வகுப்பறையில் சிறுமியின் ஆடையை அகற்ற சொன்ன ஆசிரியர் சஸ்பெண்ட்

மத்தியப் பிரதேசத்தின் ஷாதுல் மாவட்டத்தில் உள்ள அரசின் பழங்குடியின நலத்துறை சார்பில் நடத்தப்படும் தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் 10 வயதான பழங்குடியின சிறுமி, ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.  அந்த 10 சிறுமியின் உள்ளாடை மட்டும் அணிந்து வகுப்பறையில் அனைத்து மாணவர்களின் மத்தியில் அமர்ந்திருக்கும் புகைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அப்பகுதியினர் மத்தியில் பகிரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த அக்கிராமத்தினர்கள் ஆசிரியரின் செயலைக் கண்டு கோபமடைந்தனர். இதுதொடர்பாக, பழங்குடியின நலத்துறை உதவி ஆணையர் … Read more

டாக்டர்கள் தேதி அறிவித்த பிறகும் கர்ப்பிணிக்கு குழந்தை பிறக்காததால் அதிர்ச்சி; ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம்: பணம் பறிக்க போலி சிகிச்சையா?

திருமலை: டாக்டர் அறிவித்த தேதியில் குழந்தை பிறக்காததால் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கோகாவரத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி(25). இவரது கணவர் புதுச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியை சேர்ந்த சத்யநாராயணா (30). இவர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கடந்த ஜனவரி மாதம் சத்யநாராயணா, மனைவியுடன் மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது உடல்நலம் பாதித்ததால் காக்கிநாடா காந்திநகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அவரை டாக்டர்கள் … Read more

₹550 பெட்ரோலுக்கு ₹55,000 கேட்பதா? – இது என்ன நியாயம்? GPayவால் கஸ்டமருக்கு நேர்ந்த ஷாக்!

கையடக்க செல்ஃபோன் இருப்பதால் சில்லறை வர்த்தகம் அனைத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளிலேயே நடைபெற்று வருகிறது. இதனால் பணப்புழக்கம் குறைந்து யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் கோடிக்கணக்கில் அதிகரித்து வருகிறது. குறைந்தபட்சம் 1 ரூபாயில் இருந்து பணப்பரிவர்த்தனைகள் நடத்தப்படுவதால் சுலபமான பணியாக இருந்தாலும் சமயங்களில் அதனால் பல சிக்கல்களே நேர்ந்துவிடுகிறது. அதற்கு அத்தாட்சியாக பல சம்பவங்கள் குறித்த பதிவுகள் சமூக வலைதளங்கள், செய்திகள் வாயிலாக அறிந்துக்கொள்ள முடிகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் தன்னுடைய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு பெட்ரோல் போடச் … Read more

லைசென்ஸும் இல்ல.. LLRம் இல்ல.. வேகமாக க்ளட்சை மிதித்து டெலிவரி பாயை கார் ஏற்றிக்கொன்ற பெண்

இரவுப் பகல், வெயில், மழை என எந்த சூழலையும் பாராமல் மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை கொண்டு சேர்க்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் டெலிவரி ஊழியர்கள். அப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் கஸ்டமர்கள் வாயிலாக சந்திக்கும் இடர்பாடுகள் பலவும் செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது. இப்படி இருக்கையில், கார் ஓட்ட கற்றுக் கொண்டிருந்த 40 வயதான பெண் ஒருவர் பிரேக் போடுவதற்கு பதிலாக க்ளட்சை வேகமாக அழுத்தியதன் காரணமாக 19 வயதான டெலிவரி ஊழியர் ஒருவர் பரிதாபமாக இறந்த சம்பவம் … Read more

சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்: பிரதமர் மோடி

சுற்றுச்சூழலை பாதிக்கும் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். “மன் கீ பாத்” எனப்படும் மனதின் குரல் என்ற நிகழ்ச்சி மூலம், பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை அன்று நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அதன்படி, செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று, பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது: சிவிங்கிகள் இந்தியாவிற்கு திரும்பி வந்தது குறித்து நாட்டின் … Read more

உத்தரகாண்டில் ரிசார்ட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு இணங்க மறுத்த இளம்பெண் கொலை: பாஜ மூத்த தலைவரின் மகன் பயங்கரம்

உத்தரக்காண்ட்: தனக்கு சொந்தமான ரிசார்ட்டிற்கு வரும் விருந்தினர்களுடன் பாலியல் உறவு வைத்த கொள்ள மறுத்ததால், இளம் பெண் வரவேற்பாளரை கொன்று கால்வாயில் வீசிய பாஜ முன்னாள் அமைச்சரின் மகன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தரகாண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பவுரி மாவட்டத்தின் யம்கேஷ்வர் தொகுதியில் உள்ள ஹரித்துவாரை சேர்ந்தவர் வினோத் ஆர்யா. இம்மாநில பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், இம்மாநில விவசாய உற்பத்தி பொருள் … Read more

இந்தியா டூ இலங்கை: அதிக அளவில் கடத்தப்படும் கஞ்சா – சர்வதேச தொடர்பா? அதிர்ச்சி பின்னணி

இந்தியாவில் இருந்து 12 ஆண்டுகளில் கடத்தி வரப்பட்ட 27 ஆயிரம் கிலோ கஞ்சாவை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கையின் வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ள சூழலில், கடந்த 3 மாதங்களில் யாழில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 141 பேர் யாழ். போதை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றதாக தகவலும் வெளிவந்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் பின்பு விடுதலைச் சிந்தனையே ஏற்படக் கூடாது என்பதற்காகவும் அந்த எண்ணத்தை மழுங்கடிக்கும் விதத்திலும் இந்த போதைப் … Read more

காங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார்..!

கேரள மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆரியதான் முகமது இன்று காலை காலமானார். அவருக்கு வயது 87. கடந்த 1952-ம் ஆண்டு கேரள அரசியலில் கால்பதித்த ஆரியதான் முகமது, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினரானார். தொடர்ந்து, கேரள பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியில் 1958-ம் ஆண்டு வரை இருந்தார். கேரளாவின் 10-வது சட்டசபையின்போது, காங்கிரஸ் சட்டமன்ற குழு செயலாளராகவும் இருந்தார். 1998 முதல் 2001-ம் ஆண்டு வரை கேரள சட்டசபையின் பொது கணக்கு குழுவின் தலைவராகவும் … Read more

சண்டிகர் விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பெயரை சூட்ட முடிவு

டெல்லி: செப்.28-ல் பகத்சிங் பிறந்தநாளை முன்னிட்டு சண்டிகர் விமானநிலையம் ஷாஹீட் பகத்சிங் விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்ய உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துளளார். புதிய இந்தியாவை நோக்கி நாம் முன்னேறும்போது சுதந்திர போராட்ட வீரர்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஆந்திரா: மருத்துவமனையில்  ஏற்பட்ட தீ விபத்து – மருத்துவர் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

திருப்பதி அருகே தனியார் மருத்துவமனை கட்டுமான பணியின்போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் உள்ள பகத்சிங் காலனியில் தனியார் மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 90 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. .இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த கட்டடத்தின் முதலாவது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் … Read more