விவசாயிக்கு இலவச மின்சாரம் ரத்தானால் ஆழாக்கு கூட மிஞ்சாது: கடும் உணவு தட்டுப்பாடுக்கு வழிவகுக்கும் ஒன்றிய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதா

நாட்டில் மூலை மூடுக்கெல்லாம் வசிக்கும் மக்கள், ஒரு வேளை உணவையாவது வயிறு நிறைய இன்று சாப்பிடுகிறார்கள் என்றால் அது எந்தவித லாபம் நோக்கமும் இன்றி நிலத்தை உழவு செய்யும் ஒவ்வொரு விவசாயியின் உழைப்புதான். விவசாயியின் ஒவ்வொரு துளி வியர்வையும் ஒவ்வொரு குடிமகன்களின் பசியை போக்குகிறது. ஆனால், விவசாயியின் பசியை போக்க வேண்டிய ஒன்றிய அரசு, விவசாயத்தையே அழிக்கும் வேளையில் இறங்கி உள்ளது.‘விவசாயம்’ நாட்டின் முதுக்கெலும்பு. விவசாயத்தையும், விவாசயிகளையும் காக்கும் எந்த நாடும் வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை. ஆனால், … Read more

நிதிஷ் குமார்.. தேஜஸ்வி ஷாக்; விடாமல் துரத்தும் கருப்பு!

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால் பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார், பாஜக மேலிடம் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில் பாஜவுடன் கூட்டணியை முறிப்பதாக நிதீஷ் குமார் திடீரென அறிவித்தார். அப்போது அதிருப்தி எம்எல்ஏக்களை உருவாக்கி ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியது தான் உறவை முறிப்பதற்கான காரணம் என நிதீஷ் குமார் அறிவித்தது இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் அடுத்த … Read more

சத்தீஷ்கரில் 295 பெட்டிகளுடன், மூன்றரை கிலோ மீட்டர் நீள பிரமாண்ட சரக்கு ரெயில் சோதனை இயக்கம்..!

தென் கிழக்கு மத்திய ரெயில்வே தனது மிக நீளமான சரக்கு ரெயிலான சூப்பர் வாசுகி ரெயிலை சோதித்து பார்த்தது. ஐந்து சரக்கு ரெயில்களின் பெட்டிகளை ஒன்றிணைத்து 295 பெட்டிகளுடன் ஒரே ரயிலாக நேற்று சூப்பர் வாசுகி தனது வெள்ளோட்டத்தை தொடங்கியது. 27 ஆயிரம் டன் நிலக்கரியை ஏற்றிக்கொண்டு , மூன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு அந்த ரெயில் காட்சியளித்தது. இதுவே, இந்திய ரெயில்வே இயக்கிய அதிகளவு நிலக்கரியை ஏற்றிச்சென்ற மிக நீளமான சரக்கு ரயிலாகும். சத்தீஷ்கர் மாநிலத்தின் … Read more

வடக்கு வங்கக் கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை: ஒடிசாவில் 5 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை…

ராஜஸ்தான்: ராஜஸ்தான், ஒடிசா மற்றும் காஸ்மீரில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒருசில மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு வங்க கடலில் உருவாகியுள்ள மற்றோரு காற்றழுத்த தாழ்வு நிலையால் ஒடிசாவில் பல மாவட்டங்களில் 4 நாட்களுக்கு தொடர் மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள தேவி ஆற்றில் வெள்ளம் கரை … Read more

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 39 பேருடன் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி.. 30க்கும் மேற்பட்டோர் காயம்!!

ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியில் இந்தோ-திபெத் எல்லை காவல் படையினர் 39 பேர் பயணித்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தெற்கு காஷ்மீர் பகுதியின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் என்ற இடத்தில் துணை ராணுவப்படையினர் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர். இந்நிலையில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், இதில் 30க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படியினர் காயமடிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சந்தன்வாரியிலிருந்து பஹல்காம் நோக்கி இந்தோ-திபெத்தியன் … Read more

தொடர்ந்து 16வது மாதமாக இரட்டை இலக்கத்தில் பணவீக்கம் – மத்திய புள்ளியியல் அமைச்சகம்

நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் சற்றே குறைந்துள்ளது. மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி ஜூலை மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் 13.93% ஆக குறைந்துள்ளது. முந்தைய மாதமான ஜூன் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 15.18 சதவீதமாக இருந்தது. ஜூன் மாதத்தை விட 1.25 சதவீதம் குறைந்த போதிலும் மொத்த விலை பணவீக்கம் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தொடர்ச்சியாக 16வது மாதமாக இரட்டை இலக்க அளவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாதத்திற்கான … Read more

கோவிட் தடுப்பூசி முன்னெச்சரிக்கை டோஸ் வழங்குவதை உறுதி செய்க: மத்திய அரசு

புதுடெல்லி: 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் கோவிட் தடுப்பூசி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார். தேசிய சுகாதார இயக்கம், ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம், 15-வது நிதி ஆணைய மானியங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து மாநில, யூனியன் பிரதேச சுகாதார அமைச்சர்களுடன் காணொலி வழியாக மத்திய சுகாதாரத் துறை … Read more

அமுல் நிறுவன பால், பால் பொருட்களின் விலை உயர்வு

குஜராத்: குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமுல் நிறுவன பால், பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியதுடன் பால் பொருட்களின் விலையும் அமுல் நிறுவனம் உயர்த்தியது. 

சுதந்திர இந்தியாவில் மற்றொரு அவமான சம்பவம்! ராஜஸ்தானை உலுக்கிய பட்டிலியன சிறுவனின் மரணம்!

ராஜஸ்தானில் பட்டியலின மாணவர் ஆசிரியரின் பானையில் குடிநீர் பருகியதால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநில காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடக்காலம் ஆகிவிட்ட நிலையில் நாட்டில் இன்னும் தீண்டாமை கொடுமை இருந்து கொண்டுதான் இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் சுரனா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இந்திரகுமார் மேக்வாழ் என்ற பட்டியலின சிறுவன் படித்து வந்தான். 9 வயதான அந்த சிறுவன் பள்ளியில் உள்ள தண்ணீர் பானையில் இருந்து தண்ணீர் எடுத்ததால் … Read more

டெல்லியில் அதிகரிக்கும் கரோனா பரவல்: நாள் ஒன்றுக்கு 8-10 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையும் கூடியுள்ளது. மக்கள் முகக்கவசம் அணிவது அவசியம் என அரசு நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. “கரோனா தொற்று பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே தொற்று பாதிப்புக்கு ஆளானவர்கள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்று பரவலின் முடிவு என்பது தொலைதூரத்தில் உள்ளதாக தெரிகிறது. நாம் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம்” என டெல்லியின் துணைநிலை ஆளுநர் வினய் குமார் … Read more