ஆந்திர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பதி – திருமலை இடையே 10 மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

திருமலை: ஆந்திர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பதி திருமலை இடையே  10 மின்சார பேருந்து சேவையை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். திருமலை – திருப்பதியை மையமாக கொண்டு முதல் முறையாக மின்சார பேருந்துகளை ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம்  100 மின்சார பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஈவே டிரான்ஸ் லிமிடெட் என்கிற தனியார் நிறுவனம் இதற்கான ஒப்பந்தம் செய்து கொண்ட நிலையில் மலைப்பாதையில்  சோதனை ஓட்டம் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. … Read more

பர்தா அணிய மறுத்த மனைவியை குத்திக்கொன்ற கணவன் – மும்பையில் கொடூரம்

பர்தா அணிய மறுத்ததில் ஏற்பட்ட சண்டை காரணமாக பிரிந்து வாழ்ந்த மனைவியை கணவன் கத்தியாலே குத்திக்கொன்ற சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. 36 வயதான இக்பால் ஷேக் டாக்ஸி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இவர், ரூபாலி(20) என்ற இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணை 2019ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவரது பெயரையும் சாரா என மாற்றியுள்ளனர். இவர்களுக்கு 2020ஆம் ஆண்டு ஒரு ஆண்குழந்தையும் பிறந்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே இவர்கள் குடும்பத்தில் இருந்துவந்த பிரச்னை அதன்பின்பு … Read more

பெண்களுக்கு பாய் ஃபிரண்டுகள் சப்ளை; சர்ச்சையில் சிக்கியது..மொபைல் செயலி!

நாட்டில் தொழில் நுட்பம் நாளுக்கு நாள் அதீத வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதன் பலனாக, வீட்டில் இருந்தபடியே மின்சார வேகத்தில் எந்த வசதிகளையும் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. நமக்கு தேவையான உணவு, உடை என குண்டூசி முதல் காய்கறிகள் வரை அனைத்தையும் வீட்டு வாசலுக்கே வர வைக்க கூடிய அளவுக்கு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக நாம் எப்போதாவது தனிமையாக உணர்ந்தால் அல்லது ஏதாவது ஒரு … Read more

இருதரப்பு உறவை மேம்படுத்த 7 மாநில முதல்வர்கள் டாக்கா பயணம்

டாக்கா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஒன்றிய அரசின் வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டு துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை கடந்த 7ம் தேதி ெடல்லியில் சந்தித்து பேசினார். இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையிலான 4,096 கிமீ நீளமுள்ள எல்லைப்பகுதியானது வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுராவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி போன்ற அமைப்புகளின் போராளிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். இவர்கள் வங்கதேசத்தில் இருந்து வந்து தாக்குதல் நடத்துவதால் அவர்களை ஒடுக்குவது குறித்தும் … Read more

எரிசக்தி, டேட்டா துறைகளில் 8 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளோம் – கவுதம் அதானி

எரிசக்தி, டேட்டா உள்ளிட்ட துறைகளில் அடுத்த 10 ஆண்டுகளில் 8 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக பிரபல தொழிலதிபரும் உலகின் 2ஆவது பெரிய பணக்காரருமான கவுதம் அதானி தெரிவித்துள்ளார். 8 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 70 சதவிகிதத்தை மாற்று எரிசக்தி துறைக்கு ஒதுக்கீடு செய்யப்போவதாக கவுதம் அதானி கூறியுள்ளார். தற்போது மரபுசாரா எரிசக்தி பிரிவில் 20 கிகாவாட் உற்பத்தி செய்து வரும் நிலையில் அதை 45 கிகாவாட்டாக உயர்த்த உள்ளதாகவும் இதற்காக தாங்கள் … Read more

உத்தவ் தாக்கரேவுக்கு பின்னடைவு: உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு!

உண்மையான சிவசேனா கட்சி யாருக்கு சொந்தம் என்பது குறித்து உடனடியாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது என, இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது. மகாராஷ்டிர மாநிலத்தில், பால் தாக்கரே உருவாக்கிய சிவசேனா கட்சிக்கு, அவரது மகனும், முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதில் ‘ எங்களைத் தான் உண்மையான சிவசேனா என அறிவிக்க வேண்டும்’ என, ஏக்நாத் ஷிண்டே … Read more

பெண் நிருபருக்கு ஆபாச மிரட்டல்; மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி போதை பொருள் பயன்படுத்தினாரா?.. போலீசார் விசாரணை

திருவனந்தபுரம்: யூடியூப் சேனல் பெண் நிருபரிடம் ஆபாசமாக பேசி, மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி பேட்டியின்போது போதைப் பொருள் பயன்படுத்தியிருந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மலையாள சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் ஸ்ரீநாத் பாசி. முதன்முதலாக நாயகனாக நடித்த சட்டம்பி என்ற படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு மலையாள யூடியூப் சேனலுக்கு பேட்டி … Read more

பாஜகவினரை விரட்டியடித்த மக்கள்… காரணம் இதுதான்!!

புதுச்சேரியில் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.கவினர் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் வழக்கம் போல் கடைகள் திறந்திருந்தது. பொதுமக்கள் அன்றாட பணிகளை மேற்கொண்டனர். இதனால் ஆவேசமடைந்த பா.ஜ.கவினர் கடைகளைத் திறந்த உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உப்பளத்தில் தனியார் பள்ளிக்கு மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வந்திருந்தனர். அங்கு வந்த பா.ஜ.கவினர் பள்ளியை மூடுமாறு வலியுறுத்தினர். தேர்வு நடைபெறுவதால் பள்ளிக்கு விடுமுறை விடமுடியாது என்று பள்ளி நிர்வாகம் கூறியது. இதைப்பார்த்த பெற்றோர்களும், பொதுமக்களும் உடனே ‘பள்ளியை … Read more

திருமலை-திருப்பதி திடீர் அறிவிப்பு; இதை மட்டும் யாரும் செய்யாதீர்கள்!

திருமலை- திருப்பதியில் வீற்றிருக்கும் ஏழுமலையானுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள், உற்சவங்கள் நடைபெற்று வந்தாலும், புரட்டாசி மாதத்தில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மொத்தம் 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி காலை மற்றும் மாலையில் விதவிதமான வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் எளிமையாக நடத்தப்பட்டது. மாடவீதிகளில் … Read more

கடந்த 2 ஆண்டுகளாக காது கேட்கும் திறன், பேசும் திறன் இழந்த பெண் இன்ஜினியருக்கு அறுவை சிகிச்சை: திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் ஏற்பாடு

திருமலை: ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டம் வேம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் சத்தியநாராயண ராஜு, விவசாயி. இவரது மகள் சூர்யா (29). பி.டெக் முடித்துவிட்டு ஐதராபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்து வந்தார். கடந்த 20-7-2020ம் நாளில் சம்பளம் எடுப்பதற்காக அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு மொபட்டில் சென்றார். அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் இவரது மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சூர்யா, காது கேட்கும் … Read more