காலில் கொப்புளங்கள் ஏற்பட்டாலும் நடைபயணத்தை நிறுத்த மாட்டோம் – ராகுல் காந்தி தகவல்

திருவனந்தபுரம்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ‘இந்தியாவை இணைப்போம்’ (பாரத் ஜோடோ) என்ற பெயரில் கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் நடைபயணத்தை தொடங்கினார். இதில் ராகுல் காந்தியுடன் கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்கின்றனர். 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக காஷ்மீரில் இந்த பயணம் நிறைவடைய உள்ளது. சுமார் 3,500 கி.மீ. தூரம் கொண்ட இந்த பயணம் 150 நாட்களுக்கு நடைபெறும். தமிழகத்தில் 4 நாட்கள் யாத்திரையை முடித்துக் கொண்ட ராகுல், கடந்த … Read more

ராகுல் காந்தி நாளை திடீர் ஓய்வு..! – கேரளாவில் நாளை காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்..?

தேச ஒற்றுமை பயணம் எனும் பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியின் கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளதால், நாளை அவர் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘தேச ஒற்றுமை பயணம் ’ என்ற பெயரில் பாத யாத்திரையை மேற்கொள்கிறார்.நாடு முழுவதும் 12 மாநிலங்கள் வழியாக 150 நாட்கள் 3, 570 கிலோ மீட்டர் தூரத்திற்கு யாத்திரையை மேற்கொள்கிறார்.இந்த யாத்திரையானதுதிருவனந்தபுரம், கொச்சி, நிலம்பூர், மைசூரு, … Read more

வெளிநாட்டில் இருக்கும் இந்திய அரசு அலுவலகங்களில் இந்தி கட்டாயம்; ஒன்றிய அரசின் உத்தரவால் மீண்டும் சர்ச்சை

புதுடெல்லி: வௌிநாடுகளில் இருக்கும் இந்திய அரசு அலுவலகங்களில் இந்தியை ஊக்குவிக்க குழு அமைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நாடு முழுவதும் இந்தி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தி மொழி திணிப்பு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்தி மொழியை தேசிய மொழியாக ஏற்று அனைத்து மாநிலங்களும் கற்க வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேசியிருந்தார். இதற்கு தமிழ்நாடு, … Read more

மகாராஷ்டிரா: சாமியார்களை கண்மூடித்தனமாக அடித்து உதைத்த கிராம மக்கள்! காரணம் என்ன?

மகாராஷ்டிராவில் சிறார்களைக் கடத்துவதாகக் கருதி 4 சாமியார்களை பொதுமக்கள் கண்மூடித்தனமாக தாக்கினர். உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவிலிருந்து வந்த அந்த சாமியார்கள், மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி (Sangli) மாவட்டம் லவங்கா என்ற கிராமத்தில் உள்ள கோவிலுக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்து பிற கோவில்களுக்கு புறப்பட்ட சாமியார்கள், தங்களுக்கு பணிவிடை செய்ய சிறார்களை அனுப்புமாறு கிராமத்தினரிடம் கேட்டுள்ளனர். இதில் ஆவேசமுற்ற கிராமத்தினர், உடல் உறுப்புகளுக்காக சிறார்களை சாமியார்கள் கடத்த நினைப்பதாகக் கருதி அவர்களை வாகனத்திலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துப் போட்டு தாக்கினர். பெல்ட்டைக் … Read more

தெலங்கானாவில் மின்கசிவால் தீ விபத்து – உயிரிழந்தவர்களில் இருவர் சென்னையை சேர்ந்தவர்கள்

ஹைதராபாத்: தெலங்கானாவில் மின் வாகன ஷோரூமில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சென்னையைச் சேர்ந்த இருவர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத் நகரின் செகந்திராபாத் ரயில் நிலையம் சாலையில், பாஸ்போர்ட் அலுவலகம் எதிரே 5 அடுக்கு மாடி கட்டிடம் உள்ளது. இங்கு தரைத்தளத்தில் பேட்டரி சார்ஜிங் நிலையமும், முதல் தளத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோ ரூம் ஒன்றும் இயங்கி வருகிறது. அதற்கு … Read more

ஜி -20 மாநாடு அறிவிப்பு : – முதன் முறையாக தலைமை ஏற்கும் இந்தியா..!

