மராட்டியத்தில் பூமிக்கு அடியில் இருந்து வரும் மர்ம சப்தம்: கிராம மக்கள் அச்சம்; நிபுணர்கள் ஆய்வு..!

லாட்டூர்: மராட்டியத்தில் லாட்டூர் மாவட்டம், ஹசோரி கிராமத்தில் பூமிக்கு அடியில் இருந்து மர்ம சப்தம் கேட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனினும் பூவியதீர்வு தொடர்பான அறிகுறி ஏதும் ஹசோரி கிராமத்தில் தெரியவில்லை என்று அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மராட்டிய மாநிலம் லாட்டூர் மாவட்டத்தில் கில்லாரியில் இருந்து 28 கி.மீ தொலைவில் உள்ளது ஹசோரி கிராமம். இப்பகுதியில், செப்டம்பர் 8ம் தேதியில் இருந்தே பூமிக்கு அடியில் இருந்து கடமுடா என்ற மர்ம சப்தம் கேட்டு வருவதாக மக்கள் புகார் … Read more

ராஜஸ்தான்: அரை நிர்வாணமாக வெயிலில் உட்கார மறுத்ததால் மனைவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தமது மனைவி, மகளை கொடூரமான முறையில் பள்ளி ஆசிரியர் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தமது மனைவியை ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தியுள்ளார். அதனை தடுக்க முயன்ற மகளையும் அடித்து உதைத்தார். இதுதொடர்பாக வெளியான வீடியோ அடிப்படையில் ஆசிரியர் கைலாஷ் சுதர் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஜோத்பூரின் பலோடி டவுன் பகுதியைச் சேர்ந்த கைலாஷ் சுதர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியை சுட்டெரிக்கும் வெயிலில் அரை நிர்வாணத்தில் … Read more

'பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது' – குலாம் நபியின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதிலடி 

புதுடெல்லி: நான் ஒருபோதும் தனிபட்ட தாக்குதல்களில் ஈடுபட்டதில்லை. எதிர்க்கட்சியைச் சேர்ந்தவனாக மோடி அரசின் கொள்கைகளை மட்டுமே விமர்சித்து வந்துள்ளேன் என்ற குலாம் நபி ஆசாத்தின் கருத்திற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சி, பருவநிலை மாற்றம் ஏற்பட்டு குலாம் நபி ஆசாத் தற்போது பாஜகவின் விசுவாசமான சிப்பாயி ஆக மாறியிருக்கிறார் என்று குற்றஞ்சாட்டியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறியவருமான குலாம் நபி ஆசாத் உள்ளூர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். … Read more

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் பாஜக பேரம்: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் பாஜக பேரம் பேசியதாக, அக்கட்சித் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார். டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லியில், அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக உள்ள நிலையில், பஞ்சாப் மாநிலத்தில், பகவந்த் மான் முதலமைச்சராக பதவி வகிக்கிறார். ஆம் ஆத்மி கட்சியை பொறுத்தவரை, பிராந்தியக் கட்சி என்ற நிலையையும் தாண்டி தேசிய அளவில் காலூன்ற முடிவு … Read more

இந்தியாவின் அலுவல் மொழியான இந்தி நாட்டை ஒன்றிணைக்கும்: அமித்ஷா ட்வீட்

டெல்லி: இந்தியாவின் அலுவல் மொழியான இந்தி நாட்டை ஒன்றிணைக்கும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து நண்பன் இந்தி மொழி. இந்தி உள்பட இந்தியாவின் அனைத்து மொழிகளையும் மேம்படுத்த மோடி அரசு உறுதி பூண்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர்: ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து.. 11 பேர் பலியான சோகம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பரேரி நல்லா அருகே உள்ள ஆழமான பள்ளத்தாக்கில், பேருந்து ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் , 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சம்பவம் நடந்த உடனேயே அருகிலிருந்த உள்ளூர்வாசிகள், காவல்துறை மற்றும் ராணுவத்தினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சாவ்ஜியானில் இருந்து மண்டிக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜம்மு காஷ்மீர் துணைநிலை … Read more

கோவா | முதல்வர், சபாநாயகருடன் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சந்திப்பு; பாஜகவில் இணைவதாக தகவல்

பனாஜி: கோவா மாநிலத்தில் முன்னாள் முதல்வர் திகம்பர் காமத், மைக்கேல் லோபோ உட்பட 8 எம்எல்ஏ.,க்கள் புதன்கிழமை பாஜகாவில் இணையப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவா மாநில சட்டப்பேரவை மொத்தம் 40 இடங்களைக் கொண்டது. இதில் ஆளும் பாஜக 20 இடங்களில் வென்று, பெரும்பான்மை பலத்தில் ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த நிலையில், புதன்கிழமை திகம்பர காமத், மைக்கல் லோபோ தலைமையில் 8 காங்கிரஸ் எம்எல்ஏகள் மாநில பாஜக முதல்வர் பிரமோத் … Read more

ரூ.200 கோடி மதிப்புள்ள போதை பொருள் – பாகிஸ்தானியர்கள் கைது!

இந்திய கடலோர காவல் படை மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், ரூ.200 கோடி மதிப்புள்ள 40 கிலோ போதை பொருட்களுடன், பாகிஸ்தான் படகை பறிமுதல் செய்த அதிகாரிகள், படகில் இருந்த 6 பேரை கைது செய்தனர். கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜாகாவ் துறைமுகத்திற்கு அருகே கடலோர காவல் படை மற்றும் ஏடிஎஸ் ஆகியவற்றின் கூட்டுக் குழுவினரால் போதைப் பொருள் ஏற்றிச் சென்ற மீன் பிடி படகை நடுக்கடலில் தடுத்து நிறுத்தியதாக … Read more

ராகுல் டி-சர்ட் திருப்பூரில் தயாரிக்கப்பட்டது; நமது தேசிய கொடியை சீனாவில் இருந்து வாங்கியுள்ளது ஒன்றிய அரசு: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சாடல்

புதுச்சேரி: ராகுல் டி-சர்ட் திருப்பூரில் தயாரிக்கப்பட்டது; நமது தேசிய கொடியை சீனாவில் இருந்து ஒன்றிய அரசு வாங்கியுள்ளது என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை நடை பயணத்தை தொடங்கியுள்ள ராகுல் காந்தியை பாஜக கேலி செய்தது. ராகுல் காந்தி, நடை பயணத்தில் பங்கேற்கும் போது அணிந்திருந்த டி- சர்ட்டின் விலை 41,000 ரூபாய்க்கும் அதிகமாக இருப்பதாகக் கூறி பாஜக விமர்சித்திருந்தது. ராகுல் காந்தி மற்றும் அவர் அணிந்திருந்த டி-சர்ட்டின் விலையைக் குறிப்பிடும் வகையில் … Read more

ரூ.12 லட்சமா..! அப்பார்ட்மெண்ட் காவலாளிக்கு ஷாக் கொடுத்த மின் கட்டணம்!

புதுச்சேரியில் அபார்ட்மெண்ட் காவலாளியாக பணியாற்றி வருபவர் வீட்டுக்கு ரூ.12 லட்சம் மின்சார கட்டண பில் வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து மின்துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி, முத்தியால்பேட்டை விஸ்வநாதர் நகர், திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்தவர் சரவணன், இவர், அப்பார்ட்மெண்டில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு வழக்கமாக மாத மின் கட்டணம் ரூ. 800-க்குள் வருவது வழக்கம். ஆனால், கடந்த மாத உபயோகத்திற்காக ரூ. … Read more