வலியுறுத்தினார். டெல்லியில் நடந்த தேசிய பாதுகாப்பு உத்திகள் (என்எஸ்எஸ்) தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ‘அனைத்து மாநிலங்களும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுத்து ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். எல்லைப் பகுதிகளில் நடைபெறும் மக்கள்தொகை … Read more

பீகார்: போலி காவல் நிலையம் நடத்தி வசூலை வாரிக் குவித்த ரவுடிக் கும்பல்? சிக்கியது எப்படி?

பீகார் மாநிலத்தில் 8 மாதங்களாக போலி காவல்நிலையம் நடத்தி வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். பீகார் மாநிலத்தில் பாங்கா மாவட்டத்தில் இயங்கி வந்த ரவுடிக் கும்பல் ஒன்று கொலை, கொள்ளை, கடத்தல், பணப்பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளது. இதையடுத்து ஒரு படி மேலே சென்று போலியாக ஒரு காவல் நிலையத்தையே நடத்திமக்களிடம் இருந்து பணம் பறித்து வசூல் வேட்டையை நடத்தியுள்ளது இந்த கும்பல். கடந்த ஜனவரி மாதம் பாங்கா நகரில் உள்ள … Read more

டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உட்பட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்தது சிபிஐ

டெல்லி : டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா  உட்பட 16 பேர் மீது  சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. புதிய காலால் வரிக் கொள்கையில் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என டெல்லி துணை நிலை ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா இல்லம் உட்பட 21 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.