கால்நடைகளை பாதிக்கும் ‘லம்பி ஸ்கின்’ நோயை தடுக்க உள்நாட்டிலேயே சொந்தமாக தடுப்பூசி கண்டுபிடிப்பு

புதுடெல்லி: சர்வதேச பால் பண்ணை கூட்டமைப்பின் உலக பால்வள உச்சி மாநாட்டை உத்தர பிரதேசம் கிரேட்டர் நொய்டாவில் பிரதமர் மோடி தலைமையேற்று தொடங்கி வைத்தார். முதல்வர் ஆதித்ய நாத், பால் பண்ணை தொழில் முனைவோர், விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: கால்நடைகளை பாதிக்கும் தோல் கழலை (லம்பி ஸ்கின்) நோய்க்கு ஒரு மாதத்தில் மட்டும் 5,000 மேற்பட்ட விலங்குகள் பலியாகியுள்ளன. கால்நடைகளின் உயிரிழப்புகளைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு மாநில … Read more

லடாக் எல்லையில் இருந்து இந்தியா, சீனா படைகள் திட்டமிட்டபடி விலகல்: ராணுவ தளபதி தகவல்

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் கடந்த 2020ம் ஆண்டு இந்திய-சீன வீரர்கள் இடையே கடும் மோதல் நடந்தது.    இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வந்தன. கடந்த ஜூலை மாதம் இரு நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகளின் 16வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் , கிழக்கு லடாக்கின் கோக்ரா-ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து படைகளை திரும்ப பெறுவது என இரு தரப்பு ராணுவ அதிகாரிகள்  இடையே ஒருமித்த முடிவு எட்டப்பட்டது. அதன் படி ஒருங்கிணைந்த மற்றும் திட்டமிட்ட வழிமுறைகளின் … Read more

ரயில்வே சங்க தேர்தலில் 61-வது முறை வெற்றி பெற்று 106 வயது கண்ணையா சாதனை

லக்னோ: உத்தர பிரதேசத்தின் கோரக்பூரை சேர்ந்தவர் கண்ணையா லால் குப்தா, ராணுவத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிய அவர், பின்னர் வடக்கு ரயில்வே பணியில் சேர்ந்தார். கடந்த 1946-ம் ஆண்டில் வடக்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்க பொதுச் செயலாளராக முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 1974-ம் ஆண்டில் ஜெயபிரகாஷ் நாராயண் இயக்கத்தில் பங்கேற்றார். அதேநேரம் மஸ்தூர் யூனியன் பணிகளிலும் தீவிர கவனம் செலுத்தினார். கடந்த 1981-ம் ஆண்டில் ரயில்வே பணியில் இருந்து கண்ணையா ஓய்வு பெற்றார். … Read more

ஆம் ஆத்மி அலுவலகத்தில் அத்துமீறி சோதனையா?: குஜராத் போலீஸ் மறுப்பு

அகமதாபாத்:குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக  டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில்   பொதுகூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார். நேற்றுமுன்தினம் கெஜ்ரிவால் அகமதாபாத் வந்தார். இந்நிலையில், அகமதாபாத், நவரங்புரா பகுதியில்  ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில்  போலீசார் சோதனை நடத்தியதாக  ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து குஜராத் ஆம் ஆத்மி  தலைவர் இசுதன் காத்வி டிவிட்டரில் பதிவில், ஆம் ஆத்மி கட்சியின் … Read more

மகாராஷ்டிராவைச் சேர்ந்த யூட்யூப் சேனல் சிறுமி மத்திய பிரதேசத்தில் கண்டுபிடிப்பு: பெற்றோரின் பதற்றமும் நேரடியாக ஒளிபரப்பு

இதார்ஸி: கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபல யூட்யூப் சேனல் சிறுமி, மத்தியப் பிரதேசத்தில் ஒரு ரயிலில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரை மீட்க பெற்றோர் பதற்றத்துடன் பயணம் செய்த காட்சியும் அவர்களின் யூட்யூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்த வீடியோ 41 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அவுரங்காபாத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி காவ்யா யாதவ். இவர் ‘பிண்டாஸ் காவ்யா’ என்ற பெயரில் யூட்யூப் சேனல் வைத்துள்ளார். இந்த சேனலை காவ்யாவின் தாய் நிர்வகிக்கிறார். … Read more