உலகின் டாப் 20 நாடுகளின் சங்கமம் தான் இந்த ஜி-20. ஒவ்வொரு ஆண்டும் இந்த டாப் 20 நாடுகளும் சந்தித்து கூட்டம் நடத்துவார்கள் . இந்த 20 நாடுகளின் பொருளாதாரம் தான் ஒட்டு மொத்த உலக பொருளாதாரத்துக்கு சமமாக இருக்கும். உலகின் மொத்த ஜிடிபியில், 85 சதவிகித ஜிடிபி இந்த 20 நாடுகளுக்குச் சொந்தமானது. உலகின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 65 சதவிகித மக்கள் இந்த 20 நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி-20 மாநாட்டினை … Read more

எலிசபெத் ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்கும், இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிப்பதற்காகவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 17-19 தேதிகளில் லண்டன், பிரிட்டன் செல்கிறார். இங்கிலாந்தின் முன்னாள் மகாராணியும் காமன்வெல்த் நாடுகளின் தலைவருமான ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8 ஆம் தேதி காலமானார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். … Read more

குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து 4 உ.பி சாதுக்களுக்கு தர்மஅடி

சாங்லி: உத்தரபிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்த 4 சாதுக்கள், மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டம் லவாங்கா வழியாக பந்தர்பூருக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர். அவர்கள் சாங்லி மாவட்டம் வழியாக காரில் சென்ற போது, அவ்வழியாக சென்ற இளைஞனிடம் பந்தர்பூருக்கு செல்ல வழி கேட்டனர். அந்த இளைஞன், அவர்களை குழந்தைகளை கடத்தி செல்லும் கும்பல் என கருதி, அப்பகுதி மக்களை திரட்டினார். சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் 4 சாதுக்களையும் பிடித்து விசாரித்தனர். அவர்களின் பதிலில் திருப்தி அடையாத அப்பகுதி மக்கள் … Read more

பெங்களூருவில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் இடிக்கப்படும் – கர்நாடக வருவாய் துறை அமைச்சர் அசோகா எச்சரிக்கை

பெங்களூரு: பெங்களூருவில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் நொய்டாவில் இரட்டை கோபுர கட்டிடம் இடிக்கப்பட்டதைப் போல தரைமட்டமாக்க‌ப்படும் என கர்நாடக வருவாய் துறை அமைச்சர் அசோகா எச்சரிக்கை விடுத்துள்ளார். பெங்களூருவில் கடந்த வாரம் பெய்த கனமழையால் வரலாறு காணாத வகையில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மகாதேவபுரா, பெல்லந்தூர், மாரத்தஹள்ளி, சார்ஜாபுரா ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளிலும், நிறுவனங்களிலும் மழை நீர் புகுந்ததால் ரூ.500 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டது. நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியதே வெள்ள … Read more

Hindi Diwas: 'ஹிந்தி போட்டியாளர் அல்ல; அனைத்து மொழிகளின் நண்பன்' – உருகிய அமித் ஷா!

ஹிந்தி மொழி போட்டி மொழி இல்லை என்றும், அனைத்து பிராந்திய மொழிகளின் நண்பன் என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார். குஜராத் மாநிலம், சூரத்தில் நடந்த அகில இந்திய அதிகாரப்பூர்வ மொழி மாநாட்டில், மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான அமித் ஷா கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது: நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்து கொள்ள நமது அலுவல் மொழியான ஹிந்தியை நாம் கற்க வேண்டும். … Read more