ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் மரணம்…போலீஸ் விசாரணை தீவிரம்

(கோப்பு புகைப்படம்) ஜம்முவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இன்று காலை இவர்களின் உடலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இறந்தவர்கள் சகினா பேகம், அவரது மகள் நசீமா அக்தர், ருபீனா பானோ, மகன் சாஃபர் சலிம், இவர்களின் உறவினர்கள் நூர் உல் ஹபீப் மற்றும் சஜாத் அகமத் ஆகியோர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்களின் உடல், சித்ரா என்ற பகுதியிலுள்ள வீட்டிலிருந்த மீட்கப்பட்டு அப்பகுதியிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. மேற்கொண்டு … Read more

ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ஜாமியா மாணவருக்கு 30 நாள் நீதிமன்ற காவல்

புதுடெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர் மொஹ்சின் அகமதுவை 30 நாள் நீதிமன்ற காவலில் வைக்க என்ஐஏ நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு எலக்ட்ரிகல் இன்ஜினீயரிங் படித்து வந்தவர் மொஹ்சின் அகமது (22). பிஹார் தலைநகர் பாட்னாவை சேர்ந்த இவர், டெல்லி பட்லா ஹவுஸ் பகுதியில் தங்கியிருந்தார். பட்லா ஹவுசில் கடந்த 6-ம் தேதி என்ஐஏ நடத்திய சோதனையை தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டார். … Read more

ஜம்மு-காஷ்மீரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்பு: போலீசார் விசாரணை…

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் சிட்ரா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக கிடந்த 6 பேரின் மரணம் குறித்து ஜம்மு-காஷ்மீர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் தலைமை பொறுப்பு: மவுனம் காக்கும் ராகுல் காந்தி; தேர்தல் ஏற்பாட்டாளர்கள் குழப்பம்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்துவதற்கான காலம் நெருங்கிவரும் சூழலில் தலைவர் பதவிக்காக போட்டியிடுவது குறித்து ராகுல் காந்தி மவுனம் காப்பது தேர்தல் ஏற்பாட்டாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 21ல் இருந்து செப்டம்பர் 30க்குள் நடத்தி முடிக்கப்படும் என்று அக்கட்சி அறிவித்திருந்தது. ஆனால் தலைவர் பதவி போட்டி குறித்த தனது முடிவை ராகுல் காந்தி இன்னும் தெளிவுபடுத்தவில்லை. காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியை ஊக்குவித்து தலைவர் பதவிக்கு போட்டியிட வைப்பதற்கு பல்வேறு … Read more

காஷ்மீர் காங்கிரஸ் பிரச்சார குழு தலைவர் பதவியை ஏற்க குலாம் நபி ஆசாத் மறுப்பு: நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களில் ராஜினாமா செய்ததால் பரபரப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரசின் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களில், குலாம் நபி ஆசாத்  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். அகில இந்திய அரசியல் விவகாரக் குழு உறுப்பினர், காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர், முன்னாள் மத்திய மந்திரி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். காங்கிரசின் தலைமை மாற்றம் தொடர்பாக நீண்ட காலமாகவே அதிருப்தியில் இருந்து வருகிறார் குலாம் நபி ஆசாத். இதை வெளிப்படையாகவும் … Read more

கேரளா: ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல்

துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரங்களை குறைக்கும் மசோதாவிற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாநில பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள், அவரது செயல்பாடுகளை குறைக்கும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளதால், அடுத்து வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும். துணைவேந்தர்கள் நியமனத்திற்கான தேடுதல் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் இந்த மசோதா மூலம் மூன்றிலிருந்து 5 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு அக்னிபாதை வாய்ப்பு – ஹரியாணாவில் ஆள்சேர்ப்பு தொடக்கம்

புதுடெல்லி: இந்திய ராணுவத்தில் சேவையாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு நற்செய்தியாக இருப்பது அக்னிபாதை திட்டம். இதற்கான ஆள்சேர்ப்பு முகாம் ஹரியாணா மாநிலம் ஹிசாரில் நேற்று முன்தினம் தொடங்கியது. ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்காக மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் அக்னி பாதை திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கான மத்திய அமைச்சரவை அனுமதி கடந்த ஜுன் 14-ல் அளிக்கப்பட்டது. இந்திய ராணுவத்தில் தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படையில் சேர்வதற்காக இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஜுலை 24-ல் இந்திய விமானப்படைக்காக, … Read more

மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ராஜினாமா.. காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த ஷாக்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான குலாம் நபி ஆசாத். ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர், மத்திய அமைச்சர், இந்திய காங்கிரஸ் கட்சியின் அரசிய விவகாரக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பிறகு அங்கு சட்டமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிரமாக பணி செய்து வருகிறது. அதேநேரத்தில் அரசியல் கட்சிகளும் தங்களது கட்சியின் பலத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு யூகங்களை கையாண்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியில் … Read more

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியாவில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதிக்கொண்ட விபத்தில் 50 பேர் காயம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியாவில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதிக்கொண்ட விபத்தில் 50 பேர் காயம் அடைந்தனர். சிக்னல் கோளாறால் ஏற்பட்ட விபத்தில் நல்வாய்ப்பாக யாரும் இறக்கவில்லை; காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களில் பதவியை ராஜினாமா செய்த குலாம் நபி ஆசாத்

ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்ட குலாம் நபி ஆசாத், அடுத்த சில மணிநேரத்திலேயே தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியில் புதிதாக பிரசாரக் குழு, அரசியல் விவகாரக் குழு, தேர்தல் அறிக்கைக் குழு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உருவாக்கப்பட்டன. இதில் பிரசாரக் குழு தலைவராக குலாம் நபி ஆசாத்தை கட்சியின் தேசிய தலைவர் சோனியாகாந்தி நேற்று நியமித்தார். ஆனால் நியமித்த சில மணி நேரத்தில் குலாம் நபி ஆசாத் அப்பதவியில் இருந்து விலகினார். அதோடு மாநில அரசியல் விவகாரக் குழுவில் இருந்தும் … Read more