பேட்டரி திருட்டு போவதால் ‘டார்ச் லைட்’ வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை

லக்னோ: உத்தரபிரதேச அரசு மருத்துவமனையில் பேட்டரி திருட்டு போவதால், மின்தடை நேரத்தில்  ‘டார்ச் லைட்’ வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம், பலியா மாவட்டத்தில் பெய்த கனமழையால் மின்தடை ஏற்பட்டது. அப்போது மாவட்ட அரசு மருத்துவமனையிலும் மின்தடை ஏற்பட்டதால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். இத்தகைய சூழ்நிலையில், ‘டார்ச் லைட்’ வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் வீடியோ வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், பெண் நோயாளி ஒருவர் ஸ்ட்ரெச்சரில் படுத்திருப்பதும், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை … Read more

'கழுத்தை அறுத்து கொலை' – பண ஆசையால் நண்பனையே கொன்ற கொடூரம்

காணாமல்போன என்ஜினீயரிங் மாணவர் கழுத்தை அறுத்து கொலைசெய்யப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் இலாம்பஜாரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதுவும் சனிக்கிழமை தனது நண்பனாலேயே மாணவன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிர்பும் மாவட்டத்திலுள்ள கோய்ராசோல் பகுதியிலுள்ள அஹ்மெத்பூர் என்ற இடத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்தவர் சையத் சாலுதீன்(19). இவர் துர்காபூரிலுள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். சனிக்கிழமை மதியம் தனது வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற சையத் வீடு … Read more

வீட்டுக்கு இரவு உணவருந்த அழைத்த ஆட்டோ ஓட்டுநர் – ‘எப்ப வரலாம்’ என கேட்ட டெல்லி முதல்வர்

அகமதாபாத்: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை ஆட்டோ ஓட்டும் தொழிலாளி ஒருவர் தனது வீட்டுக்கு அவர் இரவு உணவு அருந்த வர வேண்டும் என்று அழைத்தார். அப்போது, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் “இன்று இரவு வரலாமா? எத்தனை மணிக்கு வரவேண்டும்? என்னுடன் இன்னும் இரண்டு பேர் வரலாம்” என்று கேட்டு அவரை திக்குமுக்காட வைத்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அரவிந்த் கேஜ்ரிவால் பிரசாரம் செய்தார். குஜராத் … Read more

கார் விபத்தை தடுக்க யோசனை; 6 ‘ஏர்பேக்’ விளம்பரத்தில் சிக்கிய நிதின் கட்கரி: வரதட்சணையை ஊக்குவிப்பதாக பலரும் கண்டனம்

புதுடெல்லி: சமீபத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்தார். ஏர்பேக் அணியாததால் அவர் இறந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் காரில் செல்பவர்கள் ‘ஏர்பேக்’ கட்டாயம் அணிய வேண்டும் என்றும், காரில் குறைந்தது 6 ஏர் பேக்குகள் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார். அந்த பதிவுடன் இணைக்கப்பட்ட வீடியோவில், புதியதாக திருமணமான பெண், … Read more

கிழக்கு லடாக்கில் படைகளை திரும்பப் பெறுவது திட்டமிட்டபடி நடைபெறுகிறது: இந்திய ராணுவத் தளபதி

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் இந்தியாவும் சீனாவும் தங்கள் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை திட்டமிட்டபடி நடைபெறுகிறது என்று இந்திய ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக கடந்த 9-ம் தேதி லடாக் சென்ற ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே இன்று டெல்லி திரும்பினார். டெல்லியில் மானெக்‌ஷா மையத்தில் நடைபெற்ற ராணுவத் தளவாடங்கள் குறித்த கருத்தரங்கில் அவர் பங்கேற்றார். லடாக்கில் தற்போது நிலைமை எவ்வாறு இருக்கிறது என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மனோஜ் … Read more

2 சிறுமிகள் கூட்டு பலாத்காரம்: உத்தரபிரதேசத்தில் பயங்கரம்

லக்கிம்பூர் கேரி: உத்தரபிரதேசத்தில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டம் மாதவ் தாண்டா என்ற இடத்தில் 16 வயது தலித் சிறுமி, அதேபகுதியை சேர்ந்த இருவரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமி, மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது … Read more

ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக இந்தியா தகுதியான நாடு: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

புதுடெல்லி: “ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்ட நாடு, இந்தியா” என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வெளியுறவு அமைச்சரான பிறகு முதன்முறையாக சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்ட ஜெய்சங்கர், அங்கு அந்நாட்டின் செய்தித்தாளான சவூதி கெஜட்டிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “ஐநா பாதுகாப்பு கவுன்சிலும், ஐநா சபையும் உலக மாற்றங்களுக்கு ஏற்ப மாற வேண்டும். சர்வதேச பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணியை மட்டும் நோக்கமாகக் கொண்டு இயங்காமல், காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை அது … Read more

ஒரே ஒரு முறை ப்ளீஸ் … காதலியை கொன்ற காதலன் – இருவர் கைது

தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டத்தை சேர்ந்த மாணவியும், ஸ்ரீசைலன் என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் . கடந்த 3 மாதங்களுக்கு முன் தன்னுடைய காதல் பற்றி சாய்பிரியா பெற்றோரிடம் கூறியபோது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி காதலை கைவிடும்படி அறிவுரை கூறியுள்ளனர் . இதனைத் தொடர்ந்து காதலனுடன் பேசுவதை சாய்பிரியா தவிர்த்துவந்துள்ளார். மேலும் பெற்றோரும் ஸ்ரீசைலனை அழைத்து தங்கள் மகளுடன் இனி நீ பேசக்கூடாது என்று கூறி கண்டித்துள்ளனர் . அப்போது சாய்பிரியாவை திருமணம் … Read more

மும்பை விமான நிலையத்தில் 12 கிலோ தங்கம் கடத்தல்: 6 சூடான் பிரஜைகள் கைது

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வந்த சூடான் நாட்டுப் பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் இருந்து சுமார் 5.4 கோடி மதிப்புள்ள 12 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக 6 சூடான் பிரஜைகளை அதிகாரிகள் கைது செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘குற்றம்சாட்டப்பட்ட சூடான் பிரஜைகளை அதிகாரிகள் சுற்றிவளைத்த போது, திடீரென அவர்கள் கூச்சலிட்டு தப்பி … Read more

ஞானவாபி வழக்கு: செப். 22 முதல் ஹிந்து தரப்பின் மனு விசாரிக்கப்படும் – வாரணாசி நீதிமன்றம்

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி நகரில் உள்ள பிரசித்திபெற்ற காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டியுள்ள ஞானவாபி மசூதி சுவரில் அமைந்துள்ள “ஷ்ரிங்கார் கௌரி” ஆலயத்தில் வழிபாடு நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. ஹிந்து சமுதாயத்தின் பிரதிநிதிகளாக 5 பெண்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர். மசூதி மேலாண்மை குழு சார்பாக இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு பக்க முக்கிய வாதங்களையும் பரிசீலனை … Read more