மார்க்சிஸ்ட் கம்யூ., முன்னாள் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 68.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவரான பாலகிருஷ்ணன், உடல்நலக் குறைவு காரணமாக ஆகஸ்ட் கடைசி வாரத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து விலகினார்.

கண்ணூரில் உள்ள தலச்சேரி சட்டப்பேரவை தொகுதியில் இருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட கொடியேரி பாலகிருஷ்ணன், 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை வி.எஸ்.அச்சுதானந்தன் தலைமையிலான அரசில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார். கடந்த 2015 ஆம் ஆண்டு கட்சியின் மாநிலச் செயலாளராக ஆனார்.

புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்த கொடியேரி பாலகிருஷ்ணன், சமீபத்தில் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.