பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஆதரவு தீவிரவாத சதி திட்டம் முறியடிப்பு

சண்டிகர்: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆதரவுடன் நடைபெறவிருந்த தீவிரவாதசதித் திட்டத்தை பஞ்சாப் மற்றும் டெல்லி போலீஸார் முறியடித்துள்ளனர். இதுகுறித்து பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் கூறியது: சுதந்திரதினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ளமாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லிபோலீசார் உதவியுடன் கனடாவைச் சேர்ந்த ஆர்ஷ் டல்லா அமைப்பைச் சேர்ந்த 4 பேரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குர்ஜந்த்சிங் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவுடன், தீவிரவாத சதி செயலில் ஈடுபட … Read more

Happy Independence Day 2022: சுதந்திர தினத்தில் வாழ்த்து சொல்ல சிறந்த கவிதைகள்!

Happy Independence Day 2022 Wishes: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15ம் தேதியான இன்று கொண்டாடுகிறது. இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, இந்திய அரசாங்கம் ‘Azadi ka Amrit Mohatsav’ கீழ், ‘Nation First, Always First’ என்ற கருப்பொருளில் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நாளைக் … Read more

சோனியாவுக்கு கொரோனா காங். அலுவலகத்தில் கொடியேற்றுவது யார்?

புதுடெல்லி: ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தேசியக்கொடியை ஏற்றுவது வழக்கம்.  கடந்த 13ம் தேதி அவருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டதால், வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அதற்கு 3 நாட்களுக்கு முன்பாக பிரியங்கா காந்திக்கும் கொரோனா உறுதியானது. இவர்களுக்கு தொற்று ஏற்பட்டதால், ராகுல் காந்தியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார். மாநிலங்களவை காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் கொரோனா தொற்று … Read more

இந்து நாடாக மாற்ற சட்ட வரைவை உருவாக்கிய உ.பி. துறவிகள்: முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு வாக்குரிமை இல்லை

புதுடெல்லி: இந்தியாவை இந்து நாடாக மாற்ற உத்தரபிரதேசத்தில் துறவிகள்சட்டதிட்ட வரைவை வகுத்துள்ளனர். இதில், தலைநகராக வாரணசியும், முஸ்லிம் கிறிஸ்தவர்களுக்கு வாக்குரிமை இல்லை என்பது போன்றவை இடம் பெற்றுள்ளன. உ.பி.யின் வாரணாசியில் சங்கராச்சாரியா பரிஷத் அமைப்பின் தலைவர் சுவாமி அனந்த்ஸ்வரூப் ஒரு கூட்டம் நடத்தியுள்ளார். முக்கிய துறவிகளுடன் இந்துமத அறிவுஜீவுகள் சேர்த்துசுமார் 30 பேர் இதில் கலந்துகொண்டனர். இவர்கள், இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கான சட்டதிட்டங்களுக்கான வரைவை தயாரித்துள்ளனர். அலகாபாத்தில் அடுத்த ஆண்டு ஜனவரியில் வரவிருக்கும் மக்மேளாவின்போது, துறவிகள் … Read more

கணவனிடம் இருந்து பிரிந்த பிறகு கள்ளக்காதல் செய்தாலும் மனைவிக்கு ஜீவனாம்சம்: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மும்பை: ‘கணவனிடம் இருந்து பிரிந்த பிறகு வேறொரு ஆணுடன் உறவில் இருந்தாலும், கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெற மனைவிக்கு உரிமை உண்டு,’ என்று மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த கணவன், மனைவிக்கு 2007ம் ஆண்டு ஜனவரியில் திருமணம் நடந்தது. 2020ம் ஆண்டு குடும்ப வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ் கணவர், அவரின் குடும்பத்தினர் மீது மனைவி வழக்கு தொடுத்தார். மேலும், அவர் கணவரிடம் இருந்து பிரிந்து சென்று தனியாக வாடகை வீட்டில் … Read more

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி: புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு

புதுடெல்லி: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். இது அவரது 9-வது சுதந்திர தின உரையாகும். இந்த சுதந்திர தின உரையில் முக்கிய அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நாட்டு மக்களிடையே உரையாற்றுவது வழக்கம். கடந்த 2014-ம் ஆண்டு முதல் பிரதமர் … Read more

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை நேருவை குற்றம்சாட்டி பாஜ சர்ச்சை வீடியோ; காங்கிரஸ் பதிலடி

புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை தொடர்பாக நேருவை விமர்சித்து பாஜ வெளியிட்ட வீடியோவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து தனி நாடாக பாகிஸ்தான் கடந்த 1947ம் ஆண்டு  ஆகஸ்ட் 14ம் தேதி பிரிந்து சென்றது. அந்த நாளை தனது சுதந்திர தினமாக பாகிஸ்தான் கொண்டாடுகிறது. அதேவேளையில்,  இந்த பிரிவினையின்போது ஏற்பட்ட வலிகளை நினைவுக்கூரும் விதமாக, இந்தியாவில் இந்த நாள்‘பிரிவினை கொடுமைகள்’நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என கடந்தாண்டு, ஆகஸ்ட் 14ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.அதன் தொடர்ச்சியாக, … Read more

நாட்டின் சுதந்திர திருநாள்.! தலைநகரில் பலத்த பாதுகாப்பு.!

சுதந்திர நாளையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றிவைத்து உரையாற்றுகிறார். பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளதால் டெல்லி செங்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  டெல்லி செங்கோட்டையில் சுதந்திர நாள் விழாவில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார். இந்த விழாவில் புகழ்பெற்ற 250 பேர் உட்பட எட்டாயிரம் முதல் பத்தாயிரம் பேர் வரை பங்கேற்க உள்ளனர்.  பஞ்சாப் உள்ளிட்ட பல … Read more

பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளர் ஜுன்ஜுன்வாலா காலமானார்; பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

மும்பை: பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளரும், இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 62. ஜுன்ஜுன்வாலா மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பிறகு, சக்கர நாற்காலியிலேயே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், உடல் நலக்குறைவால் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5 கிமீ தூரத்துக்கு நிற்கும் பக்தர்கள்; தரிசனத்துக்கு 40 மணி நேரம் காத்திருப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று பக்தர்கள் 40 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பண்டிகை, தொடர் விடுமுறை நாட்கள், வார விடுமுறை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் திருமலையில் திரண்டனர். தங்கும் அறை கிடைக்காதவர்கள் திறந்த வெளியிலும், பூங்கா, சாலையோரங்களில் விடிய விடிய தங்கினர். சனிக் கிழமையான நேற்று முன்தினம் 83,422 பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஞாயிற்றுக் கிழமையான நேற்றும், … Read more