காங்கிரஸில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகல் | ராகுல் மீது குற்றச்சாட்டு; சோனியாவுக்கு பாராட்டு

புதுடெல்லி: காங்கிரஸின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் (73), அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் ராகுல் காந்தி குழந்தைத்தனமாக, முதிர்ச்சியின்றி செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்தது. இதற்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். அதன்பிறகு கட்சித் தலைமை பொறுப்பை சோனியா காந்தி … Read more

இலவசத் திட்டங்களுக்கான நிதியை பட்ஜெட்டில் இருந்து ஒதுக்க வேண்டும் – நிர்மலா சீதாராமன்

இலவசத் திட்டங்களுக்கான நிதியை மாநில அரசுகள் பட்ஜெட் தொகையில் ஒதுக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய மத்திய நிதி அமைச்சர் சீதாராமன் , இலவசத் திட்டங்களின் சுமையை மற்றவர்கள் மீது மாநில அரசுகள் சுமத்தக்கூடாது என்று வலியுறுத்தினார்.தேர்தலில் இலவச வாக்குறுதிகளை அள்ளி வழங்கும் அரசியல் கட்சிகள் அதனால் ஆட்சியைக் கைப்பற்றி அரசு அமைக்கும் போது தங்கள் பட்ஜெட்டில் இலவசத் திட்டங்களுக்கான நிதியை ஒதுக்க வேண்டும் என்று … Read more

8 ஆண்டில் 277 எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்கியது மாநில அரசுகளை கவிழ்க்கும் சீரியல் கொலைகாரன் பாஜ: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆவேசம்

புதுடெல்லி: ‘மாநில அரசுகளை கொல்லும் சீரியல் கொலைகாரனாக பாஜ செயல்படுகிறது,’ என்று கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார். டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை கவிழ்ப்பதற்காக, இக்கட்சி எம்எல்ஏ.க்களுக்கு பாஜ தலா ரூ.20 கோடி பேரம் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. பாஜ.வின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி பற்றி விவாதிப்பதற்காக, டெல்லி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய கெஜ்ரிவால்: ‘ஒன்றியத்தில் பாஜ ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டு முதல், இதுவரையில் கோவா, கர்நாடகா, … Read more

இலவசங்களையும், நலத்திட்டங்களையும் குழப்பி கொள்ளக்கூடாது – 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவு

புதுடெல்லி: இலவசங்களையும், நலத்திட்டங்களையும் குழப்பிக் கொள்ளக்கூடாது என கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இதுதொடர்பாக விரிவான விசாரணை தேவை என்பதால் தேர்தல் நேர இலவச வாக்குறுதிகளை தடை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி நேரலையில் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நேர இலவச வாக்குறுதிகளால் அந்த தேசம் மற்றும் மாநிலத்தின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குச் சென்றுவிடுவதாகவும், எனவே வாக்காளர்களைக் கவருவதற்காக அறிவிக்கப்படும் இதுபோன்ற தேர்தல் நேர இலவச வாக்குறுதிகளுக்கு தடை விதிக்கக் … Read more

ஆண், பெண் ஓட்டுநர்கள் அவதி ரயில் இன்ஜின்களில் சிறுநீர் கழிப்பறைகள்: கருத்து கேட்கிறது ரயில்வே

புதுடெல்லி: ரயில் இன்ஜின்களில் சிறுநீர் கழிப்பறைகள் பொருத்துவது குறித்து, அதன் ஓட்டுநர்களிடம் ரயில்வே வாரியம் கருத்து கேட்டு வருகிறது. இந்திய ரயில்வேயில் மொத்தம் 14 ஆயிரம் டீசல் – எலக்ட்ரிக் இன்ஜின்கள் உள்ளன. இதில், 1,000 பெண்கள் உள்பட 60 ஆயிரம் பேர் ஓட்டுநர்களாக பணியாற்றுகின்றனர். நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் இன்ஜின்களில் கழிப்பறைகள் இல்லாத காரணத்தால் ஓட்டுநர்கள் இயற்கை உபாதையை கழிப்பதில் பெரும் சிரமம் அடைகின்றனர். ஐக்கிய முன்னணி கூட்டணி ஆட்சியின்போது சுரேஷ் பிரபு ரயில்வே … Read more

