"புஷ்பா'னா ப்ளவர்'னு நெனச்சியா ஃபயர் டா".. சைமா விருதுகளை அள்ளிய ‘புஷ்பா’!

சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தெலுங்கு திரையுலகில், அதிகளவிலான விருதுகளை அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ திரைப்படம் குவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த திரையுலகினை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தும் வகையில், கடந்த 2012-ம் ஆண்டு துவங்கப்பட்டதுதான் சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA – South Indian International Movie Awards) விழா. தேசிய விருதைப் போன்று, இந்த விருதும் திரையுலகில் … Read more

நாட்டை உலகளாவிய கண்டுபிடிப்பு மையமாக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்: பிரதமர் வலியுறுத்தல்

அகமதாபாத்: ‘நாட்டை உலகளாவிய கண்டுபிடிப்பு மையமாக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்’ என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். குஜராத்தின் அகமதாபாத்தில் ஒன்றிய-மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்திய ஜெய்ஜவான், ஜெய்கிசான், ஜெய் விக்யான் மற்றும் ஜெய் அனுசந்தன் என்ற மந்திரத்தோடு முன்னேறி வருகின்றது. இந்த அமிர்த காலத்தில் இந்தியாவை உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையமாக மாற்றுவதற்கு … Read more

“வெளிப்படைத்தன்மை வேண்டும்”.. 5 எம்பிக்கள் கடிதம்.. காங். தலைவர் தேர்தலில் புதிய அறிவிப்பு

5 எம்.பி.க்களின் கடிதம் எதிரொலியாக காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவோருக்கு வாக்களிப்போரின் பட்டியல் வழங்கப்படும் என கட்சியின் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி உறுதியளித்து உள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி நிறைவடைகிறது. இந்த தேர்தலில் 9,000 நிர்வாகிகள் வாக்களிப்பார்கள் என்றும் அக்டோபர் 19-ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த சூழலில் … Read more

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் 19 பேர் உயிரிழப்பு

மும்பை: கடந்த 10 நாட்களாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவின் இறுதியாக நேற்று முன்தினம் மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலைகளை கரைத்த போது, வார்தா மாவட்டம் சவாங்கி கிராமத்தில் நீரில் மூழ்கி 3 பேரும் தேவ்லி நகரில் ஒருவரும் உயிரிழந்தனர். அகமது நகரில் 2 பேரும் ஜல்கான் மாவட்டத்தில் 2 பேரும் உயிரிழந்தனர். இதுபோல மாநிலத்தில் விநாயகர் ஊர்வலத்தின் போது விபத்து மற்றும் நீரில் மூழ்கி … Read more

அந்த இடத்தை அப்படியே வெட்டிய காதலன்! பிளாக்மெயில் செய்த காதலனுக்கு தண்டனை – தன்பாலின காதலில் கொடூரம்

உத்தர பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், 32 வயதான இளைஞர் ஒருவரும், 30 வயதான இளைஞரும் கடந்த ஓராண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் பரேலி மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சில நாட்களுக்கு முன், பரேலி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, இருவரும் தனியாக இருந்ததை, 30 வயதான இளைஞர் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.  மேலும், அந்த வீடியோவை வைத்து 32 வயதான இளைஞரை அவர் … Read more

பாதாம் பருப்பை திருடியதாகக்கூறி சிறுவனை மரத்தில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தியதாக கோயில் பூசாரி மீது வழக்குப்பதிவு!

மத்திய பிரதேசத்தில் பாதாம் பருப்பை திருடியதாகக்கூறி சிறுவனை மரத்தில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தியதாக கோயில் பூசாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாகர் பகுதியில் அமைந்துள்ள ஜெயின் கோயிலில் பூஜைக்கு வைத்திருந்த பாதாம் பருப்பை 11வயது சிறுவன் யாருக்கும் தெரியாமல் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த பூசாரி ராகேஷ் ஜெயின் சிறுவனை பிடித்து மரத்தில் கட்டிவைத்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். சிறுவன் தன்னை விட்டுவிடும்படி கதறி அழும் வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், அவரது தந்தை அளித்த … Read more

சீனாவில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை: 45 பல்கலை.யில் மட்டுமே சேரலாம்

புதுடெல்லி: சீனாவில் மருத்துவம் படிக்கத் திட்டமிடும் மாணவர்கள், அங்கு என்ன மாதிரியான சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது குறித்த அறிவுறுத்தலை இந்திய அரசு விளக்கமாக வெளியிட்டுள்ளது. சீனாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் மருத்துவ மாணவர்கள். சீனாவில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு பயணிகளுக்கும், விசாக்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் அங்கு மருத்துவம் படித்த மாணவர்கள் நாடு திரும்பினர்.   சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு … Read more

தமிழ்நாட்டுப் பெண்ணை கட்டிவைக்கிறோம்.. ராகுல் ரியாக்‌ஷன்!

இந்திய ஒற்றுமை பயணத்தின்போது தமிழகத்தின் மார்த்தாண்டத்தில் ராகுல் காந்தியை சந்தித்த பெண்கள் அவருக்கு தமிழ்நாட்டிலேயே பெண் பார்த்து திருமணம் முடித்துவைப்பதாகக் கூறிய சம்பவத்தை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார் ஜெய்ராம் ரமேஷ். ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் 4 நாட்கள் தமிழகப் பயணம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் மார்த்தாண்டத்தில் அவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பெண்களை சந்தித்தார். அப்போது, அந்தப் பெண்கள் ராகுல் காந்தியிடம் உங்களுக்கு தமிழ்நாடு … Read more

சரிவர பணியாற்றாத காரணத்தால் 2 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 5 போலீசாரை லாக் அப்பில் அடைத்த எஸ்பி.!

பீகார் மாநிலத்தில் 2 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 5 போலீஸ்காரர்களை சரிவர பணியாற்றவில்லை என கூறி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லாக் அப்பில் அடைத்த சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. நவடா நகர் காவல்நிலையத்தில் கடந்த 8ம் தேதி இரவு 9 மணிக்கு ஆய்வு நடத்த எஸ்பி கவுரவ் மங்க்லா வந்துள்ளார். அப்போது கோப்புகளை பார்வையிட்டபோது, சரிவர பணியாற்றாததை கண்டுபிடித்து லாக் அப்பில் அடைக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இரவில் சுமார் 2 மணி நேரம் வரை அடைத்து … Read more

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

டெல்லி: வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு மத்திய -வடமேற்கு வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கரையோரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை வலுவடைந்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை … Read more