இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல சதி: உளவுத் துறை எச்சரிக்கையால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை: இந்து அமைப்பு தலைவர்களைக் கொல்ல சதித் திட்டம் திட்டப்பட்டுள்ளதாகவும், அவர்களது உயிருக்கு ஆபத்து இருப்பதால், கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அண்மையில் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ), எஸ்டிபிஐ நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இதில் 106 பேர் கைது … Read more

ஒரே நாளில் 2 சாலை விபத்துகள்: உத்தர பிரதேசத்தில் 31 பேர் உயிரிழப்பு; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

கான்பூர்: உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் நடந்த 2 சாலை விபத்துகளில் 31 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் உன்னாவ் அருகே பிரசித்தி பெற்ற சந்திரிகா தேவி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான மக்கள் குடும்பத்தினருடன் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் இதே பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று முன்தினம் இந்த கோயிலுக்குச் சென்றனர். சாமி தரிசனம் முடிந்து அவர்கள் … Read more

பிரதமர் மோடி வந்த ரயிலில் அடையாள குறியீடு; இத்தாலியை சேர்ந்த 4 பேர் அதிரடியாக சிக்கினர்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 31ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் ஏறி பயணித்தார். அவருடன் பொதுமக்கள், மாணவ மாணவிகளும் பயணம் செய்தனர். அதே சமயம் பிரதமர் மோடி பயணம் செய்யும் சில மணி நேரங்களுக்கு முன்பாக அவர் பயணிக்க திட்டமிட்டு இருந்த மெட்ரோ ரயிலின் வெளிப்பகுதியில் பெயிண்ட் அடிக்கப்பட்டு டிஏஎஸ் (TAS) என்ற ஆங்கில எழுத்துக்கள் … Read more

வறுமை, வேலைவாய்ப்பின்மை என நம்முன் பூதாகரமான சவால்கள் இருக்கின்றன: ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் கருத்து

வறுமை, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வு என நம்முன் பூதாகரமான சவால்கள் இருக்கின்றன என ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் சார்பு இயக்கமான ஸ்வதேசி ஜாகர்ன மஞ்ச் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தத்தாத்ரேயா, “வறுமை, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வு என நம்முன் ஏராளமான பூதாகர சவால்கள் இருக்கின்றன. நாட்டில் 20 கோடிக்கும் மேலோனோர் ஏழ்மை நிலையில் இருக்கின்றனர். வறுமை ஓர் அசுரன் போல் நிற்கிறது. அந்த வறுமையை நாம் வீழ்த்த … Read more

உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு காணும் முயற்சியில் இந்தியா பங்காற்ற தயாராக உள்ளது: உக்ரைனின் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

டெல்லி: எந்தவொரு அமைதி முயற்சிகளிலும் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது என உக்ரைனின் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கூறியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய படைகளுடன் போராடி வரும் கிழக்கு ஐரோப்பிய நாட்டில் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரில் உக்ரைன் நாட்டு நகரங்களை ரஷ்யா படைகள் கைப்பற்றின. இதற்கிடையே போரில் கைப்பற்றிய உக்ரைனின் … Read more

அபாய பலகையைப் பொருட்படுத்தாமல் அருவியில் குளித்த 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

திருவனந்தபுரம் கல்லார் வட்டக்காயத்தில் அருவியில் குளிக்கச்சென்ற 5 பேரில் மூன்று பேர் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. கல்லார் அருவியில் பொழுது போக்கிற்காக 5 இளைஞர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அருவியில் குளிப்பது தொடர்பாக அங்கு அபாய பலகை வைக்கப்பட்டுள்ளதை அவர்கள் பொருட்படுத்தாமல் குளிக்கச் சென்றுள்ளனர். மேலும் அப்பகுதி மக்கள் அபாய பகுதி எனக் கூறிய போதும் அதனை ஏற்க மறுத்து நீரில் இறங்கியுள்ளனர். அப்போது அருவியில் தண்ணீர் அதிக அளவு வந்ததால், நிலை தடுமாறி 5 … Read more

போலீஸ் வேடத்தில் மாமூல் வசூல்… மடக்கிப்பிடித்த நிஜ போலீஸ்!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரோசாபாத் பகுதியைச் சேர்ந்த முகேஷ் யாதவ் (23) என்பவர் 120 கிலோ உடல் எடை கொண்டவர். இவர் பிழைப்புக்காக விபரீத முடிவெடுத்து தற்போது கையும் களவுமாக சிக்கியுள்ளார். தனது தோற்றத்திற்கு ஏற்ப போலீஸ் உடை ஒன்றை தைத்து போட்டுக்கொண்டு, சுற்றுவட்டாரப் பகுதிகளில் களமிறங்கினார். தனக்கென போலி ஆதார் கார்டு, போலீஸ் ஐடி கார்டு போன்ற ஆவணங்களையும் தயாரித்துள்ளார். போலி போலீசாக ரோந்துக்கு சென்று வாகனங்களை மடக்கி பிடித்து அபராத தொகை, மாமூல்களை வாங்கியுள்ளார். அத்துடன் … Read more

லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் பலி!!

குஜராத் மாநிலத்தில் கண்டெய்னர் லாரி – ஆட்டோ மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். வதோதரா மாவட்டம் அடுத்த தர்ஜிபூரா பகுதியில் ஆட்டோ – கன்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த 7 பேரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். … Read more

உ.பி.,யில் துர்கா பூஜை பந்தலில்  தீ விபத்து: 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி, 60 பேர் காயம்

வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம், படோகியில் துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தலில் ஞாயிற்றுகிழமை இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 5 பேர் பலியாகினர். 60-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். வடமாநிலங்களில் நவராத்திரி வாரத்தில் பொது இடங்களில் பந்தல் அமைத்து அதில், துர்கா தேவி சிலையை வைத்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் உத்தரப்பிரதேச மாநிலத்திலும் துர்கா பூஜைக்காக பந்தல் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தின் படோயி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த துர்கா பூஜை பந்தல் ஒன்றில் ஞாயிற்றுக்கிழை … Read more

பொதுமக்களுக்கு குவாட்டர், உயிர் கோழி இலவசம்… சம்பவம் செய்த டிஆர்எஸ் கட்சிக்காரர்!

மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருபவர்களில் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் முக்கியமானவராக திகழ்கிறார். 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சியில் இவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாா். அதற்காக பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத எதிா்க்கட்சித் தலைவா்களை சந்தித்து தொடர் ஆலோசனைகளையும் ராவ் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், சந்திரசேகர் ராவ் தேசிய அளவில் புதிய கட்சியை துவங்க உள்ளதாகவும், அக்கட்சியின் பெயரை தசரா பண்டிகையையொட்டி நாளை … Read more