தாதாக்கள், போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு சொந்தமான 50 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை: டெல்லி உள்ளிட்ட 4 மாநிலங்களில் தீவிர விசாரணை

புதுடெல்லி: தீவிரவாதிகள், தாதாக்கள், போதை பொருள் கடத்தல்காரர்கள் இடையே வளரும் நட்பை உடைக்கவும், நிதி ஆதாரங்களை தடுக்கவும் 50 இடங்களில் நேற்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். நாட்டில் சமீப காலமாக தீவிரவாதிகள் நடமாட்டம், தாதாக்களின் அட்டகாசம் (கேங்ஸ்டர் கும்பல்), போதை பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்கள் அதிகரித்து உள்ளது. இதனால் குண்டுவெடிப்புகள், கடத்தல், கொலை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து உள்ளது. பெரும்பாலும் கொலை செய்யும் நபர்கள் போதை பொருட்களை … Read more

சிங்கார கவுரி அம்மன் வழிபாட்டு வழக்கை விசாரிக்கலாம் | கியான்வாபி மசூதி மனு தள்ளுபடி – நீதிமன்ற தீர்ப்பு முழு விவரம்

புதுடெல்லி: காசி விஸ்வநாதர் கோயிலின் சிங்கார கவுரி அம்மன் வழிபாடு தொடர்பான வழக்கு விசாரணையை நடத்தலாம். இந்த வழக்கு மத்திய அரசின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வராது என்று தெரிவித்துள்ள வாரணாசி நீதிமன்றம், கியான்வாபி மசூதி தரப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் ஒரு பகுதியை இடித்து, அங்கு கியான்வாபி மசூதி கட்டப்பட்டதாக புகார் உள்ளது. மேலும், மசூதி வளாக … Read more

உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டு வெறி நாய்களை கொல்ல முடிவு: கேரள அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில மாதங்களாக வெறிநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலைகளில் செல்லும் சிறுவர், சிறுமிகள் உட்பட அனைவரும் நாய்களின் தாக்குதலுக்கு இரையாகி வருகின்றனர். வெறி நாய் கடித்து தடுப்பூசி போட்ட பின்னரும் ஒரு கல்லூரி மாணவி உட்பட 4 பேர் பலியானது கேரளாவில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து வெறி நாய்களை கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கேரள உள்ளாட்சித் துறை அமைச்சர் ராஜேஷ் … Read more

கேஜ்ரிவாலும் ஊழலும் ஒன்றுதான்: பாஜக செய்தி தொடர்பாளர் விமர்சனம்

புதுடெல்லி: டெல்லி போக்குவரத்துக் கழகத்துக்கு 1000 தாழ்தள பேருந்துகள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு புகாரை அனுப்பும் திட்டத்துக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது. ஆம் ஆத்மி அரசின் ஒவ்வொரு துறையும் ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு, கேஜ்ரிவாலின் நண்பர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒப்பந்தங்கள் மற்றும் டெண்டர்கள் செய்யப்படுகின்றன. முதலில் மதுபான … Read more

போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் 3 கிமீ ஓடி வந்து ஆபரேஷன் செய்த பெங்களூரு டாக்டர்: நோயாளி உயிரை காப்பாற்றினார்

பெங்களூரு: போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெங்களூரு டாக்டர் ஒருவர் தான் மேற்கொள்ள வேண்டிய ஆபரேஷனுக்கு நேரம் ஆகிவிட்டதால் சாலையிலேயே காரை நிறுத்திவிட்டு ஓடியே மருத்துவமனைக்கு சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூருவை சேர்ந்த டாக்டர் கோவிந்த் நந்தகுமார். இவர் மணிப்பால் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை நிபுணராக இருக்கிறார். ஆக.30ம் தேதி இவர் பெண் நோயாளி ஒருவருக்கு கணையத்தில் லேப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்ய நேரம் ஒதுக்கினார். இவர் தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு வந்த போது … Read more