பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம்

டெல்லி: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு 5 ஆண்டு தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் மீதான தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்ததாகவும், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி மற்றும் ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தது. இது, தொடர்பாக 15 மாநிலங்களில் … Read more

`சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபாடு’- பி.எஃப்.ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்தது அரசு!

பிஎஃப்ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க இரண்டு கட்டங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்துள்ள நிலையில், தேச விரோத நடவடிக்கைகள் மற்றும் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக ஆதாரங்கள் கிட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வன்முறையான பல போராட்டங்களை நடத்தியது மற்றும் மதக் கலவரங்களை தூண்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மீது வைக்கப்படுகிறது. இந்நிலையில் இவற்றின் காரணமாக பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு 5 ஆண்டுகள் தடை … Read more

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை – உடனடி அமல் என மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு ஐந்தாண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. பல்வேறு கலவரங்கள், படுகொலைகளில் இந்த அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன்பேரில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் 15 மாநிலங்களில் … Read more

ஆணையருக்கு அடி உதை ஜெய்ப்பூரில் பாஜ மேயர் பதவி பறிப்பு

ஜெய்ப்பூர்: முன்னாள் ஆணையர் யாக்யா மித்ரா சிங்கை தாக்கியது நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, ஜெய்ப்பூர் மாநகராட்சியின் பாஜ மேயர் சவுமியா குர்ஜாரின் பதவியை ராஜஸ்தான் அரசு பறித்துள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்  தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஆனால், ஜெய்ப்பூர் மாநகராட்சியின் மேயராக பாஜ.வை சேர்ந்த சவுமியா குர்ஜார் இருந்தார். இந்த அலுவலகத்தில் கடந்தாண்டு ஜூன் 4ம் தேதி மேயர் சவுமியா குர்ஜாருக்கும் அப்போதைய மாநகராட்சி ஆணையர் யாக்யா மித்ரா சிங் தியோவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. … Read more

பெங்களூருவில் ராக்கெட் இன்ஜின் உற்பத்தி மையத்தை திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல் நிறுவனத்தில் ரூ.208 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கிரையோஜெனிக் ராக்கெட் இன்ஜின் உற்பத்தி மையத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று திறந்து வைத்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ), எச்.ஏ.எல். நிறுவனத்தில் கிரையோஜெனிக் ராக்கெட் இன்ஜின் உற்பத்தி மையத்தை அமைத்து கொடுப்பது தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கடந்த 2013-ம் ஆண்டு செய்திருந்தது. இதையடுத்து பெங்களூரு எச்.ஏ.எல் நிறுவனத்தில் 4,500 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.208 கோடி செலவில் ராக்கெட் … Read more

பெங்களூரு எச்ஏஎல் நிறுவனத்தில் கிரையோஜெனிக் இன்ஜின் உற்பத்தி: ஜனாதிபதி தொடங்கி வைத்தார்

பெங்களூரு: பெங்களூரு எச்ஏஎல் நிறுவனத்தில் கிரையோஜெனிக் இன்ஜின் உற்பத்தி வசதியை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று தொடங்கி வைத்தார். பெங்களூரு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுனவனத்தில் இயங்கும் ஏரோஸ்பேஸ் பிரிவில் கிரையோஜெனிக் இன்ஜின்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் 2013ம் ஆண்டு கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் 2016ம் ஆண்டு ரூ.208 கோடி முதலீடாக திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி 4500 சதுர மீட்டர் பரப்பளவில் 70க்கும் மேற்பட்ட உயர்தர கருவிகள் மற்றும் பரிசோதனை வசதிகள் அடங்கிய கிரையோஜெனிக் மற்றும் செமி கிரையோஜெனிக் இன்ஜின்கள் … Read more

உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக அரசியல் சாசன அமர்வு வழக்கு விசாரணையின் நேரலை ஒளிபரப்பை தொடங்கியது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: அரசியல் சாசன அமர்வில் நடைபெறும் வழக்கு விசாரணையின் நேரலை ஒளிபரப்பை உச்ச நீதிமன்றம் நேற்று தொடங்கியது. உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வில் நடைபெறும் அனைத்து வழக்கு விசாரணையையும் நேரலை ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி ஸ்வப்னில் திரிபாதி என்பவர் வழக்கு தொடுத்தார். இதன் மூலம் பொதுமக்கள் நலன் சார்ந்த வழக்குகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முடியும் என மனுவில் கூறியிருந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான … Read more

உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு தத்தா பரிந்துரை

புதுடெல்லி: கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நீதிபதி தீபன்கர் தத்தா கடந்த 2006ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி நியமிக்கப்பட்டார். 2020ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி அவர் மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார். இந்நிலையில், தீபன்கர் தத்தாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் நடந்த கொலிஜியம் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 34. தற்போது … Read more

ம.பி.யில் கர்பா நடன நிகழ்ச்சிக்கு வருவோரின் அடையாள அட்டையை பரிசோதிக்க உத்தரவு

போபால்: இந்து பெண்களை, சிறுபான்மையின இளைஞர்கள் காதலித்து, அவர்களை திருமணத்தின்போது மதம் மாற்றுவதாக வலதுசாரி தலைவர்கள் கூறுகின்றனர். இது ‘லவ் ஜிகாத்’ என அழைக்கப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களுக்கு இந்து பண்டிகைகளின் கொண்டாட்டங்கள் வாய்ப்பாக அமைந்துவிடுகின்றன எனவும் அவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் மத்தியப் பிரதேச கலாச்சாரத்துறை அமைச்சர் உஷா தாக்குர் கடந்த 8-ம் தேதி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பேசியபோது, ‘லவ் ஜிகாத்தை’ தடுக்க நவராத்திரி விழாக்களில் கர்பா நடன நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில், அடையாள அட்டைகளை பரிசோதித்தபின் … Read more

பாலிவுட் நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது

புதுடெல்லி: பழம்பெரும் பாலிவுட் நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. சத்யஜித் ரே, திலீப்குமார், லதா மங்கேஷ்கர், ஷியாம் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகிலிருந்து சிவாஜி கணேசன், கே.பாலசந்தர், ரஜினிகாந்த் ஆகிய மூவர் இந்த விருதினைப் பெற்றுள்ளார்கள். 2019-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே … Read more