நியூசிலாந்தில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ. 5 லட்சம் ‘ஆட்டை’ போட்ட நைஜீரியன் கைது; கோவா போலீஸ் அதிரடி

பனாஜி: நியூசிலாந்தில் வேலைவாங்கித் தருவதாக கூறி ரூ. 5 லட்சம் மோசடி செய்த நைஜீரியனை கோவா போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கோவாவை சேர்ந்த பட்டதாரி இளைஞர் வெளிநாடுகளில் தேடி வந்தார். அவர் ஆன்லைன் தனியார் வேலைவாய்ப்பு மையத்தில் தனது வேலைக்கான விபரங்களை பதிவு செய்திருந்தார். அவரை தொடர்பு கொண்ட நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இபியானி காலின்ஸ் சிக்வெண்டு (39) என்பவர், நியூசிலாந்து நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினார். அதற்காக முன்பதிவு கட்டணமாக சில லட்சம் … Read more

நடிகை சோனாலி போகட் மரண வழக்கை தேவைப்பட்டால் சிபிஐயிடம் ஒப்படைப்பேன்: கோவா முதல்வர் தகவல்

பனாஜி: நடிகை சோனாலி போகட் மரண வழக்கை, தேவைப்பட்டால் சிபிஐ வசம் ஒப்படைக்கத் தயார் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். பாஜக பிரமுகரும் நடிகையுமான சோனாலி போகட் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 22-ம் தேதி கோவா சென்றிருந்தார். அடுத்த நாள் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். 2 பேர் கைது இதனிடையே, அவரது உடலில்காயங்கள் இருந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரது உதவியாளர் மற்றும் அவரது நண்பர் என 2 … Read more

ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பாக புதிய விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பாக புதிய விசாரணை நடத்த கோரிய பொதுநல மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளின் மூலம், எந்த வழக்கையும் அதிகார வரம்பைப் பயன்படுத்த முடியாது என தலைமை நீதிபதி யு.யு. லலித் மற்றும் நீதிபதி எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. 2016 இந்திய-பிரான்ஸ் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விமான உற்பத்தியாளர் டசால்ட் ஏவியேஷன் இந்திய நிறுவனத்திற்கு … Read more

என்.எஸ்.இ முறைகேடு: சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி

தேசிய பங்குச் சந்தை ஊழியர்களின் செல்போன்கள் ஓட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தில் அதன் முன்னாள் இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் இயக்குனராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணனை, தேசியப் பங்குச் சந்தையின் ரகசிய தகவல்களை முன்கூட்டியே பங்கு நிறுவனங்களின் சர்வரிலிருந்து எடுக்க உதவியதாகக் கூறப்படும் ‘கோ-லொக்கேஷன்’ ஊழல் தொடர்பான வழக்கில் கைது செய்து விசாரித்து வருகிறது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ … Read more

சொல் வேறு செயல் வேறு இதுவே பிரதமர் மோடி குணம்: ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று கூறியதாவது. 75-வது ஆண்டு சுதந்திர அமுதப் பெருவிழாவின் தொடர்ச்சியாக குஜராத் சபர்மதி ஆற்றங்கரையில் சனிக்கிழமை நடைபெற்ற காதி நிகழ்ச்சியில் பேசியபிரதமர் மோடி “காதி, தற்சார்பு இந்தியா கனவை அடைவதற்கான உத்வேகத்தின் ஆதாரம்” என்று தெரிவித்துள்ளார். இது அவரின் சொல் ஒன்று செயல் வேறொன்று குணத்தை எடுத்துக்காட்டுகிறது. தேசத்துக்கு காதி, ஆனால் தேசியக் கொடிக்கு சீன பாலியெஸ்டர். பிரதமர் மோடியிடம் சொல்லும், செயலும் எப்போதும் ஒரே விதமாக … Read more

புதுச்சேரியில் 90 முதல் 100 வயதுள்ள முதியவர்களுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!

புதுச்சேரியில் 90 முதல் 100 வயது உள்ள முதியவர்களுக்கு 4 ஆயிரம் ரூபாயும், 100 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கு 7 ஆயிரம் ரூபாயும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், முதல்வர் ரங்கசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், கடலில் மீன்பிடிக்கும் போது உயிரிழக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அவர் … Read more

நீட் முதுநிலை கலந்தாய்வுக்கு தடையில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அறிவிப்பு

டெல்லி: நீட் முதுநிலை கலந்தாய்வுக்கு தடையில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அறிவித்தார். நீதிமன்ற உத்தரவை அடுத்து நீட் முதுநிலை கலந்தாய்வு திட்டமிட்டபடி செப்.1-ம் தேதி நடைபெற உள்ளது.  

'அந்தமான் சிறையிலிருந்து பறவையில் பறந்தார் சாவர்க்கர்' – கர்நாடக 8ஆம் வகுப்பு பாடப் புத்தக தகவலால் சர்ச்சை

பெங்களூரு: கர்நாடக மாநிலம் 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் வி.டி.சாவர்க்கர் பற்றி ஒரு கருத்து இடம்பெற்றுள்ளது. அந்தக் கருத்தால் புதிய சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. அந்தப் பாடப் புத்தகத்தில் வி.டி.சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்தபோது சிறைக்கு வந்த பறவையின் மீதேறி தன் தாய்நாட்டை தரிசிக்க செல்வார் என்று குறிப்பிடப்பட்டிக்கிறது. குறிப்பிட்ட அந்த வாக்கியத்தில் இடம்பெற்றிருந்த தகவல்: “சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறையில் ஒரு சாவித் துவாரம் கூட இல்லை. ஆனால் அந்த அறைக்கு அன்றாடம் புல்புல் பறவைகள் வந்து செல்வதுண்டு. சாவர்க்கர் … Read more

சிபிஐ, அமலாக்கத்துறை ரெய்டில் அரசியல்: எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு!

ஒன்றிய அரசின் சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய ஏஜென்சிகள் பல்வேறு மாநிலங்களில் ரெய்டுகளை நடத்தி வருகின்றன. ஆனால் இந்த ரெய்டுகள் பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் நடப்பதில்லை என்ற கேள்வி நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. பாஜக அல்லாத பிற கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் அரிசி ஆலைகள், குடோன்கள், குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தப்படுகிறது. ஒரு சில சந்தர்ப்பங்களில், இந்த ரெய்டுகள் நடத்தப்படும் நேரம் அரசியல் உள்நோக்கத்துடன் இது நடைபெறுகிறதா என்ற … Read more

பறவையின் மீது ஏறி பறந்து வந்தாரா சாவர்க்கர்? கர்நாடக பாடநூலால் எழுந்த சர்ச்சை

சாவர்க்கரை சுதந்திரப் போராட்ட வீரராக பா.ஜ.க தொடர்ந்து  முன்னிலைப்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் வரலாற்றை மாற்ற நினைப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்நாடக அரசு வெளியிட்ட விளம்பரத்தில் சாவர்க்கரின் புகைப்படம் இடம் பெற்றிருந்ததோடு, நாட்டின் முதல் பிரதமரான நேருவின் புகைப்படம் இடம் பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதனைத் தொடர்ந்து, ஷிவமோகாவில் அமீர் அகமது நகரில் உள்ள பள்ளிவாசல் அருகில், சாவர்க்கரின் பதாகைகளை வைக்க முயன்றபோது எழுந்த மோதலில் வன்முறை … Read more