பாட்டி பெயருடன் சேர்த்து தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்ட நடிகை

மும்பை: தனது பாட்டியின் பெயருடன் சேர்ந்து தனது பெயரை சபா ஆசாத் என்று நடிகை சபா கிரேவா மாற்றிக் கொண்டார். பாலிவுட் பாடகியும் நடிகையான சபா கிரேவா என்ற தனது பெயரை ‘சபா ஆசாத்’ என்று மாற்றிக் கொண்டார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘எனது தந்தை சீக்கிய வம்சாவளியைச் சேர்ந்தவர்; எனது தாயார் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர். ஆனால் இருவரும் மதத்தை பின்பற்றவில்லை. ஆசாத் என்பது எனது பாட்டியின் புனைப்பெயர் என்பதால், சபா ஆசாத் என்று … Read more

தேர்தலில் போட்டியிட மறுக்கப்பட்டதற்கு எதிராக மனு தாக்கல் – நீதிமன்றம் ரூ. 1 லட்சம் அபராதம்

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக மனு தாக்கல் செய்தவருக்கு உச்சநீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மே மாதம் மாநிலங்களவை தேர்தலில் விஸ்வநாத் பிரதாப் சிங் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதில், முன்மொழிபவர் பெயர் குறிப்பிடப்படவில்லை எனக்கூறி, அவரது மனுவை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. அதனை எதிர்த்து விஸ்வநாத் பிரதாப் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதிகள், தேர்தலில் போட்டியிடக் கூடிய உரிமை என்பது … Read more

இந்தியச் சிறைகளில் உள்ள தடுப்புக் காவல் கைதிகளில் 30% பேர் முஸ்லிம்கள்

புதுடெல்லி: இந்தியச் சிறைகளில் உள்ள தடுப்புக் காவல் கைதிகளின் மொத்த எண்ணிக்கையில் 30 சதவீதம் பேர் முஸ்லிம்கள் என்பது தெரியவந்துள்ளது. இது, நாட்டிலுள்ள மொத்த முஸ்லிம் மக்கள்தொகையான 14.2 சதவீதத்தை விட இரண்டு மடங்கு அதிக விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தரவுகள், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2021-ம் ஆண்டிற்கான ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவிலுள்ள சிறைச்சாலைகளில், குற்றவாளிகள் (ஒரு குற்றத்திற்காக அடையாளம் காணப்பட்டு குற்றாவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள்), விசாரணைக் கைதிகள் (நீதிமன்றத்தில் விசாரணையில் … Read more

குஜராத் காங்கிரஸ் ஆதரவு எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி மீது தாக்குதல்: மாஜி அமைச்சர் மீது குற்றச்சாட்டு

அகமதாபாத்: குஜராத்தின் வட்கம் தொகுதி சுயேட்சை எம்எல்ஏ (காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர்) ஜிக்னேஷ் மேவானி, அகமதாபாத் அடுத்த வஸ்த்ரலில் உள்ள நர்மதா அடுக்குமாடி குடியிருப்பில் பகுதியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க வந்தார். அப்போது ஜிக்னேஷ் மேவானியை மர்ம கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஜிக்னேஷ் மேவானி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘முன்னாள் உள்துறை அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜாவின் குண்டர்கள் என் மீது தாக்குதல்களை நடத்தினர். பிரதீப்சிங் ஜடேஜாவின் ஆதரவாளரான லாபு தேசாய் உள்ளிட்டோர் தாக்கினர். காவல்துறை முன்னிலையில் … Read more

21 ஆண்டுகளாக தாடியை வெட்டாததற்கு இப்படியொரு சமூக ஆர்வமா? – RTI ஆர்வலரின் வியக்கத்தகு செயல்

விசித்திரமான குறிக்கோள், கொள்கைகளை கொண்டவர்கள் பற்றி தொடர்ந்து அறிந்திருப்போம். அந்த வகையில் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் ஒருவர் சமூகத்தில் முக்கியமான மாற்றம் நிகழவேண்டும் என்பதற்காக கடந்த 21 ஆண்டுகளாக தனது தாடியை ஷேவ் செய்யாமல் இருந்து வந்திருக்கிறார். ஆனால் ஒருவழியாக தன்னுடைய தீர்மானம் நிறைவேறிவிட்டதால் கடந்த வெள்ளியன்று (செப்., 09) நீண்ட தாடியை ஷேவ் செய்திருக்கிறார். சட்டீஸ்கரின் மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமஷங்கர் குப்தா. ஆர்.டி.ஐ. ஆர்வலரான இவர், மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூரை புதிய மாவட்டமாக அறிவிக்கக் … Read more

அதிவிரைவு ரயில்கள் 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் இலவச உணவு – ரயில் பயணிகளுக்கு சலுகை..!

