13 பெருநகரங்களில் 5-ஜி சேவையை தொடங்கினார் பிரதமர் மோடி – 2 ஆண்டுகளில் 90% பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்

புதுடெல்லி: டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 13 பெருநகரங்களுக்கான 5-ஜி தொலைத்தொடர்பு சேவையை நேற்று டெல்லியில் தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். இந்தியாவில் 1995-ல் செல்போன் சேவையும், இணைய சேவையும் தொடங்கப்பட்டன. தொடர்ந்து, 2-ஜி, 3-ஜி, 4-ஜி இணைய சேவைகள் அடுத்தடுத்து அறிமுகமாகின. இந்த வரிசையில் 5-ஜி தொலைத்தொடர்பு சேவையை பிரதமர் மோடி டெல்லியில் நேற்று தொடங்கிவைத்தார். மேலும், இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டையும் அவர் தொடங்கிவைத்தார். டெல்லி … Read more

கேதர்நாத் கோயில் அருகே பனிச்சரிவு

டேராடூன்:  உத்தரகாண்டில் கேதர்நாத் கோயில் அருகே பனிச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.  உத்தரகாண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற கேதர்நாத் கோயில் அமைந்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு கேதர்நாத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று காலை கேதர்நாத் கோயிலின் பின்புறத்தில் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. நேற்று காலை 6.30மணியளவில் ஏற்பட்ட இந்த பனிச்சரிவில் பக்தர்கள் அச்சமடைந்தனர். கேதர்நாத் கோயில் கமிட்டி தலைவர் அஜேந்திரா அஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கேதார் டோம் மற்றும் ஸ்வர்கரோகினி இடையே பெரிய … Read more

நாடாளுமன்ற கட்டிடம் மீதான தேசிய சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி

புதுடெல்லி: இந்தியாவின் தேசியச் சின்னமான நான்முகச் சிங்கம்,புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மேல் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. 6.5 மீட்டர் உயரம், 9,500 கிலோ எடையில், வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட நான்முகச் சிங்கத்தை தாங்கிப் பிடிக்க 6,500 கிலோ எடையில் நான்குபுறமும் இரும்புத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிற்பத்தை பிரதமர் மோடி, கடந்த ஜூலை மாதம் திறந்து வைத்தார். இந்நிலையில், வழக் கறிஞர்கள் அல்டானிஷ் ரெய்ன், ரமேஷ் குமார் மிஸ்ரா ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “வாரணாசியில் உள்ள … Read more

பாலிவுட் நடிகை தூக்குபோட்டு தற்கொலை

மும்பை: மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 30 வயதுள்ள இளம்பெண் ஒருவர் அறை எடுத்து தங்கினார். கடந்த 28ம் தேதி தனது அறையில் தங்கிய அவர் வெளியில் வரவில்லை. சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் அறையின் கதவை உடைத்து பார்த்தபோது, அந்த இளம்பெண் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த வெர்சோவா பகுதி போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு … Read more

பிரிவினையை கோரவில்லை மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கேட்கிறோம்: இந்திய கம்யூ. கேரள மாநில மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருவனந்தபுரம்: சுயாட்சி தன்மை கொண்டவையாக மாநிலங்கள் இருப்பதை ஒருமைப்பாட்டிற்கு விரோதம் என்று  ஆட்சியில் உள்ள பாஜவினர் மாற்றி சொல்கிறார்கள். நாம் கேட்பது மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தானே தவிர பிரிவினை மாநிலங்கள் அல்ல. இந்திய அளவில் கூட்டாட்சியை ஒப்புக்கொள்பவர்களால் கேட்கப்படுவதுதான் மாநிலத்தில் சுயாட்சி என்று கேரளாவில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது தேசிய மாநாடு விஜயவாடாவில் நடைபெற உள்ளது.  இதையொட்டி 4 நாள் நடைபெறும் கேரள … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கார்கே-சசிதரூர் நேரடி போட்டி: திரிபாதி வேட்புமனு நிராகரிப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கே.என்.திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மல்லிகார்ஜூனா கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடக்க உள்ளது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் 19ம் தேதி முடிவு அறிவிக்கப்படும். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது. ஆரம்பத்தில் சோனியா ஆதரவுடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கட்சித் தலைவர் … Read more

நடிகர் கிருஷ்ணம் ராஜு பெயரில் அறக்கட்டளை தொடங்கிய பிரபாஸ்

ஐதராபாத்: சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜு மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து கோதாவரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணம் ராஜுவின் சொந்த ஊரான மொகல்தூரில் அவருக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் பிரபாஸ், ஆந்திர அமைச்சரும் நடிகையுமான ரோஜா கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேருக்கு விருந்து வழங்கினார் பிரபாஸ். பிறகு ரசிகர்களிடையே அவர் பேசினார். கிருஷ்ணம் ராஜு பெயரில் அறக்கட்டளை தொடங்கு வதாகவும், இதன் மூலம் நலிந்தவர்களுக்கு மருத்துவம் மற்றும் … Read more

கடந்த மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனை ரூ.11 லட்சம் கோடி

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த மாதத்தில் யுபிஐ மூலம் ரூ.11.16 லட்சம் கோடிக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை நடந்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கிராமங்கள் வரை சென்றடையக் காரணமாக இருந்தது யுபிஐ தான்.   கட்டணமில்லா சேவை என்பதால் கூகுள் பே, போன் பே போன்ற ஆப் கள் மூலமாக யுபிஐயை பயன்படுத்தி பெட்டிக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை மக்கள் பணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தேசிய பரிவர்த்தனை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடு முழுவதும் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் … Read more

ஜிஎஸ்டி நிலுவை தொகையை தமிழகத்துக்கு உடனே தர வேண்டும்; ஒன்றிய அமைச்சரிடம், தமிழக நிதியமைச்சர் வலியுறுத்தல்

புதுடெல்லி: தமிழகத்துக்கு தராமல் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி நிலுவை ெதாகையை உடனே விடுவிக்க வேண்டும்  என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஐன் வலியுறுத்தி உள்ளார். தமிழக அரசு சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 2ம் கட்ட ரயில்வே பணிகள் வேகமெடுத்துள்ளன. அதற்கான நிதியை தமிழக அரசு ஏற்கனவே அளித்துள்ள நிலையில், ஒன்றிய அரசு இதுவரை வழங்காமல் தாமதித்து … Read more

மார்க்சிஸ்ட் கம்யூ., முன்னாள் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 68. கேரள மாநிலத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவரான பாலகிருஷ்ணன், உடல்நலக் குறைவு காரணமாக ஆகஸ்ட் கடைசி வாரத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து விலகினார். கண்ணூரில் உள்ள தலச்சேரி சட்டப்பேரவை தொகுதியில் இருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட கொடியேரி பாலகிருஷ்ணன், 2006 ஆம் ஆண்டு முதல் … Read more