முகேஷ் அம்பானிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு

புதுடெல்லி: தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த 2013-ம் ஆண்டு முதல் ‘இசட்’ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத்துறை தகவல் அளித்ததையடுத்து, மத்திய அரசு முகேஷ் அம்பானிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன்படி, இனி 40 முதல் 50 கமாண்டோ படை வீரர்கள் முகேஷ் அம்பானியை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவார்கள். ‘இசட் பிளஸ்’ என்பது மிக உச்சபட்ச பாதுகாப்பு பிரிவாகும். நாட்டின் மிக முக்கியமான … Read more

இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: கர்நாடகாவில் ராகுல் ஆவேசம்

பெங்களூரு: ‘இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி நான் மேற்கொண்டுவரும் பாதயாத்திரையை  எந்த சக்தியாலும் தடுக்க முடியாது,’ என்று ராகுல் காந்தி தெரிவித்தார். நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி இந்திய ஒற்றுமை நடை பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். கடந்த 7ம் தேதி குமரியில் பயணத்தை தொடங்கிய அவர், தமிழகத்தை தொடர்ந்து கேரளாவில் நடை பயணம் செய்து வந்தார். நேற்று அவர்  சாம்ராஜ் நகர் மாவட்டத்தின் வழியாக கர்நாடகாவில் நுழைந்தார். அவரை சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் … Read more

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் முதல் அரசு வேலை – பிஹாரின் ஒரு கிராமமே கொண்டாடும் இளைஞன்

பிஹார்: பிஹார் மாநில கிராமம் ஒன்றில் ஒருவருக்கு அரசு வேலை கிடைத்ததை அந்த கிராமமே ஒன்றாக கொண்டாடிவரும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்துபிறகு அந்த கிராமத்தில் இருந்து அரசு வேலைக்கு தேர்வாகியுள்ள முதல் நபர் அவர் என்பதாலேயே கிராமமே சேர்ந்து கொண்டாடுவதன் பின்னணி. பிஹாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சோஹாக்பூர் கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ராகேஷ் தான் 75 ஆண்டுகளில் முதல் நபராக அரசு வேலைக்கு தேர்ச்சி பெற்றுள்ளார். 25 வயதாகும் ராகேஷ், தனது … Read more

பொது இடங்களில் அரசியல் சாசனம் மனு நிராகரிப்பு

புதுடெல்லி: மகாராஷ்டிராவை சேர்ந்த அகமது பீர்சாடே என்பவர் சார்பில், எம்.ஆர்.ஷம்சாத் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தி மனுவில், ‘மத மோதல்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்கள், அரசு அலுவலகங்களில் அரசியல் சட்டத்தின் முகப்புரையை, உள்ளூர் மொழிகளில் எழுதி வைக்கும்படி  அரசுக்கு உத்தரவிட வேண்டும்,’ என்று கோரினார். இதை விசாரித்த நீதிபகள், ‘இது குறித்து அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் எதுவும் செய்ய முடியாது,’ என்று கூறி மனுவை நிராகரித்தனர்.

தொடங்கி வைக்கிறார் மோடி: இன்று முதல் 5ஜி சேவை

புதுடெல்லி:  அதிவேக இணைய வசதியை அளிக்கும் 5 ஜி சேவையை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார். 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த ஜூலையில் நடந்தது. ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் ஆகிய  நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. ஏலத்தின் முடிவில் ரூ.1,50,173 கோடிக்கு 5ஜி அலைக்கற்றைக்கான உரிமம் விற்பனை செய்யப்பட்டது. தொலைத்தொடர்புத் துறையில் முன்னணியில் இருக்கும் ஜியோ நிறுவனம் அதிக அளவிலான அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்துள்ளது. … Read more

நேற்று கெஜ்ரிவாலுடன் வீட்டில் உணவு..இன்று பாஜக பேரணி-குஜராத் ஆட்டோ ஓட்டுநர் போட்ட யூ டர்ன்

