பணமோசடி வழக்கில் ஆஜராக கர்நாடக காங். தலைவருக்கு சம்மன்: ராகுல் பேரணியில் பங்கேற்ற நிலையில் பரபரப்பு

புதுடெல்லி: பணமோசடி வழக்கில் சிக்கிய கர்நாடகா காங்கிரஸ் தலைவரை வரும் 7ம் தேதி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு நாளிதழ் தொடர்பான பணமோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியுள்ளது. … Read more

ஊழல் ரேங்கிங்… கர்நாடகாவுக்கு முதல் இடம் கொடுத்த ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டிருக்கிறார். தற்போது அந்தப் பாத யாத்திரை கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இன்று மாலை பாண்டவர் புரத்தில் அவரது நடைபயணம் நிறைவடைந்தது. அப்போது பேசிய ராகுல்காந்தி, “நாட்டிலேயே அதிக ஊழல் நிறைந்த அரசாக கர்நாடகா பாஜக அரசு உள்ளத. சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரிடம் இந்த அரசு 40% கமிஷன் வசூலிக்கிறது . இது குறித்து கர்நாடக ஒப்பந்ததாரர்கள் பிரதமர் மோடிக்கு … Read more

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு திட்டம்; ‘பிஎச்டி’ஆய்வு மாணவர்களுக்கு பொருந்தாது: பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு

புதுடெல்லி: ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை படிக்கும் திட்டமானது, பிஎச்டி மாணவர்களுக்கு பொருந்தாது என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில், ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளைத் தொலைதூர கல்விமுறை மூலமாகவோ, ஆன்லைன் முறையிலோ அல்லது பகுதிநேரமுறை மூலமாகவோ தொடரலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்தது. இந்நிலையில் இந்தியாவின் உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஜெகதேஷ் குமார், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், ‘பல்கலைக்கழக மானியக் … Read more

ஹிமாச்சல் செல்லும் பிரதமர் மோடி: எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார்!

பிரதமர் மோடி வருகிற 5ஆம் தேதி ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் செல்கிறார். அங்கு ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். காலை 11.30 மணிக்கு பிலாஸ்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார். அதன்பின்னர் பிலாஸ்பூரிலுள்ள லுஹ்னு மைதானத்துக்கு மதியம் 12.45 மணிக்கு செல்லும் அவர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து பொதுநிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். இதையடுத்து, பிற்பகல் 3.15 மணிக்கு குலு மைதானத்துக்கு செல்லும் பிரதமர் அங்கு தசரா கொண்டாட்டங்களில் கலந்து … Read more

ஆன்லைனில் ஆர்டர் செய்த ‘பீட்சா’வில் வெள்ளைப் புழு, தலைமுடி: உணவு நிறுவனத்திற்கு 12% வட்டியுடன் ரூ.7,000 அபராதம்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரைச் சேர்ந்த ஹர்கிரத் சிங் என்பவர் கடந்த 2019ம் ஆண்டு ஜூலையில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்திடம் ‘பீட்சா’ ஆர்டர் செய்திருந்தார். அதன்படி டெலிவரியும் செய்யப்பட்டது. பார்சலை பிரித்து பார்த்து, பீட்சாவை எடுத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, ​​அதில் வெள்ளைப் புழுக்களும், தலைமுடி ஒன்றும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அந்த பீட்சாவை விற்பனை செய்த உணவு டெலிவரி நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தார். எதிர்முனையில் பேசிய உணவு டெலிவரி நிறுவனத்தினர், பீட்சாவில் புழு, … Read more

ஒரு கோடி டிஜிட்டல் வேலை: மத்திய அமைச்சர் தகவல்!

‘இந்திய மொபைல் காங்கிரஸ்’ மாநாடு டெல்லியில் கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இந்தியாவில் 5ஜி சேவையையும் தொடங்கி வைத்தார். இதன் ஒருபகுதியாக மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களின் டிஜிட்டல் இந்தியா உச்சி மாநாடும் நடைபெற்றது. மத்திய தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் வளர்ச்சி மற்றும் தொழில்முனைவு இணையமைச்சர் … Read more

புதுடெல்லி பிரகதி மைதானத்தில் மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுக்கான இரண்டு நாள் மாநாடு: டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு

டெல்லி: புதுடெல்லி பிரகதி மைதானத்தில் மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுக்கான இரண்டு நாள் மாநாடு  நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், இம்மாநாட்டில் இன்று பங்கேற்று உரையாற்றினார். அதன் பின்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது:   “கடந்த இரண்டு நாட்களாக தேசிய அளவிலான டிஜிட்டல் இந்தியா மாநில IT அமைச்சர்களுக்காண மாநாடு (Digital India State IT Ministers’ Conference) நடைபெற்றது. பல்வேறு தலைப்புகளில் பல்வேறு மாநிலங்கில் இருந்து வருகை … Read more

மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்: கால அவகாசம் நீட்டிப்பு!

தேசிய அளவிலான தகுதி மற்றும் திறமையான மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் 2022 அக்டோபர் 15ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 8ஆம் வகுப்பில் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடும், பொருளாதாரத்தில் நலிவடைந்த திறமையான மாணவர்கள் மீண்டும் கல்வியை தொடர ஊக்குவிக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் புதிய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதன் மூலம் அவர்கள் 9ஆம் வகுப்பில் பள்ளிப் படிப்பை தொடர … Read more

ஜார்கண்ட் முதல்வரின் கையொப்பமிட்ட காசோலை; சிறையில் உள்ள உதவியாளர் வீட்டில் பறிமுதல்: அமலாக்கத்துறை தகவல்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோத சுரங்க அனுமதி புகாரின் அடிப்படையில், அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் நெருங்கிய உதவியாளரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவருமான பங்கஜ் மிஸ்ராவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. ஏற்கனவே இவர் கைது செய்யப்பட்டு, தற்போது வரை நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் கையொப்பமிட்ட மற்றும் கையொப்பமிடப்படாத காசோலை புத்தகம் மற்றும் வங்கி புத்தகம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. மாநிலத்தில் … Read more

பிரசாந்த் கிஷோர் பிளானும், பாஜக சீக்ரெட் ஆபரேஷனும்- ராஜிவ் ரஞ்சன் பகீர்!

ராகுல் காந்தியின் ”இந்திய ஒற்றுமை பயணம்” (Bharat Jodo Yatra) தலைப்பு செய்தியாக மாறிய நிலையில், பிகாரில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் பாத யாத்திரை பேசுபொருளாக மாறியுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லப் போவதாகவும், அதற்காக பிகார் முழுவதும் 3,500 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். இதற்காக காந்தி ஜெயந்தி நாளில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். பிரசாந்த் கிஷோரின் பாத யாத்திரை குறித்து அரசியல் கட்சிகள் பெரிதாக வாய் திறக்கவில்லை. ஆனால் … Read more