2023ல் இந்தியாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; மோடியின் தொகுதிக்கு புதிய அங்கீகாரம்.! உஸ்பெகிஸ்தானில் தலைவர்கள் தீர்மானம்

புதுடெல்லி: அடுத்தாண்டு இந்தியாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதிக்கு புதிய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான்,  உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் உட்பட எட்டு நாடுகளை உள்ளடக்கிய பொருளாதார  மற்றும் பாதுகாப்பு கூட்டணி நாடுகளின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்  தலைமையகம் பீஜிங்கில் உள்ளது. இந்தாண்டுக்கான  ஷாங்காய் ஒத்துழைப்பு  அமைப்பின் மாநாடு உஸ்பெகிஸ்தானில் நடந்து முடிந்தது. அடுத்தாண்டு இந்த  மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. அதனால் ஷாங்காய் … Read more

பிரதமர் மோடியை பாராட்டிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன்

வனப்பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்காக பிரதமர் மோடியை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பீட்டர்சென் பாராட்டியுள்ளார். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சென் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை பாராட்டி பேசியுள்ளார். பாரதிய ஜனதா சார்பில் போடப்பட்ட ட்விட்டர் பதிவில், வனவிலங்கு பாதுகாப்பில் பிரதமர் மோடி மிகுந்த கவனம் செலுத்துவதாக ஹிந்தியில் ட்விட்டரில் பதிவு செய்து பாராட்டியுள்ளார். அந்த ட்விட்டர் பதிவின் பின்னூட்டத்தில் பேசியிருக்கும் பீட்டர்சன், ”வனவிலங்கு பாதுகாப்பில் பிரதமர் மோடியின் முன்னெடுப்புகள் பாராட்டுக்குரியது … Read more

பதவிக்கு என்று ஒரு மரியாதை உண்டு; வரம்பை மீறி செயல்படுகிறார் கவர்னர்.! கேரள முதல்வர் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் தன்னுடைய வரம்பை மீறி செயல்படுகிறார் என்று முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். கேரள அரசுக்கும், மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவி வருகிறது. பல்கலைக்கழகங்களில் கேரள அரசின் நியமனங்களை கவர்னர் எதிர்ப்பதுதான் இதற்கு முக்கிய காரணமாகும். இதைத் தொடர்ந்து பல்கலைக் கழகங்களில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் சமீபத்தில் கேரள சட்டசபையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த மசோதாவில் … Read more

காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த ராகுல் காந்தி ஒருவரே போதும் – அரவிந்த் கெஜ்ரிவால்

காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த ராகுல் காந்தி ஒருவரே போதும் என டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாரதிய ஜனதாவின் B அணி என்ற ஆம் ஆத்மி மீதான விமர்சனத்தை நிராகரிப்பதாகத் தெரிவித்தார். காங்கிரசை விட பாரதிய ஜனதாவை ஆம் ஆத்மி கட்சிதான் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்து வருவதாகவும், அதனால்தான் பல்வேறு சோதனைகளை சந்திந்து வருவதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்தார். மேலும் 2024 தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் … Read more

நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவில் விடுவித்தார் பிரதமர் மோடி

போபால்: ஆப்ரிக்க நாடான நமீபியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 8 சீட்டா வகை சிறுத்தைகளை பிரதமர் மோடி வனத்தில் விட்டார். தனது பிறந்த நாளையொட்டி குனோ தேசிய பூங்காவில் சிறுத்தைகளை வனத்தில் விடுவித்ததுடன் அவற்றை புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தார். செயற்கைகோள் மூலம் கண்காணிக்க சிறுத்தைகளில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளது.  

தெருநாய்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறதா கேரளா?: துப்பாக்கியுடன் பிள்ளைகளை பாதுகாப்பாக அழைத்து செல்லும் பெற்றோர்..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக தெருநாய் கடித்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். பலபேர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக குழந்தைகள் சாலையில் நடந்து செல்லும் போது தெருநாய் கடித்து குதறும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி வருகிறது.  தெருநாய் விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும், நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது. இந்நிலையில் தெரு நாய்களிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்க கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் குழந்தைகளின் தந்தை … Read more

விஸ்வரூபம் எடுத்த தெருநாய் தொல்லை… அதிரடி சன்மானம் அறிவித்த கேரள அரசு

கேரளாவில் தெருநாய்கள் தொல்லை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அவற்றைப் பிடித்து தருவோருக்கு 500 ரூபாய் வழங்கப்படுமென அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் தெருநாய் தாக்குதலால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். காசர்கோடு மாவட்டம் பேக்கல் பகுதியில், தெருநாய்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்க, ஏர்கன் வகை துப்பாக்கியை ஏந்தியபடியே ஒருவர், பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். கண்ணூரில் தெரு நாய்களிடம் இருந்து மக்களை பாதுகாக்குமாறு, மரத்தில் ஏறி அமர்ந்து ஒருவர் தனிநபர் போராட்டம் நடத்தினார். இதனிடையே, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் … Read more

'பிரிவினைவாத அரசியல் செய்கிறார்' – அமித் ஷா மீது கேசிஆர் அட்டாக்!

“மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரிவினைவாத அரசியல் செய்கிறார்,” என, தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் குற்றம் சாட்டி உள்ளார். நிஜாம் ஆட்சியாளர்கள் வசம் இருந்த ஹைதராபாத், 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி இந்தியாவுடன் இணைந்தது. இந்த தினத்தை ஹைதராபாத் விடுதலை தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய அரசு இந்தப் பெயரில் விழாவை கொண்டாடி வரும் நிலையில், மாநில அரசோ, தெலங்கானா தேசிய ஒருமைப்பாட்டு தினம் … Read more

எந்த துறையில் பெண்களின் பிரநிதித்துவம் அதிகரிக்கிறதோ, அத்துறையின் வெற்றி தானாக தீர்மானிக்கப்படும்: பிரதமர் மோடி பேச்சு

புதிய இந்தியாவில் பஞ்சாயத்து முதல் ஜனாதிபதி பதவி வரை பெண்களுக்கு பிரநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எந்த துறையில் பெண்களின் பிரநிதித்துவம் அதிகரிக்கிறதோ, அத்துறையின் வெற்றி தானாக தீர்மானிக்கப்படுகிறது. பெண்களால் வழி நடத்தப்பட்ட ஸ்வச் பாரத் அபியான் இதற்கு சிறந்த உதாரணம் என பேசினார். 

”ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள் சார்”- மோடிக்கு ஷாருக்கான் பிறந்தநாள் வாழ்த்து

“உங்களுக்கு வலிமையும்.. ஆரோக்கியமும் எப்போதும் இருக்க வேண்டும், ஒரு நாள் விடுமுறை எடுத்து உங்கள் பிறந்தநாளை கொண்டாடுங்கள் சார்” என்று பிரதமர் மோடிக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுவதையொட்டி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஷாருக்கான் தெரிவித்திருக்கும் ட்விட்டர் வாழ்த்து பதிவில், ” நம் நாடு மற்றும் நாட்டு மக்களின் நலனுக்கான உங்கள் அர்ப்பணிப்பு … Read more