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் அங்கு முகாமிட்டிருந்தார். அப்போது ஆட்டோ ஓட்டுநர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் விக்ரம் தண்டாணி என்பவர், ‘ நான் உங்களின் ரசிகன். என் வீட்டிற்கு உணவு அருந்த வருவீர்களா? எனக் கேட்டவுடன், அரவிந்த் கெஜிரிவாலும் அவரது வீட்டிற்குச் சென்று உணவு அருந்தினார். ஆட்டோ டிரைவடன் அரவிந்த் கெஜிரிவால் உணவு அருந்திய புகைப்படம் வைரலானது. இதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் … Read more

நாடாளுமன்ற கட்டிடத்தின் மீதுள்ள அசோக சின்ன சிங்கங்களில் விதிமுறை மீறல்கள் இல்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ், புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் உச்சியில், சமீபத்தில் கம்பீரமான அசோக சின்ன சிங்கங்கள்  நிறுவப்பட்டன. இதை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த சிங்கங்கள் வழக்கமாக அசோக சின்னத்தில் காணப்படும் அமைதியான சிங்கங்களை போல் இல்லாமல், மிகவும் ஆக்ரோஷமாகவும், பற்கள் கோரமாக தெரியும் வகையில் வாயை திறந்திருப்பதாகவும்  விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், அல்தானிஸ் ரெயின், ரமேஷ் குமார் மிஸ்ரா ஆகிய 2 வழக்கறிஞர்கள், ‘இந்திய அரசு … Read more

10 நாட்களே ஆன தன் பெண் குழந்தையை கொல்ல முயன்ற தந்தைக்கு நேர்ந்த துயரம்!

உத்தரபிரதேசத்தில் பிறந்து 10 நாட்களே ஆன தனது பெண் குழந்தையை பிடிக்காததால் கொல்ல முயன்ற தந்தையை ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் மகன். கோசைங்கன்ஜ் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் ரமேஷ் சந்திர ராவத்(50) என்ற விவசாயி அவரது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். அந்த வீட்டிற்கு பக்கத்திலேயே வசிக்கும் அவருடைய மகன்களான அவதேஷ்(29) மற்றும் ரஜ்னேஷ்(25) இருவரும் தனது தந்தையை யாரோ கொலைசெய்துவிட்டதாகவும், முன்பகை காரணமாக உள்ளூர்வாசிகளில் யாரோ … Read more

வித்தை காட்டியவருக்கு நாக பாம்பு ‘மவுத் கிஸ்’: வைரலாகும் வீடியோ

ஷிவமொக்கா: திருமண வீட்டில் இருந்த நாகபாம்பை  பிடித்து முத்தமிட முயன்றவருக்கு, பாம்பு ‘மவுத் கிஸ்’ கொடுத்தது. கர்நாடகா மாநிலம், ஷிவமொக்கா  மாவட்டம், பத்ராவதியை சேர்ந்தவர்கள் அலெக்ஸ், ரோனி. இவர்கள், பொதுமக்களை  அச்சுறுத்தும் பாம்புகளை பிடித்து, காடுகளில் விட்டு வருகின்றனர். இந்நிலையில், பொம்மனக்கட்டில் உள்ள ஒரு திருமண  வீட்டில் 2 நாக பாம்புகள் இருந்தன. இதை பார்த்த மக்கள், அலெக்ஸ், ரோனிக்கு தகவல்  கொடுத்தனர். 2 பேரும் அங்கு சென்று பாம்புகளை மீட்டனர். அதில், ஒரு பாம்புக்கு காயம் … Read more

இரு குழந்தைகளை மட்டும்தான் பெற்றுக்கொள்ள வேுண்டுமென உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்

நாடு முழுவதும் இரண்டு குழந்தை கொள்கைகளை அமல்படுத்த தங்களால் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் இது கொள்கை முடிவு சார்ந்த விஷயம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சிய சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியாயா என்பவர் தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது “இந்த விவகாரத்தை நீதிமன்றம் எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும்?” என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மனுதாரர், … Read more