அமெரிக்க இணை நிதியமைச்சருடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

புதுடெல்லி: உலக பொருளாதார நிலவரம் குறித்து அமெரிக்க நிதித் துறை இணையமைச்சர் வாலி அடிமியோவுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவு: 2023-ல் ஜி20 நாடுகளின் அமைப்பில் இ்ந்தியாவின் தலைமை குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்க நிதி துறை இணையமைச்சர் வாலி அடிமியோவுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், உலகப் பொருளாதார நிலவரங்கள், இந்திய-அமெரிக்க இடையேயான உறவில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாகவும் … Read more

பல உயிர்களை பலி வாங்கியவை பிளே ஸ்டோரில் இருந்து 2,000 கடன் ஆப்ஸ் நீக்கம்: ஒரே ஆண்டில் கூகுள் அதிரடி

புதுடெல்லி: ஆன்லைனில் கடன் வழங்கும் ‘கடன் ஆப்’ஸ்கள் கூகுள் பிளே ஸ்டோரில் குவிந்து கிடக்கின்றன. இவற்றில் சில ஆயிரம் ரூபாயை மட்டுமே ஆசைப்பட்டு கடன் பெறும் மக்கள், பிறகு கொள்ளை கொள்ளையாக வசூலிக்கப்படும் வட்டியை செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். பணத்தை செலுத்த முடியாதவர்களின் போலி நிர்வாண புகைப்படங்கள் வெளியிடுதல், குடும்பத்தினர், உறவினர்களுக்கு கடன் வாங்கிய விவரத்தை தெரிவித்து அவமானப்படுத்துவது போன்ற அட்டூழியங்களில் இவை ஈடுபடுகின்றன. இதனால், ஏராளமானோர் தற்கொலை செய்கின்றனர். இந்நிலையில், புகார்களின் அடிப்படையில் இந்தியாவில் கூகுள் … Read more

கடற்கரையில் 76 டன் குப்பை ஆந்திராவில் பிளாஸ்டிக் பிளக்ஸ் பேனருக்கு தடை: முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவு

திருமலை: ஆந்திராவில் பிளாஸ்டிக் பிளக்ஸ் பேனர்களுக்கு நேற்று முதல் தடை விதித்து முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் ‘பார்லே பார் தி ஓஷன்ஸ்’ என்ற அமைப்புடன் ஆந்திர அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், முதல்வர் ஜெகன் மோகன் பங்கேற்று பேசுகையில், ‘‘சுற்றுச்சூழல் பாதுகாப்பும், பொருளாதார முன்னேற்றமும் நாணயத்தின் இரு பக்கம். உலகின் மிகப்பெரிய கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி விசாகப்பட்டினத்தில் இன்று (நேற்று) நடந்தது. இதில், ஒரே … Read more

பீகார் பேரவை ஒத்திவைப்பு

பாட்னா: பீகாரில் பாஜ.வுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், அதன் கூட்டணியை முறித்து, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. நிதிஷ் தனது  பெரும்பான்மையை நிரூபிக்க, சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் சமீபத்தில் கூட்டப்பட்டது. பாஜ உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் நிதிஷ் பெரும்பான்மையை நிரூபித்தார். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் அவாத் பிகாரி சவுதாரி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, தேதி … Read more

‘‘விரைவில் புதிய கட்சி’’ – குலாம் நபி ஆசாத் அறிவிப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீரில் வரவிருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு புதிய கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் அடையாள முகமாக இருந்த குலாம் நபி ஆசாத் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பதவிகளையும் நேற்று ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்கான காரணத்தை விலகி காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு 5 பக்க கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். இதனிடையே, காங்கிரஸில் … Read more