காஷ்மீரில் அரசியலை விட்டு விலகிய ஐஏஎஸ் அதிகாரிக்கு ஒன்றிய அரசு பதவி

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் இருந்து முதன் முதலாக அதிக மதிப்பெண் பெற்று ஐஏஎஸ் அதிகாரியானவர் ஷா பைசல். இவரது தந்தை கடந்த 2002ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தார். ஷா பைசல் கடந்த 2019ம் ஆண்டு தனது அரசு பணியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் ஈடுபட்டார். ‘காஷ்மீர் மக்கள் இயக்கம்’ என்ற கட்சியை தொடங்கினார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, இவர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 6 … Read more

கடன் சுமையால் கேரள அரசு பேருந்துகள் நிறுத்தம் – கோவையில் காத்திருக்கும் பயணிகள்!

கடன் சுமை காரணமாக கேரள அரசு போக்குவரத்துத் துறையின் பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டதால் கோவையிலிருந்து கேரளாவிற்குச் செல்லும் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. கேரள அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில் மாநிலம் முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்துக் கழகத்தின் சராசரி தினசரி வருவாயை விட டீசல் செலவு அதிகரித்து வருவதால் நீண்ட தூர சேவைக்கான பேருந்துகள் மற்றும் 50 சதவீத சாதாரண சேவை பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளன. கடன் சுமை காரணமாக … Read more

பங்குச்சந்தை ஜாம்பவான், பெரும் தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்

பங்குச்சந்தை ஜாம்பவான், பெரும் தொழிலதிபர், இந்தியாவின் வாரன் பஃபட் என்றெல்லாம் அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார். அவருக்கு வயது 62. இன்று அதிகாலை வீட்டில் சரிந்து விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கு இஸ்கிமிக் மாரடைப்பு ஏற்பட்டு அதில் அவர் உயிர் பிரிந்ததாகவும் தெரிவித்தனர். ராகேஷ் ஏற்கெனவே சிறுநீரகக் கோளாறுக்கும் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ராகேஷுக்கு மனைவியும் … Read more

இளங்கலை 4ம் கட்டம் 11 ஆயிரம் மாணவர்களுக்கு கியூட் தேர்வு ஒத்திவைப்பு

புதுடெல்லி: கியூட் இளங்கலை 4ம் கட்ட தேர்வானது 11 ஆயிரம் தேர்வர்களுக்காக மட்டும் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளங்கலை, முதுகலை படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்காக கியூட் என்ற பெயரில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில், இளங்கலைக்கான 2ம் கட்ட நுழைவு தேர்வின்போது குளறுபடிகள் காரணமாக பல்வேறு மையங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், தேர்வை சீர்குலைக்க நாசவேலைகள் நடப்பதாக வந்த அறிக்கைகளை தொடர்ந்து, பல்வேறு மையங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், … Read more

ராமர் கோயில் பணி அடுத்தாண்டு முடியும்: அறக்கட்டளை உறுதி

சுல்தான்பூர்: அயோத்தில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பரில் நிறைவடையும் என்று ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஒன்றிய அரசு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை அமைத்துள்ளது. சுல்தான்பூரில் நடந்த ரக்‌ஷாபந்தன் நிகழ்ச்சியில் இந்த அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் நேற்று கலந்து கொண்டார். அப்போது … Read more

7 கிலோமீட்டர் க்யூ… 2 நாட்கள் வெயிட்டிங்… திருப்பதி தரிசனம் ரொம்ப கஷ்டம்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர கோயிலில் நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதுவும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். தற்போது சனி, ஞாயிறு, திங்கள் (சுதந்திர தினம்) என மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையொட்டி பலரும் திருப்பதி ஏழுமலையானை தரிசித்து விடலாம் என்று கிளம்பிவிட்டனர். திருமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய செல்வதற்கு இரும்பு கம்பிகளால் ஆன க்யூ அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர் விடுமுறை நாட்களில் இந்த க்யூவை தாண்டி … Read more

வீடுகளில் தேசியக் கொடி ஏற்றிய பாஜ தலைவர்கள்

புதுடெல்லி: வீடுகளில் தேசியக்கொடி ஏற்றும்படி பிரதமர் மோடி விடுத்த அழைப்பின்படி, நேற்று முதல் வீடுகளில் மக்கள் தேசியக்கொடி ஏற்றினர். பாஜ தலைவர்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை  ஏற்றி, அந்த படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் இல்லங்கள் தோறும் நேற்று (13ம் தேதி) முதல் 15ம் தேதி வரை தேசியக்கொடி ஏற்றும்படி கடந்த மாதம் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதன்படி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, … Read more

ஆணுறை, கருத்தடை மாத்திரை வழங்கும் ஒடிசா அரசு: அதுவும் புதுமண தம்பதிகளுக்கு.. ஏன் தெரியுமா?

புதுமண தம்பதிகளுக்கு கருத்தடை மருந்துகள், ஆணுறைகள் உள்ளிட்ட முக்கிய இல்லறம் சார்ந்த பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஒன்றை ஒடிசா அரசு சார்பில் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது மத்திய அரசின் பரிவார் விகாஸ் என்ற திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நயி பாஹல் அல்லது நபாதம்பதி என்பதன் பேரிலான தொகுப்பைதான் புதுமண தம்பதிகளுக்கும், குடும்பக் கட்டுப்பாடு செய்துக் கொள்ள நினைக்கும் தம்பதிகளுக்கும் ஆஷா பணியாளர்கள் மூலம் வழங்கப்படவுள்ளது. அந்த தொகுப்பில், ஆணுறை, கருத்தடை மருந்துகள், குடும்பக் … Read more

காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறாரா ராகுல்? மவுனத்தின் பின்னணி என்ன?

காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தலை நடத்துவதற்கான தற்காலிக முன்மொழிவு தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியுற்ற நிலையில், அக்கட்சியின் அகில இந்திய தலைவராக இருந்த ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு, இதுவரை அக்கட்சியின் முழுநேரத் தலைவர் நியமனம் செய்யப்படவில்லை. இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் … Read more

இந்தியாவின் "Warren Buffet" ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்!

இந்திய பங்கு சந்தையின் தந்தை, என்றும், இந்தியாவின் Warren Buffet என்றும் அழைக்கப்பட்டு வரும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, தனது 62 வயதில் இன்று காலமானார். இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களில் மிகவும் பிரபலமானவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, டாடா குழுமம் உள்ளிட்ட பல பங்குகளில் தனது முதலீட்டினை பெருமளவில் செய்துள்ளார். இவர் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விட்டால், அந்த நிறுவனத்தின் பங்குகள் பல மடங்கு உயரும் என கூறப்படுவதுண்டு.  இந்திய பங்குச் சந்தையின் தந்தை என்று பிரபலமாக … Read more