கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவின் முதுகை உடைக்கிறது – ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 4 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடனான சந்திப்பில் கிழக்கு ஆசியப் பிரச்சினைகள், உக்ரைன் போர், பரஸ்பர நலத் திட்டங்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.  இந்த சந்திப்பையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், ‘’ ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. வளர்ந்து வரும் நாடான எங்களின் தனிநபர் பொருளாதாரம் 2,000 டாலர்கள் தான். … Read more

RSS அமைப்பையும் தடை செய்யுங்க..! – லாலு பிரசாத் ஆவேசம்!

பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்தது போல், ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் தடை செய்ய வேண்டும் என, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்து உள்ளார். பி.எப்.ஐ. எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு கடந்த 2006 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் துவக்கப்பட்டது. இது டெல்லியை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வருகிறது. அண்மையில், பி.எப்.ஐ. அமைப்பின் தலைவர்கள், துணை தலைவர்கள், … Read more

ரயில்வே ஊழியர்களுக்கு GOOD News! 78 நாள் போனஸ் வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் செய்தி: விஜயதசமி பண்டிகைக்கு முன்னதாக, 2021-22 ஆம் ஆண்டிற்கான ரயில்வே ஊழியர்களுக்கான 78 நாள் திறமைக்கு ஏற்ற வகையில் போனஸ் வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சிசிஇஏ) ஒப்புதல் அளித்துள்ளதாக ஜீ பிசினஸ் நியூஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், சுமார் 11 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள். இதனால், இந்திய ரயில்வேக்கு 2,000 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். இது தவிர, மேலும் ஒரு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக ஏழாவது ஊதியக் … Read more

ஒன்றிய அரசு ஊழியர்கள் 4 விழுக்காடு அகவிலைப்படியை உயர்த்தி ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி : ஒன்றிய அரசு ஊழியர்கள் 4 விழுக்காடு அகவிலைப்படியை உயர்த்தி ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜூலை மாதம் முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. டெல்லி, மும்பை, அகமபாத் ரயில் நிலையங்களை மேம்படுத்த 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய பங்குச் சந்தை ஊழல் வழக்கில் கைதான சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன்!

தேசியப் பங்குச் சந்தை ஊழியர்களின் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்ட விவகாரத்தில் அதன் முன்னாள் இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர்நீதிமன்றம். 2013ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் இயக்குனராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணனை, தேசியப் பங்குச் சந்தையின் ரகசியத் தகவல்களை முன்கூட்டியே பங்கு நிறுவனங்களின் சர்வரிலிருந்து எடுக்க உதவியதாகக் கூறப்படும் ‘கோ-லொக்கேஷன்’ ஊழல் தொடர்பான வழக்கில் கைது செய்து விசாரித்து வருகிறது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய விசாரணை அமைப்புகள். … Read more

தலித் இளைஞர் மீது தாக்குதல்..!! நாற்காலியில் அமர்ந்தது ஒரு குற்றமா ?

மத்தியபிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் பஞ்சாயத்து அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் கபில்தரா யோஜனா திட்டத்தின் பயனாளர்கள் பங்கேற்றனர். அந்த கூட்டத்தில் ஹல்லு அஹிர்வார் (35) என்பவர் கலந்து கொண்டார். அப்போது அங்கு சென்ற அவர் நாற்காலியில் அமர்ந்துள்ளார். இதை கண்ட ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ரோகித்சிங், தாக்கூர் ஆகியோர் ஹல்லுவை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினார்கள். இதில் ஹல்லுவுக்கு காயம் ஏற்பட்டது. பொது மக்கள் விலக்கிவிட்ட பிறகு ஹல்லு அங்கிருந்து சென்றார். பின்னர் … Read more

மாதிரிகளை உடனே அனுப்புங்க.. தமிழகத்திற்கு மத்திய அரசு உத்தரவு..!

2023-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் கலந்துகொள்ளும் அலங்கார ஊர்திகளின் மாதிரி மற்றும் தகவல்களை வரும் 30-ம் தேதிக்குள் அனுப்ப தமிழகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 26-ம் தேதி குடியரசு தினவிழா நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் நடக்கும் அணிவகுப்பும், ராணுவத்தின் இசைக் குழுக்களும் மிகவும் புகழ்பெற்றவை. முப்படைகளின் அணிவகுப்பும், பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும். மேலும், பல்வேறு துறைகள் மற்றும் … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்: மத்திய அரசு அறிவிப்பு!

பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலம் ஐந்து கிலோ உணவு பொருள்கள் இலவசமாக வழங்கும் திட்டம் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 2020 மார்ச் மாதம் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், பொது மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏழை, எளிய மக்கள், தினக்கூலி வேலை செய்பவர்கள் வருவாய் இல்லாமல் பாதிப்புக்கு உள்ளாகினர். இதையடுத்து, பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், ஏற்கனவே … Read more

இலவச உணவு தானியங்கள்: ரேஷன் அட்டை தாரர்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு

PMGKAY: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி மோடி அரசிடமிருந்து வந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை (செப்டம்பர் 28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் டிசம்பர் வரை இலவச ரேஷன் பலனைப் பெறுவார்கள். பி.எம்.ஜி.கே.ஒய் திட்டம் டிசம்பர் 2022 வரை நீட்டிப்பு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா … Read more

பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமின்: டெல்லி ஐகோர்ட் உத்தரவு

டெல்லி: பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. 2013 முதல் 2016 வரை தேசிய பங்குச்சந்தையின் தலைமை நிர்வாகியாக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, கோ லொக்கேசன் முறையில் இமாலய முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. பங்குச்சந்தையை பற்றி அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்ரமணியனை ஆலோசகராக நியமித்து அவருக்கு அளவுக்கு அதிகமான சலுகைகள் வழங்கியது சர்ச்சை கிளப்பின. கோ லொக்கேசன் முறைகேட்டில் பல கோடி ரூபாய் … Read more