அதிவிரைவு ரயில்கள் புறப்படுவதற்கு 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால், பயணிகளுக்கு இலவச உணவு வழங்க வேண்டும் என்று விதிமுறை உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ உள்ளிட்ட அதிவிரைவு ரயில்கள் புறப்படுவதில் 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் பயணிகளுக்கு உணவு இலவசமாக வழங்க வேண்டும் என ரயில்வே விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. மேலும், சிற்றுண்டியா? மதிய உணவா? என்பதை பயணிகளே தேர்வு செய்யலாம் என்றும் அந்த விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

எலக்ட்ரிக் பைக் தீ பிடித்து எரிந்ததில் பயங்கரம்; 5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து: பெண் உள்பட 8 பேர் கருகி பலி: 13 பேர் படுகாயம்

திருமலை: எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்ததில் 5 மாடி கட்டிடத்திற்கு தீ பரவியது. இதில் லாட்ஜில் தங்கியிருந்த பெண் உள்பட 8 பேர் பரிதாபமாக இறந்தனர். 13 பேர் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே 5 மாடி கட்டிடத்தின் கீழ் தளத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமின் மேல்மாடியில் லாட்ஜ் இயங்கி வருகிறது. நேற்று பைக் ஷோரூமில் வழக்கம்போல் பணிகள் நடைபெற்றது. இரவு 10 … Read more

எலக்ட்ரிக் பைக்கை சார்ஜ் போட்டதால் ஷோரூமில் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் – போலீஸ் விசாரணை

எலக்ட்ரிக் பைக்கை சார்ஜ் போட்டதால் ஷோரூமில் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது. செகந்திரபாத் ரயில் நிலையம் அருகே செயல்பட்டு வரும் ரூபி எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. அங்கு 25 பேருக்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்டவுடனே அவர்களில் சிலர் ஜன்னல் வழியாக வெளியே குதித்தும், தீயணைப்பு வீரர்களாலும் மீட்கப்பட்டனர். இந்தத் தீ அருகில் இருந்த உணவகத்திலும் பரவியதால், அங்கு அறையில் தங்கியிருந்த 8 பேர் உடல் கருகி … Read more

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நேர்ந்த கோவிட் மரணங்களை கணக்கிட வேண்டும்: நாடாளுமன்ற நிலைக்குழு

புதுடெல்லி: கோவிட்-19 தொற்றின்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நிகழ்ந்த மரணங்களை மாநில அரசுகளுடன் இணைந்து கணக்கிட வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு நாடாளுமன்ற நிலைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடாளுமன்ற நிலைக் குழு சுகாதாரம் குறித்த தனது 137-வது அறிக்கையை மாநிலங்களவையில் திங்கள்கிழமை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், ‘கோவிட் தொற்று பாதிப்பின் அதிகரிப்பு சுகாதார கட்டமைப்பின் மீது அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. பல கோவிட் நோயாளிகளின் குடும்பத்தினர் ஆக்ஸிஜன் சிலிண்டருக்காக வரிசையில் காத்திருந்தது, சிலிண்டர் வேண்டி கொஞ்சியது, மருத்துவமனைகளில் குறைவான … Read more

இளைஞர்கள் போதைபொருட்களுக்கு எதிராக போராட வேண்டும்: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்!

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதைபொருள் ஒழிப்பு குறித்த நிகழ்வில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது தேசிய மாணவர் படை மாணவர்களிடம் பேசிய அவர், இந்திய சுதந்திரப் போராட்ட வீர்ர்கள் போராடி சுதந்திரத்தை பெற்றுத் தந்ததை போன்று, இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாதலை எதிர்த்து போராடி அதை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தினார் உலகின் அதிகார மையங்களில் ஒன்றாக இந்தியா திகழ்வதற்கான பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கும் … Read more