தேர்தல் இலவசங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையில் தங்களையும் இணைக்கக்கோரி திமுக மனு.!

டெல்லி: தேர்தலில் இலவசங்கள் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையில் தங்களையும் இணைக்கக்கோரி திமுக மனு அளித்துள்ளது. இலவசங்கள் தொடர்பான வழக்கில் திமுக தங்களையும் சேர்க்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடையிட்டு மனு அளித்துள்ளது. அரசியல் காட்சிகள் இலவச திட்டங்களை எதிர்த்து வழக்கறிஞரும் பாஜக நிர்வாகியுமான அஸ்வினி குமார் உபாத்தியாய மனு அளித்தனர்.பாஜகவின் அஸ்வினி என்பவர் தொடர்ந்த தேர்தலில் இலவச திட்டங்களை எதிர்ப்பும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்தலில் இலவசத் … Read more

மருத்துவம், பொறியியல் அனைத்திற்கும் ஒற்றை நுழைவு தேர்வு! விரைவில் நிபுணர்குழு – யுசிஜி

மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்விகளுக்கு ஒற்றை நுழைவுத்தேர்வு முறையை ஏற்படுத்து குறித்து ஆராய்வதற்கான நிபுணர் குழு இம்மாத இறுதியில் அமைக்கப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார் மருத்துவம், பொறியியல் போன்ற அனைத்து வகை உயர் கல்விகளுக்கும் ஒரே நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டம் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு யுஜிசி தலைவர் பேட்டி அளித்துள்ளார். அதில் மாணவர்கள் உயர் படிப்புகளில் சேர பல்வேறு நுழைவுத்தேர்வுகள் எழுதுவது அவர்களுக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். … Read more

பிரிவினைக்கு பின் முஸ்லிம்கள் இல்லாத கிராமத்தில் பஞ்சாபில் சீக்கியர், இந்துக்கள் பராமரிக்கும் மசூதி

புதுடெல்லி: பஞ்சாபின் லூதியானாவில் முஸ்லிம்கள் இல்லாத கிராமத்தில் உள்ள மசூதியை சீக்கியர்களும் இந்துக்களும் இணைந்து பராமரித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 14, 1947-ல் இந்தியாவில் இருந்து தனி நாடாகப் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. இந்திய பிரிவினை பல்வேறு வகைகளில் தாக்கங்களையும் பாதிப்பையும் ஏற்படுத்தியது. அதற்கு ஒரு உதாரணமாக பஞ்சாபில் உள்ள மசூதி திகழ்கிறது. பஞ்சாபின் மலேர்கோட்லா மாவட்டத்தில் மட்டுமே தற்போது முஸ்லிம்கள் வாழ்கின்றனர். பஞ்சாபின் மற்ற அனைத்து பகுதியிலும் இருந்த முஸ்லிம்கள் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். ஆனால், பிரிவினைக்கு … Read more

இந்தியாவில் குறைகிறதா கொரோனா பாதிப்பு..? – புள்ளிவிவரம் சொல்வது என்ன..?

உலகெங்கிலும் கொரோனா தொற்று பரவி மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தி வருகிறது. கொரோனா கடும் வேகமாக பரவி தற்பொழுது கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக 3 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்தது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 8,813 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் … Read more

திருப்பதி கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் நாளை மறுநாள் ஆன்லைனில் வெளியீடு

திருப்பதி; திருப்பதி கோயிலில் அக்டோபர் மாதத்துக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் கோட்டா நாளை மறுநாள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்கும் அக்டோபர் 1-5 வரை இலவச தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்க வேண்டுமென கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதால் அக்டோபர் 1-5 வரை டிக்கெட் தருவது நிறுத்தப்பட்டுள்ளது.

“கர்நாடகாவில் அரசு செயல்படவேயில்லை”.. லீக் ஆன அமைச்சரின் ஆடியோ.. கலக்கத்தில் முதல்வர்!

“கர்நாடகாவில் ஆட்சியை தக்கவைக்கும் நடவடிக்கைகளை மட்டுமே பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது” என்று அம்மாநில சட்டத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசாமி பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. சமீப காலங்களில் முதல்வர் பசவராஜ் பொம்மையின் ஆட்சிக்கு எதிராக அதிருப்தி அதிகரித்துள்ளது. அங்கு தொடர்ந்து நிகழம் வகுப்புவாத வன்முறை என பல சம்பவங்கள் பாஜக அரசுக்கு சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், “கர்நாடகாவில் ஆட்சியை தக்கவைக்கும் நடவடிக்கைகளை … Read more

நாட்டை உலுக்கிய பில்கிஸ் பானோ வழக்கு: 11 குற்றவாளிகளையும் விடுதலை செய்தது குஜராத் அரசு

காந்தி நகர்: 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானோ என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபணமாகி ஆயுள் தண்டனை பெற்றவர்களை குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது. பில்கிஸ் பானோ கூட்டுப் வன்கொடுமை, கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று நிரூபணம் செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகளில் ஒருவர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் … Read more

காங்கிரஸ் எம்.எல்.ஏ திடீர் ராஜினாமா..! – ராஜஸ்தான் தலித் சிறுவன் கொலை செய்யப்பட்ட விவகாரம்..!!

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இன்னும் தீண்டாமைகள் பல வகைகளில் இருந்து வருகிறது. இதில் சாதிய தீண்டாமை பெரும் பங்கு வகித்து வருகிறது. ஏற்றத்தாழ்வுகள் என்பது மக்களிடம் பழக்கமான ஒன்றாகிவிட்டது. இது கல்வி நிறுவனங்களில் இருப்பது தான் பெரும் அதிர்ச்சியானது. இந்நிலையில் பள்ளிக்கூடத்தில் பொது குடத்தில் தண்ணீர் எடுத்து குடித்தற்காக அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவராலயே ஒன்பது வயது சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சுரனா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் … Read more

10 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தினமான நேற்று (திங்கள்) ஆகிய 3 நாட்கள் அதிகளவு பக்தர்கள் திரண்டனர். திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் காணப்பட்டனர். இதனால் காத்திருப்பு அறைகள் முழுவதும் நிரம்பி நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். இவ்வாறு காத்திருந்த பக்தர்கள் சுமார் 40 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.இந்நிலையில் நேற்று 87,692 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 36,832 பக்தர்கள் தலைமுடிகாணிக்கை செலுத்தினர். உண்டியலில் ₹5.30 … Read more

பீகாரில் 31 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு – யார், யாருக்கு எந்தெந்த துறை?

பாரதிய ஜனதா கட்சி கூட்டணியை முறித்துக் கொண்டு, ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதீஷ் குமார் மீண்டும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி ஆதரவுடன் சென்ற வாரம் பீகார் மாநிலத்தில் ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, திங்கட்கிழமை புதிய அரசின் 31 அமைச்சர்கள் பதவியேற்றனர். முன்னாள் பீகார் முதல்வர் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்ட 16 ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி அமைச்சர்கள் … Read more