குஜராத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.200 கோடி மதிப்பிலான போதைப்பொருள் – பாகிஸ்தானியர் 6 பேர் கைது

குஜராத் கடற்கரையில் ரூ.200 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்தி வந்த பாகிஸ்தானை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அண்மைக்காலங்களில் குஜராத் கடற்கரை பகுதிகளில் பிடிபட்ட போதைப்பொருட்கள் எவ்வளவு? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். அண்மை காலங்களாக குஜராத் மாநிலத்தில் போதைப்பொருட்கள் அதிகளவில் பிடிப்பட்டு வருகிறது. கடல் வழியாகத்தான் வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்கள் அதிகளவில் இந்தியாவுக்கு கடத்தி வரப்படுகின்றன. இந்நிலையில் இந்திய கடலோர காவல் படையுடன் இணைந்து குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் தேடுதல் வேட்டையில் … Read more

பாஜகவில் நாங்கள் இணைந்தது ஏன்? – கோவாவில் 8 காங். எம்எல்ஏக்கள் சார்பில் மைக்கேல் லோபோ விளக்கம்

பனாஜி: மைக்கேல் லோபோ தலைமையில் கோவா முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் உள்ளிட்ட 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புதன்கிழமை பாஜகவில் இணைந்தனர். இதனால் 40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டப்பேரவையில் 11 ஆக இருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 3 ஆக குறைந்துள்ளது. மைக்கேல் லோபோ தலைமையில் கோவாவின் முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் உட்பட 7 காங்கிரஸ் எம்எல்ஏகள் புதன்கிழமை காலையில், மாநில முதல்வர் பிரமோத் சாவந்த்தையும், சபாநாயகர் விதான் சபாவையும் சந்தித்தனர். அப்போது 8 … Read more

லத்தியாக மாறிய கொடி கம்பு… போலீசை துரத்தி துரத்தி அடித்த பாஜகவினர்?

மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக கூறி, தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நேற்று (செப்.13) அறிவித்திருந்தது பாஜக. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்ட பல்லாயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ் உள்ளிட்டோர் தலைமையில் கோட்டையை நோக்கி அவர்கள் பேரணியாக சென்றனர் போராட்டக்காரர்கள் தலைமைச் செயலக பகுதியை நெருங்கியபோது … Read more

விதிகளை மாற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி: விதிகளை மாற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோரின் பதவி காலம் நீட்டிப்பு உட்பட சட்ட திருத்தங்களை மேற்கொள்ள அனுமதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

ராணி எலிசபெத் இறுதி நிகழ்வில் பங்கேற்கிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

புதுடெல்லி: வரும் 19-ஆம் தேதி நடக்கவுள்ள ராணி இரண்டாம் எலிசபெத் இறுதி நிகழ்வில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்கவுள்ளார். இதற்காக, இம்மாதம் 17-ஆம் தேதி லண்டன் செல்லும் திரவுபதி முர்மு இந்திய அரசு சார்பாக துக்க நிகழ்வில் பங்கேற்கிறார். இந்தத் தகவலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு குறித்து இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது ட்விட்டர் பக்கத்தில், “இங்கிலாந்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவின் … Read more

அகமதாபாத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு…போலீசார் விசாரணை

காந்திநகர்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஆஸ்பயர்-2 என்ற கட்டிடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது. தனியாருக்கு சொந்தமான இந்த கட்டடத்தில் இன்று வழக்கம் போல் கட்டட பணியாளர்கள் பணியில் இருந்தப் போது திடீரென அந்த லிஃப்ட் அறுந்து விழுந்துள்ளது. இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி … Read more

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக 2-வது முறையாக தேர்வாகிறார் முகுல் ரோஹத்கி

புதுடெல்லி: கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பதவியேற்றது. அப்போது மத்திய அரசின் 14-வது தலைமை வழக்கறிஞராக (அட்டர்னி ஜெனரல்) முகுல் ரோஹத்கி (67) நியமிக்கப்பட்டார். அவர் 2017 வரை பதவியில் நீடித்தார். இதைத் தொடர்ந்து 15-வது தலைமை வழக்கறிஞராக வேணுகோபால் (91) நியமிக்கப்பட்டார். அவர் 3 ஆண்டுகள் பதவிக் காலத்தை நிறைவு செய்த பிறகு அவ்வப்போது பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது. கடைசியாக 3 மாதங்கள் பதவி நீட்டிக்கப்பட்டது. … Read more

நமது கலாச்சாரம், வரலாற்றின் ஆன்மாவை புரிந்துகொள்ள அலுவல் மொழியான இந்தியை நாம் கற்க வேண்டும்: உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

டெல்லி: நமது கலாச்சாரம், வரலாற்றின் ஆன்மாவை புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை நாம் கற்க வேண்டும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தி திவாஸ் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக தேவநாகரி எழுத்துக்களில் இந்தி ஏற்றுக் கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில், இந்தி மொழி பேசும் மக்களால், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ம் தேதி இந்தி திவாஸ் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி தாய் மொழியாக உள்ளது. அவற்றுள் ஒன்று இந்தி. இந்நிலையில், இந்தி தின … Read more

’’கடவுளிடம் கேட்டபோது அவர் அதை ஏற்றுக்கொண்டார்’’ – பா.ஜ.க.வில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ

கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் இன்று பா.ஜ.க.வில் இணைந்தனர். இதற்கிடையே பஞ்சாப் மாநிலத்தில் 10 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க.திட்டமிடுகிறது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டியுள்ளார். சுற்றுலாவுக்கு பெயர் போன கோவாவில் பாரதி ஜனதா கட்சியைச் சேர்ந்த முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 40 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கோவாவில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கே அதிக இடங்கள் … Read more

“இந்தி மொழியால் உலக அரங்கில் இந்தியாவுக்கு சிறப்பு மரியாதை” – பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: இந்தி மொழி உலக அரங்கில் இந்தியாவுக்கு சிறப்பு மரியாதையைக் கொண்டு வந்துள்ளது என்று இந்தி மொழி தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பிரதமர் மோடி, “இந்தி மொழி உலகம் முழுவதும் இந்தியாவுக்கு சிறப்பு மரியாதையை கொண்டு வந்துள்ளது. அதன் எளிமையும், உணர்திறனும் எப்போதும் ஈர்ப்புடையதாக உள்ளன. இந்தி தினத்தன்று அதன் வளர்ச்சிக்கும், அதிகாரம் அளித்தலுக்கும் அயராது பாடுபட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை நான் தெரிவித்து கொள்கிறேன்” … Read more