அதிவேக 5ஜி சேவை இன்று தொடக்கம்; ஜனாதிபதி முர்முவின் பள்ளிக்கு அடித்தது யோகம்.! ஒடிசாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் மகிழ்ச்சி

மயூர்பஞ்ச்: இன்று முதல் 5ஜி சேவை தொடங்கிய நிலையில் ஜனாதிபதி முர்முவின் பள்ளிக்கு இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஒடிசாவில் ஆசிரியர்களும், மாணவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்திய மொபைல் காங்கிரஸின் தொடக்க விழாவில் பங்ேகற்ற பிரதமர் மோடி, இன்று 5ஜி தொலைதொடர்பு சேவையை  தொடங்கிவைத்தார். இந்த சேவை படிப்படியாக அடுத்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் மறைந்த கணவருக்காக நிறுவப்பட்ட எஸ்எல்எஸ் ரெசிடென்ஷியல் பள்ளிக்கு 5ஜி … Read more

பேருந்தில் பயணிகளை தகாத வார்த்தையால் திட்டிய பெண் நடத்துனர்! சர்ச்சையைக் கிளப்பிய வீடியோ!

கேரள அரசு  பேருந்தில் ஏறி இருந்த பயணிகளை தகாத வார்த்தையால் திட்டும் பெண் நடத்துனரின் வீடியோ வெளியாகியுள்ளது. கேரள அரசுப் பேருந்து ஒன்று இன்று மதியம் 12 மணிக்கு திருவனந்தபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த பேருந்தில் 15க்கும்  மேற்பட்ட பயணிகள் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த பேருந்தின் பெண் நடத்துனர் தாம் சாப்பிடப் போவதாக வும் எனவே பயணிகள் அனைவரையும் கீழே இறங்குமாறும் கூறியுள்ளார். அப்போது பேருந்தில் இருந்த ஒரு சிலர் பேருந்தில் உங்களுக்கு … Read more

மூத்த அரசியல் தலைவர் காலமானார்!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார். அவருக்கு வயது 69. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான கொடியேரி பாலகிருஷ்ணன் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் காரணமாக ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தான் பொறுப்பு வகித்த கேரள மாநில செயலாளர் பதவியிலிருந்து … Read more

OH MY GOD..! குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் – குழந்தைகள் உட்பட 25 பேர் பலியான சோகம்!

உத்தர பிரதேச மாநிலத்தில், குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், குழந்தைகள் உட்பட 25 பேர் பலியாகி உள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தில், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றுக்கு சென்று விட்டு, சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள், கான்பூர் மாவட்டத்திற்கு, டிராக்டர் இழுவை வாகனம் மூலம் வந்து கொண்டிருந்தனர். கட்டம்பூர் என்ற இடத்தில் டிராக்டர் இழுவை வாகனம் வந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை திடீரென்று இழந்து சாலையோரத்தில் இருந்த குளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், … Read more

வெற்றிக்கனியை ருசிக்கப் போவது யார்?: காங். தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி..!!

டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டை சேர்ந்த கே.என்.திரிபாதியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வேட்புமனுக்களை திரும்பப்பெற அக்டோபர் 8ம் தேதி கடைசி நாள் ஆகும். மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை கார்கே ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக மாநிலங்களை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு … Read more

இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி!!

மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு ஆளுநராக இருக்கக்கூடிய இல.கணேசன் இன்று காலை சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் இதயத்துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக … Read more

இந்தியாவில் 23.28 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்!!

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 23 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகள் கடந்த ஆண்டு அமலுக்கு வந்தது. அதன்படி, 50 லட்சத்துக்கும் அதிகமான பயனாளர்களை கொண்ட சமூக வலைதள நிறுவனங்கள், புகார்கள் குறித்தும், அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் மாதந்தோறும் அறிக்கை வெளியிட வேண்டும். அதன்படி, புகார்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வாட்ஸ்அப் நிர்வாகம் மாதந்தோறும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், … Read more

சோனியா காந்தி ஆதரவு?; சசி தரூர் பரபரப்பு பேட்டி!

காங்கிரஸ் கட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக தலைவர் இல்லாததால் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்தாலும் தலைவர் என்கிற முறையில் இருந்து தொண்டர்களை வழிநடத்த தலைவரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே வருகின்ற 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளதை அடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வது அத்தியாவசியமான ஒன்றாக கட்சியினர் கருதுகின்றனர். இதன் காரணமாக, காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான … Read more

திருப்பதி கோயிலில் 5ம் நாள் பிரம்மோற்சவம்; மோகினி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி பவனி

திருமலை’ திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான இன்று காலை மலையப்பசுவாமி மோகினி அலங்காரத்தில் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை இன்றிரவு நடைபெறுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதன்படி பிரம்மோற்சவத்தின் 4ம் நாளான நேற்றிரவு தங்க சர்வ பூபால … Read more

இருளில் மூழ்கிய புதுச்சேரி – மக்கள் போராட்டம்!!

புதுச்சேரி முழுவதும் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் இன்று 4 வது நாளாக ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நகரம் மற்றும் கிராமப்புறம் முழுவதுமாக 2 மணி நேரத்திற்கும் மேலாக ஏற்பட்டள்ள மின்வெட்டு காரணமாக புதுச்சேரி இருளில் மூழ்கி உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக மின்துறை … Read more