திருப்பதியில் பிரமோற்சவ 3ம் நாள்: சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் ேகாயில் பிரம்மோற்சவத்தின் 3ம் நாளான இன்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 2ம் நாளான நேற்று மதியம் ரங்கநாதர் மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதற்காக ஜப்பானில் இருந்து ஆப்பிள், மஸ்கட்டில் இருந்து திராட்சை, கொரியாவில் இருந்து பேரிக்காய், தாய்லாந்தில் இருந்து மாம்பழங்கள் மற்றும் அமெரிக்காவில் இருந்து செர்ரி பழங்கள் வரவழைக்கப்பட்டு மலையப்ப சுவாமிக்கு அலங்காரம் … Read more

தேசிய விளையாட்டு போட்டி – குஜராத்தில் இன்று தொடக்கம்

அகமதாபாத்: 36-வது தேசியவிளையாட்டுப் போட்டிகள் குஜராத்தில் இன்று தொடங்குகின்றன. வரும் 12-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். போட்டிகள் குஜராத்தில் உள்ள அகமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பாவ்நகர் ஆகிய 6 நகரங்களில் நடைபெறுகிறது. சுமார் 7 வருடங்களுக்குப் பிறகு தேசிய விளையாட்டு போட்டி நடைபெறுவதால் இந்தத் தொடர் வீரர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியை இன்று மாலை … Read more

அடுத்து ஆணுறை கேட்பீங்க: பெண் ஐஏஎஸ் அதிகாரி சர்ச்சை பேச்சு!

பீகார் மாநிலத்தில் ‘அதிகாரம் பெற்ற மகள்கள்; வளமான பீகார்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், அம்மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநரும், ஐஏஎஸ் அதிகாரியுமான ஹர்ஜோத் கவுர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுருடன் கலந்துரையாடினர். அப்போது பேசிய மாணவி ஒருவர், “அரசு நிறைய இலவசங்களை வழங்குகிறது. எங்களுக்கு குறைந்த விலையில் அதாவது ரூ.20, ரூ.30இல் சானிட்டரி நாப்கின்கள் அரசால் வழங்க முடியாதா?” என கேள்வி எழுப்பினார். … Read more

சானிட்டரி நாப்கினை சலுகை விலையில் வழங்க கோரிய மாணவியிடம் அரசிடம் இருந்து ஆணுறை கேட்பீர்களா? என்று கேட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி

பாட்னா: சானிட்டரி  நாப்கினை சலுகை விலையில் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த பள்ளிச் சிறுமிஇடம் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், பீகார் மாநில குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை செயலருமான ஹர்ஜோத் கவுர் பாம்ரா அடுத்து அரசிடம் இருந்து ஆணுறையை கேட்பீர்கள்… அப்படித்தானே’ என பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பீகாரில், ‘சிறுமிகளுக்கான கண்ணியத்தை மேம்படுத்துவோம்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் பள்ளி சிறுமிகளும், மாநில குழந்தைகள் நல மேம்பாட்டு … Read more

’அண்ணா, அங்கிள்னு கூப்டாதீங்க’ : Uber டிரைவரின் பாஸ் லெவல் கோரிக்கை: வைரல் பதிவின் பின்னணி

டாக்சி, ஆட்டோ டிரைவர்கள் குறித்தும் சவாரி செய்யும் போது நடக்கும் நிகழ்வுகள் குறித்தும் பல செய்திகள் தொடர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் ஆப்ஸ்கள் மூலம் ஊபர் போன்ற சேவைகளை பெரும் போது நடக்கும் பல சுவாரஸ்யங்கள், குளறுபடிகள் பலவும் உலவிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், சோஹினி என்ற பயனர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஊபர் டிரைவரின் கார் சீட்டில் எழுதியிருந்த வாசகத்தைதான் பகிர்ந்திருக்கிறார். அதில், “யாரும் என்னை அண்ணா என்றோ அங்கிள் … Read more

திருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி கருக்கலைப்பு செய்துகொள்ளலாம்

டெல்லியை சேர்ந்த திருமணமாகாத 25 வயது பெண், பரஸ்பர சம்மதத்தின் பேரில் பாலியல் உறவால் கர்ப்பம் அடைந்தார். இந்நிலையில், கர்ப்பத்தை கலைக்க, உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரிய வழக்கில், நீதிபதிகள் சந்திராசூட், சூர்யகாந்த் மற்றும் போபண்ணா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதன்படி சட்டபூர்வமான மற்றும் பாதுகாப்பான கருக்கலைப்பு செய்து கொள்ள அனைத்து பெண்களுக்கும் உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. கருக்கலைப்பு செய்து கொள்ள அனைத்து பெண்களும் தகுதி உடைவர்கள் எனவும் ,கருக்கலைப்புக்கான உரிமை … Read more

இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு – மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

புதுடெல்லி: ஏழைகளுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட `பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச் சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த 2020 மார்ச் மாதம் மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை நடை முறைப்படுத்தியது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. ஏராளமானோர் … Read more

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு கெலாட்டை தேர்வு செய்வது பற்றி கருத்து கேட்பு: மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியுடன் சோனியாகாந்தி ஆலோசனை

டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட்டை தேர்வு செய்வது குறித்து மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியுடன் சோனியாகாந்தி ஆலோசனை மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்ய அடுத்த மாதம் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகின்றது. காங்கிரஸ் தலைவர் பதவியேற்க ராகுல்காந்தி மறுத்ததை தொடர்ந்து அந்த பதவிக்கான தேர்தலில் களமிறங்க மூத்த காங்கிரஸ் தலைவரும் ராஜஸ்தான் முதல் மந்திரியான அசோக் கெலாட்டை சோனியா கேட்டுக் கொண்டார். முதல்வர் … Read more

ராஜஸ்தான் சர்ச்சை எதிரொலி: காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலில் இணைகிறார் திக்விஜய் சிங்

புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அடுத்த மாதம் 17-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. 22 ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கும் இந்தத் தேர்தலில் அக்கட்சியின் ஜி 23 தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இருவரும் போட்டியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் … Read more

கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம்

அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான முறையில் சட்டப்பூர்வமான கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என்றும், திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களை வேறுபடுத்துவது ‘அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது’ என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. தேவையற்ற கர்ப்பத்தை கலைக்கும் உரிமையை பறிக்க ஒரு பெண்ணின் திருமண நிலையை காரணம் காட்ட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. “தனியாக வாழும் அல்லது திருமணமாகாத பெண்களுக்கும் மருத்துவக் கருவுறுதல் சட்டம் மற்றும் விதிமுறைகளின் கீழ் கருக்கலைப்பு செய்ய 24 வாரங்கள் வரை உரிமை … Read more