ராஜஸ்தான் கூட்டத்தில் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி – பின்னணி என்ன?

ராஜஸ்தானில் நேற்று நடந்த பாஜக கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, மைக் இல்லாமல் பேசிய வீடியோ தற்போது ட்ரெண்டாகி உள்ளது. ராஜஸ்தானில் சிரோஹியின் அபு ரோடு பகுதியில் நேற்று பாஜகவின் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் முடிவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேச ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் மோடி கூட்டத்தில் கலந்துகொள்ளும் போது இரவு 10 மணியாகிவிட்டது. இரவு 10 மணிக்கு மேல் பொதுக்கூட்டங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை … Read more

கர்நாடகாவில் ராகுல் காந்தி பாத யாத்திரை

பெங்களூரு: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கர்நாடகாவில் ஒற்றுமைக்கான பாத யாத்திரையை நேற்று தொடங்கினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் கடந்த 7ம் தேதி ஒற்றுமை பாத யாத்திரையை தொடங்கினார். தமிழகம், கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் அவர் நேற்று நுழைந்தார். அவரை கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா, முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர் உள்ளிட்டோர் வரவேற்றனர். ராகுல் காந்தியை பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான காங்கிரஸாரும் பொதுமக்களும் நடந்து சென்றனர். … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 3,805 பேருக்கு கொரோனா… 26 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 3,805 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,40,24,164 ஆக குறைந்தது. * புதிதாக 26 பேர் இறந்துள்ளனர். * இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் … Read more

"ஜெயிலுக்கு போறேன்.. நானும் ரவுடி தான்.. " – ஒரு நாள் தங்க வாடகை ரூ. 500!

ஒருவருடைய ஜாதகத்தில் கட்டம் சரியில்லாதவர்கள், கண்டிப்பாக சிறைக்குச் சென்றே தீர வேண்டும் என்ற விதி உள்ளவர்கள் , அதற்கான பரிகாரமாக சிறையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என உத்தராகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. வித்தியாசமான சுற்றுலா அனுபவங்களை பெற மக்கள் விரும்புகிறார்கள். அதன்படி, சிறை சுற்றுலா தான் இப்போதைய ட்ரெண்ட். ரூ.500 செலுத்தினால், சிறைக் கைதியை போல ஒருநாள் உள்ளே இருக்கலாம் என சில மாநிலங்களில் சிறைதுறை  அறிவித்தவுடன் தினமும் பல விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. உத்தராகாண்ட் போலவே கர்நாடகம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சிறை … Read more

போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக 8 மாநிலங்களில் சிபிஐ சோதனை

புதுடெல்லி : நாடு முழுவதும் 8 மாநிலங்களில் சிபிஐ நடத்திய சோதனையில் பெருமளவு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்டர்போல், போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் மாநில போலீஸார் உதவியுடன் சிபிஐ இந்த சோதனையை நடத்தியது. இதுகுறித்து அதிகாரிகள் நேற்று கூறியதாவது: போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக சந்தேகத்திற்குரிய 6,600 பேரின் நடவடிக்கைகளை ஆராயும் வகையில் இந்த … Read more

தாஜ்மஹாலை ஷாஜகான்தான் கட்டினார் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு!

டெல்லி: தாஜ்மஹாலை ஷாஜகான்தான் கட்டினார் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் உண்மை கண்டறியும் குழு அமைக்க வேண்டும் எனவும் ராஜ்னீஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். ஏற்கனவே ராஜ்னீஷ் தாக்கல் செய்திருந்த மனுவை அலகாபாத் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குஜராத் காந்திநகரில் இருந்து மும்பை வரை செல்லும் வந்தே பாரத் ரயில் பயணம் தொடங்கியது – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

காந்திநகர்: குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்து – மும்பைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அதே ரயிலில் அவர் கலுபூர் ரயில் நிலையம் வரை பயணம் செய்தார். குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அங்கு பிரதமர் மோடி கடந்த 2 நாட்களாக பயணம் செய்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவடைந்த சில திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். காந்திநகர் ரயில் நிலையத்தில் … Read more

இந்தியாவில் இன்று முதல் 5 ஜி சேவை! தெரிந்து கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்!

இன்று முதல் இந்தியாவின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5G சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் மற்றும் ஆறாவது ஆண்டு இந்திய மொபைல் காங்கிரஸைத் தொடங்கி வைக்கிறார்.  முதலில் முக்கிய நகரங்களில் மட்டும் இந்த 5ஜி அறிமுகமாக உள்ளது, அடுத்த சில ஆண்டுகளில் இந்த சேவை நாடு முழுவதும் தொடங்கப்படும். “பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 5ஜி சேவையை அக்டோபர் 1, 2022 அன்று தொடங்கி வைப்பார், மேலும் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 1-4 வரை … Read more

சீன செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.5,551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை

டெல்லி: சீன செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.5,551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. சியோமி குழுமம், அதன் இந்திய கிளையான சியோமி இந்தியா, ரெட்மி என்ற பெயரில் செல்போன்களை விற்பனை செய்து வருகிறது. அனுமதியின்றி ரூ.5,551 கோடிக்கு சமமான அன்னிய செலாவணியை இந்தியாவுக்கு வெளியே சியோமி அனுப்பியது. காப்புரிமை தொகையை அனுப்பியதாக சியோமி கூறுவது அன்னிய செலாவணியை அனுப்புவதற்கான சாக்குபோக்கு என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட தொகைகளிலேயே இதுதான் … Read more

முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் பொறுப்பேற்பு

புதுடெல்லி: நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பதவியேற்றார். தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து 9 மாதங்களுக்கும் மேலாக அப்பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் நாட்டின் 2-வது முப்படை தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் கடந்த 28-ம் தேதி நியமிக்கப்பட்டார். அவர் நேற்று டெல்லியில் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக … Read more